Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாவம் செய்தவர்களுக்கு மன்னிப்பு வழங்கும் இடமாக மாறியுள்ளது தமிழ் தேசிய கூட்டமைப்பு!

Featured Replies

thamil%20theesiak%20kuuddamaippu.jpgஉன்னதமான இலட்சியப் பயணத்திற்காக தமிழீழ விடுதலைப் புலிகளினால் உருவாக்கப்பட்டதே தமிழ் தேசிய கூட்டமைப்பு. அந்த அமைப்பு இருக்கும் வரையில், கட்டுக் கோப்புடன் செயற்பட்டுவந்தது கூட்டமைப்பு. ஆனால், இன்று மக்களின் பிரதிநிதிகள் எனத் தெரிவிக்கும் ஒரு சிலரின் வஞ்சகத்தனமாக போக்கினால் சில குள்ளநரிகள் கூட்டமைப்புக்குள் உள்நுழைந்துள்ளன.

முழுக்க முழுக்க சிங்கள அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலின் படி செயற்பட்டவர்கள், இன்றும் செயற்படுபவர்கள் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட நோக்கத்தை சிதைக்கும் நோக்குடன், கொழும்பு அரசாங்த்தினால் பல்வேறு வழிகளில் நீண்ட கால திட்டத்தின் அடிப்படையில் உள்நுழைய வைத்துள்ளனர்.

ஒரு கொள்கை, ஒரு கொடி, ஒரு தேசியம் என மிகவும் கன்னியமாக வளர்க்கப்பட்ட கூட்டமைப்பு இன்று பல்வேறு கட்சிகளுக்குப் பின்னாலும், பலரின் ஊதுகுழல்களாகவும் செயற்படுகிறமை தமிழ் பற்றாளர்களின் மனங்களை புண்படுத்தியுள்ளது.

கடந்த காலத்தில் பதவி மோகம் கொண்டு தமிழர்களின் உரிமைகளை புறம்தள்ளிவிட்டு சிங்களவர்களின் பக்கம் தாவியவர்கள் இன்று தேச பிதாக்களாக போன்றப்படுகின்றார்கள். அவ்வாறு, போற்றப்படுவர்கள் கடந்த காலங்களில் தமிழர்க்கு இழைத்த துரோகங்களை மக்கள் மத்தியில் முன்வைப்பவர்களுக்கு துரோகிப் பட்டம் வழங்குகின்றார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலைப் புலிகள் செயற்பட்ட காலத்தில் அந்த அமைப்புக்கு எதிராக சிங்கள பேரினவாத சக்திகளுடன் இணைந்து தமிழர்களுக்கு இழைத்த துன்பங்கள் எண்ணிக்கையில் அடங்காது. ஆனால் இன்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காக புலிகளின் கொள்கையில் உருவாக்கப்பட்ட அமைப்புக்குள் நுழைய அதில் உள்ளவர்களுடன் இணைகின்றனர்.

பதவியும், பட்டங்களையும் தொடர்ந்து தக்கவைக்க விரும்பவர்களுக்கு மன்னிப்பு வழங்க கூட்டமைப்பில் ஒரு சில இயேசு நாதர்கள் இருக்கின்றார்கள். இவ்வாறான இயேசு நாதர்கள் தெரிந்தே செய்யும் துரோகங்களையும் மன்னிப்பவர்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலைப் புலிகளினால் வழங்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளுக்கு யார், யார் எதிராக இருந்தார்களோ அவர்களுடன் கூட்டிணைந்து கொள்ள விரும்புகின்றார்.

தனது உயிரை தீயாக்கும் தியாகிகளினால் வழங்கப்பட்ட பதவிக்கு உரிய மரியாதை வழங்காது எமது இனத்தையும், போராட்டத்தையும் எதிரிக்கு காட்டிக் கொடுத்தவர்களுடன் உறவு கொண்டாட துடிப்பதன் நோக்கம் என்ன?

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிள்ளையான் குழுவில் அங்கம் வகிக்கும் செல்வேந்திரன், கிழக்கு மாகாண உறுப்பினராக இருக்கும் பூ.பிரசாந்தன், போன்றவர்களுடன் மிகவும் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்தியுள்ள குறித்த நாடாளுமன்ற உறுப்பினரின் நோக்கத்தை வெளிப்படையாக தெரிவிக்க முடியுமா?

