Jump to content

அகதிகள் பிரச்சினையில் இரட்டைவேடம் போடும் ஆஸி. அரசியல் கட்சிகள்!


Recommended Posts

[size=4]உள்ளதைச் சொல்லி நல்லதைச் செய்வோம்![/size]

[size=4]உலகத்தில் உள்ள பெரும்பாலான அரசியல்வாதிகளுக்குள்ள ஒற்றுமை என்னவென்றால் மக்களை அறிவுபூர்வமாக பரந்த மனப்பான்மையோடு சிந்திக்க விடாமல், உணர்ச்சிபூர்வமாகவும் குறுகிய மனப்பான்மையோடு சிந்திக்குமாறு பார்த்துக்கொள்வதுதான். அதில் ஆஸ்திரேலிய அரசியல் தலைவர்கள் மட்டும் விதிவிலக்காக இருக்க முடியுமா என்ன? இதற்கு எடுத்துக்காட்டாக தற்பொழுது ஆஸ்திரேலிய தலைவர்களால் விவாதிக்கப்படுகின்ற அகதிகள் பிரச்சனையைச் சொல்லலாம்.[/size]

[size=4]தன்னாட்டில் தனக்கே உரிமையற்ற நிலையில் அடக்குமுறைக்கு ஆளாகி தன்னுயிருக்குப் பயந்து உறவுகளைப் பிரிந்து உடமைகளை இழந்து உதவி கேட்டு ஓடிவரும் மனித உயிர்கள்தாம் இந்த அகதிகள். அத்தகைய மனித உயிர்கள் வருவதைத் தடுக்க தாம் காட்டும் முனைப்புக்குக் காரணமாக இந்த மகத்தான தலைவர்கள் சொல்வது ‘நமது தேசத்தின் எல்லைப் பாதுகாப்பு’. ஆனால் இது வெறும் கண் துடைப்பேயன்று வேறில்லை. மக்களின் உணர்வுகளைத் தவறான தரவுகளால் தூண்டிவிட்டு இவர்கள் காட்டும் ஏமாற்றும் வேலை.[/size]

[size=4]ஆஸ்திரேலியாவில் வெளிவரும் த ஏஜ் (The Age) பத்திரிகையின் குறியீட்டின்படி, கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் நாள்வரை வான்வழியாக ஆஸ்திரேலியாவிற்குள் நுழைந்து அனுமதிச்சீட்டு (விசா) இல்லாமல் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு வாழ்ந்து வருபவர்களின் மொத்த எண்ணிக்கை 59,340. இந்த எண்ணிக்கையில் உலகப் பொருளாதாரத்தில் அதிவேகமாக வளர்ந்து வரும் சீனாவைச் சேர்ந்தவர்கள் 7930 பேர். அடுத்ததாக வளர்ந்த நாடான அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் 4640 பேர், மலேசியாவைச் சேர்ந்தவர்கள் 4640 மற்றும் பிரித்தானியாவைச் சேர்ந்தவர்கள் 3650 பேர்.[/size]

[size=4]இந்தச் சட்டவிரோதக் குடியேறிகளை அதிகாரிகள் பல மாதங்களாக, வருடங்களாக வலைவீசித் தேடி வருகின்றனர். ஆனால் இந்த உண்மையைப் பற்றி நமது ஆஸ்திரேலிய அரசியல்வாதிகள் பேசாமல் வேடம் போடுகின்றனர். இந்த சட்டவிரோதக் குடியேறிகள் ஆஸ்திரேலியாவில் என்ன செய்கிறார்கள், எங்கு இருக்கிறார்கள் என்பதே அரசாங்கத்துக்குத் தெரியாது. இவர்களால் எமது நாட்டுப் பாதுகாப்புக்குக் குந்தகம் விளையுமென்ற கோணத்தில் ஏன் யாருமே பேசுவதில்லை?[/size]

[size=4]கடந்த ஆண்டு (2011-2012) உலக அகதிகள் எண்ணிக்கையில் ஆஸ்திரேலியாவில் குடியேறியவர்கள் வெறும் இரண்டு சதவீதம் மக்கள்தாம். மீதமுள்ள 98 சத வீத அகதிகள் குடியேறியுள்ளது ஐநா தீர்மானத்தில் கையொப்பமிட்டுள்ள ஏனைய நாடுகளில்தான். ஆனால் நம் நாட்டில்தான் பாராளுமன்ற விவாத நேரங்களும் ஆஸ்திரேலிய மக்களின் அடிப்படைத் தேவைகளில் கவனம் செலுத்த வேண்டிய பொறுப்புமிக்க அரசியல் தலைவர்களின் வாழ்க்கை நேரமும் அதிகமாக இந்த அப்பாவி அகதிகள் விடயத்தில் வீணாகிறது. ஏனென்றால் இரண்டு தேசிய கட்சிகளும் (Labor & Liberal) மக்கள் கவனத்தைத் திசைதிருப்பி தமது வாக்கு வங்கியை நிரப்புவதில் உன்னிப்பாகச் செயல்படுகின்றன.[/size]

