Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அபகரிக்கப்படும் தமிழர்களின் பூர்விக நிலங்கள் மீண்டும் தமிழர்களின் கைகளில் கிடைக்குமா? - தாயகத்தில் இருந்து எழுவான்

Featured Replies

சிங்கள தேசம் தமிழர் தாயகப் பகுதியில் தமிழர்களின் பூர்விகக் காணிகளை கடந்த அறுபது ஆண்டு காலத்திற்கு மேலாக அபகரிப்புக்கள் மேற்கொள்ளப்படுவதுடன், அந்த பகுதியில் காலம் காலமாக வாழ்ந்த மக்கள் விரட்டியடிக்கப்பட்டார்கள் என்பதுதான் வரலாறு.

கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் 1957 ஆம் ஆண்டு கல்லோயா நீர்ப்பாசனத் திட்டம் மேற்கொள்ளப்பட்ட போது சிங்களக் குடியேற்றத் திட்டமும் முன்னெடுக்கப்பட்டது. அந்த காலப் பகுதியில் அங்கு வாழ்ந்த தமிழர்கள் துரத்தப்பட்டு மலையோரப் பகுதிகளிலும், பாலங்களுக்கு கீழும் வாழும் அவல நிலை ஏற்பட்டது. அக்காலப் பகுதியில் விரல்விட்டு எண்ணக் கூடியளவில் காணப்பட்ட சிங்களக் குடும்பங்கள், பின்னர் அம்பாறை மாவட்டம் சிங்களவர்களின் பூர்விகமான பகுதி என்ற கருத்துத்தை சிங்கள தேசம் பரப்புரையாக மேற்கொண்டது.

இதனால், காலப்போக்கில் தமிழர்களின் பல தமிழ் கிராமங்கள் அழிக்கப்பட்டதுடன், அங்குவாழ்ந்த தமிழர்களும் படுகொலை செய்யப்பட்டார்கள். அன்றைய காலப் பகுதியில் அபிவிருத்தி, சிங்களக் குடியேற்றம் என எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டதோ அதேபோன்ற ஒரு திட்டத்தை சிங்களம் இப்போதும் மேற்கொண்டுவருகின்றது. அம்பாறை மாவட்டத்தில் தமிழர்கள் இரு இனங்களினால் தாக்கப்பட்டார்கள், அவர்களின் உடமைகள் அபகரிக்கப்பட்டன.

சிங்கள தேசம் தனது ஆட்சி அதிகாரத்தினால் நிலங்களை அபகரிக்க, முஸ்லீம்கள் வன்முறை மூலம் நிலங்களை அபகரித்தனர். இவர்களினால் குடியிருப்புக் காணிகள் மாத்திரமின்றி வளமிக்க விவசாயக் காணிகளும் அபகரிக்கப்பட்டன. அம்பாறை மாவட்டத்தில் யாழ்ப்பாணச்சந்தி, மல்லிகைத்தீவு, கரவாகு, வீரமுனை, சவளக்கடை, அம்பாறை நகர், போன்ற பகுதிகளில் பெரும்பான்மை இனமாக தமிழர் ஆரம்ப காலத்தில் வாழ்ந்த போதிலும், இன்று அந்த எண்ணிக்கை மாவட்ட ரீதியாக மூன்றாம் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

அப்பாறை மாவட்டத்தில் எவ்வாறு தமிழர் காணிகள் அபகரிக்கப்பட்டதோ அதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்திலும், இரு இனங்களினால் காணிகள் அபகரிக்கப்படுகின்றன. கடுமையான போர் இடம்பெற்ற காலங்களில் மட்டு - அம்பாறை மாவட்டங்களில் முஸ்லீம்கள் தமிழர்க்குச் சொந்தமான காணிகளை அபகரித்ததுடன், தமிழர்களை அங்கிருந்து விரட்டியடித்தனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தியாவட்டவான், காவத்தமுனை, ஏறாவூர், மீறாவோடை, ஒட்டமாவடி, ஆரையம்பதி போன்ற இடங்களில் தமிழர்க்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் முஸ்லீம்களினால் அபகரிக்கப்பட்டுள்ளன.

அக்காலப் பகுதியில் சிங்கள ஆட்சியாளர்களின் பலத்தில் முஸ்லீம் அரசியல்வாதி ஒருவர், தமிழர்க்குச் சொந்தமான நாவலடிச் சந்தி எனும் இடத்தில் தனி முஸ்லீம் குடியேற்றக் கிராமத்தையே உருவாக்கி தற்போது அதற்கான தனியான பிரதேச செயலாளர் பிரிவு ஒன்றையும் உருவாக்கியுள்ளனர். தமிழர்க்கான தீர்வுத் திட்டம் முன்வைக்கப்படும் காலகட்டத்தில் இவ்வாறு அத்துமீறி அபகரிக்கப்பட்ட காணிகள் உரியவர்களிடம் கையளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இன்று அபகரிப்புக்குள்ளாக்கப்பட்ட காணிகள் அனைத்தும் சட்டரீதியாக அபகரித்தவர்களுக்கு உரித்துடையதாக்கப்பட்டுள்ளது.

2009ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் என்றுமே சிங்கள இனம் கண்டு கொள்ளாத இடங்களை சிங்களவர்கள் பௌத்த திருத்தலத்திற்குரியது என உரிமை கொண்டாடி வருகின்றனர். மாவட்டத்தின் திருத்தலங்கள் அமைந்துள்ள தாந்தாமலை, குடும்பிலை, சுவாமிமலை, போன்ற பிரசித்தி பெற்ற திருத்தலங்கள் அமைந்துள்ள பகுதி சிங்களவர்களுக்குச் சொந்தமானது எனத் தெரிவித்து அங்கு பௌத்த விகாரைகளை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் அதே சமயத்தில், பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்

பட்ட கெவிளியாமடு, கச்சக்கொடி போன்ற பகுதிகளில் 450க்கும் மேற்பட்ட சிங்களக் குடும்பங்கள் தமிழர் காணிகளில் அத்துமீறி குடியேறியுள்ளனர்.

