Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருப்புத்துண்டு கபாலி கவனத்திற்கு

Featured Replies

நாடாளுமன்றத்தில் நாங்கள் அருகருகே அமர்ந்திருந்தோம். எங்களுக்கு அருகில் மத்தியில் குவாலியர் ராணி ராஜமாதா சிந்தியா அமர்ந்திருந்தார். அவர் சபைக்கு வராத நாட்களில் எங்களுக்குள் நெருங்கிய நட்பு ஏற்பட்டது என்று செயாவுடனான பழைய தொடர்பு பற்றி கருப்புத்துண்டு கபாலி சொன்னார். ( தினமணி 02-04௨006)

கருப்புத்துண்டு கபாலி, இம்மாம் பழைய ஞாபகம் உங்களுக்கு இருக்கே, சென்ற செயா ஆட்சியில் கோடி கோடியாய் கொள்ளை அடிச்ச சம்பவம் ஒன்னு கூடவா உங்களுக்கு ஞாபகம் இல்ல?.

கபாலி நீங்க, அப்படியே செயா அடித்த கொள்ளையையும் அப்படியே மேடையில அப்பப்ப பேசுங்க. அப்படி பேசினா, நீங்க உண்மையையே பேசுவதாக மக்கள் நம்புவார்கள். உங்களுக்கு புனிதர் பட்டங்கள் கூட நாங்க தரோம்.

கருப்புத்துண்டு கபாலி அவர்களே உங்களுக்கே தெரியும். புனிதர் பட்டத்துக்கு நீங்க தகுதியில்லன்னு. கோடி கோடியாய் கொள்ளையடித்து தங்கமாய் அலைந்த செயாவிற்கு “தங்க தாரிகை“ பட்டம் கொடுத்தாங்க இல்லியா? அது போல உங்களுக்கு “புளுகுப்புனிதர்“ என்ற புதிய பட்டம் ஒன்னும் தரோம்.

கடந்த 20 நாட்களில் அவரை 3 முறைகள் சந்தித்துள்ளேன் நான் அவரிடம் கண்ட கடல் அளவு மாற்றம் என்னை திகைப்படைய வைத்துள்ளது. அது உண்மை, அவர் படிப்பாளி, விவேகி, அதிபுத்திசாலி என்று வாங்கிய காசுக்கு குறைவில்லாமல் விசுவாசமாக சேவை ஆற்றுகிறீர் கபாலி.

இதோ சென்ற கூட்டணியில் இருந்தவர்கள் என்ன் சொன்னார்கள் என்பதைப் பார்ப்போம்.

மூப்பனார் காங்கிரசு, இரண்டு பொது உடைமைக்கட்சிகள், பா.ம.க கட்சிகளை தேர்தல் முடிந்தவுடன் தூக்கி எறிந்தார். காசு விட்டு எறிந்தால் அவர்கள் காலடியில் வீழ்பவர்கள் தான் அவர்கள் என்று செயாவிற்கு தெரியும்.

தூக்கி எறியப்பட்ட போது, அவர்கள் சொன்ன வார்த்தை "செயா மிகவும் மாறிவிட்டார்" என்பதுதான்.

கருப்புத்துண்டு கபாலி அவர்களே! செயா அவர்களிடம் நீங்கள் கண்ட கடல் அளவு மாற்றம் இப்போது உங்களை திகைப்படைய வைத்துள்ளது போல் மீண்டும் நீங்கள் திகைப்படையும் காலம் வெகு தொலைவில் இல்லை.

அப்படி இல்லையென்றாலும் செயா உங்கள் முகத்தில் குத்துவார் அப்போது நாங்கள் வேடிக்கைப் பார்ப்போம்.

ஒருவேளை வாங்கிய காசுக்கு நீங்கள் காலை நக்கிக் கொண்டிருந்தால் நீங்கள் மீண்டும் மீண்டும் திகைப்படைய வாய்ப்புண்டு, ஆனால் அவ்வாறு நடக்குமேயானால் கபாலி அவர்களே தயவு செய்து தமிழன், சுயமரியாதை, மானம், வெட்கம், என்று ஒருபோதும் பேசிவிடாதீர்கள்.

அப்படி நீங்கள் பேசினால் தமிழ் அகராதியில் அந்த வார்த்தைகளும் மானமிழந்து விடும். அப்படியும் பேசுவீர்களேயானால் சொரணையுள்ள தமிழர்களாகிய நாங்கள் அந்த வார்த்தைகளுக்கு அகராதியில் கீழ்க்கண்டவாறு பொருள் மாற்றுவதைத்தவிர வேறு எங்களுக்கு வ்ழியில்லை.

