Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்ல முடிவு தான்...கேப்டன்...! ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பது...?! ஈழதேசம் செய்தி..!

Featured Replies

நல்ல முடிவு தான்...கேப்டன்...! ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பது...?! ஈழதேசம் செய்தி..!

[size=3]

eeladhesam%20seythi%20aaivu.jpgதமிழ் நாட்டில் இனிமேல் அரசியல் செய்வது அவ்வளவு ஒன்றும் எளிதான காரியம் அல்ல..மறுபடியும் முதலில் இருந்து வர வேண்டும். ஆனால் திராவிட சாத்தான்கள் செய்தது போல் அல்ல, உண்மையிலேயே தமிழ் மக்களின் உணர்வுகள், தமிழர்களின் தேவைகள், தமிழ் நாட்டின் இறையாண்மை என்றெல்லாம் முதலில் இருந்து தொடங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன தமிழக அரசியல் கட்சிகள். இதற்கு நல்ல உதாரணம் சமீபத்திய பாட்டாளி மக்கள் கட்சியின் அறிக்கைகளும் பேச்சுக்களும். ஆனாலும் பாட்டாளி மக்கள் கட்சியின் மருத்துவர் பேசுவது, ' பொக்கை வாய் உள்ளவன் பொறி கடலை தின்பதைப் போல ' காலம் கடந்தது தான் என்றாலும் பேசாமல் இருக்க முடியவில்லை. இதைதான் 'எல்லாம் நேரம் எனபது' தற்பொழுது விஜயகாந்த் துவங்கி உள்ளார். தமிழர்களின் தேவைகள் குறித்து.

எல்லாவற்றிற்கும் மூல காரணம். அண்ணாதுரை அரசியலும் அவரின் வாரிசான மு.கருணாநிதியும் தான். பக்தவச்சலம், கருமை வீரர் காமராஜ், அன்னை இந்திரா என்ற பேரினவாதிகளை 'கடக்கென்று' முழுங்கி ஏப்பம் விட்டவர்கள் தான் இந்த அண்ணா துரையும் மு,கருணாநிதியும். இன்னும் சொல்லப்போனால் இந்திய பேரினவாதிகளையே பெரும் கொள்ளை அடிக்கும் கூட்டமாக, தமிழர்களுக்கு எதிராக மாற்றியவர் தான் திராவிட மு.கருணாநிதி என்ற சாத்தான் என்றால் யாராவது மறுக்க முடியுமா..? திராவிட சாத்தான்கள் தமிழக மக்களை அடிமைகளாக, ஏதுமற்ற அனாதைகளாக மாற்றியதை எவ்வாறு உணர்ந்தார்கள்..? தமிழ் மக்கள்.

முள்ளி வாய்க்காலும் அதன் அடித்தளமான விடுதலைப் புலிகளின் தலைவர் என்றால் மிகையில்லை. அங்கே லட்சக்கணக்கில் தமிழர்கள் படுகொலை, இங்கே கோடிக்கணக்கில் பணங்களை சுருட்டினார்கள் கொஞ்சம் கூட வெட்கமின்றி.,புலம் பெயர் மக்களின் போராட்டங்களும், திரு.சீமான் அவர்களின் தொடர் பரப்புரையும் தான் தமிழனிடம்,திராவிட அரசியல் கட்சிகள் அனைத்தும் போட்ட வேசங்கள் கலைந்து அம்மணமாக நிற்க வைத்தன. இவற்றைத்தான் நாம் தற்போதைய தமிழக அரசியல் சூழல் என்று கூறுகிறோம். எனவே இனிமேல் திராவிடக் கட்சிகள் எந்த ஒரு வேசமும் கட்ட முடியாது. அதாவது எந்தப் படமும் காண்பிக்க முடியாது. ஒன்று தமிழனுக்கு எதிராக அரசியல் செய்..அல்லது தமிழனுக்கு ஆதரவாக அரசியல் செய் என்ற நிலையின் காரணமாகத் தான் தே.மு.தி.க.வின் விஜயகாந்த் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார் என்று அறியலாமா..?

