Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மண்ணைக் காக்க வழி என்ன?

Featured Replies

விடுதலைக்கான ஆயுதம் தாங்கிய விடுதலை அமைப்புக்கள் தோற்றம்பெற்றிருந்தாலும், சிங்கள இராணுவத்திற்கு எதிரான போராட்டங்கள் இடம்பெறாத அக்காலத்தில் தமிழர் தேசங்களை சிங்கள தேசம் எவ்வாறு ஆக்கிரமிக்கின்றது என்பதையும் அதற்கு போராட்டம் தான் வழி என்பதையும் வலியுறுத்தி 18.05.1980 அன்று ‘சுதந்திரன்’ பத்திரிகையின் ஆசிரியர் கோவை மகேசன் அவர்கள் எழுதிய ஆசிரியர் தலையங்கமாகும்.

ஈழத்தமிழினத்தின் தாயகமான இலங்கையின் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களைக் கைப்பற்றி, அங்கு சிங்கள பௌத்தர்களைக் குடியேற்றுவதன் மூலம் தமிழ்த் தாயகத்தை விழுங்கி ஏப்பமிட்டு இலங்கைத் தீவு முழுவதையும் சிங்கள பௌத்த நாடாக்க வேண்டும் என்ற இன ஒழிப்புத் திட்டம் இன்று நேற்று உருவாக்கப்பட்டதல்ல. 1932ம் ஆண்டு டொனமூர் அரசியலமைப்பின் மூலம் மெல்ல மெல்ல சிங்களப் பெரும்பான்மை இனத்திடம் அரசியல் அதிகாரம் செல்லத் தொடங்கிய காலத்திலேயே இச்சூழ்ச்சித் திட்டம் தீட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.

1948 ஆம் ஆண்டு சிங்களவர் கைக்கு முழு அரசியல் அதிகாரமும் போன பின்னர், கடந்த 32 ஆண்டுகளாக இந்தக் குடியேற்ற கொள்கை மிகவும் தீவிரமாகவும் திட்டமிட்டும் செயல்படுத்தப்பட்டது. தமிழீழ பிரதேசங்களில் சிங்கள் மக்களைத் திட்டமிட்டு குடியேற்றி தமிழ் பேசும் மக்களின் நிலத்தையும் அவர்களின் பொருளாதார வளத்தையும் சூறையாடும் இக் கொடூர திட்டத்தின் சிற்பி ஐக்கிய தேசிய கட்சி ஆகும். அதிலும் குறிப்பாக அக்கட்சியின் தலைவர்கள் ஆன டி.எஸ்.சேனநாயக்காவும், ஜே.ஆர்.ஜெயவர்தானுவுமே சிங்கள குடியேற்ற கொள்கையின் பிதாமகான்கள் ஆவர்கள்.

30 ஆண்டுகால திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தின் விளைவாக, தமிழீழ மண்ணில் கிட்டத்தட்ட 2000ம் சதுரமைல் நிலப்பரப்பை இதுவரை எமது எதிர்பின் மத்தியில் இழந்து விட்டோம். தமிழ் பேசும் பிரதேசத்தில் இரண்டு சிங்கள தொகுதிகள் உருவாகிவிட்டன. சிங்கள குடியேற்றத்தை தடுத்து நிறுத்தும் அடிப்படை நோக்குடனே தந்தை செல்வா அவர்கள் S.W.R.D.பண்டாரநாயக்கவுடனும், டட்லி சேனநாயகா உடனும் இரு ஒப்பந்தங்களை செய்து கொண்டார். பின்னர் கிழித்து வீசப்பட்டாலும் குடியேற்றக் கொள்கைப் பற்றி அவற்றில் பின்வருமாறு ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தன.

‘சம்மந்தப்பட்ட பிரதேச சபைகளில் உள்ளடக்கிய பிரதேசங்களை குடியேற்ற திட்டங்களுக்கு ஆட்களை தெரிவு செய்யும் அதிகாரமும், அத்தகைய குடியேற்ற திட்டங்களில் வேலை செய்வோரை தெரிவு செய்யும் அதிகாரமும் பிரதேசசபைகளிடம் விடப்படும்.’ அதுமட்டும்மின்றி S.W.R.D.பண்டாரநாயக்க பாராளுமன்றத்தில் 06.08.1957ல் உரையாற்றும் போது ஓர் உண்மையை ஏற்றுக் கொண்டார். அதாவது ‘வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிங்கள பெரும்பான்மை பிரதேசமாக மாற்றுவதற்கோ அல்லது அப்பகுதியில் வாழும் தமிழ் பேசம் மக்களுக்குப் பாதகமாக முறையிலோ குடியேற்றம் ஒரு கருவியாக பயன்படுத்தக் கூடாது’ என்று S.W.R.D.பண்டாரநாயக்க ஏற்றுக்கொண்டார்.

