Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழம் சிறீலங்காவினால் தடை செய்யக்கூடியதா? - தாயகத்தில் இருந்து வீரமணி

Featured Replies

‘தமிழீழம்’ இது தமிழ் மக்களின் உயிர் மூச்சு. உலகம் பூராகவும் பரந்து வாழ்கின்ற தமிழர்களின் தாயகம். சிங்களத் தீவில் தமிழ் மக்களை அடக்கி ஆள்வோரிடமிருந்து விடுதலை பெறத் துடித்த தமிழ் மக்கள் ஒன்று திரண்டு அமைத்துக்கொண்ட தனித் தமிழ்ப் பூமி. தமிழர்களின் தலைமகன் பிரபாகரனால் கட்டமைக்கப்பட்ட அழகிய பூங்கா. எந்தவித ஆசாபாசங்களும் இல்லாமல் போராடிய பல்லாயிரக்கணக்கான மாவீரர்களின் தியாகத்தால் கட்டி

யெழுப்பப்பட்ட தேசிய நாடு. விலை மதிக்க முடியாத தியாகங்களைப் புரிந்த புனிதர்கள் உறங்குகின்ற புண்ணிய பூமி. தமிழ் மக்களால் நேசிக்கப்படுகின்ற தனித் தமிழ் நாடு.

மூன்று தசாப்த காலமாக தியாகங்களைப் புரிந்து கட்டியெழுப்பப்பட்ட இந்தப் புண்ணிய தேசத்தை உலகின் பல நாடுகளுடன் இணைந்து சிதைத்த சிறீலங்கா அரசாங்கம், இன்று இந்தப் புண்ணிய பூமியின் பெயரையே தடை செய்யப்போவதாகக் கூறுகின்றது. ‘தமிழீழம் என்ற சொல்லைத் தடை செய்வது தொடர்பில் நாம் நடவடிக்கை எடுக்கவுள்ளோம்’ என்று சிறீலங்காவின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் அண்மையில் கூறியிருக்கின்றார். தமிழீழம் என்ற சொல்லைத் தடை செய்வது சாத்தியமா? இதனைத் தடை செய்ய அரசாங்கம் சிந்திப்பதற்கு காரணம் என்ன? அதுவும் இந்தக் காலத்தில் ஏன் அரசாங்கம் இவ்வாறு சிந்திக்கின்றது? என்ற எண்ணம் பலரிடம் தோன்றியிருக்கின்றது.

தமிழீழத்தை தடை செய்வதற்கு அரசாங்கம் முயற்சிப்பதற்கு முக்கிய காரணம், அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற தமிழீழ ஆதரவாளர் மாநாடு. தமிழீழம் என்ற பதத்திற்கு இந்த மாநாட்டில் தான் வியாக்கியானம் எழுந்தது. தமிழீழம் என்ற பதத்தை இங்கு பயன்படுத்தக் கூடாது என்று இந்திய மத்திய அரசு தடை விதித்தது. இந்தத் தடையுத்தரவைத் தொடர்ந்தே தற்போது சிறீலங்காவிலும் இந்த விடயம் குறித்துச் சிந்திக்கப்பட்டிருக்கிறது.

சிறீலங்கா மட்டுமல்ல உலக நாடுகளும் இங்கு ஒரு விடயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். தமிழீழம் என்பது இல்லாத பெயர் அல்ல. புராதன காலத்திலிருந்தே இந்தப் பெயர் பயன்பாட்டில் இருந்திருக்கிறது. புராதன காலத்தில் ஒட்டுமொத்த இலங்கையும் ஈழம் என்றே அழைக்கப்பட்டது.

அந்தக் காலத்தில் ஈழத்தின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் தமிழ் மக்களே வாழ்ந்து வந்தனர். வன்னி இராச்சியம் என்றும் யாழ்ப்பாண இராச்சியம் என்றும் அப்போது அழைக்கப்பட்ட இப்போதைய வடமாகாணத்தில் பண்டாரவன்னியன், சங்கிலியன் போன்ற சிறந்த தமிழ் மன்னர்கள் எவருக்குமே அஞ்சாத துணிவோடு ஆட்சி புரிந்த வரலாறுகள் இன்றுவரை எழுத்து ஆதாரங்களுடனும் இலக்கிய ஆதாரங்களுடனும் பேணப்பட்டு வருகின்றன.

