Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்த எனும் சாத்தானை விரட்டியடிக்க தமிழ் மக்கள் ஒன்றிணைய வேண்டும் - தாயகத்தில் இருந்து வீரமணி

Featured Replies

ஈழத் தமிழர்கள் அனைவரும் தனது பக்கம் என்பதைச் சர்வதேசத்திற்குக் காட்டுவதற்காக சிறீலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பெரும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்ற இந்த வேளையில் மகிந்தருக்கு எதிராக வெளிநாடுகளில் மட்டுமன்றி உள்நாட்டிலும் எதிர்ப்பு அலைகள் தோற்றம் பெற்றுள்ளன. தமிழர்கள் மட்டுமன்றி சிங்கள மக்கள் மத்தியிலேயே மகிந்தவுக்கு எதிரான செயற்பாடுகள் தலைதூக்கியுள்ளன. நாம் எல்லோரும் ஒரே நாட்டு மக்கள், நாம் ஒரே தேசத்தில் ஒற்றுமையாக வாழ்வோம் என்றெல்லாம் மகிந்த ராஜபக்ச கூறிவருகின்றார்.

ஆனால், ஒரே நாட்டுக்குள்ளேயே மகிந்த பெரும் சிக்கல்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளமை மகிந்தவின் துரதிஷ்டமாகவே நோக்கப்படுகிறது. தமிழர் தாயகத்திலுள்ள மகிந்த ராஜபக்சவின் உருவப் பொம்மைகள் எரிக்கப்படுகின்ற சம்பவங்கள் மகிந்தவுக்கு எதிரான செயற்பாடுகளின் வெளிப்படையாக அமைகின்றன.

யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து யுத்தம் இடம்பெற்ற வடக்கு கிழக்குப் பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்காக சர்வதேச நாடுகள் பல பில்லியன் கணக்கான ரூபாய்களை இலங்கைக்கு வாரியிறைத்துக்கொண்டிருக்கின்றன. ஆனால் அந்த நிதியில் வடக்கு கிழக்குப் பகுதிகளில் ஒருசில அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்ட மகிந்த அரசாங்கம், அந்த அபிவிருத்தித் திட்டங்களை தனது சொந்தப் பணத்தில் மேற்கொண்டதைப் போல காட்டிக்கொள்கிறது.

இதற்காக அந்த அபிவிருத்திகள் இடம்பெறுகின்ற பிரதேசங்களில் தனது பாரிய ‘கட் அவுட்’களை மகிந்த நிறுவி வருகின்றார். சர்வதேச நாடுகள் வழங்கிய நிதியுதவியைப் பயன்படுத்தி அபிவிருத்தி என்ற பெயரில் கம நெகும, திவி நெகும, புற நெகும என்ற வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்ற மகிந்த அரசாங்கம் அது அனைத்தும் தனது சொந்தச் செலவிலேயே செய்யப்படுகின்றது என்று மக்களிடையே மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றது. மேற்படி செயற்பாடுகள் நடைபெற்று வருகின்ற இடங்களில் மகிந்த அரசாங்கம் தனது ‘கட்அவுட்’களையும் நிறுவி வருகின்றது.

குறிப்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக உள்ள பசில் ராஜபக்ச மற்றும் வடமாகாண ஆளுநர் சந்திரசிறி, மற்றும் டக்களஸ் தேவானந்தா உள்ளிட்டோரின் நிழற்படங்கள் பொறிக்கப்பட்ட பெரிய ‘கட் அவுட்’கள் வன்னியிலும் யாழ் குடாநாடெங்கும் நிறுவப்படுகின்றன. குறித்த அபிவிருத்தித் திட்டங்கள் சிறீலங்கா அரசாங்கத்தின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டது என்றும் அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஆனால் அந்த ‘கட் அவுட்’கள் தற்போது வன்னி மற்றும் குடாநாட்டு மக்களால் துவம்சம் செய்யப்படுகின்றன. கொழுத்தப்படுகின்றன. கழிவு ஒயில் ஊற்றப்படுகின்றது. தங்களுக்கு அழிவை ஏற்படுத்தியவர்களின் படங்களை தமது ஊர்களில் காட்சிக்கு வைத்திருக்க மக்கள் விரும்பவில்லை. இதனாலேயே மக்கள் இந்தப் படங்கள் அடங்கிய ‘கட் அவுட்’களை அடித்து நொருக்குகின்றனர். ஈவிரக்கமற்ற யுத்தத்தை முன்னெடுத்த மகிந்த ராஜபக்ச இலட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தார். தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் விட்டுக்கொடுப்பினால் ஜனாதிபதியாக வந்த மகிந்த ராஜபக்ச பின்னர் ஒட்டுமொத்தமாக போராட்டத்தை அழித்தொழித்து இலட்சக்கணக்கான மக்களையும் கொன்று குவித்தார்.

