Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ப.சிதம்பரம் பதவி விலக வேண்டுமா..? வேண்டாமா..? அல்லது இரண்டுமா..? ஈழதேசம் செய்தி..!

Featured Replies

ப.சிதம்பரம் பதவி விலக வேண்டுமா..? வேண்டாமா..? அல்லது இரண்டுமா..? ஈழதேசம் செய்தி..!

eeladhesam%20seythi%20aaivu.jpgஇந்திய அரசை கோமாளிக் கூட்டம் ஆட்சி செய்தால் எவ்வாறு இருக்குமோ அதுபோன்றே அணைத்து நிகழ்வுகளுமே கைகொட்டிச் சிரிக்கும் அளவிற்கு நடந்து கொண்டிருக்கின்றன. அதுவும் காங்கிரஸ் பெருச்சாளிகள் அனைவரும் பப்பூனாக மாறிவிட்டார்கள். ஊழலே நடக்கவில்லை என்பது, ஊழல் நடைபெற்றது ஆனால் ஸீரோ லாஸ் என்பது. வழக்குப் போட்டு,பலமான ஆதாரங்களை சமர்ப்பித்தவுடன் வேறு வழியே இல்லாமல் நீதிபதிகள் ஆமாம் ஊழல் நடைபெற்று உள்ளன என்றவுடன் பேருக்கு கைது செய்வது. கைது சம்பவங்கள் நடைபெற்றவுடன் ஊழலுக்கு எதிராக மிகத் தைரியமாக நடவடிக்கை எடுக்கும் கட்சி எங்கள் கட்சி தான் என்று பீற்றிக் கொள்வது. ஆளும் கட்சியான காங்கிரஸ் கூட்டம் தான் என்றில்லை, எதிர்க் கட்சியான பா.ஜ.க.ஆனாலும் சரி, மாநிலக் கட்சியான தி.மு.க. தொடங்கி ராம்விலாஸ் கட்சியான லோக் ஜனசக்தி ஆனாலும் சரி... இதே கோமாளிப் போக்குகளை கொண்டிருக்கின்றனர். இவைதான் இன்று இவர்களின் அரசியல் நடவடிக்கைகள் ஆக மாறி உள்ளன என்றால் மிகை இல்லை.

2009 - ல் நடைபெற்ற சிவகங்கை எம்.பி.தேர்தலில் ப.சிதம்பரம் தோல்வி அடைந்தே விட்டார். அ.தி.மு.க.வான ராஜ கண்ணப்பனிடம். தேர்தல் எண்ணும் அழகப்பா இன்ஜினியரிங் கல்லூரி முழுதும் காரைக்குடி அ.தி.மு.க. மற்றும் அவர்களின் கூட்டணிக் கட்சிகள் குவிந்து விட்டார்கள். காரைக்குடி அ.தி.மு.க.வினர் மிக நோஞ்சானாக இருந்த காரணத்தாலும், இந்தியா முழுதும் தேர்தல் முடிவுகள் ப.ஜ.க.வுக்கு பின்னடைவையும், காங்கிரஸ் கூட்டத்திற்கு சாதகமாகவும் முடிவுகள் வெளிவந்து கொண்டிருந்த காரணத்தாலும், தமிழகத்தில் மு.கருணாநிதி ஆட்சியில் இருந்த காரணத்தாலும், மதுரையில் இருந்து வஜ்ரா வாகனங்களும் பல அதிரடி போலீஸ் கும்பல்களும் வண்டி வண்டியாக சாரை சாரையாக வந்திறங்கியவுடன், காரைக்குடி மாநகர் வியாபாரிகள் அனைவரும் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று கடைகளை பாதி பூட்டியும் பூட்டாமாலும் ஓடி மறைந்து விட்டார்கள். இவ்வளவுக்கும் மத்தியில் மு.கருணாநிதி தொலைபேசியில் தேர்தல் முடிவுகளை கேட்டறிந்து மதுரை அஞ்சா நெஞ்சன் ஆசியோடு முடிவு அறிவித்தவுடன் வாக்கு எண்ணும் அறையில் இருந்து பின்பக்க வழியாக சென்று விட்டார் ப.சிதம்பரம் மூவாயிரம் ஓட்டு வெற்றி என்ற செய்தியுடன்.

