Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களின் உரிமைக் குரலாய் ஒலிக்கவேண்டிய மே தினம் சிங்கக் கொடிக்குள் சிக்குண்டது ஏன்? - தாயகத்தில் இருந்து இளங்கீரன்.

Featured Replies

உலக தொழிலாளர் தினம்’ ஒடுக்கப்பட்ட ஒரு மக்கள் கூட்டத்தில், நசுக்கப்பட்டதாய் நம்பப்பட்ட ஒரு இனத்தினால் நீண்ட இடைவெளிக்குப் பின்னால் எழுச்சி பூர்வமாக நடத்தப்படும், அதன் மூலம் உலகத்திற்கு ஒரு செய்தி சொல்லப்படும் என்ற அவா எல்லோரிடமும் முளைவிட்டிருந்ததை நாம் மறுக்க முடியாது. ஆனால் நடந்த கதை வேறு எதையோ சொல்லப்புறப்பட்டவர்கள் எதையோ சொல்லி ஓய்ந்த கதை ஒன்று, எதையோ செய்யவேண்டியவர்கள் வேறு எதையோ செய்து முடித்த கதை இன்னொன்றுமாய் ஒட்டு மொத்தத்தில் சொல்லவேண்டியதையோ, செய்யவேண்டியதையோ நிறை வேற்றாமலே உலக தொழிலாளர் தினம் நிறைவடைந்திருக்கின்றது.

சிலருக்கு இதிலொன்றும் புரியாமல் இருக்கலாம். நிச்சயமாக அது சாத்தியம்தான், ஆனால் பட்டும் படாமலும் சொல்லவேறு வார்த்தைகள் இருப்பதாய் தெரியவில்லை. யாழில் மே நாள் நிகழ்வுகள் எதிர்க்கட்சிகளின் கூட்டில் பெருமெடுப்பில் நடைபெற்றது. மிகப்பிரமாண்டமான ஆர்ப்பாட்டம், மிகப்பிரமாண்டமான பொதுக்கூட்டம் என்பனவும் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று முடிந்தது. ஆனால் அத்தனைக்கும் பின்னால் தமிழர்களைப் பொறுத்தவரையில் வெறுமையே மிச்சமாயிருப்பதாய் எமக்குத் தோன்றுகின்றது.

இந்த மே நாள் ஏற்பாடுகளின்போது, அவ்வப்போது நடந்த பத்திரிகையாளர் சந்திப்புக்களின்போது கூறப்பட்ட மிக முக்கியமான விடயமென்னவென்றால், இந்த மே நாள் நிகழ்வுகள் யாழில் ஏற்பாடு செய்யப்படுவதற்கான மிக முக்கியமான காரணம், கடந்தகாலத்தில் வடக்கில் மக்கள் தமது நியாயப்பாடுகளை வெளிப்படுத்தியபோது அது சிங்கள இனத்தைச் சேர்ந்த மக்களால் புரிந்துகொள்ள முடியாதுபோனது. அதில் அவர்களுக்கு சரியான புரிதல் ஏற்பட்டிருக்கவில்லை, அதனாலேயே தமிழர்களுடைய நியாயப்பாடுள்ள பிரச்சினைகளில் கூட சிங்களவர்கள் மௌனம் காக்கவேண்டியிருந்து என்று.

சிலவேளை இந்தக் கூற்றில் உண்மையிருக்கலாம். ஆனால் இந்த மே நாள் நிகழ்வில் எங்கே தமிழர்களுடைய பிரச்சினை சொல்லப்பட்டது என்பதை முதலில் நாம் பார்க்கவேண்டும். இந்த எதிர்கட்சிகளின் மே நாள் நிகழ்விற்கு வடக்கில் தமிழ்தேசியக் கூட்டமைப்பினர் தலைமை தாங்குவதாகத் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தலைமை தாங்கும் மே நாள் நிகழ்வுக்கு எத்தனை தமிழர்கள் வந்தார்கள்? ஆக மொத்தம் தமிழ்தேசிய கூட்டமைப்பு வைத்திருக்கும் பிரதேசசபையின் உறுப்பினர்கள் வந்திருந்தாலே போதுமானதாக இருந்திருக்கும்.

