Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மு.கருணாநிதியும் அ.ராசாவும் அண்ணன் தம்பியா..? அட நம்பவே முடியவில்லையே - ஈழதேசம்..!

Featured Replies

மு.கருணாநிதியும் அ.ராசாவும் அண்ணன் தம்பியா..? அட நம்பவே முடியவில்லையே - ஈழதேசம்..!

karunanithii.jpgநேற்று தா.பாண்டியனுக்கு ஒரு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டார் மு.கருணாநிதி.ஈழத் தமிழர்களின் கல்லறைக்கு மலர் கொத்துக்களை சமர்ப்பிக்கிறார் என்று கூறிய தா.பாண்டியனுக்கு தனது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார் என்று நினைத்தால் அது உங்கள் தவறு. யுத்தம் முடிவுக்கு வரும் நிலையில் சோனியா அம்மையார் மற்றும் மன்மோகன் சிங் மற்றும் பிரணாப் முகர்ஜியுடன் பேசி ஒரு நான்கு நாள் யுத்த நிறுத்ததிற்கு பாடுபட்டது தி.மு.கழகம் என்று செப்பினார். அதாவது இலங்கையின் நான்காம் கட்ட யுத்தத்தில் நான்கு நாள் போர் நிறுத்தம் ஏற்பட தி.மு.கழகம் பாடுபட்டது என்கிறார். அப்போ மூன்றாம் கட்ட ஈழப் போரில் ஒரு ஐந்தாண்டு காலம் யுத்தம் நிறுத்தம் ஏற்பட்டதே, அதுபோல இந்த நான்கு நாள் யுத்த நிறுத்தம் என்று சொல்ல வருகிறாரா மு.கருணாநிதி..? இருக்கலாம். தவிர, திடீரென்று தா.பாண்டியன் ஈழப் போர் குறித்தும், போர்க் குற்றம் குறித்தும் பேசுவதை தாங்கிக் கொள்ள முடியவில்லை இந்த தமிழ்நாட்டு என்.டி.திவாரி அவர்களால்.

கிடக்கட்டும் இவை அனைத்தும்.நீதிமன்றங்களின் கோடை விடுமுறையை ஒட்டி, தமிழகதிற்கு அ.ராசா சென்று வர கோர்ட் அனுமதி அளித்தது.இந்நிலையில் நேற்று மதியம் சென்னை வந்த அ.ராசா அவர்களை விமான நிலையத்தில் சுமார் 5000 பேர் பெரம்பலூர் மற்றும் அரியலூர் பகுதிகளை சேர்ந்தவர்கள் விமான நிலையத்தில் குவிந்திருந்தனர்.அங்கு வந்திருந்த சுமார் 5000 தொண்டர்களுக்கு வேளை ஒன்றுக்கு ஒரு பொட்டலம் பிரியாணியும் குடிப்பதற்கு ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலும், குவாட்டரும் போக, நாள் ஒன்றுக்கு சுமார் 500 ரூபாயும், அரியலூர் மற்றும் பெரம்பலூர் பகுதியில் இருந்து சென்னை வரும் போக்கு வரத்து செலவு உட்பட தங்கும் வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன.இல்லையென்றால் ஒரு நாயும் அங்கிருந்து வராது என்று சொல்கிறார்கள் பத்திரிக்கையாளர்கள்.

சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய அ.ராசா, அங்கு கூடியிருந்த சுமார் 5000 பேர்களை சுமார் ஒரு மணி நேரம் நின்று கையசைத்துக் கொண்டும் அப்படியே 5000 பேர் வந்திருப்பார்களா..? என்ற கணக்கெடுப்பும் எடுத்துக் கொண்டு நேராக அறிவாலயத்திற்கு சென்றார்.அங்கு கழகத்தின் முன்னாள் அமைச்சர்கள் அன்பழகன்,ஆற்காடு வீராசாமி,மு.க.ஸ்டாலின் இவர்களுடன் கழக தலைவர் மு.கருணாநிதி வீற்றுருக்க, தலைவா என்னை இத்துடன் விட்டு விடுங்கள் என்று கூறி சாஸ்டாங்கமாக மு.க.,வின் காலில் விழுந்தார் அ.ராசா.பின்பு நிருபர்களுக்கு பேட்டி அளித்த மு.கருணாநிதி, ஏறத்தாழ ஒரு ஆண்டுக்கு மேலாக பிரிந்து இருந்த அண்ணன்,தம்பி சந்திக்கும் பொது என்ன உணர்வு இருக்குமோ, அந்த உணர்வு எனக்கும், தம்பி ராசாவுக்கும் இருந்தது என்றார்.மேலும் அ.ராசா பேசுகையில், திகார் சிறையில் இருந்த பொழுது "நெஞ்சுக்கு நீதி " புத்தகத்தை ஒரு இருபது தடவை படித்திருக்கிறேன் என்றார்.

இந்த செய்திக்கு ஒரு பத்திரிக்கையில் வெளிவந்த பின்னூட்டங்களை அப்படியே தருகிறோம், எப்படி கிண்டல் அடித்து உள்ளார்கள் அரசியல் பார்வையாளர்கள் என்று அறிந்து கொள்ளலாம்.

@ நேற்று அவர்களுடைய கலைஞர் டி.வி.யில் அ.ராசா மற்றும் தாத்தா பேட்டி ஒளிப்பரப்பாகியது.அதில் ராசா சி.பி.ஐ.,ஒரு லட்சத்து எழுபத்தி ஆறாயிரம் கோடி இல்லை, வெறும் 35,000 கோடி மட்டும் தான் என்று சொல்கிறார்கள்.ஆனால் மீடியா தான் பெரிது பண்ணி விட்டார்கள்னு பேட்டி கொடுக்கிறான்.இந்த ஜனநாயக நாட்டில் தான் கொள்ளை அடித்ததை பகிரங்கமாக சொல்லிவிட்டு,அடுத்த கொள்ளைக்கு ரெடியாகுறான்.இதை எங்க போய் சொல்ல.கர்மம்..கர்மம்..!

@ கருணாநிதியும் ராசாவும் அண்ணன் தம்பிகளா ..? அட சொல்லவே இல்லை.

@ என்னது அண்ணன் தம்பி உறவா..? என்னமோ தாத்தா பேரன் உறவுன்னு நினைத்தேன்.ரொம்ப கிளுகிளுப்பா இருக்கு.

அண்ணனுக்கு 89 வயசு.தம்பிக்கு 49 வயசா..?

@ செஸ் சாபியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்திற்கும்,திகார் சிறை சென்ற அ.ராசாவுக்கும் ஒரே வரவேற்பு...என்ன ஒரு இந்தியா..?

@ கனிமொழிக்கு விமான நிலையத்தில் 1,002 பேர் வரவேற்றனர்.ராசாவுக்கு 1,003 பேர் வரவேற்றனர் என்றார். இவரு என்ன சர்விலன்ஸ் கேமரா ஆபரேட்டரா..? அந்த பக்கம் போன பைலட் டை கணக்கில் எடுத்திருப்பாரோ..?

@ ஆடு தானா பிளேன் ஏறி,எம்பி குதிச்சு பிரியாணி சட்டிக்குள்ள தலையை வுட்டுருக்கு. விட்ராதீங்க தலிவா..யாருக்கு யாரா தம்பி..? மொறைய மாத்தப்புடாது.

@ சொல்லிட்டாருய்யா டீ டெய்லு, ஆட்டய போட்டவனுக்கு ஆரத்தி,கெரகம் டா சாமி...இதில் தி.மு.க.தொண்டர்களின் அல்லக்கை அழிம்பு வேறு..ச்சேய் ..!

@ அப்பண்ணா கனிக்கு ராசா சித்தப்பாவா..? அய்யோ அய்யோ..!

@ 'நெஞ்சுக்கு நீதி' நெஞ்சுக்கு நீதி ' நெஞ்சுக்கு நீதி ன்னு 20 முறை படித்திருப்பார் போல...ஆமா ராசா இப்படி 20 முறை படிக்குறதுக்கே உங்களுக்கு ஒன்றரை வருடம் ஆச்சா...

