Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரதமருக்கு ஜெ. கடிதம் எழுதியவுடனேயே 13 மீனவர்களை கடத்திச் சென்ற இலங்கை கடற்படை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரதமருக்கு ஜெ. கடிதம் எழுதியவுடனேயே 13 மீனவர்களை கடத்திச் சென்ற இலங்கை கடற்படை

Published: செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 21, 2012, 10:21 [iST]

Posted by: Sudha

21-fishermen1-300.jpg

சென்னை: இலங்கைக் கடற்படையினரின் தாக்குதல்களை தடுத்து நிறுத்துங்கள் என்று முதல்வர் ஜெயலலிதாவும், அதேபோல திமுக தலைவர் கருணாநிதியும் கோரிக்கை விடுத்த சில மணி நேரங்களிலேயே தமிழக மீனவர்கள் 13 பேரை கடத்திச் சென்று விட்டது இலங்கை கடற்படை. தமிழக தலைவர்களை அது ரொம்பக் கேவலமாக நினைப்பதையே இது காட்டுவதாக கருதப்படுகிறது.

இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களை தொடர்ந்து தாக்கி வருகின்றனர், கைது செய்து வருகின்றனர். இதைத் தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மத்திய அரசு மகா அமைதியாக இருந்து வருகிறது. இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.

எத்தனையோ முறை தமிழகத் தலைவர்கள் மத்திய அரசுக்கு காலில் விழுந்து கெஞ்சாத குறையாக கோரிக்கை வைத்து விட்டனர். ஆனாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை.

நேற்று கூட பிரதமருக்கு இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா நான்காவது முறையாக கடிதம் எழுதியிரு்நதார். அதேபோல திமுக தலைவர் கருணாநிதியும் சில கருத்துக்களைக் கூறியிருந்தார்.

ஆனால் இவர்கள் பேசிய அடுத்த சில மணி நேரங்களிலேயே இலங்கை கடற்படை தனது கேவலமான முகத்தைக் காட்டி விட்டது. அதாவது மண்டபம் பகுதி மீனவர்கள் 13 பேரை அது பிடித்துச் சென்று விட்டது.

ராமேஸ்வரம் - மண்டபம் பகுதியில் இருந்து மீன்பிடிக்க நேற்று காலை மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது.

கட்டைகள், பாட்டில்களை வீசி அவர்கள் மீது தாக்குதல் நடத்தி விரட்டி விட்டதாகவும், மீனவர்களில் 13 பேரை இலங்கைக் கடற்படையினர் இன்று அதிகாலை பிடித்துச் சென்றுவிட்டதாகவும் தப்பி வந்த மீனவர்கள் கூறினர்.

மேலும் இந்தத் தாக்குதலில் ஞானசேகரன் என்ற மீனவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதை அடுத்து மண்டபம் பகுதியில் பரபரப்பு காணப்படுகிறது.

நேற்றுதான் பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதினார். அடுத்த சில மணி நேரங்களிலேயே தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்திருக்கும் செயல் இந்திய அரசுக்கும் அவமானமே என்று கருதப்படுகிறது.

http://tamil.oneindia.in/news/2012/08/21/tamilnadu-lankan-navy-captures-15-tn-fishermen-159983.html

[size=4]இந்திய மத்திய அரசு 'இவ்வாறு ஒன்றும் நடப்பதில்லை' என கூறியே வருகின்றது, காரணம் - தமிழன். [/size]

[size=5]எந்த கட்சியின் கீழும் பணியாற்ற தயார்: விஜயகாந்த்[/size]

[size=4]தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டுவதை தடுக்க தமிழக அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து பிரதமரிடம் வலியுறுத்த வேண்டும் என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். [/size]

[size=4]தனது பிறந்தநாளையொட்டி, திருப்பூரில் நடந்த விழாவில் பேசிய அவர், தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டுவதை தடுக்க தமிழக அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து பிரதமரிடம் வலியுறுத்த வேண்டும் எனவும், இதற்காக எந்த கட்சியின் தலைமையின் கீழும் பணியாற்ற தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார். [/size]

[size=4]http://tamil.yahoo.com/எந்-கட்ச-ய-ன்-க-164000804.html[/size]

  • கருத்துக்கள உறவுகள்

தாயகம் என்று ஒரு படம்.. அதில் விசயகாந்து மீனவர் வேடம்.. அருவா வீசியே எல்லாரையும் வெட்டி விடுவார்.. இவரு ஏற்கனவெ பாகிஸ்தான் தீவிரவாதிகளை எல்லாம் பேக் சாட்டு(காலால் உதைப்பது) மூலம் ஒழித்து போட்டார்.. அடுத்த சினிமா இவர் எடுத்தாரென்றால் ராஜபக்சேவை (பெயரில் மட்டுந்தான்) குனிய வச்சி போலீஸ் டிரஸில் கும்மி எடுப்பார்.. அட போங்கப்பா... சினிமாவுக்கும் நிஜ வாழ்க்கைக்கும் வித்தியாசமே தெரியலப்பா இவருக்கு... :icon_idea: :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.