இது ஒருபுறமிருக்க ஆர்ப்பாட்டத்தில், கலந்து கொள்ளவும், தமிழர் பிரச்சினைகள் குறித்துப் பேசவும், ஏன் மக்களை ஒன்றுபடுத்தவில்லை? இன்றைக்கு வலிகாமம் வடக்கில், பொன்னாலை, மாதகல் பகுதியிலென ஆயிரக்கணக்கான மக்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பமுடியவில்லை. உறவினர் நண்பர்கள் வீடுகளில், அந்த மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் அவல வாழ்வை அந்த மக்கள் இதே கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களைத்தானே மீண்டும் மீண்டும் அழைத்துச் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஏன் அந்த மக்களுடைய குரலாக, அந்த மக்களுடைய துயரங்களை சிங்கள மக்களுக்குச் சொல்லுமளவில் ஒரு தொகுதி மக்களையென்றாலும் அழைத்து வந்திருக்கவில்லை? வடகிழக்கில் கடத்தப்பட்டவர்கள், காணாமல்போனவர்கள் என நீளும் அவலங்களின் பட்டியல் கூட்டமைப்பினருக்குத் தெரியாதா? தொழில் வாய்ப்பில்லாமல் ஆயிரக்கணக்கில் இளம் விதவைகளும், இளைஞர்களும் இருந்து கொண்டிருக்கின்றார்கள்? போரினால் பாதிக்கப்பட்ட நூற்றுக் கணக்கான சிறார்கள் குடும்ப வறுமையினால் வீதியில் நிற்கிறார்கள் அவர்களுடைய குரல் சிங்கள மக்களின் காதுகளில் புகுத்தப்பட்டதா? எதுவுமே கிடையாது.

பின்னர் எதற்காக இந்த மே நாள் நிகழ்வை வடக்கில் எதிர்கட்சிகளுடன் சேர்ந்து நடத்தினீர்கள்? ஆர்ப்பாட்டத்தின் முன்னால் நின்று கையசைப்பதற்கும், மேடையில் நின்று சிங்கக் கொடி ஏந்துவதற்கும், நீங்கள் பிறக்கும்போதும், இறக்கும்போதும் இலங்கையர் என்பதைச் சொல்வதற்கா? சரி இவைதான் நடைபெறவில்லை போகட்டும், ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏதோ விடயத்தைத் தெரிவிக்கத்தான் போகிறார்கள் என எதிபார்க்கப்பட்டது.

ஆனால் அதில் ஒருவரைத் தவிர ஆர்ப்பாட்டத்தில் வேறுயாரும் நிற்கவில்லை. அதையும் விடுத்து ஆர்ப்பாட்டம் மைதானத்திற்கு வந்த பின்னராவது. ஆர்ப்பாட்டத்தில் அவர்களாக வந்திருந்த காணாமல்போனோரின் குடும்பங்களைச் சந்தித்து அவர்களுடன் நின்று போட்டோவுக்கு போஸ் என்றாலும் கொடுத்திருக்கலாமே? வந்தார்கள் மேடை ஏறினார்கள், புன்னகை சிந்திய முகத்தோடு சிங்கக் கொடியை தூக்கிப் பிடித்தார்கள், இறங்கிப் போய்விட்டார்கள், சரி மேடையில் உரையாற்றும்போதென்றாலும் தமிழர்களுடைய சமகாலப் பிரச்சினைகள் குறித்துப்பேசுவார்கள் என்று எதிர்பார்த்தோம், பேசவேயில்லை, இனப்பிரச்சினை குறித்துப்பேசினார்கள்.

அதுவும் பூச்சியம். அரசாங்கத்துடன் பேசினோம் தீர்வு தரவில்லை என இன்னும் எத்தனை காலம் பேசமுடியும்? தீர்வு கிடைக்கவில்லை, அதைவிடவும் அவ்வாறு கொடுப்பதற்கான சமிக்ஞை கூட கிடைக்கவில்லை என்கின்றபோது மீண்டும் மீண்டும் அதைப்பற்றியே பேசிக் கொண்டிருப்பதில் என்ன பலன்? இந்த அரசாங்கம் தமிழர்கள் எதிர்பார்க்கும் தீர்வொன்றினை எப்போதும் கொடுக்கப்போவதில்லை என்பது எப்போதே தீர்மானிக்கப்பட்டுவிட்டது. எனவே மீண்டும் மீண்டும் அரசு தீர்வுக்கு முயற்சிக்கவில்லை என கூறிக் கொண்டிருப்பதில் பயன் என்ன இருக்க முடியும்? மேடையில் ஏறி சிங்கக் கொடியை ஏந்தினால், இலங்கையனாகப் பிறந்து, இறந்தால் தமிழர்களுக்கு என்ன தீர்வு? இலங்கையான பிறந்து வாழ்ந்து இறப்பதை பற்றி பேசிக் கொண்டிருக்கின்றீர்கள், வடகிழக்கில் எத்தனையோ பகுதிகளில் தமிழன் மனிதனாக வாழ்வதற்கு கூட உரிமை மறுக்கப்படுகின்றதே அதற்கென்ன வழி? முதலில் மனிதனாக வாழ வழிசெய்து கொடுங்கள் பிறகு இலங்கையனாக வாழலாம்.

