Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆமா....! அழுதுறுவேன்... பொறுமைக்கும் எல்லை உண்டு - மு.க., ஈழதேசம் செய்தி..!

Featured Replies

[size=3]ஆமா....! அழுதுறுவேன்... பொறுமைக்கும் எல்லை உண்டு - மு.க....?1[/size]

[size=3]

அ தி.மு.க.,அரசு தி.மு.க.வினரை தொடர்ந்து பழிவாங்கிக் கொண்டே இருக்கிறது, பொறுமைக்கும் எல்லை உண்டு என்று தி.மு.க.தலைவர் மு.க.,அவர்கள் காட்டமாக கூறியுள்ளார். " குட்டக் குட்ட குனிவது முட்டாள்தனம் ", குனியக் குனியக் குட்டுவது அதைவிட முட்டாள்தனம் என்று கிராமங்களில் சொல்வார்களே, அதைப் போல இன்றைய ஆட்சியினர் குட்டிக் குட்டிக் குனிய வைத்திட நினைக்கிறார்கள். பொறுமைக்கும் எல்லை உண்டு என்றார். அ.தி.மு.க., அரசும் என்ன நினைக்கிறார்கள் என்றால் எவ்வளவு அடித்தாலும் தாங்குகிறாண்டா இவன், ஆனால் வசனத்தை மட்டும் நிப்பாட்ட மாட்டேங்குறான், இது ஒன்று தான் இவனிடம் உள்ள கெட்ட பழக்க வழக்கம். என்று குனிய வைத்து கும்மாங் குத்து விட்டுக்கொண்டே இருப்பார்கள் போல இந்த அ.தி.மு.க.வினர்கள்.என்னங்கடா..? இரண்டு முட்டாள்தனம் என்று கூறுகிறார்கள் அ.தி.மு.க.வினர். அதாவது வார்த்தைகளில் விளையாடுகிறாராம்.குட்டக் குட்ட குனிவது முட்டாள்தனம், குனிய குனிய குட்டுவது அதைவிட முட்டாள்தனமாம். குனிய வைத்து குட்டினாலும் அல்லது குட்ட வைத்தப் பிறகு குனிந்தாலும் இரண்டும் ஒன்றுதானே. அடி அடி தானே...அதாவது தலையில் எப்படி கொட்டு வாங்கினாலும்.. யார் கொட்டினாலும்... மண்டை வீங்குவதும் புடைப்பதும் கொட்டு வாங்கும் ஒருவனுக்குத் தானே. [/size]

[size=3]

தமிழ் நாட்டு மக்கள் அ.தி.மு.க.வுக்கு வாக்களித்திருக்கிறார்கள். ஆட்சியில் இருந்து தாராளமாக ஆளட்டும்.ஜனநாயகத்தில் அது அனுமதிக்கப்பட்ட ஒன்று.ஆனால் ஆட்சியில் அமர்ந்து விட்டோம் என்பதற்காக எதிர்கட்சிகளை அடக்கி ஒடுக்கிட வேண்டும், அழித்து விட வேண்டும் என்று எண்ணினால் எல்லோரும் எப்போதும் பொறுத்துக்கொள்ள வேண்டுமென்று கருதிடக் கூடாது. இதற்கு அ.தி.மு.க.வினர் என்ன பதில் சொல்கிறார்கள் என்றால், அந்த பதிலை அடுத்த பாராவில் வருவதுடன் இணைத்து படித்துக் கொள்ளவும். [/size]

[size=3]

சேலம் மாவட்ட தி.மு.க.செயலாளர் வீரபாண்டி ஆறுமுகம் சுமார் 75 வயது உடைய பெரியவர்.அவர் போய் அங்கம்மாள் காலனிக்குள் புகுந்து குடிசைகளை தீ வைத்து கொளுத்தினார் என்று வழக்கு போட்டு சிறையில் அடைத்து விட்டு, எங்கே நான் போய் பார்த்தாலும் பார்த்து விடுவேன் என்று கருதி புழலில் இருந்து வேலூருக்கு மாற்றியிருக்கிறார்கள். இதற்கு அ.தி.மு.க.வினர் என்ன சொல்கிறார்கள் என்றால், குழந்தைகளை ஏமாற்றி காசு பிடிங்கித் திங்கும் வடிவேலுவை கையும் களவுமாக பிடித்து விட்டு அந்த சிறுவன் கூறுவானே அதைப் போல சொல்கிறார்கள். ' நீ பெரிய மனுஷன் மாதிரி நடக்கலையே'..... என்று. [/size]