இந்திய ஜனாதிபதி தேர்தல் புறக்கணிப்பு காரணத்தை அடுக்கியுள்ளார் பாருங்கள் அப்படியே புல்லரிக்கிறது. ஜூன் 12 - ம தேதி காவிரியில் தண்ணீர் வரவேண்டும். ஆனால் வரவில்லை.முல்லைப் பெரியாரின் நீர் மட்ட உயர அளவு 142 அடி என்று உச்ச நீதி மன்றம் சொல்லியும் நீர் மட்டம் உயரவில்லை, மாறாக அணை இடிப்பு என்ற பரிசு. பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசின் தடுப்பணை. குமரியின் நெய்யாற்றின் நீர் மறுப்பு கேரள அரசின் புண்ணியத்தால். வெள்ளம் வந்தால் மட்டும் தமிழ்நாட்டை வெள்ள வடிகால் மாநிலமாக மாற்றுதல். மீனவனை தினமும் சுட்டுக் கொல்லுதல், கூடங்குளத்தில் ஒரு அணு உலை என்ன..? உலகத்திற்கு தேவைப்படும் சுமார் நூற்றுக் கணக்கில் அணு உலை அமைப்போம் என்ற ஆணவமும், பேசும் தமிழ் மொழியை ஆட்சி மொழியாக மாற்றாமல் அழிக்கும் வேலையை செய்தல். பாம்பு,பல்லி, பூரான் திங்கும் சீனாக்காரனின் சிங்கப்பூரில் தமிழ் ஆட்சி மொழி, திராவிடக் கட்சிக்காரன் ஆளும் மாநிலத்தில் தங்கிலிஷ் மொழியை ஆட்சி மொழியாக கொண்டு வந்தாலும் வருவார்கள் ஒருக்காலும் தமிழ் மொழியை கொண்டு வரமாட்டார்கள் என்ற கேப்டன் சொல்லியவற்றையும் சொல்ல மறந்தவற்றையும் இவ்வாறு புரிந்து கொள்ளலாம்.

மேலும் கேப்டன் இவ்வாறு கூறியுள்ளார், ஒவ்வொரு ஜனாதிபதி தேர்தலிலும், ஒவ்வொரு முறையும் மத்திய தேர்தல்கள் நடைபெறும் போதெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் தவறாது கலந்து கொண்டு தேர்தலில் வாக்களித்துள்ளார்கள். ஆனால் இவற்றால் கண்ட பயன் என்ன..?

ஒவ்வொரு தேர்தலிலும், ஒவ்வொரு முறையும் தமிழ்நாட்டு மக்கள் ஏமாற்றப்படுகின்றனரே தவிர, அவர்களது குறையை கேட்கவோ, அவற்றை களையவோ மத்தியில் உள்ளவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கூட்டணிக் கட்சியினரும் எதுவும் செய்ய இயலவில்லை.

தமிழ்நாட்டில் இந்த அளவிற்கு தீராத பிரச்சனைகள் பல்லாண்டுகளாக இருந்தும் அவற்றைத் தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்காத சூழ்நிலையில், யார் ஜனாதிபதியாக வந்தால் என்ன..? வராவிட்டால் என்ன..? தமிழ்நாட்டிற்கு என்ன பயன்..? என்று எண்ணுகிறபோது, நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் கலந்து கொள்ளாமல் இருப்பதே தமிழ் நாட்டிற்கு செய்கிற நன்மையாகும். ஆகவே, தே.தி.மு.க.தனது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பது என்று தீர்மானித்துள்ளது என்கிறார் கேப்டன் வியகாந்த். இப்பொழுது சொல்லுங்கள்..கேப்டன் விஜயகாந்த் எடுத்த முடிவு நல்ல முடிவுதானே..? என்று கேட்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

ஆக, தே.மு.தி.க.வின் இந்திய ஜனாதிபதி தேர்தல் புறக்கணிப்பு என்ற முடிவை அனேகமாக இந்திய ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில், தமிழ் நாட்டின் ஒரு பிராந்திய கட்சி புறக்கணித்திருப்பது, இந்திய கட்சிகளை சற்று உற்று நோக்க வைக்கும் என்பதில் சந்தேகமில்லை. என்றாலும் கேப்டன் அவர்களின் 5104 வாக்குகளைப் பெற காங்கிரஸ் பெருச்சாளிகளும் சங்கபரிவார் பி.ஜெ.பி.யும் முயல்வார்கள் என்றும் கருதலாம்.

மாயாண்டிக்கருப்பு.

[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.