Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கப்பல் போகவுள்ளது என்று 13 தமிழர்களிடம் 175 இலட்சங்கள் வரை மோசடி செய்த பெண்! (படம்)

Featured Replies

இலண்டனில் குடியேறியுள்ள இந்த ஆட்கடத்தல் காரர்களால் பாதிக்கப்பட்ட ஏனையோர் உடன் தொடர்பு கொள்ளவும்.

இலங்கையில் தமிழர்கள் மத்தியில் நிலவும் அசாதாரண நெருக்கடிகள் மற்றும் இடர் துன்பங்களை சாதகமாக பயன்படுத்தி தமிழ் இழைஞர் யுவதிகளிடம் வெளிநாடுகளுக்கு ஆட்களை கடத்தும் முகவர்கள் சிலரால் கடந்த சில வருடங்களில் பெரும் ஏமாற்று மோசடிகள் நடாத்தப்பட்டுள்ளமை வெளிச்சத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

உள்நாட்டு போரின் பாதிப்பால் துவண்டுபோயுள்ள வன்னிப்பகுதியிலிருந்தும் யாழ்பாணம் மற்றும் மட்டக்களப்பிலிருந்தும் இலண்டன் கனடா அவுஸ்திரேலியா சுவிஸ் போன்ற நாடுகளுக்கு ஆட்கடத்தல் செய்து வந்த தமிழர் குடும்பமொன்று மிகப்பெரும் ஏமாற்று மோசடி ஒன்றை செய்துவிட்டு கடந்த வருடம் எப்ரல் மாதம் இலண்டனில் குடியேறியுள்ளனர்.

இவரதும் இவருடன் தொடர்பு பட்டவர்களான இவரது கணவர் அப்பன் அல்லது சூரி மற்றும் அவரது சகபாடியான கப்பல் சார்ல்ஸ் (தவம்) மீதும் சர்வதேச ரீதியில் சட்டநடவடிக்கை எடுக்க சமூகநல ஆர்வலர்களால் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவர்கள்பற்றிய படங்களுடனான முழுவிபரங்களும் திரட்டப்பட்டுள்ளன.

Sooriyakumar-soba-humansmuggling-proud-news.jpg

இந்த பெண் மோசடிக்காரரது சொந்தப் பெயர் சூரியகுமார் சோபா

சொந்த இடம் ஸ்கந்தபுரம் கிளிநொச்சி

திருமணம் முடித்தது இலுப்பைக்கடவை மன்னார்.

மேற்படி சோபா 2010 மற்றும் 2011ம் ஆண்டு காலப்பகுதில் வவுனியாவிலும் கொழும்பில் இருந்தும் வெளிநாடுகளுக்கு ஆட்களைக்கடத்தும் தொழில் முகவராக தனது கணவருக்காக செய்ற்பட்டு ஆட்சேர்ப்பில் ஈடுபட்டுவந்துள்ளார். இக்காலப்பகுதியில் சில உளளுர் முகவர்களுடாக போரினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தடுப்பிலிருந்து புனர்வாழ்வு பெற்று விடப்பட்டவர்களென பலபேரை அணுகி சுமார் 25க்கும் அதிகமானவர்களை சேர்த்து கொழும்பில் தனது கணவரிடம் அறிமுகம் செய்து அவர்களிடம் ஒவ்வொருவரிடமும் முற்பனமாக 10 இலட்சம் முதல் 15 இலட்சம் வரை பெற்று கென்யா தன்சானியா ரேக்கி துபாய் மலாவி (மலாய்) போன்ற நாடுகளுக்கு அழைத்துச் சென்று அங்கு சிறு சிறு குழுக்களாக தங்கவைக்கப்பட்டு மீண்டும் அவர்களிடம் 10 இலச்சம் 5 இலச்சமென அறவீடு செய்துவிட்டு கடந்த இருவருடங்களாக கால இழுத்தடிப்பு செய்துவிட்டு அவர்களுள் 13 பேரை (3 யுவதிகள் உள்ளடங்கலாக) திட்டமிட்டு ஏமாற்றி கையைவிட்டுச் சென்றுள்ளனர்.

பாதிக்கப்படவர்களுள் ஒரு யுவதி தன்சானியா சிறையில் தவிக்கிறார் சிலர் கென்யாவில் கடவுச்சீட்டுகள் இல்லாதநிலையில் செய்வதறியாது தவிக்கின்றனர் இன்னும் சிலர் ஏமாற்றப்பட்டநிலையில் இலங்கை சென்றுள்ளனர்.

