Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர்ந்த உறவுகளுக்கு தாயகத்திலிருந்து ஒரு அன்பு மடல்...! - தாயகத்தில் இருந்து வீரமணி.

Featured Replies

உயிரினும் மேலான எம் புலம்பெயர் உறவுகளுக்கு தாயகத்திலிருந்து ஒரு அன்பு மடல்...!

தமிழீழத் தேசியத் தலைவரின் கனவுகளை நனவாக்கும் உங்களை நினைக்கும் போது எங்கள் உள்ளம் புல்லரிக்கின்றது. எங்களை அறியாமலேயே உணர்ச்சி பீறிட்டு கிளம்புகிறது. உங்கள் ஒட்டுமொத்த எழுச்சியைப் பார்க்கின்ற பொழுது எமது விடுதலை வெகு விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

அன்புக்குரிய உறவுகளே...

எமது விடுதலைக்காக இதுவரை காலமும் நீங்கள் பல போராட்டங்களை முன்னெடுத்தீர்கள். ஆனால் கடந்த வாரம் நீங்கள் முன்னெடுத்த எழுச்சிப் போராட்டங்கள் உண்மையில் மெய் சிலிர்க்க வைக்கின்றது. ஈழத்தில் எமது இனத்தையே அழித்தொழித்த இனவெறியன் மகிந்தவுக்கு எதிரான போராட்டங்களை நீங்கள் முன்னெடுத்த விதம் உங்கள் ஒட்டுமொத்த ஒற்றுமை என்பன எங்களை இறும்பூதெய்தச் செய்கின்றன.

இனவெறியன் மகிந்த ராஜபக்ச இலண்டன் விமான நிலையத்தில் வந்திறங்கியதிலிருந்து அவர் கலந்து கொண்ட நிகழ்விடங்கள் அனைத்திற்கும் சென்று நீங்கள் வெளிப்படுத்திய எதிர்ப்பு எங்கள் இனத்தின் பெருமையை எடுத்துக்காட்டியது. அங்கே நீங்கள் மேற்கொண்ட அத்தனை நகர்வுகளும் ஈழத்தில் எமது தலைவரும் தளபதிகளும் எதிரிக்கு எதிராக மேற்கொண்ட திட்டமிட்ட படைநடவடிக்கைகளைப் போன்றே அமைந்திருந்தன.

இலண்டன் வாழ் தமிழ் மக்கள் மட்டுமன்றி பிரான்ஸ், கனடா, டென்மார்க் போன்று உலகின் மூலை முடுக்கெங்கிலும் உள்ள தமிழ் மக்களின் ஒட்டு மொத்த எழுச்சிகள் எங்களை மெய்சிலிர்க்க வைக்கிறது. கைகளில் நீங்கள் தமிழீழத் தேசியக் கொடிகளை ஏந்தியிருப்பதைப் பார்க்க எங்களுக்கு பொறாமையாக இருக்கிறது. ஏனெனில் ஈழத்தில் இப்போது எமது கொடியை நாங்கள் பார்க்கவே முடியாது. அந்தக் கொடியை கையில் தூக்கும் போது மட்டுமல்ல அதற்கு கீழே நின்றாலே - அதைக் கண்ணால் பார்த்தாலே - எமக்குள் இருக்கும் வீரம் எங்களை அறியாமலே வெளிக்கிளம்பும். அதனை இன்று உங்களில் பார்ப்பது எங்களுக்கும் பெருமையாக இருக்கின்றது.

புலம்பெயர் நாடுகளில் வாழ்கின்ற எம் இனிய தமிழ் உறவுகளே...

தமிமீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் ஈழத்தில் தான் போராட்டத்தை ஆரம்பித்தார். ஆனால் வெளிநாடுகளில் தான் அது வளர்ச்சி பெற்றது. குறிப்பாக இந்தியத் தாய்மண் - அதிலும் தமிழகம் - எமது போராட்ட வளர்ச்சிக்கு உரமாய் அமைந்தது. அன்று தொட்டு இன்று வரை தாய்த்தமிழக மக்களும் அங்குள்ள தமிழ்த் தலைவர்களும் எங்களுக்காக குரல் கொடுக்கிறார்கள். அவர்களின் பணி வார்த்தைகளால் வடிக்கக்கூடியதல்ல. அதற்காக அவர்களுக்கு நாம் தலை சாய்க்கிறோம். புலம்பெயர் நாடுகளில் வாழ்கின்ற ஒவ்வொரு தமிழ் மகனும் இந்தப் போராட்டத்திற்கு வழங்கிய மதிப்பிட முடியாத பங்களிப்பால் தான் - உங்களால் தான் - இன்று தமிழினம் தலை நிமிர்ந்து நிற்கிறது.

