Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு கோடி ரூபாய் வசூலித்ததுதான் டெசோ மாநாட்டு வெற்றி!

Featured Replies

[size=1]karuna_young_copy_copy.gif[/size]

[size=1][size=4]ஸ்பெக்ட்ரம் வழக்கில் கனிமொழி விடுதலை….![/size][size=4]ஸ்பெக்ட்ரம் வழக்கில் ராஜா நிரபராதி!

அழகிரி மக்களவையில் ஆங்கிலத்தில் பேசி கைத்தட்டல் வாங்கினார்…!

கட்சித்தலைவர் பதவியை என்றுமே விரும்பமாட்டேன் என்று ஸ்டாலின் அறிவிப்பு!

கலைஞர் டிவிக்கு 214 கோடி ரூபாய் கொடுத்தது காசிமேடு தி.மு.க. கிளைக்கழகம் என்று சி.பி.ஐ. கண்டுபிடிப்பு..!

எழுந்து நடக்க ஆரம்பவித்துவிட்டதால்.. வீல் சேர் இனி கருணாநிதிக்கு தேவையில்லை என்று டாக்டர்கள் அறிவிப்பு!

-இப்படி எல்லாம் கனவு கண்டு கொண்டிருக்கும் தி.மு.க. தலைவ[/size]ர் [size=4]கருணாநிதி நேற்று ஓர் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்.

’டெசோ’ மாநாடு வெற்றி!

-இப்படி அறிக்கை விடுவதற்கு அவருக்கு மட்டுமே துணிச்சல் வரும்.

மாநாடு எப்படி வெற்றி பெறும்?

“ஈழத்தமிழர்கள் என்று வாழ அவர்களுக்கான எல்லை வரையறை செய்யப்பட்டுவிட்டது. இன்னும் ஒன்பது நாட்களில் எல்லை முடிவானதும், தனி ஈழம் என்று பிரகடனம் செய்யப்பட்டுவிடும். அதுமட்டுமில்லாமல், ஈழம் என்ற நாடு உருவானதும், அந்த நாட்டின் ஜனாதிபதியாக கருணாநிதி சொல்லும் நபரை நியமிப்பதோடு, அந்நாட்டுக்கு புதிய பிரதமர் பதவிக்கான தேர்தலை என் சொந்த செலவிலே செய்து, மேலும் தமிழ் ஈழத்துக்கு நிதி உதவியாக 16 ஆயிரம் கோடி ரூபாயை தருவதற்கும் மனப்பூர்வமாக சம்மதிக்கிறேன்”

-இப்படியாக ராஜபக்‌ஷே இவருக்கு பத்திரம் எழுதி அனுப்பி இருந்தால்

டெசோ மாநாடு வெற்றி என்று அறிக்கை வெளியிட்டு இருக்கலாம்…

ஆனால், எப்போதும் போல் எதையுமே முழுதாக செய்து முடிக்காமல், மார்தட்டி அதற்கு ஓர் விழா எடுத்து சிலை வைத்து வரலாறுகளை தகராறுக்கு இழுப்பதுதானே இவருக்கு கை வந்த கலை.

சென்னை அண்ணா மேம்பாலத்தின் இரு புறமும் குதிரை பந்தயத்தை ஒழித்ததற்காக நினைவுச் சின்னத்தை வைத்தார்.[/size][/size]

[size=1][size=4] kanimozhi_2G_link_110507_copy_copy.jpg[/size][/size]

ஆனால், [size=1][size=4]தினத்தந்தியில் இன்னமும் ரேஸ் டிப்ஸ் வந்துக் கொண்டிருக்கிறதே? அது ஏன்?

பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு திட்டத்தை 1972ம் ஆண்டே கொண்டு வந்து, “இனி நாட்டில் பிச்சைக்காரர்களே இல்லை என்ற நிலை வரும்” என்று தெரிவித்தார்?

இன்று நாட்டில் பிச்சைக்காரர்கள் இல்லையா?

அனைத்து சாதியினரும் அர்ச்சர்கள் ஆகலாம் என்று 1971-76ம் ஆண்டு ஆட்சிக்காலத்திலேயே சட்டம் கொண்டு வந்தார். அது இன்னும் சுப்ரீம் கோர்ட்டில் தூங்கிக் கொண்டிருக்கிறது.

ஏழை, எளிய மக்களுக்கு பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வி என்றார். எந்த ஏழையாவது இதை உண்மை என்று சொல்ல முடியுமா?

குடிசை மாற்று வாரியத்தை ஏற்படுத்தி, குடிசை இல்லா நாட்டை உருவாக்குவோம் என்று 1971-96ம் ஆண்டு ஆட்சிக்காலத்தில் முழக்கமிட்டார். இன்று எங்கேயும் குடிசைகள் இல்லையா?

1968ம் ஆண்டே சமச்சீர் கல்வித்திட்டத்தை கொண்டு வர நாடாளுமன்றத்தில் கொடுக்கப்பட்டு, பல மாநிலங்களில் அடுத்த சில ஆண்டுகளில் படிப்படியாக கொண்டு வரப்பட்டது. சமச்சீர் கல்வித்திட்டத்தை கொண்டு வர இவர் சுண்டு விரலை கூட அசைக்கவில்லை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தான் சுப்ரீம் கோர்ட் வரை சென்று,போராடி அத்திட்டத்தை கொண்டு வந்தனர். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வந்ததுமே, ‘வெற்றிக்கூட்டம்’ என்று இவரே அறிவித்து, இவரே கொண்டாடிக் கொண்டார்.

ஐந்து முறை முதல்வராக இருந்தும், தமிழ் மொழியை மாநிலத்தின் அரசு மொழியாக்க முடியாமல் தவித்தவர்.

