Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நேற்று நூறு முள்ளிவாய்க்கால் ...! இன்று பெரும் பேரழிவு - சம்பிக்க ரணவக்க...! நாளை கூண்டோடு இலங்கைத் தமிழர்கள் கொல்லப்படுவார்களோ..? - ஈழதேசம்.

Featured Replies

நேற்று நூறு முள்ளிவாய்க்கால் ...! இன்று பெரும் பேரழிவு - சம்பிக்க ரணவக்க...! நாளை கூண்டோடு இலங்கைத் தமிழர்கள் கொல்லப்படுவார்களோ..? - ஈழதேசம்.

[size=3]

eeladhesam%20seythi%20aaivu.jpgஜாதிக ஹெல உறுமிய கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் இலங்கை அமைச்சருமான சம்பிக்க ரணவக்க அவர்கள் த.தே.கூ.வின் தலைவர் திரு.சம்பந்தன் அவர்கள் பேசிய, வடக்கு கிழக்கு தமிழர்களின் ஒருங்கிணைந்த பகுதிதான் என்றும், தமிழர்களின் ஒரே கோரிக்கை அரசியல் உரிமை தான் வேண்டும் என்று கூறியதற்கு இந்த சம்பிக்க ரணவக்க தான், தமிழர்களின் உரிமை, வடக்கு கிழக்கு என்றெல்லாம் சம்பந்தன் பேசி, மீண்டும் ஒரு முள்ளிவாய்க்கால் படுகொலைகள் அல்ல, நூறு முள்ளிவாய்க்கால் படுகொலைகளை ஏற்படுத்த முனைகிறார் என்று கூறினார். முள்ளிவாய்க்கால் ஒரு படுகொலை தான் என்று கூறுகிறார்கள் இன அழிப்புவாதிகள், பாசிஸ்டுகளே அது ஒரு படுகொலை தான் என்று கூறுகிறார்கள் என்றால் நாம் எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும்..? இன அழிப்பு என்பதைத் தவிர.

இந்த மாதிரியான மிரட்டலை உள்ளூர் தமிழ் பேசும் பிரதிநிதிகளைப் பார்த்து நேற்று கூறினார். இன்று வெளியூர் தமிழ் பேசும் பிரதிநிதிகளைப் பார்த்து மேற்கண்டவாறு மிரட்டி உள்ளார். பிரிவினைவாத சதிகாரர்களின் பேச்சுக்களைக் கேட்டு மீண்டும் தமிழ் மக்கள் அழிவுகளை தேடிக் கொள்ளக் கூடாது என்று. தனி ஈழத்துக்கு தமிழகம் குரல் கொடுத்தால் இலங்கையில் பேரழிவுகளே ஏற்படும்.? இதற்கு உள்நாட்டில் வாழும் தமிழ் மக்களும் ஏமாறக் கூடாது. தனி ஈழத்துக்கு தமிழகமும் முயற்சிக்க கூடாது. இதனை அணைத்து தரப்புகளுக்கும் தெளிவுபடுத்தியுள்ளோம். என்கிறார் சம்பிக்க ரணவக்க.

எப்பொழுது அணைத்து தரப்புகளுக்கும் தெளிவுபடுத்தினார். அதென்ன அணைத்து தரப்பு..? பா.ஜ.க., இரண்டு போலி கம்யூனிஸ்ட்கள், மமதா கட்சி, முலாயம் கட்சி, லாலு கட்சி,சங்க்பரிவார் க்ரூப்கள் என்று வட இந்திய க்ரூப்கள் தவிர, இவர்களிடம் இதுமாதிரி தமிழர்களை இலங்கையில் பூண்டோடு அழிக்கப் போகிறோம் என்று சொன்னால், இந்த அரசியல் கட்சிகள் எல்லாம் விருந்து வைத்து உபசரித்து மிக நன்றாக சுத்தமாக அந்த வேலையை செய்யுங்கள் என்று சொல்லியிருப்பார்கள். இருக்கட்டும் இந்த வட நாட்டு கட்சிகளின் கருத்துக்கள்.