[size=4]இனியாவது இவர்கள் நமது மக்களிடம் உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்வார்களா?[/size]

[size=4]-திரு ஆறுமுகம்[/size]

[size=4]http://tamilleader.com/mukiaya/5791-2012-08-28-11-38-01.html[/size]

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாரிய கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட எதிர்பார்க்கிறோம்; சமன் ரத்னப்பிரிய! 27 SEP, 2024 | 05:07 PM (எம்.ஆர்.எம்.வசீம்) வரலாற்றிலேயே  மிகப்பெரிய கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட எதிர்பார்க்கிறோம். ஐக்கிய மக்கள் சக்தியுடனான கலந்துரையாடலும் சாதகமான நிலைக்கு வந்துள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசிய கட்சி எடுத்துவரும் நடவடிக்கை தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.   இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,  பாராளுமன்ற தேர்தலுக்கு தற்போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் எதிர்க்கட்சியில் இருக்கும் அனைத்து கட்சிகளையும் இணைத்துக்கொண்டு தேர்தலுக்கு முகம்கொடுப்பதற்கே எதிர்பார்க்கிறோம்.   நாட்டு மக்களின் எதிர்பார்ப்பும் அவ்வாறு இருப்பதாகவே எமக்கு தோன்றுகிறது. அவ்வாறான பரந்துபட்ட கூட்டணியை அமைக்குமாறே அனைவரும் வற்புறுத்தி வருகின்றனர்.   அதனால் இந்த கூட்டணியை அமைப்பதற்காக தற்போது ஐக்கிய மக்கள் சக்தியுடனான கலந்துரையாடலை ஆரம்பித்திருக்கிறோம்.    அதேபோன்று மொட்டு கட்சியின் பெரும்பான்மை பிரிவினர், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுடனும் கலந்துரையாடல் இடம்பெற்று வருகிறது.    ஓரிரு தினங்களில் இந்த கலந்துரையாடல்களை முடிவுக்கு கொண்டுவர முடியுமாகும். அதனால் வரலாற்றில் பெரிய கூட்டணி அமைத்து இந்த பாராளுமன்ற தேர்தலில் பாேட்டியிட முடியுமாகும் என எதிர்பார்க்கிறோம். பல்வேறு தரப்பினர்கள் கட்சிகளுடன் கலந்துரையாடிய விடயங்களை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடனும் நாங்கள் கலந்துரையாடினோம்.    ரணில் விக்ரமசிங்கவின் ஆலாேசனையின் பிரகாரம் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இரண்டு தினங்களுக்கு முன்னர் கலந்துரையாடினோம். நேற்றும் கலந்துரையாடினோம்.    அந்த கலந்துரையாடல் சாதகமாக அமைந்துள்ளது. ஆரம்பத்தில் ஐக்கிய மக்கள் சக்தி இந்த பேச்சுவார்த்தைக்கு பின்வாங்கியபோதும் தற்போது அவர்கள் கலந்துரையாடல்களுக்கு இணக்கம் தெரிவித்து, ஆராேக்கியமான பல கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்கள்.    அதனால் தொடர்ந்தும் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி எப்படியாவது பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியாக போட்டியிடவே நாங்கள் எதிர்பார்க்கிறோம்.   கூட்டணி அமைத்து போட்டியிடுவதன் மூலமே எமக்கு தேர்தலில் எதிர்பார்ப்பொன்றை ஏற்படுத்திக்கொள்ள முடியும். எமது ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பும் அதுவாகும் என்றார். https://www.virakesari.lk/article/194920
    • நிலாமதியவர்களே, படித்துப் பாராட்டியமைக்கு நன்றி. கிறுக்க முயற்சிக்கிறேன்.  நாம்தானே ஓடிவந்துவிட்டோம். எங்கோ ஒதுங்கி ஓடிய காலங்களைத் திரும்பிப்பார்க்கும் போது வெறுமையாய் தெரிகிறது.    நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி சுவியவர்களே, படித்துப் பாராட்டியமைக்கு நன்றி. நீங்களே ஒரு சிறந்த படைப்புகளைப் தருபவர். உங்கள் வரிகள் உற்சாகம் தருவனவாக உள்ளன.  நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி ஈழப்பிரியனவர்களே, படித்துப் பாராட்டியமைக்கு நன்றி. உண்மைதான். ஆனால், சிங்களத்தின் சிந்தனையல்லவா எம்மை ஆக்கிரமித்துள்ளது.  நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.