Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விடுதலைப் புலிகளுக்காகத் தான் திமுக ஆட்சியை இழந்தது! இப்போதாவது நம்புங்க: கெஞ்சும் கருணாநிதி

Featured Replies

தமிழீழ விடுதலைப் புலிகளுக்காகத்தான் 1991-ல் திமுக ஆட்சியை இழந்தது என்பதை இப்போதாவது புரிந்து கொண்டால் சரி, என திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

கேள்வி: டெசோ மாநாட்டிற்கு மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களையும், இலங்கையிலே உள்ள தமிழ் எம்.பி.க்களையும் அழைப்பீர்களா?

பதில்: அழைப்போம்.

கேள்வி:- இலங்கை விமானப்படை வீரர்களுக்கு தமிழகத்திலே பயிற்சி அளிப்பதற்கு மத்திய அரசு அனுமதி கொடுத்ததற்கு தமிழக முதல்வர் கண்டனம் தெரிவித்து அறிக்கை விடுத்துள்ளாரே?

பதில்: தி.மு.க. ஆட்சிப் பொறுப்பிலே இருந்தபோது, 3-2-2009 அன்று தமிழக அரசின் சார்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பை நினைவுபடுத்துகிறேன். இலங்கை ராணுவத்தைச் சேர்ந்த வான்படை வீரர்கள் சிலர் தாம்பரத்திலுள்ள வான்படை பயிற்சிக் கூடத்திற்கு வந்திருப்பதாகவும், அவர்களுக்கு பதிவு வழங்குமாறும் தாம்பரம் வான்படையினர் சேலையூர் காவல் நிலையத்தில் கேட்டுக்கொண்ட செய்தி அறிந்து, முதல் அமைச்சர் அறிவுரைப்படி தலைமைச் செயலாளர் மத்திய அரசின் பாதுகாப்புத் துறையிடம் தொடர்பு கொண்டு, அவர்களை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

முதல்வர் கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு அந்த இலங்கை ராணுவத்தைச் சேர்ந்த வீரர்களை தமிழகத்திலிருந்து திரும்ப அனுப்ப உத்தரவிட்டதோடு, அந்தச் செய்தியை முதல்-அமைச்சருக்கு தெரிவிக்குமாறு கூறியுள்ளது. இதிலிருந்தே இதேபோன்ற சம்பவம் தி.மு.க. ஆட்சியிலே நடந்தபோது எந்த அளவிற்குச் செயல்பட்டோம் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

கேள்வி: இலங்கையில் இறுதிப்போர் நடைபெற்றபோது தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பிலே இருந்த நீங்கள் மத்திய அரசை எதிர்த்து ஆட்சியை இழந்திருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்களே, 1991-ம் ஆண்டு தி.மு.க ஆட்சியை மத்திய அரசு கலைத்ததற்குக் காரணம், விடுதலைப்புலிகளை நீங்கள் ஆதரித்தீர்கள் என்பதுதானே?

பதில்: 4-7-2012 திகதி ´ஆனந்த விகடன்´ இதழில், ´அபாண்டமாக பழி சுமத்தி தி.மு.க. ஆட்சியைக் கலைத்தீர்கள் என்று உங்கள் மேல் உள்ள குற்றச்சாட்டு குறித்து என்ன சொல்கிறீர்கள்´ என்று சுப்பிரமணிய சாமியிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், “தி.மு.க. ஆட்சிக் காலத்தில்தான் விடுதலைப்புலிகளுக்கு கருணாநிதி எல்லா வசதிகளும் செஞ்சுக் கொடுத்தா. விடுதலைப்புலிகள் இங்கே பெட்ரோல் பங்க் நடத்துனா. கோயம்புத்தூரில் நாட்டு வெடிகுண்டு தயாரிக்குற தொழிற்சாலை வெச்சிருந்தா. எல்.டி.டி.ஈ.க்கு யூனிபார்ம் தைச்சுக் கொடுத்தா. இதைப்பத்தி எல்லாம் எனக்கு ரிப்போர்ட் வந்தது.