இதைத்தான் அன்று இன்றைய சனாதிபதி ஜெ,ஆர்.ஜெயவர்தனா எதிர்த்து சிங்கள மக்களை திரட்டி கண்டி யாத்

திரையை மேற்கொண்டார் என்பதும் இன்று நினைவுகூரப்பட வேண்டியதாகும். 24.03.1965ல் டட்லி சேனநாயக்காவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்திலும் குடியேற்றம் சம்மந்தமாக பின்வரும் உடன்பாடு காணப்பட்டது.

அ) வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள நிலம் அந்தந்த மாவட்டங்களில் வாழும் நிலம் அற்றோர்கே முதலில் வழங்கப்பட வேண்டும்.

ஆ) இராண்டாவதாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

இ) இலங்கையில் ஏனைய பிரசைகளுக்கு குறிப்பாக இலங்கையின் ஏனைய பகுதிகளில் வாழும் தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

குடியேற்ற கொள்கைகள் சம்மந்தமாக மேற்கண்டவாறு இரண்டு உடன்படிக்கைகள் முன்பு ஏற்பட்டிருக்கும் போது அதையெல்லாம் அலட்சியம் செய்து விட்டு 1977 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த சனாதிபதி செயவர்தனா வெளிப்படயாகவே நஞ்சைக்கக்கினார்.

தமிழ் மக்களுக்கு என்று இலங்கைத்தீவில் பாரம்பரிய பிரதேசம், தாயகம் என ஒன்று கிடையவே கிடையாது என்றார். வடக்கில் சிங்களவரையும் தெற்கில் தமிழரையும் குடியேற்றுவதே தமது அரசின் கொள்கை என்றார். இந்தியா சென்றிருந்த போதும் இதையே சொன்னார். இன்றைக்கு தனது இராகத்தை சிறிது மாற்றி அந்தந்த மாவட்டங்களில் இன வீதாசாரம் மாறுபடாமல் குடியேற்றுவதே தமது கொள்கை என்றார். இங்கே தான் கொடிய நஞ்சு தொங்கி நிற்கிறது. கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மக்களின் பிரதேசத்தில் தமிழ் மக்களின் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாது திட்டமிட்டு சட்டரீதியாகவும் சட்டவிரோதமாகவும் சிங்களவரை குடியேற்றி தமிழ் மாவட்டங்களில் சிங்கள இன விகிதாசாரத்தை வேகமாக அதிகரித்து விட்டு இப்போது இன்றைய இனவிகிதாசாரத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் என்றால் அதை ஏற்பதற்கு தமிழ் பேசும் மக்கள் அடிமுட்டாள்கள் அல்ல.

தமிழ் ஈழம் தனிநாடு, இறைமையுள்ள நாடு அந்த நாட்டில் சிங்கள சிறீலங்கா அரசு அத்து மீறிப்பிரவேசித்து தனது படைபலத்தின் உதவியுடன் குடியேற்ற திட்டங்களை தொடங்கி தமது மக்களை சர்வதேச சட்டவிதிகளுக்கு முரணானக் குடியேற்றி இருக்கிறது. இப்படி குடியேற்றப்பட்டவர்களை எல்லாம் திரும்பப் பெறும் படி(DECOLONIZE) சிறீலங்கா அரசிடம் தமிழீழ இயக்கம் வற்புறுத்த வேண்டுமே தவிர சிறீலங்கா அரசின் திட்டமிட்ட சூழ்ச்சியால் மாற்றியமைக்கப்பட்ட இன்றைய இன விகிதாசாரம் என்ற ஜே.ஆரின் மாயைக்குள் தெரிந்தோ தெரியாமாலோ விழுந்து விடக்கூடாது.