எங்கோ ஒரு மூலையில் அடிமைப்பட்டுக்கிடந்த தமிழினத்தை விடுதலைப் பாதையில் தலைவர் வழிநடாத்தினார். தலைவரின் உயரிய சிந்தனைகளையும் மாவீரர்களின் கனவுகளையும் நீங்கள் சுமந்து செல்வது எமக்குப் பெருமையளிக்கிறது. நிலத்தில் அல்ல இனி புலத்தில் தான் எமது போராட்டம் முன்னெடுக்கப்படுமென்று எமது தலைவர் கூறிய தீர்க்க தரிசனக் கருத்துக்களை நீங்கள் நிறைவேற்றுகிறீர்கள்.

வெளிநாடுகளைப்பற்றி அதுவும் ஐரோப்பிய நாடுகளைப் பற்றி எமக்கு நன்றாகத் தெரியும். இயந்திர மயப்பட்ட வாழ்க்கை. ஈழத்தில் நாங்கள் எத்தனை மணித்தியாலங்களும் வெட்டியாக இருந்து பொழுதைப் போக்கலாம் ஆனால் உங்களுக்கு இவ்வொரு மணித்துளியும் ஒவ்வொரு யுகம் போன்றது. இதனையெல்லாம் பொருட்படுத்தாமல் ஊன், உறக்கம் இன்றி நீங்கள் மேற்கொள்கின்ற எழுச்சிப் போராட்டங்கள் உண்மைலேயே மெச்சத்தக்கவை.

உறவுகளே...

உங்களுக்கொரு விடயம் தெரியுமா?

உங்களைக் கண்டு இங்கே சிங்களம் அஞ்சுகின்றது. உங்கள் ஒட்டுமொத்த எழுச்சி சிங்களத்தை சிதற வைத்துள்ளது. இலண்டனில் மகிந்தருக்கு நீங்கள் கொடுத்த அடியால் மானம் இழந்து விட்டது சிங்களம். எந்தவொரு வன்முறைகளிலும் ஈடுபடாமல் எவருக்கும் தீங்கிழைக்காமல் நீங்கள் மேற்கொண்ட எழுச்சிப் போராட்டம் சர்வதேச ரீதியாக இன்று முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது.

மகிந்தவுக்கு எதிராக நீங்கள் பரிபூரணமாக எழுச்சியடைந்ததைக் கண்ட தாயகத்திலுள்ள இளைஞர்கள் சிலர் தற்கொலை செய்யலாமென்ற முடிவிற்கே வந்தனர். ஏனெனில் அவர்கள் இத்தனை எழுச்சிப் போராட்டங்களை முன்னெடுக்கும்போது நாம் வீணே உயிரோடு வாழ்வது அர்த்தமில்லையென்று கூறினார்கள். இதுதான் இன்று தாயகத்திலுள்ளவர்களின் நிலை. வீரம் விளையாடிய இந்த மண்ணில் வாழ்கின்ற ஒவ்வொரு இளைஞர், யுவதிகளிடமும் அதே வீரம் இன்றும் பீறிட்டுக்கொண்டிருக்கின்றது. ஆனால் எதையும் செய்ய முடியாமல் வெதும்பிக்கொண்டிருக்கிறார்கள்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு உள்ளிட்ட தமிழர் தாயகத்தின் அனைத்து இடங்களும் இன்று சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றன. இங்குள்ள பல்லாயிரம் ஏக்கர் கணக்கான நிலம் சிங்களவர்களால் சுவீகரிக்கப்படுகிறது. இந்த நிலங்களில் படை முகாம்களும் பௌத்த விகாரைகளும் அமைக்கப்படுகின்றன. ஆடம்பர பங்களாக்கள் அமைக்கப்படுகின்றன. பாலியல் விடுதிகள்கூட அமைக்கப்படுகின்றன.

தமிழர் தாயகத்தில் நிர்வாகச் செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக சிங்கள அதிகாரிகள் நியமிக்கப்படுகிறார்கள். தமிழர்களின நிதியைச் சுரண்டுவதற்காக தென்னிலங்கையின வர்த்தக நிறுவனங்கள் தமிழர் தாயகத்தில் கால் பதிக்கின்றன. காங்கேசன்துறையிலுள்ள சீமெந்துத் தொழிற்சாலையை இயக்குவதற்குப் பதிலாக வலி. வடக்கிலுள்ள முருகைக் கற்பாறைகள் அகழ்ந்தெடுக்கப்பட்டு தென்னிலங்கைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

தமிழர்களின் கடல் வளம் சுரண்டப்படுகின்றது. இதேபோன்றே ஏனைய வளங்களும் சுரண்டியெடுக்கப்படுகின்றன. இத்தனைக்கும் மேலாக தமிழ் மக்கள் காலம் காலமாக கட்டிக்காத்து வந்த தமிழ்ப் பண்பாடு கலை கலாசாரங்கள் திட்டமிட்டுச் சீரழிக்கப்படுகின்றன.