ஐந்து முறை முதல்வராக இருந்தும், பள்ளி- கல்லூரிகளில் தமிழ் கட்டாயப் பாடமாக்கப்பட்டது 2006ம் ஆண்டுக்கு பிறகு தான்…

KarunanidhiFamily_20100630_copy.jpg [/size][/size]

இதைவிட [size=1][size=4]எல்லாம் கொடுமை… இவரே கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்க்க, இந்த டெசோ மாநாட்டில், [/size][/size]கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று கூக்குரலிடுகிறார்.

[size=1][size=4] ஆக… டெசோ மாநாடு எதற்காக நடத்துகிறார் என்றால், இரண்டே இரண்டு விஷயத்துகாகத்தான் அந்த மாநாட்டை நடத்தினார்.

அதற்கு முன்பாக இன்னொரு விஷயத்தை சொல்லியாக வேண்டும்.

இந்த டெசோ மாநாட்டு நடத்துக்கிறாயே… உன் குடும்பத்தாரும் உன் வாரிசுகளும் எங்கே போனார்கள்?

கோவையில் செம்மொழி மாநாடு நடத்தினால்… ஒரு பேத்தி வீணை வாசிப்பார்… இன்னொரு பேத்தி கவிதை வாசிப்பார்…. இன்னொரு பேத்தி நடனம் ஆடுவார்

இது இல்லாமல், மாநாட்டு பேரணியை பார்க்க தனி மேடை… செம்மொழி மாநாட்டில் தமிழ் அறிஞர்களுக்கு கூட முதல் வரிசையில் இருக்கைகள் இல்லை. ஆனால், உன் குடும்பத்தின் உறவுகளான 67 பேருக்கு முதல் மூன்று வரிசைகள்… இவர்களுக்கு ஸ்வீட், காரம், காபி, தண்ணீர் கொடுக்க 88 காவலர்கள்….

அந்த ஜென்மங்கள் எல்லாம், இந்த டெசோ மாநாட்டுக்கு ஏன் வரவில்லை. நீங்கள் அழைக்கவில்லையா. இல்லை அழைத்தும் வரவில்லையா….உன் வாரிசுகளுக்கு செம்மொழி மீது இருந்த காதல்… ஈழத்தமிழர்கள் மீது இல்லாமல் போனது ஏன்?

சரி… அந்த இரண்டு விஷயத்துக்கு வருவோம். நீங்கள் எதற்காக இந்த மாநாட்டை நடத்தினீர்கள்?

ஒன்று, ஈழத்தமிழர்கள் விஷயத்தில் அவருக்கு ஏற்பட்ட இழப்பை, அவமானத்தை, அசிங்கத்தை துடைத்துக் கொள்வது.

இரண்டாவது, இந்த மாநாடு நடத்தும் சாக்கில் ஒரு கோடி ரூபாயை வசூலித்தது.

இந்த இரண்டு விஷயத்தில் கூட, முதலில் சொல்லப்பட்ட அசிங்கம், அவமானம், இழப்பு ஈடுகட்டப்பட்டதா என்றால் இல்லை. இந்த மாநாட்டால், உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்கள் மத்தியில் கருணாநிதியின் இமேஜ் உயர்ந்ததா என்றால்… இன்னும் டேமேஜ் ஆனதுதான் மிச்சம்.

அதற்கு ஒரே ஒரு உதாரணம்…

கோபி சிவந்தன்… இந்த ஈழ இளைஞன் லண்டன் மாநகரில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வருகிறான்.

karuna_family_234_copy.jpg[/size][/size]

[size=1][size=4]இந்த இளைஞனுக்கு கருணாநிதி ஒரு வேண்டுகோள் வைக்கிறார்.

“விலை மதிப்பில்லாத உயிரை இழக்க வேண்டாம். உண்ணாவிரதத்தை கைவிட்டு, அறவழியில் போராட வா” என்று சொல்கிறார்.

அதற்கு அந்த இளைஞன் சொன்ன வார்த்தை என்ன தெரியுமா?

“என் தாத்தா… என் அப்பா… என் உறவினர்கள் எல்லாம் உயிரை விட்ட போது, இதே கருணாநிதி தானே ஆட்சி அதிகாரத்தில் இருந்தார். அப்போதெல்லாம் கவலைப்படாத இந்த கருணாநிதி என் உயிர் மீது அக்கறை கொண்டிருப்பதாக சொல்வது நம்பும் படியாக இல்லை. அவர் டெசோ நடத்துவதும் நம்பத்தகுந்தது இல்லை” என்று அடித்தான் ஒரு அடி.

அந்த அடிக்குப் பிறகு, இனி துக்ளக் சோ சொன்னதை வேண்டுகோளாக வைத்து, கட்டுரையை முடிக்கலாம்.

“இந்த டெசோ மாநாட்டுக்குப் பிறகாவது, இனி ஈழத்தமிழர்கள் விஷயத்தில் எந்த தொந்தரவும் செய்யாமல் கருணாநிதி இருந்தாலே போதும்”

இது தான் ஈழத்தமிழர்களின் உன்னதமான வேண்டுகோள்.

ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல, இங்கிருக்கும் தமிழர்களின் வேண்டுகோளும் அதுதான். உலகத்தமிழர்களின் வேண்டுகோளும் அதுதான். உங்களுக்கு ஜால்ரா தட்டிக் கொண்டிருக்கும் சில தமிழர்களின் வேண்டுகோளும் அதுதான்!

முடிவாக, ஒரு கோடி ரூபாயை வசூலித்தது மட்டும் தான் கருணாநிதி நடத்திய மாநாட்டின் வெற்றி![/size][/size]

[size=1][size=4]நன்றி -தமிழ்லீடர்[/size][/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.