Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீட்டில் விளக்கேற்றவும் தடை! - கந்தரதன்

Featured Replies

முள்ளிவாய்க்கால் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழர் தாயகப் பகுதி உட்பட தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகள் பலவற்றிலும் மிகவும் எழுச்சிபூர்வமாக இடம்பெற்றுள்ளது. குறிப்பாக யாழ் பல்கலைக் கழகத்தில் சிறீலங்கா இராணுவத்தினரதும் புலனாய்வாளர்கள் மற்றும் ஒட்டுக்குழுக்களினதும் பாரிய அச்சுறுத்தலுக்கு மத்தியில் முள்ளி

வாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நிகழ்ந்தேறியுள்ளது. ஆயினும் பல மாணவர்கள் அச்சுறுத்தலுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

ஏற்கனவே, முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூரும் பதாகைகள், சுவரொட்டிகள் யாழ். பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஒட்டப்பட்டிருந்தமை தொடர்பாக பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட அதிகாரிகள் பலரும் சிறீலங்கா புலனாய்வாளர்களால் விசாரிக்கப்பட்டிருந்தமை தொடர்பாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியளவில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர், யாழ். கலட்டிப் பகுதியில் சிறீலங்கா இராணுவ ஒட்டுக்குழுவினரால் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இதில் படுகாயமடைந்த பரமலிங்கம் தர்ஷானந் யாழ் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

வழமைபோல பல்கலைக்கழகத்திற்கு காலை மிதிவண்டியில் சென்று கொண்டிருந்த தர்ஷானந், கலட்டிச் சந்தியில் வைத்து நால்வர் கொண்ட குழுவினால் கூரிய இரும்புக் கம்பிகளினால் தாக்கப்பட்டுள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவு சுமந்து பல்கலைக் கழகத்தில் ‘பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்’ என்ற பெயரில் கடந்த புதன்கிழமை சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்தப்படும் முள்ளிவாய்க்கால் நிகழ்வைக் குழப்பும் முகமாகவே இவர் மீதான தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் செயலாளர் பரமலிங்கம் தர்சாந்த் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டிக்கும் வகையில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளுக்கு விசேட பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டியது அவசியமானது என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரியுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் சில காலமாக பாதுகாப்புப் பிரச்சினையை எதிர்நோக்கி வருவதாகவும் இது தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் கவனம் செலுத்தவேண்டும் எனவும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் பாரதூரமாக தாக்கப்பட்டிருந்தார் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை நினைவுகூராத வகையில் வன்னியில் சிறிலங்காப் படையினர், பொதுமக்களுக்கு பல கெடுபிடிகளைச் செய்திருந்ததாக வன்னித் தகவல்கள் தெரிவித்திருந்தன. முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் கடவுளுக்கு கொழுத்தி வைத்திருந்த விளக்கைக் கண்டு அச்சமடைந்த சிங்கள இராணுவம் பொதுமக்களை அச்சுறுத்தி மிகவும் கேவலமான முறையில் நடந்து கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதான தகவல் தமிழர்களை மேலும் கொதிப்படையவைத்துள்ளது.

ஆயிரம் ஆயிரம் பொது மக்கள் படுகொலை செய்யப்பட்ட நினைவு நாளில் இறுதி யுத்தம் நடைபெற்ற வன்னிப் பிரதேசங்களில் இராணுவ வீதிக் கண்காணிப்பு பணிகள் தீவிரமாகக்கப்பட்டிருந்தன. கிளிநொச்சியின் முரசுமோட்டையில் வீதிக் கண்காணிப்பு அணியில் சென்று கொண்டிருந்த இராணுவத்தினர் வீடொன்றில் ஆஞ்சசேயருக்கு கொளுத்தப்பட்டிருந்த விளக்கைக் கண்டு அந்தவீட்டை சுற்றிவளைத்ததோடு அப்பகுதி முழுவதும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு வீடு முற்றாக சோதனை செய்யப்பட்டு வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் விசாரணைக்குட்படுத்தப்பட்டனர்.

இறந்த உறவினர்களுக்காக பிரார்த்தனை செய்ய கோயிலுக்கு சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்தவர்களையும் இராணுவம் சுற்றிவளைத்து அவர்களைத் துன்புறுத்தி விசாரணை செய்தது. பின்னர் கடவுளுக்குக் கொளுத்தப்பட்ட விளக்குகளை இராணுவம் தூக்கியெறிந்ததோடு இவ்வாறான நாட்களில் கடவுளுக்கும் விளக்குக் கொளுத்தக் கூடாது எனப் பொதுமக்களையும் அவ்வீட்டில் இருந்தவர்களையும் அச்சுறுத்தி சென்றுள்ளது.

இவ்வாறான, நிலையே இன்று தமிழர் தாயகப் பகுதி தமிழ் மக்களுக்கு நாளும் நிகழ்ந்தேறுகின்றது. இதனை தடுத்து நிறுத்துவதற்கு யாருமற்றவர்களாக தமிழ் மக்கள் மேலும் மேலும் சொல்லொணாத் துன்பங்களுக்கு உள்ளாகிவருகின்றனர். இந்நிலையில், சர்வதேசத்தையே மிரட்டும் வகையில், மகிந்த ராஜபக்சா, போர் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வில் கடந்த வெள்ளிக்கிழமை இறுமாப்போடு உரைநிகழ்த்துகையில், எக்காரணம் கொண்டும் தமிழர் தாயகப்பகுதியில் இருந்து இராணுவத்தினர் அகற்றப்படமாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

இதனைச், சர்வதேசம் எவ்வளவு காலத்திற்குத் தான் பார்த்துக்கொண்டிருக்கப்போகின்றது. தமிழ் மக்களின் மீதான வன்கொடுமைகளுக்கு எம்போது தீர்வு முன்வைக்கப்போகின்றது. புலம்பெயர்வாழ் எம் தமிழ் உறவுகளே! நாம் ஒற்றுமையோடு நின்று ஒருமித்துக் குரல்கொடுக்கவேண்டிய தருணம் இது! நாம் சிந்திக்கும் நேரமல்ல, சிந்தித்து செயற்பட வேண்டிய நேரம் இது!

(சூறையாடல்கள் தொடரும்)

நன்றி : ஈழமுரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.