Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீர வணக்கம் 14 .08 .1983 _ 14.08.2012 தமிழ் ஈழ விடுதலை இராணுவம்

Featured Replies

வீர வணக்கம் 14 .08 .1983 _ 14.08.2012

post-9189-0-67749900-1344863462.jpg

குலசேகரம் தேவசெகரம் (ஒபராய் தேவன்)

தமிழ் ஈழ விடுதலை இராணுவத்தின் தலைவர் (Tamil Eelam Liberation Army(TELA ) குலசேகரம் தேவசெகரம் (ஒபராய் தேவன்) (Kulasegaram Devasegaram (aka 'Oberoi Devan')

படு கொலை செய்யப்பட்டு 29 ஆண்டுகள் கடந்துவிட்டன. அவருக்கும் மற்றும் இலங்கை இராணுவத்திடம் போராடி உயிர் நீர்த்த ஏனைய டெலா போராளிகளுக்கும் மற்றும் புளட் தேச விரோத கும்பலினால் படு கொலை செய்யபட்ட கூச், சேகர் போன்ற டெலா அரசியல் பிரிவு இராணுவ பிரிவு தலைவர்கள் மற்றும் அனைத்து போராளிகளுக்கும் விடுதலை போரில் ஆகுதியாகிய பொது மக்களுக்கும் அனைத்து மாவீரர்களுக்கும் எமது வீர வணக்கங்கள் .

தமிழ் ஈழ விடுதலை இராணுவம்

post-9189-0-19280100-1344863593.gif

Tamil Eelam Liberation Army(TELA)

சக விடுதலைப் போராட்ட இயக்க அழிப்பை ஆரம்பித்து வைத்த புளொட்

1983ம் ஆண்டு யூலை கலவரத்துக்குப் பின் இந்திய அரசால் ஈழவிடுதலை இயக்கங்களுக்கு வழங்கப்பட்ட "தார்மீக ஆதரவும்" அதனுடன் கூடவே இராணுவப் பயிற்சியும், அதன் பின்னான காலப்பகுதியில் இந்திய அரசினால் ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களுக்கு வழங்கப்பட்ட ஆயுதங்களும், ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களுக்குள் வீக்கத்தை ஏற்படுத்த ஒரு காரணமாகவிருந்தது. சிறிய குழுக்களாக இருந்த ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களின் இந்த வீக்கமானது அரசியல் மற்றும் கருத்து முரண்பாடுகளை நோக்கி இட்டுச் சென்றது. ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களுக்குள்ளேயான அரசியல் மற்றும் கருத்து முரண்பாடுகள் துப்பாக்கிக் குண்டுகள் மூலம் தீர்த்துவைக்கப்பட்டன அல்லது இயக்கங்களுக்குள்ளான பிளவுகளில் முடிவுற்றன. தமிழீழ விடுதலை இயக்கத்துக்குள் (TELO) தோன்றிய உள்முரண்பாடுகளால் மனோமாஸ்டருடன் ஒரு குழுவினர் தமிழீழ விடுதலை இயக்கத்திலிருந்து வெளியேறியிருந்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்குள் தோன்றிய உள்முரண்பாடுகளால் ராகவன் தலைமையில் ஒரு குழுவினர் தமிழீழ விடுதலைப் புலிகளிலிருந்து வெளியேறியிருந்தனர்.