அன்றைய காலத்தில் சிங்கள மன்னர்கள் தமிழ் மன்னர்களுக்கு திறை செலுத்தியே தமது ஆட்சியைத் தக்கவைத்தனர். இதுவும் நிரூபிக்கப்பட்ட வரலாற்று உண்மை. கடந்த காலங்களில் மாணவர்களின் பாடத்திட்டங்களிலும் இந்த வரலாறு உள்ளடக்கப்பட்டிருந்தது. கடந்த காலங்களின் சிறீலங்காவின் நிலப்பிரிப்புகள், இதன் ஆட்சி அலகுகள், சிறீலங்காவின் ஆட்சி பீடங்களில் தமிழ் மன்னர்களின் ஆதிக்கம் போன்றவற்றை தமிழ் மாணவர்களும் அறிந்துகொள்ளும் வகையில் இந்தப் பாடத்திட்டம் அமைந்திருந்தது.

ஆனால் தற்போது, தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் தமிழர்களின் வரலாறுகளை திட்டமிட்டு மூடி மறைக்கும் செயற்பாட்டில் ஆட்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தமிழர்களின் ஆட்சி அலகுகள், தமிழ் மன்னர்களின் வீரதீரங்கள், ஐரோப்பியர்களுக்கு எதிராக தமிழ் மன்னர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் போன்ற விடயங்கள் அனைத்தும் தற்போது பாடத்திட்டங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இதனால் தமிழ் மாணவர்கள் திரிவுபடுத்தப்பட்ட வரலாற்றையே கற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

ஆரம்பத்தில் ஈழம் என்று அழைக்கப்பட்ட இலங்கையின் தமிழர் வாழ்ந்த பகுதிகளே இன்று தமிழீழம் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் தான் தமிழீழம் என்ற வார்த்தைக்குச் சொந்தக்காரன் என்றே சிறீலங்கா அரசு தப்புக்கணக்கு போடுகிறது. தமிழீழம் என்ற கற்பனை உலகத்தை நோக்கி பிரபாகரன் தமிழ் மக்களைத் தவறாக வழிநடத்தினார் என்றும் சிறீலங்கா அரசாங்கம் பிரச்சாரம் செய்து வருகின்றது. பிரபாகரன் தமிழீழம் என்ற கனவுக்காகவே கட்டாயப்படுத்தி இளைஞர்களைப் படையில் சேர்த்து வீணாக அவர்களைப் பலி கொடுத்தார் என்றும் சிறீலங்கா அரசு கூறுகிறது.

உண்மை நிலைப்பாடு அதுவல்ல. தேசியத் தலைவர் பிரபாகரன் மட்டுமே தமிழீழத்திற்கு சொந்தக்காரர் அல்ல. இது சிறீலங்கா அரசாங்கத்திற்கும் ஆட்சியாளர்களுக்கும் தெரிந்த உண்மை. ஒட்டுமொத்த தமிழ் மக்களும் இணைந்தே தமிழீழம் என்ற தனிநாட்டுக்காகப் போராடினார்கள். தேசியத் தலைவர் பிரபாகரன் அந்தப் போராட்டத்தை வழிநடத்தினார். அதற்காக பிரபாகரன் இளைஞர்களைப் பலி கொடுத்தார் என்று கூறுவதையோ, தமிழ் மக்களின் துன்பங்களுக்கு இவர்தான் காரணம் என்று கூறுவதையோ ஏற்றுக்கொள்ள முடியாது. எந்தவொரு தமிழ் மக்களும் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

இலங்கை சுதந்திரம் பெற்றதிலிருந்து காலம் காலமாக பதவிக்கு வந்த சிங்கள ஆட்சியாளர்கள் தமிழ் மக்களை அடக்கியாண்டார்கள். தமிழ் மக்களை இரண்டாந்தரக் குடிமக்களாகவே இவர்கள் நோக்கினார்கள். இதன் விளைவாகவே தமிழ் மக்கள் போராடத் தலைப்பட்டனர். தமிழரின் போராட்டங்கள் ஆரம்பத்தில் அகிம்சைப் போராட்டங்களாகவே ஆரம்பித்தன. 1960, 1970 களில் மகாத்மா காந்தியின் காந்தீயக் கொள்கைகள் தமிழ் மக்களை ஆக்கிரமித்திருந்த காரணத்தால் அன்று தமிழ் மக்கள் அகிம்சைக் கொள்கைகளைக் கடைப்பிடித்து தமது போராட்டங்களை முன்னெடுத்தனர்.

