Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவ அடக்குமுறை இன்னும் தொடர்கிறது! - கந்தரதன்

Featured Replies

ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 2 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையிலும், தமிழர் தாயகப் பகுதி எங்கும் இராணுவத்தினரின் பிரசன்னம் அதிகரித்தே வருகின்றது. அத்துடன் இராணுவத்தினரின் அத்துமீறல்களும் ஓய்ந்த பாடில்லை. தமிழர் தாயகப் பகுதிகளில் நாளாந்தம் தமிழ் மக்களின் அகால மரணம் மற்றும் கொள்ளை, வன்கொடுமைச் செய்திகள் தாங்கியே ஊடகங்கள் வெளியாகின்றன.

இந்நிலையில், தமிழர் நிலங்களில் இராணுவத்தினர் சட்டவிரோதமாக அமைத்த புத்த விகாரைகள் இன்னும் அகற்றப்படாமல் உள்ளதாக பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். அரியாலை கிழக்கில் இராணுவ முகாம் ஒன்று அகற்றப்பட்டதாகக் குறிப்பிடப்படுகின்றபோதும் அவர்கள் அமைத்த சிறிய புத்த விகாரை இன்னும் நிலைத்து நிற்கிறது. கற்களினால் நிலையாக அமைக்கப்பட்டுள்ள இந்தப் புத்த விகாரையை புத்தபிக்குகள் பராமரித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த இடத்தில் இருந்து வெளியேறிய இராணுவத்தினர், எக்காரணம் கொண்டும் இந்த விகாரையை எவரும் சேதப்படுத்தக் கூடாதென்று பொதுமக்களை மிரட்டியும் உள்ளனர். இதனால் பொதுமக்கள் அச்சமடைந்த நிலையில் உள்ளனர். இராணுவத்தினர் முகாம் சூழலில் ஒரு விகாரையை அமைப்பார்கள் அல்லது ஒரு புத்தர் சிலையைவைப்பார்கள்.

இராணுவம் பிற இடத்திற்கு நகர்ந்தாலும் முன்னர் அமைக்கப்பட்ட விகாரையும் சிலையும் அப்படியே இருக்கும். பின்னர் சிறிலங்கா பிரதமரின் தலைமையில் இயங்கும் புத்த சாசன அமைச்சு அதற்கு அங்கீகாரம் வழங்கிவிடும். இராணுவம் இவ்வாறு தமது தேவைக்காக அமைத்த மதச் சின்னங்கள் பின்னர், அரச நிதியில் இருந்து நிரந்தர கட்டிடங்களாக அமைக்கப்படுகின்றன.

புத்த பிக்குகள் தொடர்ந்து மதச்சடங்குகளைச் செய்து வழிபாட்டை ஆரம்பித்து விடுவார்கள். பின்னர் அது சிங்களக்குடியேற்றத்துக்கு அத்திவாரமிடும் செயலாக மாறிவிடுகின்றது. இவ்வாறே, மன்னார் திருக்கேதிஸ்வர திருத்தல பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புத்தர் சிலைக்கான அனுமதிப்பத்திரம் கடந்த வியாழக்கிழமை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்டச்செயலக வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ள நிலையில், புத்தர் சிலை இன்னும் அகற்றப்படவில்லை.

புத்தர் சிலை வைக்கப்பட்ட காணி தனியாருக்குச் சொந்தமானதாகும். இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை மன்னாருக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்த மகிந்தவின் ஆலோசகர் ரஜீவ விஜயசிங்க திருக்கேதிஸ்வரத்திற்கு சென்று புத்தர் சிலை வைக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டபின்னர், தனியாருக்கு சொந்தமான காணி என்பதால் அதனை அகற்றுமாறு கூறியதாகத் தகவல்கள் தெரிவிகின்றன.

ஆனால், ரஜீவ விஜேசிங்க, மன்னார் திருக்கேதிஸ்வர பகுதியில் நின்றவேளை, அங்கு வந்த மன்னார் ஊடகவியலாளர்கள் இருவருடன் முரண்பாட்டில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஜீவ விஜேசிங்க, மன்னார் ஊடகவியலாளர் இருவரையும் கண்டு விரக்தி அடைத்துள்ளநிலையில், குறித்த இருவரையும் அழைத்து கடுமையாக எச்சரித்ததோடு பௌத்த தர்மத்தில் தலையிடக்கூடாது என எச்சரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதன்பின் நீண்ட நேரம் இராணுவத்தினரால் தடுத்துவைக்கப்பட்டதன் பின்னரே குறித்த ஊடகவியலாளர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, முல்லைத்தீவுப் பகுதியில் தமிழ் சாரதி ஒருவரைப் படையினர் கண்மூடித்தனமாகத் தாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு பேருந்து நிலையத்தில் தென்னிலங்கை பயணிகள் பேருந்து உரிமையாளருக்கும், குறித்த தமிழ் சாரதிக்குமிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தையடுத்து, அங்கு வந்த படையினர் பொதுமக்கள் முன்னிலையில் தமிழ்ச் சாரதியை காட்டுமிராண்டித்தனமாக தாக்கி படுகாயப்படுத்தியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். வாய்த் தர்க்கத்தைத் தொடர்ந்து தென்னிலங்கைச் சாரதி அருகில் இருந்த இராணுவ முகாமுக்குச் சென்று இராணுவத்தினரிடம் முறையிட்டுள்ளார்.