அப்பொழுது சிவகங்கையே பேசியது. ப.சிதம்பரம் அவர்கள் ராஜ கண்ணப்பன் அவர்களிடம் பல நூறு கோடிகளை கொடுத்து இந்த வெற்றியை பெற்றுள்ளார் என்று. தி.மு.க. அரசு திரைமறைவில் உதவி செய்தது. என்றாலும் ராஜ கண்ணப்பன் அவர்கள் அப்பொழுதே வழக்கு போட்டு விட்டார். ஜெ அம்மையாரும் ஜனநாயக ரீதியாக ப.சிதம்பரம் வெற்றி பெறவில்லை, தேர்தல் மோசடி மூலம் வெற்றி பெற்றுள்ளார் எனவே ப.சிதம்பரம் பதவி விலக வேண்டும் என்று கடந்த மாதங்களில் தில்லி சென்று கூறினார். இந்த ப.சிதம்பரத்தின் வெற்றி மோசடியானவை என்ற வழக்கை எவ்வளவு காலம் தள்ளிப் போட முடியுமோ அவ்வளவு முயற்சியும் செய்தும் இந்த வழக்கு இன்று முடிவுக்கு வந்துள்ளது.

அதாவது தேர்தல் வெற்றி செல்லாது என அறிவிக்கும் வழக்கில் இருந்து நேரில் ஆஜராக விலக்கு வேண்டும் என்று கோரிய ப.சிதம்பரத்தின் மனுவை மெட்ராஸ் உயர்நீதி மன்ற மதுரை கிளை இன்று தள்ளுபடி செய்து விட்டன. இந்திய அரசின் உள்துறை அமைச்சர் ஒருவரின் தேர்தல் வெற்றி மோசடியானவை என்ற வழக்கில், நீதிமன்றத்தில் இனி வரிசைக் கிரமமாக ஆஜர் ஆவார் என்று எதிர்பார்க்கலாம். இந்த விலக்கு கோரும் வழக்கு தள்ளுபடியானவுடன் ஜெ அம்மையார் மற்றும் பா.ஜ.க. வினர் உள்துறை அமைச்சர் பதவியை ராஜினமா செய்ய வேண்டும் என்று கூச்சல் போட துவங்கி விட்டனர். ஜெ அம்மையார்

ஒரு படி மேலே போய் சிதம்பரம் அமைச்சராக நீடிப்பது இந்திய ஜனநாயகத்துக்கே களங்கம் என்றும், அவராகவே பதவி விலக வேண்டும் அல்லது இந்திய அரசு பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறிவிட்டார்.

நாளைய பொழுதுகளில் இருந்து இந்த ப.சி.யின் பதவி விலக கோரும் குடிமிபிடி சண்டை துவங்கி விடும். வழக்கம் போலவே இந்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் சிதம்பரம் பதவி விலக தேவையில்லை என்று கூறிவிட்டார். சிதம்பரம் மீதான வழக்கில் இது முதற்கட்டம் தான். இதற்காக அவர் பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை, அவர் பதவி விலகுவார் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறிவிட்டார் குர்ஷித். உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடான இந்தியாவின் பெருமையை நிலை நிறுத்தும் வகையில் சிதம்பரத்தை பிரதமர், அமைச்சரவையில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்ற ஜெ அம்மையாரின் கோரிக்கை குப்பை தொட்டியில் வீசி விட்டார் சட்ட அமைச்சர் அவர்கள்.

எதற்காகவும் எங்கேயும் பதவி விலகல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்கிறார்கள் காங்கிரஸ் பெருச்சாளிகளின் தலைவர்கள்.

பதவி விலக வேண்டும் என்ற சூழ்நிலை உருவானால் மறுபடியும் பீற்றிக் கொள்வார்கள். நாங்கள் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கின்றோம் என்று. ஆக, மே - 17 இயக்கம், நாம் தமிழர் கட்சி, அணைத்து தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு போன்றவர்கள் காரைக்குடியில் முகாமிட்டு சிவகங்கை முழுதும் ப.சிதம்பரத்திற்கு எதிராகவும், காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும் தேர்தல் பரப்புரை செய்தது வீணாகாது. நல்ல முடிவு நிச்சயம் கிடைக்கும் மிக விரைவில் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

மாயாண்டிக்கருப்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.