Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பின் கொள்கையும் அது போடும் தகிடுதத்தமும் - தாயகத்தில் இருந்து இளங்கீரன்

Featured Replies

கிழக்கு மாகாணசபைத் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கின்றது. இந்நிலையில் தமிழர் தரப்பு வழக்கம் போல் இந்த தேர்தலையும் சாதாரணமாக எடுத்துக் கொண்டாலும், சர்வதேசம் மிக உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருப்பதை நாங்கள் உணராமலிருக்க முடியாது. எனவே தேர்தலில் தமிழ் தலைமைகள் எடுக்கும் முடிவுகளும், நடந்து கொள்ளும் முறைகளுமே 60 வருட கால இனவிடுதலைப் போராட்டத்தின் அடுத்த பாகத்தை தீர்மானிக்கப்போகின்றது எனும் வகையில் உறங்கு நிலையிலுள்ள தமிழர்களை தட்டியெழுப்புவது வரலாற்றுக் கடமை என குறிப்பிடுவது மிகையாகாது.

வடகிழக்கு தமிழர்களின் 60 வருடகால விடுதலைப் போராட்டம் குறித்தும், அந்த போராட்டத்தில் தமிழர்கள் செய்துள்ள அளப்பரிய தியாகங்கள், அர்ப்பணிப்புக்கள், உயிர்கொடைகள் குறித்தும் யாருக்கும் சொல்லித்தெரிய வேண்டிய அவசியம் கிடையாது. அந்த வகையில் அவற்றை மீளவும் மீளவும் பேசி நீர்துப்போகச் செய்வதில் எமக்கு உடன்பாடில்லை. ஆனால் அவற்றை உள்ளார்ந்தமாக ஒவ்வொரு தமிழனும் நினைத்துக் கொள்வதே எமது இனவிடுதலை தேடிய பயணத்தை வெற்றிகரமான பாதையில் கொண்டு செல்லும் என்பதில் யாருக்கும் சந்தேகமிருக்க முடியாது.

அதாவது கிழக்கு மாகாணசபை தேர்தலில் தமிழர் தரப்பு வெற்றிபெறுவது, தோல்வியுறுவது போன்ற விடயங்கள் ஒருபுறமிருக்க, இந்த தேர்தலில் தமிழர் தரப்பு முண்டியடித்துக் கொண்டு போட்டியிடுவதன் மூலம் சர்வதேசத்திற்கு என்ன செய்தி எடுத்துச்செல்லப்படுகின்றது என்பதே முக்கியமானதாகும். இந்த இடத்தில் தமிழர்கள் உறங்கியிருப்பதும், நமக்கென்ன என்றிருப்பதும் எமக்காக வாழ்ந்தவர்களுக்கும், எமக்காக உயிர்துறந்து போனவர்களுக்கும், ஒவ்வொரு தமிழனும் மனம் ஒத்து செய்கின்ற மிகப்பெரிய துரோகம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

தாங்கள், வாக்களித்தவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று மக்களும், மக்கள் எமக்கு வாக்களித்துள்ளார்கள் எங்கள் தீர்மானமே இறுதியானதென்று தமிழ்த் தலைமைகளும் நினைத்துவிடக் கூடாது. இங்கே வடகிழக்கு தமிழர்களால் 2009ம் ஆண்டு ஆயுதப் போராட்டத்தின் மௌனிப்பின் பின்னர் விடுதலைப் போராட்டத்தின் நீட்சியாக தெரிவு செய்யப்பட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு என்ன செய்து கொண்டிருக்கின்றது என பார்த்தால், ஆசனங்களுக்காக சண்டையிட்டுக் கொண்டிருக்கின்து. கூட்டமைப்பிலுள்ள கட்சிகள் ஆசனங்களுக்காக பேரம்பேசிக் கொண்டிருக்கும் நிலை வெட்கத்திற்குரிய தென்றாலும் கூறியாக வேண்டியிருக்கின்றது.

அதாவது கூட்டமைப்பின் அடிப்படைக் கொள்கைளில் தளர்வு அல்லது சூழ்நிலைக் கேற்ற மாற்றம் ஏற்பட்டிருப்பதை நாம் வெளிப்படையாகவே பார்க்க முடிகின்றது. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் மிகக் கொடுமையான யுத்தம் நடந்த கிளிநொச்சி மண்ணில், எங்கள் உறவுகள் இரத்தம் சிந்திய மண்ணில் நின்று கொண்டு சொன்னார், 13வது திருத்தத்தை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதில் ஒன்றுமேயில்லை. மொத்தத்தில் அதுவொரு வெற்றுக் கூடு என்று.

