Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னேஸ்வரம் மிருகபலித் தடை உலகிற்கு சொல்லும் செய்தி என்ன? - தாயகத்தில் இருந்து இளங்கீரன்

Featured Replies

முள்ளிவாய்கால் மண்ணில் இரத்த ஆறு ஓடியபோது, பூவும் பிஞ்சும் உடல் சிறதிக்கிடந்த போது, பிணங்களின்மேல் குண்டு மழை பொழிந்தபோது, பசித்த வயிற்றோடு வந்த எங்கள் சொந்தங்களின் ஆடைகிழித்து சிங்கள காடையன் மானத்தைத் தின்றபோது, சிங்களவனுக்கு வந்திராத அக்கறை, பரிவு மிருக பலியிடலின்போதாவது வந்திருக்கின்றதே என்று எண்ணும்போது வியப்பாகவே இருகின்றது.

முன்னேஸ்வரம் ஆலயத்தில் மிருகபலிக்கு எதிராக காட்டுமிராண்டி மேர்வின் சில்வாவும், இனவாத பௌத்த பிக்குகளும் நடத்திய போராட்டத்தையடுத்து மிருகபலியிடலை நிறுத்துமாறு சிறீலங்கா ஜனாதிபதி உத்தரவிட்டிருக்கின்றார். இந்தச் செய்தியை தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலுமுள்ள தமிழர்கள் மிகவும் சாதாரணமாகவே எடுத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்த நடவடிக்கைக்குப் பின்னால் சாதாரணமான எவையும் இல்லை.

நாம் முதலில் மிருகபலியிடலை எதிர்க்கின்றோம். ‘நீ உன்னை எவ்வாறு கவனித்துக் கொள்கின்றாயோ, உன்மீது எவ்வாறு அக்கறை எடுத்துக் கொள்கின்றாயோ அவ்வாறே ஏனைய உயிர்களையும் கவனித்துக் கொள், அக்கறை எடுத்துக்கொள்.’ என்பதைத்தான் இந்து தர்மம் போதிக்கின்றது. உயிர் வதையை இந்து மதம் ஒருபோதும் போதிக்கவில்லை. உலகத்திற்கு இந்து தர்மம் மட்டுமே அன்பு நெறியை போதித்தது. ஆனால் கிராமிய வழி பாட்டு நெறிகளிலிருந்தே செம்மைப்பாடத பலியிடல் வழிபாட்டு முறைகள் இந்து சமயத்திற்குள் நுழைந்ததாக சொல்லப்படகின்றது.

எது எப்படியோ நாம் தெளிவாக மிருகபலியிடலை எதிர்க்கின்றோம். மரபுகளும், சம்பிரதாயங்களும் பின்பற்றப்

படவேண்டும். ஆனால் அவை மீண்டும் எம்மை வனாந்தர மனிதர்களாகக் காட்டிக்கொள்ள கூடாது. இந்த விடயங்கள் ஒருபுறமிருக்க, இவ்வாறான மிருகபலியிடலுக்கு எதிராக எதற்காக மேர்வின் சில்வாவும், பௌத்தபிக்குகளும் போராடவேண்டும் என்ற கேள்வியை தமிழர்கள் எழுப்பத் தவறியிருக்கின்றார். இந்தப் போராட்டத்தின் மூலம் இலங்கையைப் பேரினவாதிகள் இன்னமும் பௌத்த நாடாகவே பார்த்துக் கொண்டிருப்பதையே இதனூடாக நாங்கள் அறிந்துகொள்ள முடிகின்றது.

அதாவது இலங்கையில் பௌத்தம் தவிர்ந்த ஏனைய மதங்களினதும் அந்த மதம்சார்ந்த மக்களினதும், மதத்தலைவர்களினதும் நிலை இன்று கேள்விக்குள்ளாகியுள்ளதையும் அறிந்துகொள்ள முடிகின்றது. மேலும் இலங்கையின் பல பாகங்களில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் பாரம்பரியமான வழிபாட்டு நெறிகளுக்கு ஆப்பு வைப்பதற்கான ஒரு முன்னேற்பாட்டு நடவடிக்கையாகவும் இந்த விவகாரத்தை நாங்கள் பார்க்கவேண்டிய கட்டாயத்திலிருக்கின்றோம்.

