Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களின் உரிமைப் போராட்டத்தில் இந்தியாவின் தலையீடு - தாயகத்தில் இருந்து எழுவான்

Featured Replies

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு அழிக்கப்பட்டுவிட்டதாக சிறீலங்கா - இந்திய அரசுகள் வெளிப்படையாக அறிக்கைகளை வெளியிட்டுவரும் நிலையில், ஏன் இன்னும், இந்நாடுகளின் அரசுகள் அந்த அமைப்பு தொடர்ந்து தடைசெய்யப்பட்ட அமைப்பாக காட்ட முற்படுகிறது?

இந்தியாவின் இறைமைக்கு விடுதலைப் புலிகள் அமைப்பினால் அச்சுறுத்தல் ஏற்படலாம்.

அதனால், மேலும் இரு ஆண்டுகளுக்கு தடை நீடிப்பதாக கடந்தவாரம் இந்திய அரசு அறிவித்துள்ளது. புலிகள் அமைப்பு இந்தியாவின் இறையாண்மைக்கு என்றுமே எதிராக செயற்பட்டதாக வரலாறு கிடையாது. இதற்குள் ராஜுவ் காந்தியின் கொலையை முன்னுதாரணப்படுத்தி காரணங்களை முன்வைக்கலாம்.

ஆனால், ராஜுவ் காந்தி கொலையில் விடுதலைப் புலிகள் மாத்திரம் சம்பந்தப்படவில்லை என்பதை பல ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டின. இச்சம்பவத்தில் வல்லரசுகள் சம்பந்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், விடுதலைப் புலிகளை மாத்திரம் குற்றஞ்சுமத்துவதில் அர்த்தமில்லை.

இந்தியாவுக்கு சீனா, பாகிஸ்தான் போன்ற அண்டைய நாடுகள் உட்பட வல்லரசு நாடுகள் அன்றும் இன்றும் பகை கொண்டுள்ளன. இந்தியாவின் வடக்கே பாகிஸ்தான், வடகிழக்கே சீனா பெரும் விரோதமான செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டு வருகையில், அழிக்கப்பட்டதாக கூறப்படும் விடுதலைப் புலிகள் இயங்கத்திற்கு அஞ்சி ஏன் மீண்டும் மீண்டும் தடையை புதுப்பிக்க வேண்டும்.

இந்தியாவின் தடை சிறீலங்கா அரசாங்கத்தினால் ஒடுக்கப்படும் சிறுபான்மை இனத்திற்கு எவ்வாறான தாக்கத்தை அனைத்துலக ரீதியாக ஏற்படுத்தும் என்பதை நோக்கினால், அதன் பெறுமதி பூச்சியமாகவே இருக்கும். காரணம், ஜெனீவாவில் இந்தியா சிறீலங்கா அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்தது. அதனால், இந்தியாவின் செயற்பாட்டிற்குப் பின்னால் மேற்குலகம் இருக்கும் என்று எதிர்பார்ப்பது சிறந்த விடயமல்ல.

விடுதலைப் புலிகள் அமைப்பு உரிமைகள் பறிக்கப்பட்ட அடித்து ஒடுக்கப்பட்ட ஒரு இனத்திற்காக உருவாக்கப்பட்ட அமைப்பே தவிர, சிறீலங்கா அரசாங்கம் தெரிவிப்பது போன்று அது பயங்கரவாத அமைப்பல்ல என்பதை அமெரிக்காவின் வெளிவிவகார இராஜங்கச் செயலாளர் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். அதுமட்டுமல்ல, விடுதலைப் புலிகளின் காலத்தில் எவ்வாறு விடுதலை நோக்கிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதோ அதே முழுவீச்சுடன், இன்று தமிழர்கள் புலர்பெயர்ந்து வாழ்கின்ற அனைத்து நாடுகளிலும் சிறீலங்கா அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

அமெரிக்கா, பிரித்தானியா உட்பட மேற்குலக நாடுகளில் விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்ட அமைப்பாகத்தான் உள்ளது. ஆனால், அங்கு தமிழர்களினால் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லையா, அல்லது தமிழீழத்தின் தேசிய கொடிகள் பறக்க விடப்படவில்லையா? விடுதலைப் புலிகள் அமைப்பு எந்த ஒரு நாட்டிற்கும் எதிரானதல்ல என்பதையும், அது ஒரு இனத்தின் தேசிய விடுதலைக்காக உருவாக்கப்பட்ட அமைப்பு என்பதையும், ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் சிறீலங்கா படைகளினால் படுகொலை செய்யப்பட்ட பின்னர் புரிந்து கொண்டுள்ளமைதான் இன்று வேதனை தரும் விடயமாக உள்ளது.

