Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அண்ணாவின் அரசியல் அறிவிப்பு பதவி ஆசையாம் - செப்புவது ஜி.கே.வாசன் - நாராயணசாமி - அம்பிகா சோனி..!

Featured Replies

[size=3]

அண்ணாவின் அரசியல் அறிவிப்பு பதவி ஆசையாம் - செப்புவது ஜி.கே.வாசன் - நாராயணசாமி - அம்பிகா சோனி..! [/size]

[size=3]

அரசியலில் ஈடுபடப் போவதாக அண்ணா ஹசாரே அறிவித்திருப்பது அவரது பதவி ஆசையை வெளிப்படுத்தியுள்ளது என்றார் ஜி.கே.வாசன். அண்ணா ஹசாரேயும் அவரது குழுவும் அரசியல் கட்சி துவங்கும் ஆசை வந்து விட்டது என்று சென்ற ஆண்டிலேயே சொன்னேன், அப்போது அதை அவர்கள் மறுத்தனர்.தற்போது தில்லியின் ஜந்தர் மந்தர் போராட்டத்தில் தங்கள் மனதில் உள்ளதை அவர்கள் வெளிப்படுத்தி விட்டனர். என்றாலும், அண்ணா குழுவினர் அரசியல் கட்சி தொடங்கினால் அதை வரவேற்போம் என்று பிரதமர் அலுவலக விவகாரங்களுக்கான இணை அமைச்சரும் உலகிலேயே சிறந்த அணு உலை நிபுணருமான வே.நாராயணசாமி இன்று தெரிவித்தார். அண்ணா ஹசாரேவின் அரசியல் ஆசை ஒருவழியாக வெளியாகிவிட்டது என்று காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரான, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சருமான திருமதி அம்பிகா சோனியும் தெரிவித்துள்ளார். அண்ணா ஹசாரே போராட்டம் என்று அறிவித்த முதல் நாளே நாங்கள் அவருக்கு அரசியல் ஆசை வந்துவிட்டது என்று கூறினோம், அது ஒரு வழியாக வெளியாகிவிட்டது என்று செப்பியுள்ளார். [/size]

[size=3]

உலகின் சிறந்த அணு உலை நிபுணரும் மற்றும் இந்திய சர்வதேச உள் /வெளி விகாரங்களில் மிகச் சிறந்த பாண்டியத்ம் பெற்றவருமான புதுவை வே.நாராயண சாமி கூறுகையில், வலுவான லோக்பால் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் நோக்கம். மக்களைவையில் லோக்பால் சட்டத்தை நிறைவேற்ற பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவர் அன்னை சோனியா காந்தியும் முயற்சி எடுத்தனர். அதில் வெற்றியும் பெற்றனர்..?! ஆனால், மாநிலங்களவையில் அரசுக்குப் பெரும்பான்மை பலம் இல்ல. அதனால், எதிர்க்கட்சிகள் கோரியபடி மசோதாவில் ஐந்து திருத்தங்களை செய்து மாநிலங்களவையில் நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தோம். தற்போது அந்த மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனையில் இருக்கிறது.அதன் அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. [/size]

[size=3]

இந்த நிலையில், லோக்பால் சட்டத்தை உனடியாக இயற்ற வேண்டும் என்ற ஹசாரே குழுவின் நெருக்கடி கொடுப்பதை ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை, விளம்பரத்துக்காக, அண்ணா குழுவினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அரிவிந்த் ஹெஜ்ரிவால், கிரண் பேடி போன்றவர்கள் தாங்கள் தேர்தலில் நிற்க வேண்டும் என்ற ஆசையை ஹசாரே மூலமாக நிறைவேற்றிக் கொள்ள முயல்கின்றனர். அவர்கள் அரசியல் கட்சி தொடங்கினால் வரவேற்போம். கட்சி தொடங்கி தேர்தல் நின்று மக்களை சந்திக்கட்டும். வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்து ஊழலை ஒடுக்க நடவடிக்கை எடுக்கட்டும். அரசு மீதும் அமைச்சர்கள் மீதும் அவதூறு பரப்புவது, பா.ஜ.க., அலுவலகம், மத்திய அமைச்சர்கள் வீடுகள் முன்பு முற்றுகை போராட்டம் நடத்துவது ஏற்றுக் கொள்ள முடியாதது ஆகும் என்றார். [/size]

