Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இனப்படுகொலையாளி ராஜபக்சேவை விரட்டியடித்து வரலாறு படைத்துள்ள பிரித்தானிய ஐரோப்பியவாழ் ஈழத்தமிழர்களது வீரத்தை சிரம்தாழ்த்தி வணங்கிநிற்கின்றது ஈழதேசம் இணையம்.

Featured Replies

மாபெரும் இனப்படுகொலையினை செய்துவிட்டு அது குறித்த எவ்வித குற்ற உணர்வும் இன்றி நடமாடித்திரியும் மனித மிருகம் ராஜபக்சே இரண்டாவது தடவையாக லண்டன் மண்ணிற்கு வந்தபோது நேரிடையாக நின்று துரத்தியடித்த பிரித்தானிய ஐரோப்பியவாழ் ஈழத்தமிழர்களின் வீரத்தை சிரம்தாழ்த்தி வணங்கிநிற்கின்றது ஈழதேசம் இணையம்.

ஒக்த்போர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்ற வந்த கொலைவெறியன் மகிந்தவை குறுகிய கால அவகாசத்தில் துரிதமாக செயற்பட்டு விரட்டியடித்து போர்பரணி பாடிநின்ற பிரித்தானிய வாழ் ஈழத்தமிழர்கள் இம்முறை அதனிலும் பலபடி சென்று சாதனை படைத்துள்ளார்கள்.

கடந்த முறை ஒக்த்போர்ட் பல்கலைக்கழகத்தில் கொலைவெறியனின் பேச்சை நிறுத்திய உங்களது போராட்டம் இம்முறை பொதுநலவாய நாடுகளின் வர்த்தக மாநாட்டையே நிறுத்திவைக்குமளவிற்கு வீச்சுப் பெற்றுள்ளமை சாதாரணமாக கணித்துவிட முடியாத விடையமாகும்.

மகிந்த ராஜபக்சேவின் அரை மணிநேரத்து உரைக்காக மாநாட்டையே நிறுத்தியுள்ளார்கள் என்றால் அந்த மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருந்த எனைய நாட்டுத் தலைவர்களிற்கும் அரசதரப்பு பிரதிநிதிகளிற்கும் அந்த செய்தி பரிமாறப்பட்டிருக்கும்.

புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்களது போராட்டத்தின் வீச்சு எப்படி இருக்கும் என்பதை கணித்திருந்த லண்டன் மாநகரத்து காவல்துறையினர் பொதுநலவாய நாடுகளின் கூட்டமைப்பு நிர்வாகிகளிடம் வர்த்தக மாநாட்டிற்கு வரும் தலைவர்களிற்கு தம்மால் சிறந்த பாதுகாப்பினை வழங்க முடியாது என்பதை எடுத்துக் கூறியிருந்ததையடுத்தே மாநாடு நிறுத்தப்பட்ள்ளது.

உலகின் சக்திவாய்ந்த அமைப்பின் மாநாடு ஒன்று தமிழர்களின் போராட்டத்தின் விளைவாக நிறுத்தப்பட்டுள்ளது என்ற செய்தியும் ராசபக்சே கலந்து கொண்டால் அந்த நிகழ்வை இனிமேல் சிறப்பாக நடாத்தி முடிக்க முடியாது என்ற புறச்சூழலையும் புலத்துப் புலிகள் தமது தீரம் மிக்க போராட்டத்தின் மூலம் உறுதிபடத் தெரிவித்துள்ளார்கள்.

இம்முறை பிரித்தானிய மகாரணியின் அரசவிழா நடைபெறும் சமகாலம் என்பதால் லண்டன் மாநகரச் சூழல் முற்றிலும் இறுக்கம் மிக்கதாக காணப்பட்ட போதும் எமது மக்களின் கடந்தகால அமைதிவழிப் போராட்டங்களின் காரணமாகவும் உறுதிமிக்க நிலைப்பாட்டினாலுமே இந்த வெற்றியை சாதிக்க முடிந்துள்ளது.

பிரித்தானியாவை பொறுத்தவரை மகாராணி என்பவர் கடவுளுக்கும் மேலானவராக பார்க்கும் நிலை உள்ளது. அப்படிப்பட்ட மகாராணியின் அறுபதாவது பதவிஏற்ற நிகழ்வை சிறப்பிப்பதற்காக விழாக்கள் மேற்கொள்ளப்பட்டுவந்த சமநேரத்தில் லண்டன் மாநகரத்தில் வீதிகளில் போக்குவரத்துக்களை தடைசெய்து போராட்டத்திற்கு அனுமதியும் ஒத்துழைப்பினையும் லண்டன் காவல்துறையினர் வழங்கியிருந்தமை எமது கண்ணியமான போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.