மேற்குலக நாடுகளினால் விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டிருந்தாலும், அந்த அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட அனைத்துச் செயற்பாடுகளும் அந்தந்த நாடும் இன்று முன்னெடுப்பதற்கு எந்த ஒரு நாடுகள் எதிர்ப்புக்களையோ அல்லது தடைகளையோ ஏற்படுத்தவில்லை. காரணம், அந்த நாடுகளுக்கு உள்நோக்கம் எதுவுமில்லை எனக் கூறுவதற்கு அப்பால், தனது பொருளாதார நடவடிக்கைகளுக்கு சிறீலங்காவில் தங்கியிருக்கவில்லை.

அதுமாத்திரமல்ல, காலஞ்சென்ற சிறீலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரான லக்ஷமன் கதிர்காமரினால் மேற்கொள்ளப்பட்ட கடுமையான பொய் பரப்புரையின் விளைவாகவே மேற்குலகம் விடுதலைப் புலிகளின் மீது பார்வையைத் திருப்பியதே தவிர, அந்த நாடுகளாக விரும்பி எந்தொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என்றே கூறலாம்.

ஆனால், இந்தியா தனது பொருளாதார நடவடிக்கையில் கணிசமானளவு சிறீலங்காவில் தங்கியிருப்பதுடன், அண்டைய நாடுகள் சிறீலங்காவில் குடிகொண்டுவிடும் என்ற உள்நோக்கம் கருதியும், தனது சுயநலத்திற்காக ஒரு இனத்தின் விடுதலையை மழுங்கடித்து நசுக்கிவிடப் பார்க்கிறது. விடுதலைப் புலிகளை அழிக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்த இந்தியா தனது நோக்கத்தை நிறைவேற்றினாலும், அதனால் பாதிக்கப்பட்ட தமிழ் இனத்திற்கு தொடர்ந்து பாதிப்புக்களையே ஏற்படுத்திவருகிறது. சிறீலங்கா அரசாங்கத்திற்கு படைத்தளங்கள் மற்றும் தொழிநுட்ப ரீதியாக எவ்வித உதவிகளையும் செய்யவில்லை என எதிர்க்கட்சிகளை சமாளிக்கும் அதேசமயத்தில், மறுபுறத்தில் சிறீலங்கா படைகளுக்கு பயிற்சிகளையும் ஆலோசனைகளும் தொடர்ந்து அளித்துவருகின்றது.

பாதிப்புக்குள்ளாகியிருக்கும் வடக்கு, கிழக்கை புனரமைப்புச் செய்வதாக தெரிவித்து கூடுதலான நிதிகளை சிறீலங்கா அரசாங்கத்திற்கு வாரி வாரி வழங்கி சிங்கள தேசத்தை அபிவிருத்தியடையச் செய்யும் இந்தியா, உறுதியளித்த படி 50 ஆயிரம் வீட்டுத் திட்டத்தைக் கூட இதுவரையில் செய்து முடிக்க இயலாத நிலையில் இப்போது அதனை 44 ஆயிரமாக குறைத்துள்ளது.

இதற்குள், இந்திய - சிறீலங்கா ஒப்பந்தத்தில் கூறப்பட்ட விடயங்களைக் கூட சிறீலங்கா அரசு நடைமுறைப்படுத்த மறுத்துவரும் நிலையில், மாதாந்தம் இந்தியப் பிரதிநிதிகள் கொழும்புக்கு விஜயம் மேற்கொண்டு சிறீலங்கா அரசின் விருந்துபசாரத்தில் கலந்து கொண்டு நாடு திருப்புகின்றனர். இந்தியப் பிரதிநிதிகள் சிறீலங்கா வந்ததில் இதுவரையில் எவ்விதமான நன்மையும் தமிழர்களுக்கு கிடைக்கவில்லை என்றே கூறவேண்டும். கறிக்கு வாசனைத் திரவியங்களைப் போடுவது போன்று, தமிழ் தேசிய கூட்டமைப்புடனும் ஏதோ ஒன்றை பேசி

விட்டுச் செல்கின்றனர்.