[size=3]

ஜி.கே.வாசன் இவ்வாறு கூறினார், அரசியலில் ஈடுபடப்போவதாக அண்ணா ஹசாரே அறிவித்திருப்பது அவரது பதவி ஆசையை வெளிப்படுத்துகிறது. காங்கிரஸ் கட்சி ஏற்கனவே கூறியதைப்போல,அண்ணா ஹசாரே குழுவினருக்கு அரசியல் ஆர்வமும், பதவி ஆசையும் இருக்கிறது என்பதை அவர்கள் நிரூபித்திருக்கிறார்கள் என்றார். [/size]

[size=3]

ஆக, எதிர்க் கட்சியான பாரதிய ஜனதா கட்சியும், நாட்டை ஆளுகின்ற கட்சியான காங்கிரஸ் கட்சியும் ஒருசேர அகமகிழ்ந்து, அண்ணா குழுவினர் அரியல் கட்சி ஆரம்பிப்பதை வரவேற்கிறார்கள். பார்த்தீர்களா..! நாங்கள் அப்பவே சொன்னோம், போன மாமாங்கத்தில் சொன்னோம் என்று கூறி ஒருவரை ஒருவர் ஆரத் தழுவிக் கொள்கின்றனர். கட்சி துவங்கி, தேர்தலில் நின்று, மக்களை சந்தித்து, வெற்றி பெற்று ஆட்சியை அமைத்து, கொண்டு வாருங்கள் எதை வேண்டுமானாலும் என்கிறார்கள். அது சானிப் பால் ஆகாட்டும், லோக்பால் ஆகட்டும் லோக் அயுக்தி என்ன..எதை வேண்டுமானாலும் கொண்டு வாருங்கள் என்கிறார்கள். [/size]

[size=3]

அதாவது அப்படியெல்லாம் எதையும் கொண்டு வர முடியாது என்கிறார்கள். ஊழலை ஒழிக்க முடியாது. ஊழலை துடைத்தெறிய சட்டங்கள் கொண்டு வர முடியாது என்கிறார்கள். அப்படியெனில், தேர்தலில் நின்று, வாக்குகள் வாங்கி, ஆட்சி அமைத்து அண்ணா ஹசாரே குழுவினரால் ஊழலை ஒழிக்க சட்டம் கொண்டு வர முடியாது என்பதைத் தான் என்னமாய் ஏக சந்தோசமாக ஒரே குரலில் கூவுகிறார்கள். நமக்கு வரும் சந்தேகம் என்னவென்றால், அண்ணா ஹசாரே குழுவினரால் கவரப்பட்ட தற்போதைய இளம் மாணவர்களும், இளைஞர்களும், ஐ.டி.செக்டாரில் வேலை பார்ப்பவர்களும் பேசாமல் கொள்ளாமல் 'பிராய்லர் கோழிகளைப்' போல் இருந்து கொள்ளுங்கள் என்கிறார்கள். அல்லது மாவோஸ்ட்களாக மாறிப் போங்கள் என்கிறார்களோ..? என்று தான். [/size]

[size=3]

இதன் நீதிபோதனை என்ன..? மாவோஸ்ட்களாக மாறினால் ஆயுதம் தூக்குவீர்கள்..! எனவே தீவிரவாதி பயங்கரவாதி என்போம்..! ஒன்று ஊழல் செய்யுங்கள், அல்லது ஊழல் செய்பவர்களை போற்றுங்கள்.அல்லது பலி ஆடுகளைப் போல மாறிக் கொள்ளுங்கள் என்று சொல்லுகிறார்களாம். [/size]

[size=3]

சங்கிலிக்கருப்பு [/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.