Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அப்படிச் சொன்னவர்கள் இப்போது வாயே திறக்கவில்லை - மு.க...! திராவிட பிழைப்புவாத லாவணி அரசியலின் உச்சம் - ஈழதேசம்..!

Featured Replies

அப்படிச் சொன்னவர்கள் இப்போது வாயே திறக்கவில்லை - மு.க...! திராவிட பிழைப்புவாத லாவணி அரசியலின் உச்சம் - ஈழதேசம்..!

[size=3]

eeladhesam%20seythi%20aaivu.jpgதி.மு.க., தலைவரின் கேள்வி பதில் அறிக்கை..? அதென்ன..உலகத்தில் எங்குமே இல்லாத கேள்வி பதில் அறிக்கை..? ஒன்று பத்திரிக்கையாளர்களை கூப்பிட்டு பேட்டி கொடுப்பார்கள். அல்லது பத்திரிக்கை செய்தி என்று சில பேப்பர்களை அந்தந்த மீடியாவிடம் கொடுப்பார்கள். இவ்வாறு யாராவது கேள்வி பதில் பத்திரிக்கை செய்தி என்று எங்கேயாவது கொடுதிருக்கிரார்களா..?அதுதான்...திராவிட இனமான மு.க.வின் தனி பாணி. வழக்கமாக கேள்விகளை மீடியாக்காரர்கள் கேட்பார்கள், பதில்களை சம்மந்தப்பட்ட அரசியல்வாதிகள் அல்லது நபர்கள் அளிப்பார்கள். கேள்வியும் நானே பதிலும் நானே என்று ஒரு பத்திரிக்கை செய்தி.! கல்யாண வீட்டிலும் மாப்பிள்ளை நானே, இழவு வீட்டிலும் பினமகன் நானே என்று கொள்ளலாமா..? அதெல்லாம் ஒன்றுமில்லை, தன்னை மிஞ்சி புத்திசாலி என்பவனும் கிடையாது என்ற ஆணவம் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்..? எம்.ஜி.ஆர்.,அவர்களிடமும் இந்த ஆணவம் உண்டு, அவரைத் தொடர்ந்து ஜெ.,அம்மையாரிடம் இருக்கிறது. இவர்களின் இந்த பண்பு அப்படியே தொற்று நோய் போல பரவி, உ.பி.யின் மாயாவதி, மேற்கு வங்க மமதா,காங்கிரஸ் கட்சியின் அன்னை சோனியா என்று புற்று நோயை விட வெகு வேகமாக பரவியதற்கு மு.க., அவர்கள் தான் முழு காரணம் என்று சொன்னால் யாராவது மறுக்க முடியுமா என்ன..?

தனது கேள்வி பதிலில் இவ்வாறு கூறி வருகிறார், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தி.மு.க., ஆட்சியில் நடைபெற்றிருந்தால், மத்திய அரசில் இருந்து தி.மு.க., விலக வேண்டியது தானே என்று சொல்லியிருப்பார்கள்,ஆனால் அப்படிச் சொன்னவர்கள் இப்போது வாயே திறக்கவில்லை என்று கேள்வி எழுப்பி,இவ்வாறு பதில் கூறுகிறார். கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். நமது மீனவர்களின் பிரச்சனை குறித்து மத்திய அரசுக்கு எத்தனையோ முறை நாம் வேண்டுகோள் விடுத்தும், அவர்களும் முயற்சித்துப் பலமுறை பேச்சுவார்த்தை நடத்திய போதிலும், இலங்கை கடற்படையினர் அட்டூழியம் நின்றபாடில்லை. என்று முடித்துவிட்டு இவ்வாறு கூறுகிறார் மு.க., இந்த சம்பவம் தி.மு.கழகம் ஆட்சியிலே இருந்தபோது நடைபெற்றிருந்தால், இந்நேரம் எத்தனை கண்டன அறிக்கைகள் வெளிவந்திருக்கும் என்பதைத் தான் நினைத்துப் பார்கின்றேன்.மாநில அரசு என்ற ஒன்று இருக்கிறதா..? என்ன செய்கிறார்கள்..? ஏன் பதவியை ராஜினமா செய்யவில்லை..? மத்திய அரசில் இருந்து விலக வேண்டியது தானே என்றெல்லாம் அடுக்கடுக்காக கேள்விக் கணைகளை தொடுத்திருப்பார்கள் என்கிறார் மு.க.,