இளைஞர் யுவதிகளை போதைவஸ்துக்கும் பாலியல் இச்சைக்கு அடிமையாக்கும் அராஜகங்களும் அரங்கேற்றப்படுகின்றன. இந்த அராஜகங்கள் குறித்து குரல் எழுப்புகின்ற தமிழ் அதிகாரிகளுக்கு உடனடி இடமாற்றங்கள் வழங்கப்படுகின்றன. தமிழர் தாயகத்தில் திட்டமிட்ட யுத்தம் ஒன்று திணிக்கப்பட்டுள்ளது. இது ஆயுத ரீதியான யுத்தத்தை விடவும் மோசமானது. சிறிது சிறிதாக ஆரம்பித்து எமது இனத்தை ஒட்டுமொத்தமாக இல்லாதொழிக்கும் நோக்குடன் இந்தயுத்தம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எதிரியின் இந்த யுத்தம் தொடர்பில் நாம் அக்கறையற்று இருந்தால் எமது இனம் ஒட்டுமொத்தமாக இல்லாதொழிக்கப்பட்டு விடும்.

அன்பிற்குரிய புலம்பெயர் உறவுகளே....

ஈழத்தில் உள்ள நாங்கள் இனிமேல் எதையும் செய்ய முடியாது. நாங்கள் பாம்புகளைப் போல ஊர்ந்து செல்வதற்கு மட்டுமே இங்கு அனுமதியுள்ளது. தலையை நிமிர்த்தி படமெடுப்பதற்கு இங்கே பாதுகாப்பு இல்லை. தலையை நிமிர்த்த முற்பட்டாலே அடித்து நசுக்கிவிடுவார்கள் சிங்களவர். தங்களை எவருமே எதுவும் செய்ய முடியாது என்ற மமதையில் இங்கே சிங்களம் ஆட்டம் போடுகிறது. இதனை நீங்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். சிறீலங்கா அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியோ மீண்டும் ஒரு யுத்தம் நடத்தியோ நாம் எமது உரிமைகளை வென்றெடுக்க முடியாது.

மாறாக சர்வதேச நாடுகளின் அனுசரணையைப் பெறுவதன் மூலமே எமது விடுதலையை நாம் வென்றெடுக்க முடியும். இனவெறியன் மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக நீங்கள் முன்னெடுத்த அமைதிவழிப் போராட்டங்கள் போல எமது நிரந்தர விடுதலைக்கான போராட்டங்களையும் உங்களாலேயே முன்னெடுக்க முடியும். உங்கள் போராட்டங்கள் சர்வதேச நாடுகளின் பார்வையை எமது பக்கம் திருப்ப வேண்டும். ஏனெனில் சர்வதேச நாடுகளால் அன்றி வேறெந்த சக்திகளாலும் ஈழத் தமிழருக்குத் தீர்வைப் பெற்றுத்தர முடியாது.

ஈழப் போரில் இதுவரை நாம் 40 ஆயிரம் வரையான மாவீரர்கள் தமது இன்னுயிர்களை காணிக்

கையாக்கியிருக்கின்றனர். இரண்டு இலட்சம் வரையான பொதுமக்கள் தங்களை அர்ப்பணித்திருக்கின்றனர். இவர்களின் தியாகங்களுக்கு நிகரான தீர்வு எமக்கு வேண்டும். அந்தத் தீர்வு எம்மை நாமே ஆளக்கூடிய தீர்வாக அமைய வேண்டும். இந்தத் தீர்விற்காக உழைக்கக்கூடிய பெரும் வல்லமையும் சக்தியும் இன்று புலம்பெயர் தமிழ் உறவுகளாகிய உங்களிடமே இருக்கின்றது. தமிழீழ தேசியத் தலைவர் உங்களிடம் ஒப்படைத்த இந்த ஒப்பற்ற பணியை நீங்கள் தான் நிறைவேற்ற வேண்டும். உங்களின் அப்பளுக்கற்ற பெரும் பணிகளுக்காக என்றும் நாங்கள் உங்களுக்கு தலைசாய்த்து நன்றி கூறுகின்றோம்.

- இப்படிக்கு

தாயகத்து உறவுகள்

நன்றி : ஈழமுரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.