Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை தமிழர்கள் அழிவிற்கு யார் காரணம்? கருணாநிதி கேள்வி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழர்கள் அழிவிற்கு யார் காரணம்? கருணாநிதி கேள்வி

சென்னை:"இலங்கைத் தமிழர்கள் அழிவிற்கு, யார் காரணம்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது அறிக்கை:அ.தி.மு.க., செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில், தாங்கள் மக்களுக்காக என்ன செய்யப் போகிறோம் என்று சொல்வதற்கு மாறாக, தி.மு.க.,வையும், என்னையும் திட்டுவது தான் நோக்கம் என்ற அடிப்படையில், வார்த்தைகளைக் கொட்டியுள்ளனர்.இலங்கைத் தமிழர்களுக்காக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், என் மீதான தாக்குதல் தான் முழுமையாக உள்ளது. கடந்த, 2009ம் ஆண்டில், இலங்கையில் இனக்கலவரம் உச்ச கட்டத்தில் இருந்த போது, மத்திய அரசை நான் வலியுறுத்தவில்லையென்றும், அப்பாவி இலங்கைத் தமிழர்கள் அழிவிற்கு, நான் தான் காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த, 2006ம் ஆண்டு, மே வரை ஆட்சியிலே இருந்த ஜெயலலிதா. இலங்கைத் தமிழர்களுக்காக என்ன செய்தார்? கடந்த, 2002ம் ஆண்டில், சட்டபையில் ஜெயலலிதா முன்மொழிந்த தீர்மானத்தில், ""பிரபாகரனை, உடனடியாக இலங்கை அரசு கைது செய்து, இந்திய அரசிடம் ஒப்படைப்பதற்கு, மத்திய அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். மேலும், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த, எந்த ஒருவரையும், இந்தியாவிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்று, மத்திய அரசை, இந்த சட்டசபை வற்புறுத்துகிறது' என, குறிப்பிடப்பட்டிருந்தது.

இலங்கை அரசின் அனுமதியைப் பெற்று, இந்திய ராணுவத்தை, இலங்கைக்கு அனுப்பி, பிரபாகரனை சிறை பிடித்துக் கொண்டு வர வேண்டும் என்பது தான், இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றிய லட்சணமா?அதே போல், கடந்த 2009ம் ஆண்டில், ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில், "இலங்கைத் தமிழர்களைக் கொல்ல வேண்டுமென, இலங்கை ராணுவம் எண்ணவில்லை. ஒரு யுத்தம், ஒரு போர் நடக்கும் போது, அப்பாவி மக்கள் கொல்லப்படுவர். இதில், எந்த நாடும் விதிவிலக்கல்ல. எங்கே யுத்தம் நடந்தாலும், அப்பாவி மக்கள் கொல்லப்படுவர்' எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், "இலங்கைத் தமிழர்களைப் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லவிடாமல், விடுதலைப் புலிகள், அவர்களைப் பிடித்து வைத்துக் கொண்டு, வலுக்கட்டாயமாக ராணுவத்தின் முன், ஒரு கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்' என்று, குறிப்பிட்டிருந்தார். ஜெயலலிதா இப்படியெல்லாம் சொன்னதால் தான், இலங்கை ராணுவத்தினர், இலங்கைத் தமிழர்களைக் கொன்று குவித்தனர்.இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=537830

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.