ஆனால்,தற்போது ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்து பற்றி வாயே திறக்கவில்லை. தி.மு.க., ஆட்சியின் போது கேள்வி கேட்டு,வாய் நீளம் காட்டியவர்கள் எல்லாம் இன்று செவிடர்களாகவும் ஊமைகளாகவும் மாறி விட்டார்கள் என்று செப்பியுள்ளார்.மேலும் பவானி ஆற்றின் குறுக்கே அட்டப்பட்டியில் கேரள அரசு புதிதாக அணை கட்டப் போகிறார்கள். எனவே, கோவை திருப்பூர் போன்ற பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும்,இந்த கேடுகளை விளைவிக்கும் கேரள அரசின் முயற்சியை தமிழக அரசு தடுக்க முன் வருமா..? என்று கூடுதலாக மேலும் ஒரு கேள்வியை எழுப்பி உள்ளார் மு.க.,

தமிழ் இனத்தை அழிப்பதையே கொள்கையாக கொண்ட பிரணாப் முகர்ஜியை, ஜனாதிபதி ஆக்கும் வேட்பு மனுவில் முன்மொழிவு பேப்பரில் கையெழுத்தைப் போட்டு விட்டு, மத்திய அரசு எவ்வளவு கூறிய போதிலும் இலங்கை கடற்படையினர் கேட்க மறுக்கிறார்கள் என்கிறார். மமதா பானர்ஜி அவர்கள் தன் சொந்த மாநிலத்தை சேர்ந்த அதாவது வங்காளி என்ற போதிலும் காங்கிரஸ் பெருச்சாளிகள் எவ்வளவு மோசமானவர்கள் என்பதை நன்கு அறிந்த மமதாவே எவ்வளவு துணிச்சலான முடிவை எடுத்துள்ளார்.மேலும் பிரணாப் முகர்ஜி என்பவர் அமைச்சர் பதவிக்கே தகுதி அற்றவர்,இவரைப் போய் இந்திய ஜனாதிபதி ஆக்குவதா..? என்கிறார்.

அரசியலில் பழம் தின்று கொட்டைகளைப் போட்டு,அந்த கொட்டைகளை பல மரங்களாக வளர்த்து, உலகமே எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு பல சுருட்டல்களை,ஊழல்களை,தில்லுமுல்லுகளை உருவாக்கியது மட்டுமின்றி,தனது வாரிசுகள் மூலம் கொள்ளையடித்ததை மறந்து விட்டு இவ்வாறு கூறுவார்.அதாவது மு.க., பாணியில் சொன்னால், மமதா ஜி மேற்கு வங்க காங்கிரஸ் கட்சியில் மகளிர் அணியில் சேரும் பொழுது,அவருக்கு மிக இளம் வயது. அப்பொழுது மேற்கு வங்க காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்தாரே பெரியவர்,அவரே தமிழகதிற்கு வந்து கழக ஆட்சியைப் பார்த்து வியந்து,கவிதை ஒன்றை பாராட்டி வழங்கி விட்டு சென்றார், இன்று கூட அந்த கவிதையை எனது பொக்கிச பெட்டகத்தில் வைத்துள்ளேன் என்றால் பாருங்களேன் என்பார்.