நாம் மீண்டும் மீண்டும் ஒருவிடயத்தை அழுத்தம் திருத்தமாக கூறிவருகின்றோம், அதாவது உலகத்தில் எந்தவொரு இனமாகவும் இருக்கலாம், அந்த இனம் தன்னுடைய இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காக போராடிக்கொண்டிருக்கும்போது அது தனது கலை, கலாச்சாரம், பண்பாடு, சமய விழுமியங்களில் மிகவும் ஆழமான கண்ணோட்டத்துடன் இருப்பது அத்தியாவசியமானது. மாற்றமில்லாத இந்தக் கருத்து நிலைப்பாட்டிலேயே நாம் இன்றைக்கு நின்றுகொண்டிருக்கின்றோம். அதாவது தமிழர்களும் இன்று தங்களுடைய இருப்புக்காக போராடிக்கொண்டிருக்கின்றார்கள்.

எனவே தமிழர் தங்களுடைய பண்பாட்டை, கலாச்சாரத்தை, சமய விழுமியங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக தொடர்ந்தும் போராடவேண்டிய கட்டாயம் இருக்கின்றதென்பதை யாரும் மறுத்துரைக்க முடியாது. அவ்வாறு நாம் எங்களுடைய அடையாளங்களை, தனித்துவங்களைத் தொலைத்துவிட்டு கடந்த அறுபது வருடங்கள் எதற்காக போராடினோமோ, எதற்காக இரத்தம் சிந்தி உயிர் தியாகங்களை செய்தோமோ அந்த இலக்கை நாங்கள் அடையப்போவதேயில்லை. எனவே எங்கள் சுயத்திற்காகவும், எங்கள் தனித்துவங்களுக்காகவும் நாங்கள் கட்டாயமாகப் போராடவேண்டியிருக்கின்றது.

இந்த வகையில்தான் ஏற்கனவே தமிழ் சமுகத்தில் குறிப்பாக வடகிழக்கில் கலாச்சார பிறழ்வுகளையும், சமுகச் சீர்கேடுகளையும் அரசாங்கமும், அதன் இராணுவ இயந்திரமும் முறைப்பிரகாரம் ஊக்குவித்தும், பாதுகாத்தும் வருகின்ற நிலையில் இப்போது நடந்து கொண்டிருப்பது எங்கள் சமய விழுமியங்களைச் சிதைப்பதற்கான நடவடிக்கையே என்பதில் சந்தேகமில்லை. முன்னேஸ்வரம் ஆலயம் என்பது சாதாரணமாக யுத்தத்தின் பின்னர் கட்டப்பட்ட ஒன்றல்ல வரலாற்றுக்காலத்திற்கு முன்னரே இலங்கையிலிருந்த ஜந்து ஈச்சரங்களுள் இதுவும் ஒன்று.

இந்த ஆலயத்தை இராவணன் வணங்கியதிலிருந்து இன்றுவரை தமிழர்கள் இந்த ஆலயத்தைப் போற்றி வழிபட்டதற்கான சான்றுகளும், பரம்பரை வழி உண்மைகளும் இருந்து கொண்டிருக்கின்றன. உண்மையில் ஒரு மிருகபலியிடல் இந்த ஆலயத்தில் நடைபெறுகின்றதென்றால் அதை கட்டுப்படுத்துவதற்கு பல வழிகள் இருக்கின்றன. மேர்வினதும், பிக்குகளினதும் போராட்டத்திற்குப் பின்னர் மிருகபலியிடலை நிறுத்துங்கள் எனக்கூறியிருந்த மகிந்த ராஜபக்ச ஏன் அதை முதலிலேயே கூறியிருக்க கூடாது. அல்லது இந்து சமயத்திற்கென உலகெங்கிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் மதத்தலைவர்களை அழைத்துப் பேசியிருக்க கூடாது.