ஆனால், காந்தீயக் கொள்கைகளின் பிறப்பிடமான இந்தியாவே தமிழ் மக்களின் அகிம்சைக் கொள்கைகளுக்கும் அகிம்சைப் போராட்டங்களுக்கும் மதிப்பளிக்கவில்லை. ஈழத்துக் காந்தி என்று போற்றப்பட்ட தந்தை செல்வநாயகத்தால் முன்னெடுக்கப்பட்ட அகிம்சைப் போராட்டத்திலிருந்து தியாகி திலீபன் வரை முன்னெடுக்கப்பட்ட அகிம்சை வழியிலான போராட்டங்களுக்கு எவருமே மதிப்பளிக்கவில்லை.

அகிம்சாவாதிகளுக்கு மரணமே பரிசாக வழங்கப்பட்டது. இந்த நிலையிலேயே தமிழ் மக்கள் தனியாகப் பிரிந்து சென்று தமிழீழத் தனியரசை அமைப்பதற்காக ஆயுதப் போராட்டத்தை தீவிரப்படுத்தினர். தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் இந்தப் போராட்டத்தை வழிப்படுத்தினார். தலைவனின் வழியில் தமிழீழத்தை அடைவதற்காக ஆயிரம் ஆயிரம் இளைஞர்கள் தாங்களாகவே முன்வந்து போராடினர். தமிழ் மக்களின் நிம்மதியானதும் சுபீட்சமானதுமான சுதந்திரத்தைப் பெறுவதற்காக தமிழ் இளைஞர்கள் ஒப்பற்ற தியாகங்களைப் புரிந்தனர். தமிழ் மக்களினதும் போராளிகளினதும் தலைவரதும் சொல்லும் செயலும் தனித் தமிழீழமாகவே இருந்தன.

சிறீலங்காவின் தற்போதைய ஆட்சியாளர்களோ சர்வதேசத்திலுள்ள சில மேதாவிகளோ நினைப்பதைப் போல தமிழ் மக்கள் இல்லாத ஒரு பெயரை உருவாக்கி அதனைப் பெறுவதற்காகப் போராடவில்லை. தமிழீழம் என்பது ஏற்கனவே இருந்தது. ஆங்கிலேயரின் எதிர்கால, தீர்க்க தரிசனமற்ற சிந்தனைகளாலும் சிறீலங்கா சுதந்திரம் பெற்ற காலத்தில் தமிழ் மக்களின் தலைவர்களாக இருந்து சிங்கள பேராண்மைவாதத்தின் அடிவருடிகளாகச் செயற்பட்ட பொன்.இராமநாதன், பொன்.அருணாசலம் போன்றோரின் தன்மானமற்ற செயற்பாடுகளாலுமே தமிழீழம் சிங்களவர்களிடம் பறிபோனது. இந்தத் தலைவர்கள் அன்று தமிழ் மக்களில் உண்மையான அக்கறையுடன் செயற்பட்டிருப்பார்களாயின் தமிழ் மக்களும் இன்று இந்த நாட்டில் சகல உரிமைகளுடனும் சமத்துவமாக வாழக்கூடிய ஒரு நிலை ஏற்பட்டிருக்கும்.

ஆனால் சிங்கள மக்கள் தேரில் வைத்து இழுக்குமளவிற்கு இந்தத் தமிழ்த் தலைவர்கள் அன்று அவர்களுக்கு விசுவாசமாகச் செயற்பட்ட காரணத்தாலேயே இன்று தமிழ் மக்கள் முள்ளிவாய்க்கால் பேரவலத்தைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டதென்பது வரலாற்று உண்மை. இதனை மேற்படி தமிழ்த் தலைவர்களின் செயற்பாடுகளைத் தெரிந்தவர்கள் உணர்ந்துகொள்வார்கள்.

