Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கு மாகாணத்தில் சிறீலங்காப் படைகளின் ஆசியுடன் ஒட்டுக்குழுவின் நடவடிக்கையை அனுமதிக்கும் மகிந்த அரசாங்கம்! - தாயகத்தில் இருந்து எழுவான்

Featured Replies

கடந்த 2004 ஆம் ஆண்டிலிருந்து சிங்களப் பேரினவாத சக்திகளுடன் இணைந்து தமிழ் இனத்தைப் படுகொலை செய்யும் ஒட்டுக்குழுவினர் போர் முடிவடைந்த பின்னரும் அவர்களின் காட்டிக்கொடுப்புக்களும், அடாவடித்தனங்களும் துரோகத்தனங்களும் தொடர்ந்தவண்ணமே உள்ளன. கிழக்கு மாகாணத்தில் 2007 ஆம் ஆண்டு போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் இப்பகுதியில் இயங்கிய ஒட்டுக்குழுக்களின் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், வலுக்கட்டாயமாக கடத்தி ஆயுதப் பயிற்சி வழங்கிய சிறார்களையும் உறவினர்களிடம் ஒப்படைத்தல், அக்குழுவினரால் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களையும் விடுவிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவைக்கு சிறீலங்கா அரசு உறுதியளித்திருந்தது.

எழுத்துவடிவில் வழங்கப்பட்ட உறுதி இன்று வரையில் நிறைவேற்றப்படவில்லை. ஆனால் கிழக்கு மாகாணத்தில் எந்த ஒரு ஆயுதக்குழுவினரும் இல்லை என சிறீலங்கா அரசாங்கம் உலக நாடுகளை ஏமாற்றிவருகின்றது. கிழக்கு மாகாணத்தில் சட்ட விரோத ஆயுதங்களை வைத்திருக்கும் குழுவினரிடமிருந்து ஆயுதங்களைக் களைய வேண்டும் என சிறீலங்காவின் தேர்தல் ஆணையாளர், சிறீலங்கா காவல்துறை மா அதிபருக்கு உத்தரவிட்டிருந்தார். எனினும் இதனை மகிந்த அரசாங்கத்தைச் சார்ந்த அமைச்சர்கள் நிராகரித்தனர்.

ஆனால், போர் நடைபெற்ற காலப் பகுதியில் எவ்வாறு ஒட்டுக் குழுவினர் ஆயுதங்களுடன் நடமாடி பொதுமக்களையும், அரசியல்வாதிகளையும் மிரட்டித் அச்சுறுத்தல் விடுத்தார்களோ அதேயத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமை நன்கு புலனாகிறது. கடந்த 2008 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடைபெற்றபோது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தவிர்ந்த ஏனைய கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டபோது, வேட்பாளர்களை அச்சுறுத்தல், ஆதரவாளர்களைப் படுகொலை செய்தல், வாக்காளர் அட்டைகளை பறிமுதல் செய்தல், வாக்காளர்களை மிரட்டி தங்களுக்குச் சார்பானவர்களுக்கு வாக்களிக்குமாறு மிரட்டுதல் போன்ற தேர்தல் சட்டத்திற்கு முரணான அனைத்துச் செயற்பாடுகளையும் மேற்கொண்டனர்.

இவ்வாறு தேர்தல் சட்டங்களை மீறிச் செயற்பட்ட ஆயுதக்குழுவினர் மீது கொழும்பு அரசாங்கம் எந்தொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை மாறாக மாகாண முதலமைச்சர் பட்டத்தை வழங்கி தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதுடன், சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் நாடகம் ஒன்றினையும் சிறீலங்கா அரசாங்கம் அரங்கேற்றியது. தமிழர்களின் இணைக்கப்பட்ட தாயகப் பூமியை மிகவும் சூட்சுமமான முறையில் பிரித்து தனித்தனி மாகாணமாக்கியதுடன் மட்டுமல்லது, தங்கள் ஆட்சிக்கு ஆசிர்வாதம் செய்யும் தரப்புக்ளை பதவியில் அமர்த்தி தனது காரியங்களை முன்னெடுத்தது மகிந்த அரசாங்கம்.