தமிழன் – வெக்கங்கெட்டவென்,

சுயமரியாதை - மானங்கெட்டத்தனம்,

வெட்கம் - சொரணையில்லமை,

மானம் - சூடு சொரணையில்லாம் துதி பாடல்,

மக்கள் நலம் - ஏமாற்று வேலை,

என்று மாற்றிவிடுவோம்.

சரி போகட்டும்.

கூட்டணியில் சேர்ந்த போது நீங்கள் என்ன சொன்னீர்கள், எங்கள் கட்சிக்கு எது நல்லதோ அதை நான் செய்தேன். நான் என்னைப்பற்றி கவலைப்பட வில்லை என்று தானே!.

கட்சிய வளர்க்க, உங்க தொண்டர்களுக்கு நல்லதுக்கு இந்த முடிவு எடுத்தீங்க இல்லியா? இப்ப மக்கள் நலம் மக்களுக்காகத்தான் கூட்டணி சேர்ந்தேன்னு இப்ப பேசுறீங்க.

கட்சி நலன் அப்படின்னா என்ன? உங்க தொண்டர்கள் காண்ட்ராக்ட் எடுக்கணும், சொத்து சேர்க்கணும், இவ்வளவு நாள் உழைத்த தொண்டர்களுக்கு கொள்ளை அடிக்க ஒரு வாய்ப்பு உருவாக்கித் தரனும் நல்ல முடிவு தான். நாலு கல்யாண மண்டபம், சொத்து சொகம் எல்லாம் உங்கள் தொண்டனுக் கும் கிடைக்க வேண்டாமா?.

செயலலிதாக்கிட்ட பயிற்சி எடுத்துக்குங்க. எப்படி கவர்னர வாங்கலாம், நீதிபதி வீட்டில எப்படி கரண்ட் கட்பண்றது. எல்லாமே அத்துபடியாகிவிடும்.

கருணாநிதிக் குடும்பத்துக்கு மட்டும் இத்தனை சொத்து இருக்கலாமா? அது தானே வைகோ உங்க கோபம்.

செயா சென்ற தேர்தலில் திருடத்தெரியாமல் திருடினார், மாட்டிக்கிட்டார். இந்த முறை பாருங்க யாருக்காவது தெரியுமா?

****

தமிழர் நலமே வாழ்வின் லட்சியம் அப்படி இப்படின்னு புளுகிறீங்களே கபாலி இது ஞாயாமா?

மக்கள் நலம் பற்றி கொஞ்சமாவது அக்கரை இருக்கிறதா உங்களுக்கு, இருந்தால் கொள்ளை ராணியிடம் கூட்டு சேர்வீர்களா?.

உங்க கூட்டணியில அதிகமா விமர்சிக்கப்படுவது நீங்களும் திருமாவும் தான், நீங்க தான் கொள்கை அப்படி இப்படின்னு பேசி மக்கள ஏமாத்துறீங்க, ஆனா உங்க புரட்சித்தலைவியோ உங்களுக்கு கொள்கையும் இல்ல ஒரு பொடலங்காயும் இல்ல எல்லாம் என் பொட்டிக்குள் அடக்கம்னு கொள்கைய பத்திமட்டும் பேசுவதேயில்லை.

உங்களைப்போன்றவர்கள் தான் “தாயே உன்னடி சரணம்“ என்று தலைகுப்புற கவிழ்ந்து கிடக்கிறாங்க. செயலலிதா புனிதமானவர், ஈழப்பிரச்சனையில் அக்கறையுடன் இருக்கிறார். அப்படி இப்படின்னு புளுகிறீங்க. சிங்களத்து சிறுக்கி சந்திரிகாவோடு கூட்டு சேர்ந்த போது நீங்க தானே கத்திக்கிட்டிருந்தீங்க.

கடைசியா உங்களுக்கு ஒரு ஐடியா தரேன் கேளுங்க.

பேசாம கட்சிய கலைச்சிட்டு "அம்மாவே சரணம் அப்படின்னு கால்ல விழுந்திடுங்க" ஒரு வேள உங்களுக்கு "சபாநாயகர் வேலக்கூட" கிடைக்கலாம். தேர்தல்ல நிக்க்கமலே சபாநாயகர் பதிவியா?

ஆச்சரியப்பாடாதீங்க வைகோ.

"பொட்டியிருக்கிற வரைக்கும் கடவுளே வந்தலும் காலடியிலே தான்."

(நன்றி : சிவச்சந்திரன், கனடா)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.