இதனையடுத்து அங்குவந்த சுமார் 5 இற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் தமிழ்ச் சாரதியை பேருந்திலிருந்து இழுத்து கீழே வீழ்த்தி, கண்மூடித்தனமாக அவர் மீது தாக்குதலை நடத்தியுள்ளனர். சாரதி நிலத்தில் வீழ்ந்து கிடக்க படையினர் சுற்றிநின்று கடுமையாகத் தாக்கியதாக சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமகன் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், முப்பது வருடங்களின் பின்னர் அண்மையில் மீள்குடியேறியுள்ள முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் கிராம மக்கள், தங்களது கிராம பாடசாலையை இராணுவத்தினரிடம் இருந்து மீட்டுத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இராணுவத்தினர்

பாடசாலையை ஆக்கிரமித்திருப்பதால், தமது பிள்ளைகள் தினமும் எட்டு கிலோமீற்றர் தொலைவில் உள்ள கொக்கிளாய் பாடசாலைக்குப் பேருந்தில் சென்று படித்து வருகின்றனர் எனவும் - பிள்ளைகள் வீடு வந்துசேரும்வரை தாம் நிம்மதியற்ற நிலையில் இருக்கின்றனர் எனவும் - கடந்த வாரம் அப்பகுதிக்குச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவசக்தி ஆனந்தன் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் முறையிட்டுள்ளனர்.

மேலும், கொக்குத்தொடுவாயிலிருந்து முல்லைத்தீவிற்குச் சென்றுவருவதற்கு பேருந்து கட்டணம் மட்டும் நூற்றி ஐம்பது ரூபாவிற்கும் மேல் தேவைப்படுவதாகவும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் யாரும் இங்கிருந்து முல்லைத்தீவிற்கோ அல்லது முல்லைத்தீவிலிருந்து யாரும் இந்தப் பகுதிகளுக்கோ பயணிக்க முடியாத நிலை உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

பேருந்துகளில் சிங்கள மக்களுடன் சிறு வாய்த்தர்க்கம் ஏற்பட்டால்கூட இராணுவத்தினர் பேருந்து ஓட்டுனர், நடத்துனர் உள்ளிட்டவர்களை அடித்துத் துன்புறுத்துகின்றனர். இவ்வாறு தமிழ் மக்கள் தொடர்ந்து அச்சுறுத்தப்படுகின்றனர். பேருந்தில் முன்சென்று இறங்குங்கள் என்று கூறியதற்காக பேருந்தின் சாரதிக்குத் தலையின் பின்புறத்திலும், நடத்துனருக்கு மூக்கிலும் கொக்கிளாய் சிங்களவர்கள் அடித்துள்ளனர். பேருந்தில் இருந்த தமிழ் மக்கள் நியாயம் கேட்டு காவல்துறையிடம் முறைப்பாடு செய்யச் சென்றவேளை காவல்துறையினர் புகாரை ஏற்காமல் சமரசமாகப் போகும்படி அறிவுரைகூறியுள்ளனர்.

தனியார் பேருந்துச் சங்கத்தின் தலைவரிடம் முறையிடச் சென்ற போது அவரும் காவல்துறை கூறியதையே கூறியுள்ளார். இதனால் தமிழ் மக்கள் தாங்கள் அடிவாங்குவதற்கென்றே பிறந்தவர்களா என்று விரக்தியடைந்தவர்களாக வாழ்கின்றனர். புலம் பெயர் வாழ் எம் தமிழ் உறவுகளே நாம் அடிவாங்கப் பிறந்தவர்களா? என்பதை வரும் மே 18 முள்ளிவாய்க்கால் மூன்றாம் ஆண்டு நினைவு நாளில் சர்வதேசத்திடம் உரத்துக் கேட்போம் அணிதிரண்டு வாரீர்!

(சூறையாடல்கள் தொடரும்)

நன்றி : ஈழமுரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.