தமிழர்களுக்காகப் போராடிய அனைத்துத் தலைவர்களுக்குள்ளும் பிரபாகரன் அவர்களே நேர்மையுடன், யாருக்கும் விலைபோகாமல், சலுகைகளுக்கு அடிபணியாமல் மக்களின் நலன் கருதி ஒரே இலட்சியத்தில் நின்று போராடினார். 1987 ஆம் ஆண்டு இந்தியா கேட்டதற்கிணங்க தமிழீழக் கோட்பாட்டை தலைவர் பிரபாகரன் விட்டுக்

கொடுத்திருந்தால் வடக்கு-கிழக்கின் முதலமைச்சராகி இராஜபோகத்தை அனுபவித்திருக்க முடியும். இன்றுவரை அவர் மன்னனாக வாழ்ந்திருக்க முடியும்.

ஆனால் தனிமனித சொத்துச் சுகங்களுக்கு அப்பால் தமிழ் மக்களின் சுதந்திரமே முக்கியம் என்று தலைவர் சிந்தித்தார். இல்லாத ஒன்றுக்காக தலைவர் போராட்டத்தை முன்னெடுக்கவில்லை. ஏற்கனவே இருந்த தமிழீழத்தைப் பெறுவதற்காக, தமிழ் மக்களின் தாயக பூமியை மீட்பதற்காக, மாற்றானிடம் மண்டியிடாத வாழ்வைப் பெறுவதற்காகவே தலைவர் தனக்கு கிடைத்த தனிமனித சொத்துச் சுகங்களை வெறுத்து ஒதுக்கினார். தமிழ் மக்களின் விடுதலையும் சுதந்திரமுமே எமது போராட்டத்தின் இலட்சியம் என்பதையும் தமிழீழ விடுதலைப் போராட்டம் தனிமனித போராட்டம் அல்ல இது ஒட்டுமொத்த தமிழ் மக்களினதும் போராட்டம் என்பதையும் தமிழீழ தேசியத் தலைவர் சர்வதேசத்திற்கு உணர்த்தினார்.

ஓட்டுமொத்த விடுதலையையும் எமது போராட்டம் வலியுறுத்தியதாலேயே இது சர்வதேசத்தின் பார்வையையும் பெற்றுக்கொண்டது. ஆனால் சிறீலங்கா அரசுக்கு முண்டுகொடுத்த சில சர்வதேச நாடுகள் இணைந்து எமது விடுதலைப் போராட்டத்தை அழித்துள்ளன. இந்த அழிப்பின் பின்னர் தற்போது எமது உயிரினும் மேலான தாயகத்தின் பெயரையே இல்லாமல் செய்வதற்கான, தமிழீழம் என்ற தாரக மந்திரத்தை தடை செய்வதற்கான முயற்சியில் சிறீலங்கா அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

தமிழீழம் என்பது தமிழ் மக்களின் கற்பனை உலகம் என்று கூறிக்கொண்டிருக்கின்ற சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் தமிழீழத்தை தொடர்ந்தும் அங்கீகரிக்க மறுக்கின்ற இந்திய அரசாங்கமும் ஒன்றை மட்டும் மனதில் வைத்திருக்க வேண்டும். கற்பனை ஒளி வட்டமாகக் கருதிய சந்திரனிலேயே மனிதன் கால் பதித்திருக்கிறான். மில்லியன் கணக்கான து£ரத்திற்கு அப்பாலுள்ள செவ்வாய்க்கு கியூரியோசிற்றி என்ற ஆய்வுக் கலத்தை அனுப்பி அதைக் கண்காணித்து பத்திரமாக அங்கு தரையிறக்கியிருக்கி மனித குலம் வெற்றி கண்டிருக்கிறது.

இவையெல்லாம் முன்பொரு காலத்தில் கற்பனை உலகமாகவே இருந்தன. ஆனால் இன்று மனிதன் இவற்றை வெற்றிகொண்டுவிட்டான். இதேபோன்று, தமிழீழம் என்ற எமது தாயகத்தை கற்பனை என்று வர்ணிப்போருக்கு பெரும் பதிலடி கொடுத்து மிக விரைவில் தமிழினம் தமிழீழத் தனியரசை வெற்றிகொள்ளும். அதுவரை எந்தவொரு தமிழனும் உறங்க மாட்டான். உறங்கவும் கூடாது.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம். தமிழரின் தாகமும் தமிழீழத் தாயகம்.

நன்றி : ஈழமுரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.