இவை தவிர வேறு என்ன அணைத்து தரப்பு என்று சொல்கிறார் ஜாதிக ஹெல உறுமயவின் சம்பிக்க அவர்கள். தமிழ் நாட்டில் உள்ள கட்சிகள் தி.மு.க., தவிர, ஏனைய திராவிடக் கட்சிகளையும் தேசிய கட்சிகளையும் கூப்பிட்டு தெளிவுபடுத்தினார்களா..? நேரடியாக இலங்கை அரசு தரப்பு இந்த தமிழ் நாட்டு அரசியல் கட்சிகளை தெளிவு படுத்தியிருக்க முடியாது. தமிழ் நாட்டு அரசியல் கட்சிகளில் திராவிட தேசியம் பேசாத கட்சிகள் எங்கு இருக்கின்றன...? சீமான் அவர்களே முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பிறகு தானே களம் இறங்கினார். அப்படியென்றால், தமிழ் தேசியம் பேசிய துக்கடா கட்சிகளை சமாளித்துக் கொள்ளுங்கள் என்று ஆளும் கட்சியாக இருந்த தி.மு.க.வின் மு.கருணாநிதியிடம் தெளிவு படுத்தினார்களோ..? இந்த தெளிவு படுத்தியதன் விளைவுதானோ..? முத்துக்குமார் மரணத்தை வைத்து இலங்கைப் போரை நிறுத்துங்கள் என்று போராடிய சிறு தமிழ் தேசிய கட்சிகளும், பெருவாரியான தமிழ் இன உணர்வாளர்களும் போராடிய பொழுது, திருமா கட்சியினரும், தி.மு.க.வின் கூலிப்பட்டாளமும் முத்துக்குமாரின் மரண ஊர்வலத்தை திசை திருப்பி, தமிழக மக்களின் தன்னெழுச்சியான போராட்டத்தை அடக்கி ஒடுக்கினார்களோ மு.க.வும் திருமாவும்.

இலங்கை அரசின் இந்த தெளிவுபடுத்துதல் காரணமாகத் தான் மெட்ராஸ் உயர் நீதி மன்றத்தில், நீதி கோரியும் இலங்கை போரை நிறுத்தக் கோரியும் போராடிய எண்ணற்ற வழக்குரைஞர்களை நீதிபதிகளை, இந்திய ராணுவத்தை ரிசர்வ் போலீஸ் உடையில் அனுப்பி ஏராளமானவர்களை மண்டையை உடைத்தும் கை கால்களை உடைத்தும், வக்கீல்களுக்கு ஆதரவாக இருந்த எண்ணற்ற நீதிபதிகளையும் நைய்யப்புடைத்து ஒடுக்கினார் தி.மு.க.வின் மு.கருணாநிதி அவர்கள். அங்கே இலங்கையில் யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம், இங்கே தமிழகத்தில் யுத்தத்தை நிறுத்தக் கோரியா நீதிமன்றத்தில் போராடுகிறீர்கள்..? என்று கருவியபடியே அந்த வழக்குரைஞர்களின் போராட்டத்தை ஒடுக்கியது இந்திய ராணுவமும் தி.மு.க.அரசும்..!

சம்பிக்க இவ்வாறு கூறியுள்ளார். இலங்கையில் உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்று இந்தியா உள்பட பல நாடுகளுக்கு பலமுறை கூறியும் கேட்க மறுக்கின்றனர். எனினும் கருணாநிதி,சீமான்,வைக்கோ போன்றவர்களின் விருப்பங்கள் இனி இலங்கையில் நிறைவேறாது என்கிறார். மேலும் எனக்கு எதிராக கடந்த வாரத்தில் தமிழகத்தில் எதிர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.இதனை வைக்கோ, சீமான் மற்றும் கருணாநிதி போன்றவர்கள் முன்னெடுத்தனர். இவர்கள் இலங்கையின் சுயாதீன தன்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலேயே செயற்படுகின்றனர் என்கிறார்.

இலங்கை யுத்தத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்த தி.மு.க..வின் மு.கருணாநிதியை ஏன் வைக்கோ சீமான் போன்றவர்களோடு ஒப்பிட்டு பேசுகிறார் சம்பிக்க..? கருணாநிதி பெயரளவிற்கு நானும் ஜெயிலுக்கு போறேன் என்ற ரீதியல் போடும் வேஷத்தைக் கூட தாங்க முடியவில்லை என்று கருதலாமா..? அல்லது இந்திய உளவுத் துறையும் இலங்கை உளவுத் துறையும் மு.க..வை இந்த பட்டியலில் சேர்த்து பேசுவதின் நோக்கம் என்னவாக இருக்கும்..? மு.கருணாநிதி எப்படியாவது தமிழகத்தில் ஈழ மக்களை குறித்தும், தனி ஈழம் குறித்தும் பேசினால் ஒன்றும் இல்லாமல் நீர்த்துப் போகச் செய்யலாம் என்ற நப்பாசையாகக் கூட இருக்கலாம்.

ஆனால் இன்றைய நிலைமை இலங்கை அரசு நினைப்பதைப் போல இல்லை. இழப்பதற்கு உயிரை மட்டும் வைத்திருக்கும் ஈழத் தமிழர்கள் பின்னே புலம் பெயர் தமிழர்களும், உலகத் தமிழர்களும் கைகோர்த்து விட்டனர். இலங்கையில் அரசியல் உரிமை அன்றில் தனி ஈழம் என்ற மலர் பூக்கத் துவங்கி விட்டன என்றால் மிகையில்லை என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

சங்கிலிக்கருப்பு.

[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.