இவ்வாறு, திருகோணமலை, முல்லைதீவு, கிளிநொச்சி, மன்னார், யாழ்ப்பாணம் என அனைத்துப் பகுதிகளிலும் தமிழர்களின் பூர்விகக் காணிகள் நன்கு திட்டமிடப்பட்ட முறையில் அபகரிக்கப்படுகின்றன. இப்பகுதிகளில் மேற்கொள்ளப்படும் காணி அபகரிப்பில் சில நுட்பங்களை சிங்கள தேசம் கையாண்டுவருகிறது. முதல் கட்டமாக பௌத்த விகாரைகளை அமைத்து அவற்றைப் புனித பிரதேசமாகப் பிரகடனப்படுத்தி அபகரித்தல். சில இடங்களில் கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை பகுதியில் வீதியோரங்களில் வாழ்கின்ற சிங்களவர்களை கொண்டு சென்று அவர்களுக்கான கிராமங்களை உருவாக்கி தமிழர் பகுதி அபகரிப்பு. ஊனமுற்ற படைகளுக்

கென புதிய குடியிருப்பத் திட்டங்களை உருவாக்குவதன் மூலம் காணிகள் அபகரிப்பு மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

இன்றைய நிலையில் யாழ்ப்பாணத்தில் நேரடியாகவே படையினர் காணிகளை அபகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தமிழர்களின் மயானமாக இருந்தாலும் சரி, விளையாட்டுத் திடலாக இருந்தாலும் சரி அவற்றை படைப் பலம்கொண்டு அபகரிப்பு முயற்சியில் ஈடுபட்டு

வருகின்றனர். வடக்கு கிழக்கில் படை மற்றும் அரசியல் பலங்களைக் கொண்டு தமிழர் காணிகள் அபகரிக்கப்படுவதினால், தமிழ் அரசியல்வாதிகளினால் அவற்றைத் தடுப்பதற்கு இயலாத நிலை காணப்படுகிறது.

காணிகள் தொடர்பான பிரச்சினையில் பொதுமக்கள் வீதியில் போராட்டத்தில் ஈடுபட்டால் மறுநாள் படைப்புலனாய்வுப் பிரிவினர்கள் அவர்களை ஏதோ ஒரு முறையில் அச்சுறுத்துகின்றனர் அல்லது அவர்கள் மீது தாக்குதல் நடத்த முற்படுகின்றனர். எனினும், காணிப் பிரச்சினை தொடர்பாக ஜெனீவா செல்லப் போவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்திருந்தாலும், தமிழர்களின் பிரச்சினையில் காணி முக்கிய விடயமாக நோக்கப்படுகிற நிலையில், ஏற்கனவே அமெரிக்காவினால் மனித உரிமை தொடர்பாக சிறீலங்காவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

எனினும் அது இன்று நடைமுறைப்படுத்தப்படுகிறதா? என்பது கேள்வியாகவே உள்ளது. இந்நிலையில், காணி தொடர்பான பிரச்சினைகளையும் பட்டியல் போட்டு அறிக்கை சமர்ப்பிக்கலாம், ஆனால் சிங்கள தேசம் மேற்கொண்டுவரும் அபகரிப்பு நிறுத்தப்படுமா? என்பதுதான் தமிழர் மத்தியில் எழுந்துள்ள கேள்வி? இலட்சத்திற்கு மேற்பட்ட உயிர்களைக் காவு கொண்ட சிங்கள அரசாங்கத்திற்கோ அல்லது அதன் படைகளுக்கோ எதிராக எவ்வித நடவடிக்கையையும் அனைத்துலகம் எடுக்காத நிலையில், காணி தொடர்பான விடயத்தில் மாத்திரம் எவ்வாறு அக்கறையாகச் செயற்படும் என்பதில் என்ன உத்தரவாதம் உள்ளது.

வடக்கில் காணி அபகரிப்புக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க அரசியல் கட்சிகள் முன்வந்துள்ளமை முக்கிய திருப்பமாகக் கொண்டாலும், அதற்கான பலன்கள் கிடைக்குமா? எனினும், தற்போதைக்கு தமிழர்களினால் அதிக உச்சமாக மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைக்கும் தமிழர்கள் அனைவரும் வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டிய தேவை எழுந்துள்ளது.

இன்று பத்து வருடத்திற்கு மேல் ஒருவர் ஒரு காணியில் வசித்தால் அவர்களுக்கே சொந்தமாக்க சட்டத் திருத்தங்கள் கொண்டுவரப்படவுள்ளதாக சிறீலங்காவின் நீதியமைச்சரான ரவூப் ஹக்கிம் ஊடகங்களுக்குத் தெரிவித்துவருகின்றார்.

ஒருவர் பத்து வருடங்களாக வசித்துவரும் காணி குறித்த நபருக்கு சொந்தமாக்கப்படும் எனத் தெரிவிக்கும் அமைச்சர், அக்காணியைப் பறி கொடுத்தவர்களுக்கான நிவாரணம் என்ன? அதற்கான பரிகாரம் என்ன? போன்ற விடயங்களைக் குறிப்பிடவில்லை.

நன்றி : ஈழமுரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.