நான்தான் சந்திரசேகர்கிட்ட எடுத்துச் சொல்லி, கருணாநிதி, தீவிரவாதிகளுக்கு சப்போர்ட் பண்றா. அவா அரசைக் கலைச்சிடுவோம்னு சொன்னேன். அவர் பயந்தார். சுத்தி இருந்தவாள்லாம், இந்தக் காரணத்துக்காக அரசைக் கலைச்சா, தமிழ்நாட்டில் பெரிய கலவரம் வெடிக்கும்னு பயமுறுத்தினா. அதெல்லாம் ஒன்ணும் ஆகாது, கலைங்கோன்னு தைரியம் கொடுத்து நான்தான் கலைக்க வெச்சேன். அதில் என்ன தப்பு?” என்று சொல்லியிருக்கிறார்.

அவர் கூறிய குற்றச்சாட்டுகள் உண்மையோ இல்லையோ; அதற்காகத்தான் தி.மு.க. பதவியை இழந்தது. இதிலிருந்தாவது ஒரு சிலர் வேண்டுமென்றே என்மீது பழி போடுகின்ற செயலை நிறுத்திக் கொண்டால், அதைத் தமிழ் மக்கள் புரிந்து கொண்டால், அதுவே போதுமானது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

http://thaaitamil.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4/

  • கருத்துக்கள உறவுகள்

சரியாகத்தான் சொல்லியுருக்கிறார்.. :unsure:

புலிகளை அழிக்க உதவியதால்தானே ஆட்சியை இழந்தார்..?! :rolleyes:

ஆட்சி கலைக்கப்பட்டதுக்கும் கொலைஞர் கருணாநிதியின் புலிகளுக்கான ஆதரவு என்பதற்கும் துளியும் நேரடிச் சம்பந்தமில்லை. சூழ்நிலையை வைத்து எதிர் தரப்பின் அரசியல் நகர்த்தலே தான் அது.

ஊழலில் கடுமையாக மாட்டுப்பட்டிருந்த கொலைஞர் கருணாநிதியால் அந்த ஆட்சி கலைப்பு முயற்சியை எதிர்க்க முடியாமையே ஈற்றில் கலைப்புக்கு வழிவகுத்தது!

முன்பு ஒரு சிறுமி பசியால் வாடியபோது ஒருவேளை உணவு கொடுத்ததற்காக, பின்னர் அந்தப் பெண்ணை கொலை செய்ததற்கு யாரும் மன்னிப்பு வழங்குவதில்லை! ஏன் பெற்றோருக்கே அந்த மன்னிப்பு கிடைக்காது! அதுபோல, கொலைஞர் சொல்வது போல் ஏதாவது சிறு மறைமுக தொடர்பு இருக்குது என்று வைத்துக்கொண்டாலும், பின்னர் ஊழல்களிலும், வாரிசுகளின் நலனிலும் மட்டும் அக்கறையாக இருந்துகொண்டு, வட இந்திய காட்டுமிராண்டி அரசின் தமிழின அழிப்புக்கு தொடர்ந்து துணை போனதை மன்னிக்க முடியாது! இன்றும் அந்த வட இந்திய காட்டுமிராண்டி அரசு சிங்கள பயங்கரவாதிகளுக்கு முண்டுகொடுத்து வருகிறது!

வட இந்திய பயங்கரவாத அரசுக்கும், தமிழின அழிப்புக்கு பெரும் துணை நின்ற பிரணாப் முகர்ஜிக்கும் தொடர்ந்து முண்டு கொடுக்கும் கொலைஞர் கருணாநிதி, டெசோ மகாநாடு என்ற பெயரில் இலங்கை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்து அவர்களை சிக்கலில் மாட்டாமல், தமிழகத்தில் குரல் கொடுக்கும் வைகோ, நெடுமாறன், கோவை ராமகிருஷ்ணன், ஜெயலலிதா போன்றவர்களை டெசோ மகாநாட்டுக்கு அழைப்பாரானால், அவர்களும் கலந்து கொள்வார்களானால் அதை கொஞ்சம் பாராட்டலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.