தொடர்ந்தும் அவரின் இன அழிப்பு வெறி அடங்கவில்லை. தமிழர்களை அழித்தொழிப்பதிலேயே மகிந்த உள்ளிட்ட சிங்களத் தரப்பு ஈடுபடுகின்றது. அவரைப் போலவே அவரின் தம்பியாகிய பசில் ராஜபக்சவும். அரசியலில் பெரும் ஆட்டம் காட்டி வருகின்றார். மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்கி தமிழ் மக்களின் சொத்துக்களை அபகரிக்கும் முயற்சியிலும் அவர் ஈடுபட்டுள்ளார். வன்னி மக்களை பெரும் துன்பப்படுத்துவதில் சுகம் காண்பவர். வன்னியில் போரின் போது தமிழ் மக்களால் விட்டுச் செல்லப்பட்ட வாகனங்களை இரும்புகளாக வெட்டி விற்பதில் பசிலுக்கு நிகர் பசில் தான் என்று வன்னி மக்கள் கூறுகின்றனர்.

இவர்களுக்கு அப்பால் இராணுவத்தில் இருந்தபோது தமிழ் மக்களுக்கு பெரும் அழிவுகளை மேற்கொண்டவர் ஆளுநர் சந்திரசிறி. அவர் தான் இன்று வடமாகாண ஆளுநர். அவர் அன்று மட்டுமல்ல இன்றும் அழிவுகளைத் தான் செய்கின்றார். அன்று மனித அழிவைச் செய்த அவர் இன்று நில அழிவைச் செய்கிறார். அதாவது தமிழ் மக்களின் தாயக நிலத்தை சிங்களவர்களுக்குச் சொந்தமானதாக மாற்றுவதற்கு ஆளுநர் சந்திரசிறி துடியாய்த் துடிக்கிறார். பல நிலங்களை படை முகாம்கள் அமைப்பதற்கு ஆளுநர் வழங்கியிருக்கிறார். அடுத்தபடியாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.

இவர் தன்னின மக்களின் அழிவிலேயே ருசி கண்டவர். யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது தமிழர் தாயகப் பகுதியில் ஏராளமான தமிழ் இளைஞர்களைக் கொலை செய்த கொலை வெறியன். இன்று கூட தமிழினத்திற்கு எதிராகவே இந்த துரோகி செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில், உலக நாடுகளின் நிதியுதவியில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்திப் பணிகளின் போது அந்த இடங்களிலெல்லாம் இவர்களின் படங்கள் பொறிக்கப்பட்ட ‘கட்அவுட்’களை எவ்வாறு வைக்க முடியுமென்று வெளிப்படையாகவே பல தமிழ் மக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

இந்த நாசகாரிகளின் உருவப்படங்கள் அடங்கிய ‘கட் அவுட்’களை எரித்தழிக்கும் செயற்பாடுகளில் தற்போது தமிழ் மக்கள் ஈடுபட்டுள்ளனர். வன்னியிலுள்ள பல இடங்களிலும் நிறுவப்பட்டுள்ள மேற்படி ‘கட் அவுட்’கள் கடந்த பல வாரங்களில் உடைத்தெறியப்பட்டிருக்கின்றன. இதை உடைத்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இராணுவத்தினர் பல பொதுமக்களை அச்சுறுத்தியுள்ளனர். சில பொது மக்கள் தாக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று யாழ் குடாநாட்டிலும் பல கிராம மட்டங்களில் நிறுவப்பட்டுள்ள மேற்படி ‘கட் அவுட்’கள் அடியோடு சாய்த்து வீழ்த்தப்பட்டுள்ளன. சில கட் அவுட்கள் மீது கழிவு ஒயில் ஊற்றப்பட்டுள்ளது.