இவர்களுள் குறித்த யுவதி உட்பட 4 இழைஞர்கள் தமது வாக்குமூலங்களை ஆதாரங்களுடன் பதிவு செய்துள்ளனர். இம்மோசடிக் கும்பலானது சுவிசிலிருந்தும் செயற்பட்டுள்ளமை இயங்கிவந்துள்ளமை அறியப்பட்டுள்ளது. எனவே இவர்களால் ஏமாற்ப்பட்டவர்கள் எம்முடன் தொர்புகொண்டு எமக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம். தங்கது சுயவிபரம் அனைத்தும் தங்களுக்கு எந்தவித பாதிப்புகளோ இன்னல்களோ ஏற்படாதவாறு சர்வதேச சட்டவிதிமுறைகளுக்கமைய கையாளப்படும் பேணம் படும் என்பதை அறியத்தருகிறோம்.

இம்மோசடிக்கு இலங்கை புலநாய்வுப்பிரிவினரதும் அரச அமைச்சர் முரளிதரன் (கருணா அம்மான்) போன்றோரது பெயர்கள் திட்டமிட்டவகையில் அச்சுறுத்தலுக்காக பாவிக்கப்பட்டுள்ளமை பதிவாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சிலர் போனது போகட்டும் எனக் கூறி இந்த மோசடிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவதாக அறியப்படுகிறது.

இவ்விடயம் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் கவனத்திற்கும் கொண்டுவரப்படவுள்ளது.

இவர்களது மோசடி மற்றும் ஆட்கடத்தல் வலையமைப்பு பற்றிய அதிர்ச்சிகரமான மேலதிக தகவல்கள் அனைத்தும் சேகரிக்கப்படுகின்;றன விரைவில் புகைப்படங்களுடன் வெளியிடப்படவுள்ளது.

இந்த மோசடிகளுக்கு எதிரான எமது இந்த மனிதநேய செயற்பாட்டுக்கு எமக்கு ஒத்தாசை புரியுமாறு தமிழ் ஆங்கில ஊடகங்கள் அனைத்துப்பேரிடமும் வேண்டி நிற்கிறோம்.

மேலும் இக்கும்பலுடன் தொடர்புபட்டு மோசடியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் நபர்கள் பற்றிய விபரமான செய்திகள் வெளிப்படுத்தப்படவுள்ளன.

இவர்கள் பற்றியதோ அல்லது இவர்களுடன் தொடாபுபட்ட ஆட்கடத்தல் மோசடிக்காரர்கள் பற்றிய தகவல்கள் தெரிந்தோர் அறிந்தோர் மற்றும் ஏமாற்றப்பட்டோர் தயவு செய்து அச்சப்படாமல் தகவல்களை எமக்கு அனுப்பிவைக்கவும் அல்லது எம்முடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ஆட்கடத்தல் காரர்களால் அழைத்துவரப்பட்டு ஒருவருடத்திற்கு மேலாக தன்சானியாவில் தங்கவைக்கப்பட்டிருந்த புங்குடுதீவைச்சேர்ந்த யுவதி ஒருவர் மரணமடைந்திருந்தார் ( பெயர் – செல்வி) அல்லது தற்கொலை செய்திருந்தார் என அறியப்படுகிறது இச்சம்பவம் தொடர்பில் சுகவீனம் காரணமாக மரணமடைந்ததாக ஆட்கடத்தல் முகவர்கள் கதையைமுடித்திருந்தாலும் இம் மரணம் பற்றிய புதிய முரண்பட்ட தகவல்கள் கிடைக்கப்பபெற்றுள்ளன.

(2011ம் ஆண்டு மாசிமாதம் தன்சானியாவில் இப்பெண் மரணமடைந்ததாக இரகசியமாக அடக்கம் செய்யப்பட்டார்) எனவே இந்த யுவதியின் பயணமுகவர் யார் என அறிவதற்கும் இதுபற்றி உறவினர்கள் தரப்பு தகவல் எமக்கு தேவைப்படுவதாலும் சுவிசில் வசிப்பதாக கூறப்படும் அவரது உறவினர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

எம்முடன் தொடர்பு கொள்ளவேண்டிய மின்னஞ்சல் முகவரி. theepikalanka@gmail.com

அனீதிகளுக்கும் மோசடிகளுக்கும் எதிரான புலம் பெயர் இலங்கையர் குழு.

http://thaaitamil.com/%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-13/

யாழ்களம் இப்படியான செய்திகளை உறுத்திப்பட்டுத்தியா அனுமதிக்கின்றது?

நாளைக்கு படத்தோட யாழில் ஒரு செய்திவரும்.என்னட்டை தெரிஞ்சாளொருத்தற்றை படம் கிடக்கு. மகளின்ர சாமத்தியவீட்டுக்குபோய் 500 யூறோ போட்டனான்.ஆனால் எனக்கு இன்னும் திருப்பிதரலை.

யாழ்களம் இப்படியான செய்திகளை உறுத்திப்பட்டுத்தியா அனுமதிக்கின்றது?

ஏன் உங்களுக்கு உதறல் எடுக்குது?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.