தீர்வுப்பொதியை சந்திரிகா மூடி ஆடி மறைத்ததுபோன்று, கூட்டமைப்பும் இதனை மிகவும் இரகசியமாக பேணிப் பாதுகாத்துவருகிறது. ஆனால், அங்கு கூர்ந்து ஆராய்ந்தால், இந்தியப் பிரதிநிதிகள் கூட்டமைப்புக்கு தெரிவித்த கருத்துக்கள் தமிழர்களின் விடிவுக்கு எதிரான கருத்தாகவே அமைத்திருக்கும்.

இந்திய - சிறீலங்கா ஒப்பந்தத்தில் கூறப்பட்ட மாகாண சபை விடயத்தை சிறீலங்கா அரசு, தனக்குச் சாதகமாகவுள்ள மாகாண சபைகளில் தேர்தல்களை நடாத்துவதில் முன்னின்று செயற்படுத்திவருகிறது. ஆனால், ஒப்பந்தத்தில் இணைந்த வடக்கு - கிழக்கு மாகாணமாகவே கூறப்பட்டது. இன்று அது தனித்தனி மாகாணங்களாக பிரிக்கப்பட்டு, ஆயுதக்குழுக்களின் கைகளில் ஒப்படைக்க சிறீலங்கா அரசு எத்தனிப்பது போன்று இந்திய அரசும் அதற்கு பச்சைக் கொடி காட்டுகிறது.

இவ்வாறெல்லாம், சுத்துமாத்தான வேலைகளை செய்து சர்வதேச சமூகத்தின் பார்வையை குறைக்க இந்தியாவும், சிறீலங்காவும் மிகவும் கடுமையான பிரயத்தனங்களை செய்கின்றனர். இதனால், ஐக்கிய நாடுகள் சபையினால் முன்னெடுக்கப்படும் போர்க்குற்றம் மற்றும் மனித குலத்திற்கெதிரான நடவடிக்கைகளை மூடிமறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

போர்க்குற்றம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுமாயின், அந்த விசாரணைக் கூண்டில் இந்தியா உட்பட சில நாடுகள் ஏறவேண்டி வரலாம் என்பதனால், அதனை எவ்வாறு மூடிமறைக்கலாம் என்பதிலேயே, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் உட்பட சிறீலங்கா அரசுக்கு உதவிகளை மேற்கொண்ட நாடுகள் முயன்று வருகின்றன.

எது எவ்வாறாகயிருந்தாலும், உண்மைகளை நிரந்தரமாக அழிக்க முடியாது. நீதியின் பார்வையிலிருந்து விலக முடியாது. தற்போது, பல ஆண்டுகளுக்கு முன்னர் போர்க்குற்றங்கள் புரிந்த நாடுகளின் தலைவர்களுக்கு எதிராக தீர்ப்புக்கள் வழங்கப்பட்டுவரும் நிலையில், இலங்கையில் தமிழர்களை கொன்றொழித்த சிறீலங்கா அரச தலைவர்கள் நீதியின் பிடியிருந்து தப்பித்துக்கொள்ள முடியாது.

சிறீலங்கா அரசு மற்றும் அதன் படைகளுக்கு எதிராக விடுதலைப் புலிகளினால் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் இன்று உலகமயப்படுத்தப்பட்டிருப்பதனால் அதன் தாக்கம் நிச்சயமாக சிறீலங்கா அரசாங்கத்தைப் பாதிக்கும் என்று அச்சம் கொண்டே, சிறீலங்கா அரசும், அதனுடன் இணைந்து நாடுகளும் விடுதலைப் புலிகளின் அமைப்பை மீண்டும் தடை செய்யப்பட்ட அமைப்பாக காட்ட முற்படுகின்றனர்.

நன்றி : ஈழமுரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.