Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முஸ்லிம்கள் மீள்குடியேற்றப்படாமையை மறைக்கவேமன்னாரில் இன மோதலை அரசு ஊக்குவிக்கிறது:முஜிபுர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வட பகுதியில் முஸ்லிம்கள் பரம்பரையாக வாழ்ந்த காணிகள் அரசாங்கத்தால் படை முகாம்களை அமைப்பதற்காக அபகரிக்கப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் அனைவரும் முழுமையாக மீள்குடியேற்றப்படவில்லையென்று மேல் மாகாண சபையின் ஐ.தே.க. உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

இதனை மறைப்பதற்காக மன்னாரில் தமிழ், முஸ்லிம் மக்களிடையே இன மோதல்களை அரசாங்கம் ஊக்குவிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். கொழும்பில் ௭திர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இதனைத் தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 1990 ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளால் 34,000 முஸ்லிம் குடும்பங்கள் வடபகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இவ்வாறு வெளியேற்றப்பட்டவர்கள் புத்தளம், குருணாகல், கொழும்பு உட்பட பல பிரதேசங்களில் இருபது வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வருகின்றனர். புத்தளத்தில் இன்னமும் முஸ்லிம்கள் அகதி முகாம்களில் வாழ்கின்றனர். இன்று யுத்தம் முடிந்து மூன்று வருடங்கள் கடந்து விட்டது.

ஆனால் இதுவரையில் 6000 குடும்பங்களே வடபகுதியில் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். இதனை மீள்குடியேற்றம் ௭ன அர்த்தப்படுத்த முடியாது. இவர்களுக்கு 15 அஸ்பஸ்டஸ் சீட்டுக்களும் 40 ஓலைகளும் மட்டுமே வழங்கப்பட்டது. அத்தோடு இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு ரூபா 25,000 உதவிப் பணமாக வழங்கப்படுகிறது. முஸ்லிம்களுக்கு அத்தொகை வழங்கப்படுவதில்லை. கேட்டால் இறுதிக் கட்ட யுத்தத்தில் இடம்பெயர்ந்தோருக்கே நஷ்ட ஈடு வழங்கப்படுவதாக அரச தரப்பு தெரிவிக்கிறது.

முஸ்லிம்களோ, தமிழர்களோ யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பாதிப்புக்குள்ளானோர் ஆகும். அவர்களை பிரிப்பதென்பதை ௭வ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்.

மீள்குடியேற்றம் ௭ன்ற பெயரில் குடியேறிய 600 குடும்பங்களும் அடிப்படை வசதிகளின்றி வாழ்கின்றனர். அங்கு பாடசாலைகள் உள்ளன. ஆனால் ஆசிரியர்கள் இல்லை. ௭னவே பாடசாலை பிள்ளைகளின் விளையாட்டு மைதானமாக மாறியுள்ளது. அதேபோன்று மன்னார் மாவட்டத்தில் உப்புக்குளம் முசலி போன்ற பல்வேறு பகுதிகளில் முஸ்லிம்கள் பரம்பரையாக வாழ்ந்த காணிகள் இராணுவ முகாம், கடற்படை முகாம் அமைப்பதற்காக அபகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கு ௭திராக மன்னார் மக்கள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்கின்றனர். ௭னவே அரசாங்கத்தின் நடவடிக்கைகளை திசை திருப்புவதற்காக மன்னாரில் முஸ்லிம் – தமிழ் மக்களுக்கிடையே மோதல்களை ஏற்படுத்தி இன முறுகலை உருவாக்க அரசாங்கம் முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது ௭ன்றும் உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=39762

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.