மொத்தத்தில், இந்திய அரசியலில் என்ன வேண்டுமானாலும்,எப்பொழுது வேண்டுமானாலும் அயோக்கியத்தனங்களை செய்யலாம், யாருமே எண்ணிப் பார்க்க முடியாத அளவில் கோடிகளில் கொள்ளை அடிக்கலாம். இவை பற்றி தெரிந்து கொண்டு கேள்விகள் கேட்டால், அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது என்று மறுப்பு சொன்னால் போதுமானது. மேலும் கேள்வி கேட்பவர்களை நீ என்ன யோக்கியமா..? என்று எதிர் குற்றச்சாட்டு சொல்லிவிட்டால் போதுமானது. இவைதான் தற்போதைய இந்திய அரசியல் என்று கற்றுக்கொடுத்து விட்டார் திருக்குவளை மு.க.,அவர்கள்.

அப்பொழுது வாய் நீளம் உள்ளவர்கள் ஏன் இப்பொழுது அந்த வாய் நீளத்தை காண்பிக்கவில்லை என்கிறார்..? மத்தியில் அதிகாரத்தில்,மிக பலமுடன் உட்கார்ந்து கொண்டு எப்படி நையாண்டி செய்கிறார் பாருங்கள். கொஞ்ச நாட்களுக்கு முன் பெட்ரோல் விலையை காங் அரசு உயர்த்தியவுடன் இதே மு.க., இவ்வாறு கேள்வி பதிலில் சொன்னார். மாநிலத்தில் அ.தி.மு.க., அரசு இருக்கிறது,அவர்கள் என்ன தங்களது கூட்டணி கட்சியை கலந்து ஆலோசித்துவிட்டா, பால் விலை மற்றும் பேரூந்து விலையை ஏற்றினார்..? தற்பொழுது புதுக்கோட்டை இடைத் தேர்தலில் போட்டியிடுகிறார்..? தங்களது கூட்டணி கட்சிகளை கேட்டாரா..?அதுபோலவே, ஆளும் கட்சி எடுக்கும் எந்த முடிவுகளும் கூட்டணி கட்சிகளை கலந்து முடிவு எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை என்றார்.

அதாவது அ.தி.மு.க., அரசு அறுதிப் பெரும்மான்மையுடன் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது என்ற உண்மையை எவ்வளவு நைச்சியமாக மறைத்து விட்டு, கேள்வி பதிலில் மேற்கண்டவாறு பதில் சொல்லி,அரைகுறை அரசியல் விமர்சகர்களை குழப்பிவிட்டார். உண்மை என்ன..? அ.தி.மு.க., அரசும் மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசும் ஒன்றா..? சோனியா அரசு துக்கடா கட்சிகளை நம்பி ஆட்சி செய்து கொண்டிருக்கிறது.அவர்களுக்கு ஆகப் பெரும்பான்மை கிடையாது.ஆகப் பெரும்பான்மை இருந்திருந்தால் மு.க., குடும்பம் அனைத்தும் மு.க.,உட்பட இன்று வரை திகார் ஜெயிலில் இருந்திருப்பார்கள் என்பது வேறு விசயம். எனவே தி.மு.க.,அரசை விலை உயர்வு சம்மந்தமாக கேட்க வேண்டிய அவசியமில்லை என்றார். மிகவும் துணிந்து தமிழ் மக்களை மடையர்களாக முட்டாள்களாக மதித்து இவ்வாறு சொன்னார். இந்த மாதிரி மோசடிகள்,கடைதெடுத்த பொய்கள் எல்லாம் அரசியல் சாணக்கியத் தனம் என்று கருணாநிதியின் அடிவருடிகள் சொல்கிறார்கள்.

89 வயது ஆன பிறகும் கட்சித் தலைவர் பதவியை விட முடியாது. முதல்வர் பதவி வேண்டும், மத்தியில் ஆட்சியில் அதிகாரம் வேண்டும்.உலகத் தமிழர்களின் தலைவர் என்ற பட்டம் வேண்டும். எவ்வளவு பெரிய பேராசைக்காரனும் இதுபோன்று சங்க காலத்தில் கூட இருந்திருக்க முடியாது. நாம் வாழும் காலத்தில் இவ்வாறான ஒரு பேராசைக்காரரை கண்டு கொண்டோம் என்று அக மகிழ முடியாது தான் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

சங்கிலிக்கருப்பு

[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.