கடந்த காலங்களில் சிங்கள படைகளுடனும், அரசாங்கத்துடன் கைகோர்த்து தமிழர் போராட்டத்தையே காட்டிக் கொடுத்தவர்களுடன் இணையும் சூட்சுமம்தான் என்ன? தினம் தோறும் தொடர்புகளை ஏற்படுத்தி தற்போது சுரேஷ்யுடன் ஒரு எதிரியை இணைத்துவிட்டார் அந்த நாடாளுமன்ற உறுப்பினர்.

எதிர்வரும் காலத்திலும் பிள்ளையான் அணி மற்றும் கருணா அணியிலிருக்கும் உறுப்பினர்களையும் கூட்டமைப்புக்குள் புகுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டாலும் வியப்பதற்கல்ல.

குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆரம்ப காலத்தில் பச்சை நிறக் கட்சியுடையவர். எனினும், தாம் தமிழர் போராட்டக் காரர்கள் என்ற மாயமான தோற்றத்தை ஏற்படுத்தி விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்பட்டவர்.

கடந்த காலத்தில் விடுதலைப் புலிகளுடனான சந்திப்புக்கள் நடைபெறும் வேளையில் மலசல கூடத்திற்குள் சென்று பிறருக்கு தகவல்களை வழங்கியவர். புலிகள் இருந்த காலத்தில் அடக்கி வாசித்தவர் இன்று வெளிப்படையாகவே சிங்களவர்களுக்கு துணைபோகும் விதமாக செயற்படுகின்றார்.

கடந்த மே தினத்தில் கூட்டமைப்பின் தலைவர் பெரும் துரோகத்தை இழைத்தமை அனைவரும் அறிந்த விடம். ஏன் இவ்வாறு செயற்பட்டீர்கலென்று கேட்டால் அது அரசியல் இராஜதந்திரம் என்கின்றார்.

உண்மையில், ஆளுந்தரப்பான மஹிந்தா நேரடியாக கூட்டமைப்புத் தலைவரை கையாள நினைத்தார் அது ஒரு சில எதிர்ப்புக்களினால் கைகூடவில்லை. அதன் பிரதிபலிப்புத்தான் சிறீலங்காவின் எதிர்க்கட்சி அணியினரை மஹிந்தா பயன்படுத்தினார்.

கூட்டமைப்புத் தலைவரை எதிர்க்கட்சித் தலைவர் திட்டமிட்டு கையில் சிங்கக் கொடியை வழங்கியதாக ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவிக்க மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார் அது தவறுதலாக இடம்பெற்ற விடயம் எனவே பொதுமக்களிடம் மன்னிப்புக் கோருவதாக ஊடகங்களுக்கு அறிவித்திருந்தார்.

ஆனால், தலைவரோ நேரடியாக தெரிவித்தார். நான் விரும்பித்தான் சிங்கக் கொடியைத் தூக்கினேன் யாரும் மன்னிப்புக் கேட்கத் தேவையில்லை என்றார். உண்மையில் தலைவர் அவ்வாறுதான் சொல்ல வேண்டும். காரணம் எதிர்க்கட்சி தலைவருடாக வழங்கப்பட்ட சிலவற்றுக்கு கைமாறாக யாழ் மண்ணில் சிங்கக் கொடியை ஏந்தினார்.

கூட்டமைப்பு கூத்தாடிகள் சொல்வலெல்லாம் வேதவாக்காக நம்பிக் கொண்டிருந்தால் முள்ளிவாக்காலில் நடந்தவை மாத்திரமல்ல வடக்கு கிழக்கே முள்ளிவாக்காலாக மாறிவிடும்.

இவ்வாறான, நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் தான் முடிவு எடுக்க வேண்டும். இதில், புலம்பெயர்ந்தவர்கள் ஒரு புறத்தில் நடவடிக்கையில் ஈடுபட உள்நாட்டில் இருக்கும் எமது உறவுகள் தேர்தல் காலங்களில் சரியான பாடங்களை இப்படிப்பட்டவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகவுள்ளது.

http://eeladhesam.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.