tna%20s.jpg

இன்று அதே சம்மந்தர், அவர் தலைமைதாங்கும் கூட்டமைப்பு 13வது திருத்தத்தின் அடிப்படையிலமைந்த மாகாணசபை முறைமையின் கீழான கிழக்கு மாகாணசபை தேர்தலில் களமிறங்குகிறார். ஆசனங்களுக்காக சண்டையிடுகின்றார். இங்கே உண்மை எது என்பதையும், எங்கிருக்கின்றது என்பதையும் தமிழர் ஆற அமர உட்கார்ந்திருந்து சிந்திப்பது நல்லது. 13வது திருத்தத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, அதில் ஒன்றும் கிடையாது. இனப்பிரச்சினை தீர்வின் தொடக்கப்புள்ளியாக கொள்ள முடியாது. 13, 13 பிளஸ் என்பதெல்லாம் கூறிக்கொண்டு அரசாங்கம் எம்மை ஏமாற்றுகின்றது. என்றெல்லாம் உணர்ச்சி வசமாக பேசிய கூட்டமைப்பு மறுபுறத்தில் 13வது திருத்தத்தை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம் என்ற சமிக்ஞையினை சர்வதேசத்திற்குக் காட்டியிருக்கின்றது.

இதுவே மறுப்பிற்கிடமில்லாத உண்மை. மற்றபடி மாகாணசபையில் ஒன்றுமில்லை என காண்பிக்கப் போகின்றோம், வடகிழக்கை இணைக்கப்போகின்றோம். ஆளுநரை அடக்கி வைக்கப்போகின்றோம் என்பதெல்லாம் மக்களை மடையர்களாக கருதி கூறும் கதைகள் என்பதை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும். வெறுமனே மாகாணசபையில் ஒன்றுமில்லை என சர்வதேசத்திற்குக் காண்பிக்கப் போகின்றோம் என்றால், எதற்காக கூட்டமைப்பிற்குள் இத்தனை ஆசன சண்டை? அதுபோக ஆளுநரிடமே அதிகாரங்கள் உள்ள, முதலமைச்சருக்கு எதுவும் கிடையாது என்பது சர்வதேசத்திற்குத் தெரியாதா? இனிமேல்தான் நீங்கள் கற்பிக்கப் போகின்றீர்களா? நிச்சயமாக அனைத்துமே பொய்.

இப்போது பிரதேச சபைகள் உள்ள அதே பிடுங்குப்பாடு நிலையில்தான் மாகாணசபையும் இருக்கப்போகின்றது. இப்போது சில பிரதேச சபைகளில் செயலாளர்களுக்கு தலைவர்கள் பயப்படுவதைப் போல ஆளுநருக்கு கீழ்பட்டு அவரின் எடுபிடிகளாகத்தால் மாகாணசபையில் முதலமைச்சர்கள் இருக்கப்போகிறார்கள். எது எப்படியிருந்தால் என்ன பதவியும் வாகனமும் இருந்தால் போதும் என்பதுதானே இவர்களின் ஏக சித்தாந்தம். வடகிழக்கை இணைக்கப் போகின்றார்களாம், வடகிழக்கு இணைப்பு குறித்து நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பையே மதிக்காத சிங்கள அரசு உங்கள் தீர்மானத்தை மட்டும் மதிக்கப் போகின்றதா? எல்லாமும் பொய், வெளிப்படையாக தாயகம், சுயநிர்ணம், என்று பேசிக் கொண்டிருக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பு அடிப்படையில் சிறீலங்கா அரசின் ஒற்றையாட்சி சிந்தனைக்குள் தமிழர்களை இழுத்துச் செல்வதையே நாம் பார்கின்றோம்.

விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் 13வது திருத்தம் பிழை எனச் சொன்ன கூட்டமைப்பு, விடுதலைப் புலிகளின் மௌனிப்பிற்குப்பின்னர் தனது ஏக சித்தாந்தத்தை து£க்கிக் கொண்டு தமிழர்களின் முதுகில் குத்தி பிழைப்பு நடத்த ஆரம்பித்திருக்கின்றது என்பதை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். குறிப்பாக புலம்பெயர் தமிழர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். வெறும் உணர்ச்சிவசப்பட்ட மனிதர்களா இருந்துவிட்டுப் போகமுடியாது.

புலம்பெயர் தமிழர்களே நீங்கள் உதிரம் உறையும் தேசத்தில் நின்று கொடுக்கும் ஒரு ரூபாய் பணத்தில் தாயகத்தில் 10 குடும்பங்கள் உணவருந்த முடியும். நீங்கள் கூட்டமைப்பினருக்கு கொடுக்கும் ஒரு ரூபாய் பணத்திற்கும் கணக்குக் கேளுங்கள். ஏனெனில் கொள்கையில்லாத மனிதர்கள் அந்தப் பணத்தை தின்று ஏப்பம் விடுகின்ற நிலையுள்ளது. கொள்கையுள்ள கட்சிகளுக்கு, கொள்கையுள்ள மனிதர்களுக்குப் பின்னால் நில்லுங்கள்.

நன்றி : ஈழமுரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.