ஒபரோய் தேவனால் உருவாக்கப்பட்ட தமிழீழ விடுதலை இராணுவம் (TELA) தமிழீழ விடுதலைப் புலிகளால் ஒபரோய் தேவன் படுகொலை செய்யப்பட்டதன் பின் காஸ்ரோவாலும் அதன் பின் முரளிமாஸ்டரினாலும் தலைமை தாங்கப்பட்டு வந்தது. தமிழீழ விடுதலை இராணுவத்துக்குள் தோன்றிய முரண்பாடுகளால் தமிழீழ விடுதலை இராணுவம் இரண்டாகப் பிளவுற்றது. பிளவுபட்டவர்களின் ஒருபகுதியினர் இந்தியாவில் புளொட்டுடன் இணைந்துகொண்டுவிட்டதாக எமக்குச் சொல்லப்பட்டது. ஆனால் மற்றொரு பகுதியினரோ தமிழீழ விடுதலை இராணுவம் என்ற பெயரிலேயே தளத்தில் செயற்பட்டுக் கொண்டிருந்தனர். இவர்களில் ராஜன், அராலியைச் சேர்ந்த கூச், குப்பிளானைச் சேர்ந்த சேகர் ஆகியோர் முன்னணி உறுப்பினர்களாக இருந்தனர். புளொட்டுக்கும் - குறிப்பாக புளொட் இராணுவப் பிரிவுக்கும் - தளத்தில் செயற்பட்ட தமிழீழ விடுதலை இராணுவத்தினருக்குமிடையே ஒருவித பகைமைநிலை அதன் உச்சநிலையை அடைந்திருந்தது. எமது இராணுவப் பிரிவினரும் தமிழீழ விடுதலை இராணுவத்தைச் சேர்ந்தவர்களும் பல்வேறு இடங்களில் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர். இதன் தொடர்ச்சியாக தமிழீழ விடுதலை இராணுவத்தை (TELA) சேர்ந்தவர்கள் எமது இராணுவத்தால் கடத்தப்பட்டனர். பதிலுக்கு தமிழீழ விடுதலை இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் எமது இராணுவப்பிரிவைச் சேர்ந்தவர்களை கிளிநொச்சிப் பகுதியில் வைத்து கடத்தினர். துப்பாக்கி மோதல்கள் ஆரம்பமாகின. கிளிநொச்சியிலும் யாழ்ப்பாணத்திலும் தமிழீழ விடுதலை இராணுவத்தினரை(TELA) சேர்ந்தவர்கள் எமது இராணுவத்தால் கைதிகள் ஆக்கப்பட்டனர். தமிழீழ விடுதலை இராணுவத்தைச் சேர்ந்த கூச் (அராலி) சேகர்(குப்பிளான்) ஆகிய இருவரும் எமது இராணுவப் பிரிவினரால்- நாம் "புரட்சிகர இராணுவம் எனப் பீற்றிக்கொண்ட எமது இராணுவப் பிரிவினரால் -அவர்களின் குரல்வளை வெட்டப்பட்டு கொல்லப்பட்டதாக அறிந்தோம். எமது இராணுவப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்த தமிழீழ விடுதலை இராணுவத்தைச் சேர்ந்தோர் வேறு சிலரும் கொலை செய்யப்பட்டிருந்தனர். எதற்காக தமிழீழ விடுதலை இராணுவத்தினரின் மீதான அழிப்பு நடவடிக்கை? யாருடைய உத்தரவின் பேரில் எமது இராணுவப் பிரிவினர் இத்தகைய கொடூரத்தனத்தில் ஈடுபட்டனர்? நிட்சயமாக தள நிர்வாகப் பொறுப்பாளர் டொமினிக்கின் உத்தரவின் பேரில் அல்ல. ஏனெனில் டொமினிக் ஏற்கனவே கூறியதுபோல் அனைத்துமே அவர் கைகளுக்கு வெளியே நடைபெற்றுக் கொண்டிருந்தன.

அப்படியாயின் தமிழீழ விடுதலை இராணுவம் மீதான கொடூரச்செயலுக்கு, தமிழீழ விடுதலை இராணுவத்தினரை அழிப்பதற்கு எமது இராணுவப் பிரிவினருக்கு உத்தரவு இட்டது யார்?

இந்தக் கேள்விக்கு சின்ன மென்டிசிடம் இருந்து வந்த ஒரே பதில்: "பெரிசு"(உமா மகேஸ்வரன்).

உமா மகேஸ்வரனின் நேரடி உத்தரவின் பேரில் தளத்தில் சக விடுதலை இயக்க உறுப்பினர்களின் மீது மேற்கொள்ளப்பட்ட கோரத்தனமான கொலைகளையும், சக விடுதலை இயக்கம் - அது எவ்வளவுதான் சிறிய விடுதலை இயக்கமாக இருந்தாலும் கூட - ஒன்றை ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதன் முதலில் அழித்தொழித்த "பெருமை" யை எமது இராணுவப் பிரிவினர் பெற்றுக்கொண்டனர்.

ஈழ விடுதலைப் போராட்டம் ஆயுத போராட்டமாக உருப்பெற்றெழுந்த காலத்தில் இருந்து பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகள் ஏனைய இயக்க தலைவர்களையே குறிவைத்து அவர்கள் மீது தாக்குதல்கள் நடத்தினர். தமிழீழ விடுதலை இராணுவத்தின்(TELA) ஸ்தாபகரும் அதன் தலைவருமான ஒபரோய் தேவன் படுகொலை, தமிழீழ விடுதலைத் தீவிரவாதிகள் இயக்க(TELE) ஸ்தாபகரும் அதன் தலைவருமான ஜெகன் படுகொலை போன்றவை இதன்பாற்பட்டவையே.

