Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஒலிமப்பிக் போட்டியும் உண்ண்ணாநிலைப் போராட்ட்டமும்-கோபி சிவந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

sivanthan.jpg

[size=4]விடுதலை என்ற இலட்சியத் தீயை தம் இதயங்களில் சுமந்து வீழ்ந்த வீரர்களின் பாதார விந்தங்களை பணிந்து, சுதந்திரமானதும், கௌரவமானதுமான தமிழ்மக்களின் வாழ்வுக்கான இன்னுமொரு சத்தியப் பயணத்தை தொடங்குகிறேன்.[/size]

[size=4]தமிழ்த் தேசியப் போராட்ட அரங்கில், அதி முக்கியத்துவம் வாய்ந்த மாதங்களில் யூலை மாதமும் ஒன்று.

1958 ஆம் ஆரம்பமான நேரடியான இன அழிப்புப் படலம் மெல்ல மெல்ல நகர்ந்து, 1983ம் யூலை மாதத்தில் உச்சக்கட்டத்தை தொட்டது. இதனை, நேரடியான இனஅழிப்பின் தீவிர ஆரம்பப்புள்ளி எனலாம். சிங்கள அரச பயங்கரவாதத்தின் முதலாவது பெருமெடுப்பிலான இன அழிப்பில் சுமார் 3500 அப்பாவி தமிழ்ப் பொதுமக்கள் மிலேச்சத்தனமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்கள்.

இத்தருணத்திலேயே, வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டடிருந்த போராளிகளான குட்டிமணி-தங்கத்துரை உட்பட்ட 53 தமிழ் அரசியல் கைதிகளும் ஈவிரக்கமற்ற முறையில் படுகொலை செய்யப்பட்டார்கள். இத்தகையதொரு மாதத்திலேயே, 29 வருடங்கள் கழித்து, மீண்டுமொரு படுகொலையை சிங்கள அரசபயங்கரவாதம் திட்டமிட்ட முறையில் நடாத்தியுள்ளது. இதில் கணேசன் நிமலரூபன் என்ற போர்க் கைதி காட்டுமிராண்டித்தனமாக படுகொலைசெய்யப்பட்டதுடன், இன்னுமொரு போர்க்கைதி மிலேச்சத்தனமான தாக்குதலால் கோமா நிலைக்குள்ளாக்கப்படடுள்ளார். இவ்வாறான தருணத்திலேயே, புலம்பெயர் தமிழர்களின் அரசியல் செயற்பாடுகளில் முக்கிய தளமாக விளங்கும் லண்டனில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியுள்ளது. இதனால், உலகின் பார்வை லண்டன் மீது குவிந்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, நீதி மறுக்கப்பட்டுள்ள இனத்திற்கு நீதி கிடைக்கக் கோரி உலகின் ஆரதவை திரட்டும் முகமாக யூலை 22 தொடக்கம் ஓகஸ்ட் 12 வரை பின்வரும் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளேன்.

1. இனஅழிப்பு நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவரும் சிறீலங்கா அரசாங்கம் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றுவது நிறுத்தப்படல் வேண்டும். மனிதாபிமான விழுமியங்களை கட்டிக் காக்க முற்படும் ஒரு போட்டியில், சிறீலங்கா அரசாங்கத்தை பங்குபற்ற அனுமதிப்பதென்பது, லண்டன் ஒலிம்பிக் போட்டிகிளின் தார்ப்பரியத்தையே கேள்விக்குள்ளாக்கும் ஒரு நடவடிக்கை என்பதை ஒலிம்பிக் போட்டி ஒருங்கமைப்பாளர்கள் உணர்ந்து, அதற்கேற்ற வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

2. சிறீலங்கா அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்ட போர்க்குற்றம், மானுடகுலத்திற்கு எதிரான குற்றம் மற்றும் இன அழிப்பு தொடர்பாக சர்வதேச ரீதியாக சுதந்திரமான விசாரணையை மேற்கொள்வதற்கான முனைப்புக்களை ஐக்கிய நாடுகள் சபை முன்னெடுக்க வேண்டும்.