திருகோணமலை மாவட்டத்தில் 1881 முதல் 1921 வரை 4 சதவீதத்தை கொண்டிருந்த சிங்கள் மக்களின் தொகை, டொனமூர் அரசியல் அமைப்பு ஏற்பட்ட பின்னர் 1946 ஆம் ஆண்டு 20.6 வீதமாக உயர்ந்தது. 1971ல் 28.8 சதவீத

மாகிவிட்டது. 1981ல் எடுக்கப்படவுள்ள குடிசன விகிதாசாரப்படி இது நிச்சயம் மேலும் அதிகரிக்கும். சிங்கள் குடியேற்றத்தை பல முனைகளிலும் நடத்தி கொண்டு இன வீதாசாரக் குடியேற்றக் கொள்கையையும் ஜே.ஆர்.பேசுவது, தமிழினத்தை நாளாவட்டத்தில் அழிப்பதேயாகும் உண்மையில் ஜே.ஆர். ஒரு தார்மீக வாதியாக இருந்தால், டொனமூர் அரசியல் அமைப்பு ஏற்படும் முன்னர் திருகோணமலையில் மாற்றமின்றி இருந்து வந்த இன வீதசாரத்தை அங்கீகரிக்க வேண்டும். அதற்கு பிறகு குடியேற்றபட்டவர்களை அங்கிருந்து (DECOLONIZE) வெளியேற்ற வேண்டும்.

எனவே தமிழ் மக்கள் உடனடியாக கிடைக்கும் அற்ப சொற்ப நன்மைகளை மனதிற் கொண்டு அடிப்படை நிலையை தளரவிடக் கூடாது. தமிழீழ மண்ணில் சில பகுதிகளைச் சட்ட விரோதச் சிங்கள குடியேற்றத்தால் இன்று இழந்தாலும், நாளை நமக்கு வல்லமை சேரும்போது இழந்த மண்ணை மீட்டெடுப்போம் என்று தளராத உறுதியுடன் அடிப்படைக் கொள்கையில் இருந்து சுதந்திர கோரிக்கையிலிருந்து கிஞ்சிற்றும் விட்டுக் கொடுக்காமல் தொடர்ந்து விடாப்பிடியாக போராட வேண்டும்.

போராட்டம் ஒன்றே நமது மண்ணைக் காக்கவும், நமது மண்ணை மீட்கவும், நமது மண்ணில் அந்நியர் குடியேறு

வதை தடுக்கவும் ஒரே ஒரு வழியாகும் வேறு எந்த வழியும் நன்மைபோல் தோன்றிக் காலகதியில் நமது இனத்தை படுகுழிக்குள் தள்ளிவிடும். இதுவே நமது உறுதியான நம்பிகையாகும் தாயகம் மண்ணை காப்பதுக்கு வழி தாயகத்தை மீட்பது தான்.

சமாதனம் என்றால் என்ன?

“.....நேர்மையான சனநாயகத் தன்மையதான சமாதானம் என்பதன் மூலம் இவ்வரசு குறிபிடுவது பிரதேச சேர்ப்புகள் இல்லாத அதாவது வெளிநாட்டுப் பிரதேசத்தை பிடித்துக் கொள்ளுதல் இல்லாத, பிற தேசிய இனங்களைப் பலவந்தமாக சேர்த்துக் கொள்ளுதல் இழப்பீடுகள் இல்லாத உடனடி சமாதானம் ஆகும்.

சிறிய அல்லது பலக்குறைவான ஒரு தேசிய இனம் தானே மனமுவந்து தெளிவாகவும் கறாராகவும் தனது உடன் பாட்டையும் விருப்பத்தையும் வெளியிடாதிருக்கையில் ஒரு பெரிய வலிமைவாய்த அரசோடு எவ்விதத்திலும் அது ஒன்று சேர்க்கபடுதலை அரசு குறிப்பிடுகின்றது.

எந்த ஒரு தேசமும் பலவந்தமாக பிறிதொரு அரசியல் அமைப்புக்குள் இருத்தி வைக்கப்பட்டிருக்குமாயின் அந்த தேசம் வெளியிட்ட விருப்பத்திற்கு மாறாக இவ்விருப்பம் வெளியிடப்பட்டது பத்திரிகைகள் மூலமானாலும் சரி, மக்களது பொதுக் கூட்டங்கள் மூலமானலும் சரி, அரசியல் கட்சி தனது தீர்மானங்கள் மூலமானலும் சரி, அல்லது தேசிய ஒடுக்கும் முறைக்கு எதிராக ஏற்படும் ஒழுங்குக் குலைவுகள், கலவரங்கள் மூலமானலும் சரி எல்லம் ஒன்று தான்”...

- மாமேதை லெனின்.

நன்றி : ஈழமுரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.