அதுபோக சிங்கக் கொடி ஏந்திய விவகாரம் அனேகமாக தமிழர்களிடம், குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களிடம் கடும் எரிச்சலை தூண்டிவிட்டிருப்பதைக் காண முடிகின்றது. இது தொடர்பாக சில புலம்பெயர் தமிழர்கள் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தொலைபேசியில் நல்ல சாப்பாடு கொடுத்ததாகவும் அறிய முடிகின்றது.

இதில் இன்னொரு விடயம் என்னவென்னால், அன்றை கூட்டத்தில் சிங்கக் கொடியை, பின்புறத்தால் கூட்டமைப்பின் தலைவரின் கைகளில் திணிக்கப்பட்டது என்ற கருத்துருவாக்கத்தை சிலர் ஏற்படுத்த விளைகின்றனர். அனேகமாக தமிழர்கள் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கவில்லை என்றவகையில் அவர்கள் உருவாக்கும் கருத்துக்கள் தமிழர்களிடம் செல்லுபடியாகலாம். ஆனால் அந்த இடத்தில் நின்றிருந்த ஒருவன் என்ற வகையில் நாம் அவதானித்திருந்த ஒரு விடயம், கூட்டமைப்பின் தலை

வருக்குத் தெரியாமல் அந்த கொடி கட்டாயத்தின் பெயரில் திணிக்கப்படவில்லை.

அப்படியே கொடி திணிக்கப்பட்டிருந்தாலும் கூட அந்தக் கொடியை உடனடியாகக் கைவிட்டு தமிழர்களுடைய உன்மையான உளப்பாங்கை வெளிப்படுத்தியிருக்கலாமே, இன்று பொதுமக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரும் இதே கூட்டமைப்பின் தலைமைகள் அன்று கொடியேந்தும்போது, ஏன் இது தாம் சார்ந்த மக்கள் கூட்டத்திற்குச் செய்யும் துரோகம், அவர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்குமளவிற்கு ஒரு துரோகம் என்பதை இவர்கள் அறியவில்லையா? அறியவில்லை, வேறு சந்தர்ப்பமில்லை என யாரும் கூறினார். அது மீண்டும் தமிழர்களை ஏமாற்றும் ஒரு செயலாகவே பார்க்கப்படவேண்டும்.

எனவே மக்கள் சிந்திக்கவேண்டிய காலம் வந்திருக்கின்றது. ஒரு விடயம் எமக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக அதனைப் புறக்கணிப்பது ஒருபோதும் தீர்வாகப்போவதில்லை. தேர்தலுக்கு வாக்களிக்கப்போவதில்லை, கூட்டங்களிற்குப் போவதில்லை, இப்படியே நீண்டு கொண்டிருந்தால் ஏமாற்றுக்களும், துரோகத்தனங்களும் அதிகரிக்கத்தான் போகின்றன.

நாங்கள் விளக்குமாற்றை கொண்டுவந்து இதற்குத்தான் வாக்குப்போடவேண்டும் எனச்சொன்னால் மக்கள் அதற்குத்தான் வாக்களிப்பார்கள் என்று யாரும் சொல்லுமளிவிற்கு அரசியல் அறிவிலிகளாக நாம் இருந்துவிடக் கூடாது என்பதில் தமிழ் மக்கள் தெளிவாக இருக்கவேண்டும். சரி, பிழை இதற்கு அப்பால் கடந்த அறுபது வருடங்கள் பல தியாகிகள் நடந்த அடிச்சுவட்டின் சூட்டில் யாரும் குளிர்காய அனுமதிக்க கூடாது.

ஏனெனில் தமிழர்களுடைய அரசியலுரிமைப் போராட்டம், வெறுமனே காதிதங்களில் மையினால் எழுதப்படவில்லை. அது எங்கள் மண்ணில் குருதியால் எழுதப்பட்டிருக்கின்றது. அந்த வரலாற்றை துரோகிகளும், கொள்கை மறந்தவர்களும் மிதித்து நடப்பதற்கு ஒருபோதும் அனுமதிக்க கூடாது என்பதே இன்றுள்ள வரலாற்றுக் கடப்பாடு.

நன்றி : ஈழமுரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.