மக்கள் மத்தியில் மகிந்த அரசாங்கத்தின் மீதான பயம் விலகத் தொடங்கியுள்ளது என்பதையே இவ்வாறான சம்பவங்கள் வெளிக்காட்டுகின்றன. கொலை வெறி பிடித்த மகிந்தவிற்கும் அவரின் குடும்ப ஆட்சிக்கும் எதிராக தென்னிலங்கையிலும் பல போராட்டங்கள் இடம்பெறுகின்றன. அரசுடன் நெருக்கத்தைப் பேணி வந்த மக்கள் விடுதலை முன்னணி என்ற ஜே.வி.பி கட்சியும் இன்று அரசின் அடிவருடித்தனங்களுக்கு எதிராக குரலெழுப்பத் தொடங்கிவிட்டன. மேலும் பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் அரசாங்கத்திற்கு எதிராகச்செயற்படுகின்றது.

பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் தொழிற்சங்கப் பிரச்சினை, கல்விப் பொதுத்தராதர உயர்தர மாணவர்களின் பெறுபேற்று விவகாரம், சட்டத்தரணிகளின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் போன்று பல தரப்பினரும் மகிந்த அரசுக்கு எதிராக போர்க் கொடி தூக்கியுள்ளனர். இதிலிருந்து மீள்வதற்கு வழி தெரியாமல் மகிந்த தள்ளாடிக்கொண்டிருக்கின்றார். அவரின் அமைச்சர்கள் எங்கே எதைப் பேசுவதென்று தெரியாமல் பிதற்றிக்கொண்டிருக்கின்றனர். சிறீலங்காவிலுள்ள தமிழ் மக்கள் மகிந்த அரசுக்கு எதிராக தற்போது தொடங்கியுள்ள போராட்டம் மிக வேண்டப்பட்ட ஒரு போராட்டம். தமிழீழத் தேசியப் போராட்டம் அழித்து ஒழிக்கப்பட்டதுடன் தமிழீழத்தின் தேசிய சின்னங்களில் ஒன்றேனும் இருக்கக்கூடாது என்பதற்காக இனவெறி இராணுவம் மேற்படி சின்னங்களைத் தேடித் தேடி அழித்தது.

ஆனால் தற்போது மகிந்த நாட்டிய ‘கட் அவுட்’களை தேடியழிக்கும் செயற்பாட்டில் தாயகத்திலுள்ள தமிழ் மக்கள் ஈடுபட்டுள்ளனர். போர் முடிவடைந்த பின்னர் அபிவிருத்தி என்ற போர்வையில் உலகத்தை ஏமாற்றுவதற்காக மகிந்த போடுகின்ற நாடகமே ‘கட் அவுட்’ நிறுவுதல் என்பதை மக்கள் நன்றாகவே அறிந்துள்ளனர். இதன் வெளிப்பாடாகவே இந்தக் கட் அவுட்களை துவம்சம் செய்யும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

அரசுக்குள் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடி நிலையை தமிழர் தரப்பு மிக நேர்த்தியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். உலக அரங்கில் வாழ்கின்ற தமிழ் மக்களும் இந்த விடயங்களில் அதிக பங்கெடுக்க வேண்டும். எப்பாடு பட்டாவது மகிந்த பரம்பரையை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அதன் மூலம் தமிழ் மக்களுக்கு விமோசனம் கிடைக்குமா கிடைக்காதா என்பதெல்லாம் இரண்டாம் படசம். ஆனால் தமிழ் மக்களின் அழிவிற்கும் தமிழ்த் தேசியப் போராட்டம் ஆட்டம் காணுவதற்கும் காரணமாக இருந்த சாத்தானை விரட்டியடிப்பதற்கு அனைத்துத் தமிழ் மக்களும் ஒன்றிணைய வேண்டும்.

நன்றி : ஈழமுரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.