3. எமது தேசத்தின் நிலங்களை இராணுவமயமாக்கல் மற்றும் சிங்களமயமாக்கல் ஊடாக ஆக்கிரமித்து, எமது மக்களை மேலும் அவலவாழ்வுக்குள் தள்ளி, எமது சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையினை வலுவற்றதாக்க எடுக்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். முள்ளிவாய்க்காலில் எமது தேசத்தின் பாதுகாப்பு கவசங்கள் மௌனிக்கப்பட்ட சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, தமிழர் தேசத்தின் நிலங்களை அபகரிக்கும் சிங்களப் பேரினவாதத்தின் நடவடிக்கைகள் நிறுத்தப் படவேண்டும். சுமார் 19000 சதுரகிலோ

மீற்றரை கொண்ட தமிழீழத்தின் நிலப்பரப்பில் சுமார் 7000 சதரகிலோமீற்றர் நிலப்பரப்பு கடந்த மூன்றுவருடத்துக்குள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. சிங்கள குடியேற்றம் தீவிரமாக்கப்பட்டு வருகின்ற அதேவேளை, தமிழ் மக்கள் அவர்களது பூர்வீக நிலப்பரப்புகளிலிருந்து விரட்டியடிக்கப்படுவதுடன், அதிஉயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில், தமிழ்மக்களது மீள்குடியேற்றம் தடுக்கப்பட்டுள்ளது அல்லது தாமதிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் தமிழர்களின் அடையாளங்களில் முக்கியத்துவமான பண்பாட்டு சின்னங்கள் அழிக்கப்படுவதுடன், எமது மக்களினால் தமது இதயக்கோவில்களில் வைத்து உன்னதமாக போற்றி பூசிக்கப்படும் மாவீரர் துயிலம் இல்லங்கள், அத்திபாரங்களே

இனம்காண முடியாதவாறு அழிக்கப்பட்டுள்ளன. தமிழர் தேசத்தை முற்றுமுழுதாக சிங்கள மயப்படுத்தும் நோக்கோடு, பௌத்தமக்களே இல்லாத இடங்களில் புத்தபெருமானின் சிலைகளும், பௌத்த விகாரைகளும் துரிதகதியில் அமைக்கப்படடு வருகின்றன. இன அழிப்பில் முக்கிய பரிமாணத்தைக் கொண்ட இத்தகைய நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்துவதற்கான செயற்பாடுகளில் சர்வதேச சமூகம் விரைந்து செயற்பட வேண்டும்.

4. சிறீலங்காவின் தடுப்பு முகாம்கள், சித்திரவதைக் கூடங்கள் மற்றும் சிறைச்சாலைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் போர்க்கைதிகளும் எந்தவித நிபந்தனையுமின்றி விரைவாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

5. தமிழ்மக்கள் தமது தாயகத்தில் இனஅழிப்பினை எதிர்கொண்டு வருகின்ற சூழலை கருத்தில் கொண்டு, அரசியல் தஞ்சம் கோரும் தமிழ்மக்களை சர்வதேசம் திருப்பி அனுப்பக் கூடாது. திருப்புமுனையான காலகட்டத்திலுள்ள எமது சுதந்திரப் போராட்டத்தில், மேற்குறித்த ஐந்து விடயங்களையும் முன்வைத்து போராட்ட சக்கரத்தை முன்னகர்த்துவது காலத்தின் தேவையாக மாற்றமடைந்துள்ளது. மக்கள் மயப்பட்ட போராட்டமே, அதன் இலக்கை விரைவாக அடைய துணைபுரியும்.

ஆகவே, அதனை கருத்தில கொண்டு, சத்தியத்தை வென்றெடுப்பதற்கான உண்ணாநிலை போராட்டத்துக்கு ஆதரவு நல்குங்கள் என பாசத்திற்குரிய தமிழ்மக்களை அன்புடனும், உரிமையுடனும் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.

கோபி சிவந்தன்

தமிழரின் தாகம், தமிழீழத் தாயகம்.[/size]

[size=4]

y-sivanthan.jpg[/size]

[size=4]http://www.eeladhesa...chten&Itemid=50[/size]

  • கருத்துக்கள உறவுகள்

ஒலிமப்பிக் போட்டியும் உண்ண்ணாநிலைப் போராட்ட்டமும்

ஒலிம்பிக் போட்டியும் உண்ணாநிலைப் போராட்டமும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.