[size=3]

இதில் எந்த வழக்கிலாவது விசாரணை நடைபெற்று, சாட்சிகள் விசாரணை முடிந்து குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டதா..? அதற்குள் ஏன் இந்தக் கொடுமைகள்..? வேறு எந்த மாநிலத்திலாவது இந்தக் கொடுமைகள் உண்டா..? குற்றம் செய்துவிட்டார்கள் என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கட்டும். நீதிமன்றத்தில் விசாரணை நடக்கட்டும். நீதிபதிகள் தவறு என்று தண்டனை கொடுத்தால் ஏற்றுக் கொள்ளட்டும். அதற்குள் ஏன் இந்த அவசரம்..? என்கிறார் 90 வயது கிழவர். இதற்கு விளக்கம் கேட்பதற்கு முன்னே அ.தி.மு.க.வினர் இவ்வாறு கூறுகிறார்கள். மன்னிக்கவும் சங்கிலிக்கருப்பு..! . இந்த கேள்வி எங்களை பார்த்து சத்தியமாகக் கிடையாது. அன்னை சோனியாவையும் அண்ணன் மன் மோகன் சிங் அவர்களையும் பார்த்து தான் இவ்வாறு கோபம் கொப்பளிக்க கேட்கிறார். [/size]

[size=3]

கர்நாடாகாவில் இந்த கொடுமைகள் உண்டா எடியூரப்பாவுக்கு..? ஆந்திரத்தில் ரெட்டி காருக்கு உண்டா இந்த கொடுமைகள்..? கேரளாவில் உண்டா இந்த கொடுமை என்று மத்திய அரசை நோக்கி கேட்க முடியாத காரணத்தால், ஜெ அம்மையாரை பார்த்து இவ்வாறு கூறினால் காங்.ஐ.அரசு புரிந்து கொள்ளும் தனது ஆற்றாமையை என்று. ஆனால் தற்பொழுது இருக்கும் நிலையில் காங் ஐ. அரசு க்கு நேரடியாக எதைக் கூறினாலும் காதில் விழாது, ஏனெனில் அவர்கள் பிரச்சனை அப்படி..! தேள் கொட்டிக் கொண்டிருக்கிறது,[/size][size=3]

அவனிடம் போய் அய்யா..உங்களை ஒரு சிறு எறும்பு ஒன்றும் கடித்துக் கொண்டிருக்கிறது என்று சொன்னால் எப்படியோ அதுபோல. [/size]

[size=3]

மதுரை பொட்டு சுரேஷ், கோபி அப்புறம் அணைத்து மாவட்ட செயலாளர்களும் அவர்களின் அடிப்பொடிகளும் சிறைகளில் நிரம்பி வழிந்து கொண்டே இருக்கையில், நமது பெரியவர் திரு.மு.க..அவர்கள் இவ்வாறு கூறுகிறார். இவ்வாறான கொடுமைகளும் பழி வாங்குதலும் தொடர்ந்து கொண்டே வருகிறது. யாரை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் கைது செய்யலாம் என்ற போக்கு...கழகத்தைச் சேர்ந்தவர்கள் மீது மட்டுமல்ல, தங்களுக்குப் பிடிக்காதவர்கள் மீதெல்லாம், தாங்கள் நினைத்ததைச் சாதிக்க வேண்டும் என்பதற்காக காவல் துறையினரின் துணையோடு இந்த கைது நடவடிக்கைகள் நடைபெறுகின்றன. அண்ணாவின் பெயரை கட்சியிலே வைத்துக் கொண்டு இத்தகைய நடவடிக்கைகள் நடைபெறலாமா..? என்கிறார் மு.க.அவர்கள்.[/size]

[size=3]

முடிந்தால் திரும்பவும் தலைப்பிற்கு வாருங்கள். [/size]

[size=3]

சங்கிலிக்கருப்பு [/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.