Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களை கொன்ற சிங்கள இனத்திற்கு தமிழ்நாட்டில் இடமில்லை - ஏற்காட்டில் போராட்டம்.

Featured Replies

'வெளியேறு வெளியேறு தமிழர்களை கொன்ற சிங்களர்கள் வெளியேறு'-விண்ணை முட்டும் முழக்கத்தோடு உலக புகழ் பெற்ற ஏற்காடு மான்போர்ட் பள்ளியை முற்றுகையிட்டனர் தமிழுணர்வாளர்கள்.

சேலம் ஏற்காட்டில் உள்ளது மான்போர்ட் பள்ளி. நடிகர் விக்ரம், அன்புமணி ராமதாஸ் போன்றோர் பயின்ற பிரபல பள்ளி. இங்கு சிங்கள கிரிக்கெட் வீரர்களுக்கு இரண்டு நாட்கள் பயிற்சி தரப்பட்டது. நம்ம தமிழினத்தையே அழித்த சிங்களவர்களுக்கு இங்கு தமிழ்நாட்டிலேயே பயிற்சியா என புயலென வெகுண்டேழுந்தனர் தமிழுணர்வாளர்கள்.

கொளத்தூர் மணியின் திராவிடர் விடுதலை கழகம்,விடுதலை சிறுத்தைகள்,தமிழக வழக்குரைஞர் மாணவர் கூட்டமைப்பு ,நாம் தமிழர் கட்சி,உட்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் பள்ளி முன் திரண்டனர்.

'உள்ளே பயிற்சி நடக்கிறது அதை நாங்கள் தடுக்க வேண்டும்' என முயன்றனர் .இங்கு வந்த வீரர்கள் நேற்றே சென்றுவிட்டனர் எனவே முற்றுகை வேண்டாம் என ஏற்காடு காவல்துறை தடுத்தனர் 'அப்படியென்றால் பள்ளி முதல்வர் பயிற்சி தந்தமைக்காக மீடியா மூலம் தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்'என்றனர்.

இதற்கு முதலில் காவல்துறை அனுமதி மறுத்ததால் மீண்டும் முழக்கத்தால் மான்போர்ட் அதிர்ந்தது...நம்மிடம் பேசிய தி.வி.க ஏற்காடு செயலாளர் பெருமாள்,'நம் இனத்தை அழித்தவர்களுக்கு இங்கு பயிற்சியா?முதலில் தமிழ்நாட்டில் சிங்கள ராணுவ வீரர்களுக்கு பயிற்சி தந்தனர்.

மத்திய அமைச்சர் ஆணவமாக பெட்டி வேறு தருகிறார்.அப்படி இருக்க இங்கோ சிங்கள கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்சி தருகின்றார்.இப்படியே போனால் தமிழகத்தை சிங்களத்திற்கு தாரை வார்த்து தந்துவிடுவார்கள் போல.இதை அனுமதிக்கவே முடியாது.

ஒரு சிறுபான்மை பள்ளியாக இருந்துகொண்டு உணர்வற்று உள்ளார்களே...அங்கு ஈழத்தில் சிங்கள அல்லாத அணைத்து வழிபாட்டு தளங்களையும் குண்டு வைத்து தகர்த்தனர் அந்தளவு கொடூரம் செய்த ஒரு இனத்தை சேர்ந்தவர்களுக்கு எப்படி இங்கு பயிற்சி தரலாம்?'என்றார்.அதன் பின் ஏற்காடு இன்ஸ்பெக்டர் டி.எஸ்.பிஇடம் தகவல் சொல்லி,முதல்வரிடமும் பேச அவர் ஒப்புகொண்டார்.நான்கு அமைப்பையும் சேர்ந்த முக்கிய தோழர்களை மட்டும் உள்ளே அனுமதிக்க அங்கு வந்தார் பள்ளி முதல்வர் வர்கீஸ்...

'தமிழர்களை கொன்ற சிங்கள இனத்தை சேர்ந்தவர்களுக்கு எப்படி நம் தாய் தமிழ்நாட்டிலேயே பயிற்சி எடுக்க அனுமதி தரலாம்?ஒருவேளை நீங்கள் மலையாளியாக இருப்பதால் தமிழர்கள் மீது அக்கறையில்லாமலும்,உணர்வற்றும் இருப்பதாக நாங்கள் கருதலாமா?'என்றனர் உணர்வாளர்கள்.

'இல்லை நான் இங்கு வந்ததில் இருந்து தமிழர் தான்'என மறுத்த வர்கீஸ்,'இங்கு பயிற்சி நடக்கவில்லை கிரிக்கெட் போட்டி தான் நடந்தது 14 வயது,16 வயது சிறுவர்களுக்கு தான் இங்கு போட்டி நடந்தது.அவர்களும் நேற்றே கிளம்பிவிட்டனர்.தற்போது இங்கு யாரும் இல்லை. சிறுவர்கள்,மாணவர்களிடம் இன பேதம் கிடையாது என நினைத்தேன்.

மேலும் அவர்கள் இங்கு வந்ததே எனக்கு தெரியாது இருந்தாலும் தமிழர்கள் உணர்வு சம்மந்தப்பட்டதால் இது போல் இனி சிங்களவர்களை இங்கு அனுமதிக்கமாட்டோம் மேலும் தற்போது அவர்களை அழைத்து போட்டி நடத்தியதற்கு வருத்தம் தெரிவித்துகொள்கிறேன்'என்றார்.

இதன் பின் போராட்டம் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் திரும்பிய தமிழுணர்வாளர்கள் இது மற்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டும் தமிழர்களை கொன்ற சிங்கள இனத்திற்கு தமிழ்நாட்டில் இடமில்லை எங்கும் கால் வைக்ககூடாது...என்றனர்.

http://thaaitamil.com/?p=30579

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.