பிரித்தானிய அரச குடும்பத்து நிகழ்வுகள் நடைபெறும் போது அசம்பாவிதங்களை ஏற்படுத்துபவர்களிற்கு அதிகபட்சமாக மரணதண்டனை கூட விதிக்கப்படலாம் என்ற நிலையிலும் எதுவந்தாலும் சந்திக்கும் துணிச்சலுடன் லண்டன் மாநகரத்து வீதிகளில் ராசபக்சே எந்தத் திசையில் நகர்ந்தாலும் அங்கெல்லாம் விரட்டி விரட்டிச் சென்று தமிழர்களது போர்க்குணத்தை உலகிற்கு உணர்த்தியுள்ள புலம்பெயர்வாழ் இளையோர்களது செயற்பாடு போற்றுதலிற்கும் பாராட்டுகளிற்கும் உரியதாகும்.

ஆங்காங்கே உணர்ச்சி மேலீட்டால் சில வரம்புமீறும் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தாலும் மிகப் பொறுப்புணர்வுடன் கட்டுப்பாட்டுடன் களமாடி தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது தலைமையிலான புலிகள் படையென நிரூபித்துள்ளனர் பிரித்தானியவாழ் புலம்பெயர் இளையோர்கள்.

முக்கியமாக பிரித்தாணியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் உலகத்தமிழர் பேரமைப்பு தாம்தான் உண்மையான தலைமை என கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கும் தலைமைச்செயலகத்து அறிக்கைப்புலிகள் நாடுகடந்த தமிழீழ அரசு போன்றவை இந்த ஆர்ப்பாட்ட நிகழ்வுகளிற்கு ஆதரவு தெரிவிக்காமலும் மக்களை அணிதிரளுமாறு வேண்டுகோள் விடுக்காமலும் ஒதுங்கி நின்ற நிலையில் புலம்பெயர் இளையோர் மிகவும் சிறப்பான முறையில் தமது வரலாற்றுக் கடமையினை செவ்வனே செய்துள்ளார்கள்.

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு ஆரம்பகாலம் முதல் உறுதியோடும் உண்மையாகவும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை சர்வதேச அரங்கில் முன்னெடுத்து வரும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் தமது வரலாற்றுக் கடமையினை உணர்ந்து ராசபக்சே லண்டனில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்னர் தொடங்கி வெளியேறும்வரை களப்பணியாற்றிய விதம் அனைத்துலக மட்டத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

பல்வேறு நெருக்கடிகள் இடையூறுகள் தடைகள் என்பவற்றை தகர்த்தெறிந்து பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் எமது மக்களை லண்டனிற்கு அழைத்து வருவதிலும் இந்த தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் பெரும் பணியாற்றியுள்ளார்கள்.

தமிழினத்தின் முதன்மை எதிரியான மகிந்த ராசபக்சேவை விரட்டியடிக்கும் போராட்டத்தில் இன்று இருபத்தையாயிரத்திற்கு மேற்பட்ட புலம்பெயர்வாழ் ஈழத் தமிழர்கள் கலந்து கொண்டு பங்களிப்புச் செய்துள்ளார்கள்.

எத்தனை பேர் தான்தான் தலைவன் என்றும் இனி தாம்தான் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லப் போவதாகவும் கூறி உலகத்தமிழர்களை பிளவுபடுத்த முயன்று நின்றாலும் தமிழர்களது எழுச்சிநாள் நிகழ்வுகளை இரண்டுபடுத்தி சீர்குலைக்க முற்பட்டாலும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது வழிகாட்டுதலில் பயணப்படும் நாம் ஒருபோது அதற்கு துணைபோகமாட்டோம் என்பதனை துரோகிகளிற்கு இடித்துரைத்துள்ளது புலத்துப் புலிகள் படை.

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் காலமாற்றத்திற்கமைய புலம்பெயர் இளையோர்களிடம் அடுத்தகட்டப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லுமாறு விட்டுச் சென்றுள்ள பணியை சிறப்பாக செயற்படுத்தி வருவதை ராசபக்சேவிற்கு எதிரான இந்தப் போராட்டத்தின் மூலம் மீண்டும் உறுதிபடுத்தியுள்ளார்கள்.

வரலாற்றில் வரலாறு படைத்து நிற்கும் புலத்துப் புலிகள் படையின் வீரத்தை சிரம்தாழ்த்தி வணங்கி விடுதலைக்கான பணியில் தொடர்ந்தும் அர்பணிப்புடன் செயலாற்றுமாறு ஈழதேசம் இணையம் அன்போடும் உரிமையோடும் கேட்டுக்கொள்கின்றது.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

  • கருத்துக்கள உறவுகள்

புலத்துப் புலிகள் படையின்

ஊருக்கு போகலாம் என்று இருந்தனான் இப்ப பயமாய் இருக்கு,விமானநிலையத்தில் "பிட்ட ரட்ட கொட்டி" என்று உள்ள தூக்கி போட்டிடுவானோ?

  • கருத்துக்கள உறவுகள்

ஊருக்கு போகலாம் என்று இருந்தனான் இப்ப பயமாய் இருக்கு,விமானநிலையத்தில் "பிட்ட ரட்ட கொட்டி" என்று உள்ள தூக்கி போட்டிடுவானோ?

காபராமற்றாவுக்குப் போய்க் காவியுடையொன்று வாங்குங்கள், புத்தன்!

கண்டிய நடனத்துடன் வரவேற்கப் படுவீர்கள்! :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.