@ தம்பி..அண்ணன்...யாருக்கு யார் அண்ணன்...யாருக்கு யார் தம்பி...ஒரே குழப்பமா இருக்கே...இந்த சனி ஞாயிறாவது கொஞ்சம் நிம்மதியா இருக்கலாம்னு பார்த்தால், இப்படி பொலம்ப உட்டுட்டான்களே..

@ இங்கு ஊழல் விஞ்ஞான முறையில் கற்றுத்தரப்படும்...கூடம் அறிவாயலயம்..கற்பிப்போர் மு.க.குடும்பம்...

@ இப்பதானே வெளியே வந்திருக்காரு..இனிமே தான் காலையில் வாக்கிங் போவாரு..( ராம ஜெயத்துக்கு நேரு மாதிரி...நம்ம ராசாவுக்கு ஒரு அண்ணன் ரெடி..)

@ மாலையும் கழுத்துமாக நிற்கிறார் ராசா..எப்பபோ கருப்பராயன் கோவிலில் விழா என்று தெரியவில்லை...

@ கலைஞருக்கு இப்போது தொண்ணூறு...ராசாவுக்கு நாற்பத்தி ஒன்பது..ஸ்டாலின் னுக்கு அறுபது..அவரது அண்ணன் அழகிரிக்கு அறுபத்து மூணு..இவங்கெல்லாம் மகன்..மகன்கள் ஸ்தானம். வயதில் குறைந்த ராசா தம்பியாகி விட்டாரா..?

@ அப்படினா கனிமொழி ராசாவுக்கு அண்ணன் பெண்ணா..? இது புரியலையே..?

@ இவ்வளவு நாளா அரிசி..மசாலா..அடுப்பு..எண்ணெய் எல்லாம் தயார். ஆட்டுக்காக தான் வெயிட்டிங்...இப்போ ஆடும் ரெடி - கொளுத்துங்கடா அடுப்பை..ஸ்டார்ட் மியூசிக்...!

@ சரி...ராசா உங்க தம்பி...கனிமொழி உங்க பொண்ணு..அப்ப கனிமொழிக்கு ராசா சித்தப்பாவா...என்னையா ஒரே குழப்பமா இருக்கே...ஏதோ ஒரே குடும்பமா இருந்தா சரி..!

@ ஹீ ஹீ...கனிமொழிக்கு 1002 பேரு வரவேற்றனர்...ராசாவுக்கு 1003 பேரு வரவேற்றனர்...கூடுதலான அந்த ஒரு நபர் கனிமொழி தானே..அதையும் சொல்லி இருக்கலாமே..சரி விடுங்க...ஆனா எங்களுக்கு புரிஞ்சிடுச்சு...

@ திருட்டு நாய்கள் கொஞ்சி குலாவுகின்றன...1,76,000 கோடி அடிச்சுட்டு, பெட்ரோல் விலையை மக்கள் தலையில போட்டு விட்டு, அண்ணன் தம்பி நாடகம் நடத்துறாங்க...

@ கருணாநிதி : வாடா என் தம்பி, வாடாமல்லி தும்பி, சிறை வாழ்க்கை எப்படி இருந்தது..??

ராசா : பீடிய கிள்ளி குடிச்சது..பெட்டிக்கடையில கடன் சொன்னது..சந்தக்கடையில கருப்பட்டி திருடிட்டு ஓடினது..இந்த மொத்தக் கும்பலும் அங்க தானுங்க்னா இருக்கு.

@ தலீவா...கொஞ்ச நாளைக்கு முன்னாடி ராசா செஞ்ச தப்புக்கு கணிமொழிய ஜெயிலுக்கு இட்டாந்துட்டாங்கனு புலம்பி தள்னியே..? இப்போ இன்னா..அண்ணன் தம்பின்றே..? அது வேற வாயி..இது நாற வாயா..?

தொகுப்பு - மாயாண்டிக்கருப்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.