தனது சண்டித்தனத்திற்கு ஒட்டுக்குழுக்களைப் பயன்படுத்தும் மகிந்த அரசாங்கம் கிழக்கு மாகாணத்தில் எந்தொரு ஆயுதக்குழுவும் இயங்கவில்லை எனத் தெரிவிக்கின்றது. ஆனால் களநிலவரம் வேறாக அமைந்துள்ளது. கிழக்கு மாகாண சபைக்காக தேர்தல் நடாத்தப்படும் என கொழும்பு அரசாங்கம் அறிவிக்கப்பட்ட பின்னர், அதற்கான வேட்பு மனுக்களைத் தாக்க செய்வதற்கு முன்னதாகவே ஆயுதக்குழுக்களின் அடாவடிகள் ஆரம்பிக்கப்பட்டது. அவற்றில் ஒன்றுதான், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான துரைராசசிங்கம் மற்றும் இந்திரக்குமார் பிரசன்னா ஆகியோரின் வீட்டுக்குப் பூட்டுப் போட்டனர்.

அன்றிருந்து ஆரம்பிக்கப்பட்ட இக்குழுவினரின் அடாவடித்தனங்கள் இன்று வெள்ளை ஊர்தியில் நேரடியாகச் சென்று மிரட்டுமளவுக்கு அரசாங்கமும் அதன் படைகளும் அனுமதி வழங்கியுள்ளார்கள். மட்டக்களப்பு வாகரைப் பகுதியில் வேட்பாளர் வீட்டின் மீது, தேர்தல் பரப்புரை ஊர்தி மீது என கல்வீச்சுத் தாக்குதல், ஆரையம்பதியல் வேட்பாளரையே தாக்கினர். இவ்

வாறான நடவடிக்கைகள் அனைத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களையே குறிவைத்து தாக்குகின்றனர். இதுவரையில் ஒன்பதுக்கு மேற்பட்ட சம்பவங்கள் கூட்டமைப்புக்கு எதிராக நடைபெற்றுள்ளதாக அதன் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அச்சுறுத்தல்களின் பின்னணியில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் பிள்ளையான் குழுவினர் இருக்கின்றனர். இவர்களின் அச்சுறுத்தல் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக படையினரும் செயற்படுகின்றனர். இக்குழுவினரால் மேற்கொள்ளப்படும் அனைத்து அடாவடித்தனங்களுக்கும் பொறுப்பு பிள்ளையான் ஒட்டுக்குழுவினர் எனத் தெரிந்தும் காவல்துறையோ, அல்லது தேர்தல் அலுவலகமோ எவ்வித நடவடிக்கையும் இதுவரையில் எடுக்கவில்லை.

இது இவ்வாறிருக்க, மட்டக்களப்பு மாவட்டத்தில் இறந்தவர்கள் மற்றும் வெளிநாடு சென்றவர்களின் வாக்குகளை அபகரிப்பதற்காக இக்குழுவினர் நடவடிக்கை மேற்

கொண்டுவருகின்றனர். இதற்கான ஆரம்ப நடவடிக்கையாக கடந்த மாதம் 21 ஆம் நாள் செங்கலடியில் பிள்ளையான் குழு ஆதரவாளருக்கு சொந்தமான திரைப்பட மாளிகையில் பிள்ளையான் தலைமையில் மாவட்டத்திலுள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்கள் மற்றும் அதன் உறுப்பினர்களுடன் இது தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றள்ளதாக தெரியவருகிறது.

