Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜே.ஆரில் தொடங்கி மகிந்த சிந்தனை வரை மூன்று தசாப்தங்களாகத் தொடரும் இனப்படுகொலை.

Featured Replies

அவுஸ்திரேலியாவிற்கு படகு மூலம் சென்று அகதி அந்தஸ்து கோருபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது. உயிர் ஆபத்துமிக்க கடல் பயணங்களை மேற்கொண்டு அவுஸ்திரேலியா செல்லும் தமிழ் மக்களின் எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளில் மிக அதிகளவில் அதிகரித்துள்ளது. சிறீலங்காவின் இன அழிப்பில் இருந்து உயிர் தப்பிய தமிழர்களே இவ்வாறு ஆபத்துமிக்க பயணங்களை மேற்கொண்டு செல்கின்றார்கள் என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.

ஆனால், இந்த மக்களையும் நாட்டுக்குள் இழுந்துவந்து அழித்துவிடும் சிந்தனையில் இருக்கின்றது சிறீலங்கா. அவுஸ்திரேலியாவிற்கு படகு மூலம் சென்று அகதி அந்தஸ்து கோருபவர்களை கடலில் வைத்துத் திருப்பி அனுப்ப வேண்டும் என அவுஸ்திரேலியாவுக்கான சிறீலங்கா உயர் ஸ்தானிகர் திசேர சமரசிங்க கூறியுள்ளார்.

ஒரு காலத்தில் சிறீலங்காவின் கடற்படைத் தளபதிகளில் ஒருவராக இருந்து பல நூற்றுக் கணக்கான தமிழ் மக்களின் உயிரிழப்புக்குக் காரணமாக இருந்தவர், தற்போது ஆபத்து மிக்க கடற் பயணங்களை மேற்கொண்டு உயிர்தப்பிவரும் தமிழ் மக்களையும் எப்படியாவது அழித்துவிட வழிதேடுகின்றார். ஆனால், சிறீலங்காவின் இந்தக் கருத்தை அவுஸ்திரேலியா உடனடியாகவே நிராகரித்தது தமிழர்களுக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

புகலிடக் கோரிக்கையாளர் படகுகள் திருப்பி அனுப்பி வைக்கப்பட மாட்டாது என அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் பொவன் தெரிவித்துள்ளார். சர்வதேச கடற்பரப்பில் அல்லது அவுஸ்திரேலிய கடற்பரப்பில் புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்பும்போது சர்வதேச சட்டங்களை பின்பற்ற வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதாகக் கூறியே அவர் சிறீலங்காவின் இந்தக் கோரிக்கையை நிராகரித்துள்ளார்.

mahindha%2001.jpg

29 ஆண்டுகளுக்கு முன் 1983 ஆண்டு யூலையில் அப்போதைய சிறீலங்கா ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ‘போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்’ எனக்கூறி தமிழின அழிப்பை வெற்றிகரமாகத் தொடங்கிவைத்தார். இன்று மகிந்த சிந்தனையிலும் அது வடிவங்கள் மாறி, உருவங்கள்மாறித் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது. 2009ம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்காலில் பாரிய இன அழிப்புடன் போர் நிறைவுக்கு வந்துவிட்டதாக சிறீலங்கா அறிவித்தாலும், இன்னும் தமிழர்களுக்கு எதிரான அதன் அழிப்பு நடவடிக்கைகளும், சிந்தனைகளும் நின்றுவிடவில்லை.

இலட்சக்கணக்கான தமிழ் மக்களை படுகொலை செய்து, இலட்சக்கணக்கானவர்களை படுகாயங்களுக்கு உள்ளாக்கி, பல இலட்சம் மக்களை உள்நாட்டினுள்ளும், வெளிநாடுகளுக்கும் இடம்பெயர வைத்து மூன்று தசாப்தங்களாக இன்னும் தொடர்கின்றது அதன் இன அழிப்பு கொடூரம்.

தமிழர் தாயகம் முழுமையாக சிறீலங்கா இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் இருக்கும் நிலையில், நடைபெறும் அழிப்புகளும் படுகொலைகளும் வெளியுலகிற்கு தெரியவராத போதிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளிவரும் செய்திகள் தொடரும் இனப்படுகொலையையே உணர்த்தி நிற்கின்றன.

பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையைப் போர்த்துக்கொண்டு, சர்வதேச ஆதரவுடன் சிறீலங்கா முன்னெடுத்த இராணுவ நடவடிக்கை, ஒரு இன அழிப்பு என்பதை இப்போது சர்வதேசம் நம்பத்தலைப்பட்டுள்ளது. மறைக்கமுடியாத பல ஆதாரங்கள் வெளிவந்து இன்று சிறீலங்கா சர்வதேச விசாரணைகளை எதிர்கொள்ள வேண்டிய ஒரு இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த இக்கட்டில் இருந்து சிறீலங்காவைக் காப்பாற்றுவதற்கு அதன் ஆதரவு சக்திகள் முண்டுகொடுத்தாலும், உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் தங்கள் காத்திரமான பொறுப்பை உணர்ந்து செயற்பட்டால், சிறீலங்காவிற்கான ஆதரவுக் கரங்களை செயலிழக்கச்செய்ய முடியும். அதற்கான ஜனநாயக வழியலான போராட்டங்களை புலம்பெயர்ந்த மக்கள் ஓய்வின்றித் தொடரவேண்டும்.

அதனைச் செய்வதன் ஊடாகவே இன அழிப்பை தொடர்ந்து செய்துகொண்டிருக்கும் சிறீலங்காவை தனிமைப்படுத்தி, கடந்த 29 ஆண்டுகளாக இழந்துகொண்டிருக்கும் உயிர்களுக்கான நீதியைத் தேடமுடியும் என்பதுடன் தொடரும் இனப்படுகொலையையும் தடுத்து நிறுத்த முடியும். இனவழிப்பு நடவடிக்கைக்கு எதிராகவும் தமிழீழத் தாயகத்தில் அதிதீவிரமாக நடைமுறைப்படுத்தப்படும் சிங்கள நில ஆக்கிரமிப்பை தடுத்த நிறுத்தக் கோரியும் கறுப்பு யூலை 22 தொடக்கம் ஒலிம்பிக் இறுதி நாள் ஓகஸ்ட் 12 வரையும் தொடர் உண்ணாநிலைப் போராட்டமும் கவனயீர்ப்பு நிகழ்வும் பிரித்தானியாவில் ஒலிம்பிக் நடைபெறவுள்ள இடத்திற்கு அருகில் நடைபெறவுள்ளது. இனப்படுகொலையை அனைத்துலக மட்டத்தில் எடுத்துச் செல்லப்படக்கூடிய இந்த வாய்ப்பை தமிழ் மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறான காத்திரமான சர்வதேச அரசுகளினது மட்டுமல்ல, மக்களினதும் பார்வைகளை சிங்கள இன அழிப்பாளர்களுக்கு எதிராக திருப்புகின்ற பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டியது காலத்தின் தேவையாகவும் இருக்கின்றது.

ஆசிரியர் தலையங்கம்

நன்றி : ஈழமுரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.