ஆனால் எமது இராணுவப் பிரிவினரோ சக விடுதலை இயக்கமொன்றை முழுமையாக அழித்தொழித்ததன் மூலம் வரலாற்றில் தமது முத்திரையை பதித்ததுடன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சக விடுதலை இயக்கங்களை எப்படி அழித்தொழிப்பது என்பதில் வழிகாட்டியாகவர்களாகவும் இருந்தனர். தமிழீழ விடுதலை இராணுவத்தையும் அதன் முன்னணி உறுப்பினர்களையும் அழித்ததன் மூலம் - அதுவும் உமாமகேஸ்வரனின் உத்தரவின் பேரில் அழித்ததன் மூலம் - எமது அமைப்பின் செயலதிபரும் அவரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் இராணுவப் பிரிவும் எவ்வழியில் செல்கின்றனர் என்பதையும், செயலதிபர் உமாமகேஸ்வரன் உத்தரவிட்டால் எமது இராணுவப் பிரிவினர் எந்தக் கோரத்தனத்தையும் செய்ய தயங்கமாட்டார்கள் என்பதையும் வெளிப்படுத்தியிருந்தனர். இந்திய அரசால் வழங்கப்பட்ட இராணுவப் பயிற்சியும் ஆயுதங்களும் கூட சக விடுதலைப் போராட்ட இயக்கத்தையும் அதன் போராளிகளையும் அழிப்பதற்கே எமது இராணுவப் பிரிவினரால் முதன்முதலாக பயன்படுத்தப்பட்டது.

தமிழீழ விடுதலை இராணுவத்தின் மீதானதும் அதன் உறுப்பினரும் மீதான அழிப்பு பற்றி புளொட்டின் தள நிர்வாகப் பொறுப்பாளர் டொமினுக்குக்கோ அல்லது மாவட்ட அமைப்பில் அரசியற்பிரிவில் செயற்பட்ட எமக்கோ எதுவுமே தெரிந்திருக்கவில்லை.

அனைத்து சம்பவங்களும் நடந்து முடிந்த பின்பே எமது கீழணி அங்கத்தவர்கள் மூலமோ அல்லது மக்களிடமிருந்தோ நாம் உண்மையான தகவல்களை அறியவேண்டிய நிலை இருந்தது. தள இராணுவப் பொறுப்பாளர்களும் இராணுவப்பிரிவினரும் உமா மகேஸ்வரனின் கட்டளைகளை நிறைவேற்றிக் கொண்டிருந்தனர். தளத்தில் ஒரு நிர்வாகம் இருப்பது பற்றியோ அல்லது மக்கள் அமைப்புக்கள் செயற்படுவது குறித்தோ எமது இராணுவப் பிரிவினர் கருத்தில் கொள்ள தயாராக இருக்கவில்லை.

எமது இராணுவப் பிரிவின் தவறான மக்கள் விரோத நடவடிக்கைகளை மக்கள் மத்தியில் நியாயப்படுத்தவே மக்கள் அமைப்புக்களும் தள நிர்வாகமும் இருப்பதாகக் கருதினர். தள நிர்வாகப்பொறுப்பாளர் இராணுவப்பிரிவினரின் தவறான மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு மறுப்பறிக்கைகள் துண்டுப்பிரசுரங்கள் வெளியிட ஒரு கருவியாக இருப்பதாகவே கருதப்பட்டது. ஒரு விடுதலை இயக்கத்தின் அரசியல் இலக்கை அடைவதற்கு இருக்கும் தடைகளை அகற்ற அந்த விடுதலை இயக்கத்தின் இராணுவத்தை பயன்படுத்தும் நிலை மாறி இராணுவப் பிரிவினரின் தவறான மக்கள் விரோத நடவடிக்கைகளையும், அவர்களது தவறான இலக்குகளையும் அடைவதற்கு எடுக்கும் முயற்சிகளுக்கு எமது அரசியல் பிரிவு (மக்கள் அமைப்பு) செயற்படும் நிலையாக மாற்றமடையத் தொடங்கியது.

தளத்தில் எமது இரானுவப்பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட தமிழீழ விடுதலை இராணுவ(TELA) அழிப்பு நடவடிக்கையால் மக்கள் அமைப்பில் செயற்பட்டு கொண்டிருந்த பெரும்பாலானவர்கள் - எமது இராணுவப் பிரிவில் ஈரநெஞ்சம் கொண்ட ஒரு பகுதியினரும் கூட - குழப்பங்களுடனும் ஒருவித கலக்கத்துடனும் காணப்பட்டனர். ஏனெனில் எமது இராணுவப் பிரிவினர்தான் இத்தகைய கோரத்தனமான செயல்களை செய்து முடித்திருந்தனர் என்பது எம்மில் பலரால் நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒரு விடயமாக இருந்தது.

நன்றி.

- நேசன

(புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 21 )

Edited by Ramanan005

  • கருத்துக்கள உறவுகள்

?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.