எதிர்வரும் 17 ஆம் நாளுக்கு முன்னர் அந்தந்த பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களில் இறந்தவர்கள் மற்றும் வெளிநாடு சென்றவர்களின் பெயர் விபரங்களை சேகரிக்குமாறு பிள்ளையான் அவரின் ஆட்களுக்கு உத்தரவிட்டுள்ளார். எதிர்வரும் 17 ஆம் நாள் வாக்காளர் அட்டை விநியோகம் இடம்பெறவுள்ளது. அதன் பின்னர் இவ்வாறு சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் குறிப்பிட்ட வீடுகளுக்குச் சென்று வாக்குகளை சேகரிக்குமாறு பிள்ளையான் தெரிவித்துள்ளார்.

வாக்களிக்கும் தினமான செப்டம்பர் 8ஆம் நாள் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சேகரிக்கப்பட்ட அனைத்து வாக்குளையும் வாக்களிப்பு நிலையத்தில் கடமையில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகளின் ஆதரவுடன் போடுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மகிந்த அரசாங்கம் உள்நாட்டு மக்கள், அரசியல் கட்சிகள் மாத்திரமல்ல வெளிநாடுகளையே ஏமாற்றிவருகின்றது. சுதந்திரமானதும், ஜனநாயகமானதுமாக கிழக்குத் தேர்தல் நடாத்தப்படும் என படம் காட்டும் அரசாங்கம் மறுபுறத்தில் தனது அடியாட்களான ஒட்டுக்குழுவினரை பயன்படுத்தி ஏனைய கட்சிகள் தேர்தல் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

இதேவேளை, அரசியல் ரீதியாகவும் மகிந்த அரசாங்கம் ரவூப் ஹக்கிமூடாக காய்நகர்த்தல் ஒன்றை மேற்கொண்டுவருகிறது. மிரட்டலுக்கு ஒட்டுக்குழு, அரசியலுக்கு ஹக்கிம் என இருவழிப்பாதையில் சென்று மகிந்த அரசாங்கம் எல்லாரையும் முட்டாளாக்கிறது. சிறீலங்கா முஸ்ஸிம் காங்கிரஸ் கிழக்குத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது மகிந்த அரசாங்கத்தின் ஆளுகைக்கு கிழக்கு மாகாணத்தைக் கொண்டுவருவதற்காக மேற்கொண்ட இராஜதந்திர முறைகளில் ஒன்று.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் எந்தக்கட்சியும் அறுதிப் பெரும்பான்மை பெறாது என்ற நினைப்பில் கொழும்பு அரசாங்கம் முன்வரைவுத் திட்டமொன்றை வைத்துள்ளது. அவ்வாறான நிலையில், முஸ்ஸிம் கொங்கிரஸ் பெறும் ஆசனங்களைக் கொண்டு மாகாண சபை ஆட்சியை தனதாக்கிக் கொள்ளலாம் என்று மகிந்த கூட்டம் திட்டமிட்டுள்ளது.

இதற்கு காரணங்கள் இல்லாமலில்லை, நிச்சயமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவிப்பது போன்று முஸ்ஸிம் கொங்கிரஸ் கூட்டமைப்புடன் இணையாது. ஆனால் சம்பந்தன் தமிழர்களை முட்டாளாக்க நினைக்கின்றார். சிறீலங்கா முஸ்ஸிம் கொங்கிரசை உருவாக்கியவர், அன்றே தெரிவித்திருந்தார், எமது கட்சி தேர்தலில் வெற்றி பெற்றால் தாம் ஆளுங்கட்சியுடன் இணைந்து செல்வதுதான் சிறந்த விடயம் ஒன்று தெரிவித்திருந்தார். அதைத்தான் இன்று முஸ்ஸிங்கள் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். இதனடிப்படையில் தான், மகிந்த அரசாங்கம் இன்று எல்லாரையும் முட்டாளாக்கியது என்று நாம் தெரிவிக்கின்றோம். இதற்கான முடிவை தமிழ் மக்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.

நன்றி : ஈழமுரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.