எனவே நாம் ஒருவிடயத்தை நீர்த்துப்போனாலும் பரவாயில்லை என்ற நிலைப்பாட்டில் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். இந்த நாடு ஒரு பௌத்த நாடு என்ற சிங்கள நாடு என்கிற பேரினவாதச் சிந்தனை சிங்கள தேசத்திடம் கடந்த 60 வருடங்களுக்கு முன்னர் எவ்வாறு இருந்ததோ அதில் சிறிதளவும் மாற்றமில்லாமல் இன்றும் இருந்து கொண்டிருக்கின்றது என்பதே உண்மை.

அந்தவகையில் முன்னேஸ்வரத்தில் இடம்பெற்ற மிருகபலிக்கு எதிரான போராட்டம் வெறுமனே மிருகபலியிடலை நிறுத்தவேண்டும் என்பதற்காக நடத்தப்படவில்லை. அந்த ஆலயம் அமைந்துள்ள இடம் சிங்களவர்கள், பௌத்தர்கள் வாழ்கின்ற இடம். எனவே அது புனிதமான இடம். ஏனைய மதங்கள் தங்களுடைய மத விழுமியங்களை சுதந்திரமாக பின்பற்றுவதை தடுக்கவேண்டும்.

இலங்கை பௌத்த நாடு என்ற சித்தாந்தத்திற்கு ஏனைய மதங்கள் தடையாக இருக்கின்றன. எனவே இன்று முன்னேஸ்வரத்தில் நடப்பது எந்தவிதமான குறைப்புமில்லாமல், அதிகரிக்கப்பட்ட வகையில் விரைவாக நாடு முழுவதிலும் குறிப்பாக வடக்கு, கிழக்கில் நடக்கப் போகின்றது. இதை யாராலும் மாற்ற முடியாது. இன்றைக்கு முன்னேஸ்வரத்தில் மிருக பலியிடலை நிறுத்த மகிந்த கேட்டிருக்கின்றார்.

இதுவே உருத்திரபுரம் சிவன் ஆலயத்திற்குள் சிங்களவன் சப்பாத்துக்களுடன், சென்று காட்டு மிராண்டிகளைப்போல் நடந்து கொண்டபோது ஏன் கேட்கவில்லை. பிக்குகள் ஒன்று கூடி தங்களுடைய புனித பூமியில் ஏனைய மதஸ்தலங்கள் அமைந்திருக்க கூடாது என போராட்டம் நடத்தி முஸ்லிம்களுடைய பள்ளிவாசலை இடித்தபோது காவல்துறையினரும், படையினரும் பார்த்துக் கொண்டிருந்தனர். இதே மகிந்த அப்போது என்ன சொன்னார். பிக்குகள் ஏனைய மதங்களுடைய சுதந்திரத்தை பறிக்க கூடாது என்று. அதுவேதான் இன்று முன்னேஸ்வரத்தில் இந்துக்களுக்கு நடந்திருக்கின்றது. ஏற்கனவே பல இடங்களில் கிறிஸ்தவ தேவாலயங்களில் பல சம்பவங்கள் நடந்திருக்கின்றன.

நாளையும் அங்கு ஒரு அநியாயம் நடக்கும். எனவே இது வெறுமனே இந்து சமயத்திற்கோ, முஸ்லிம் சமயத்திற்கோ விடுக்கப்பட்ட ஒரு அச்சுறுத்தல் கிடையாது. ஒட்டுமொத்தமாக இலங்கையிலுள்ள பௌத்தம் தவிர்ந்த ஏனைய அனைத்து மதங்களுக்கும் விடுக்கப்பட்ட அக்கறை என்பதை நாங்கள் புரிந்து கொள்ளவேண்டும். எப்படி பள்ளி

வாசல் இடிக்கப்பட்டபோது தமிழர்கள் அமைதியாக இருந்தார்களோ. அப்படியே இன்று முன்னேஸ்வரத்தில் இந்து மதத்தின் சுதந்திரம் மறுக்கப்படுகின்றபோதும் அமைதியாக இருக்கின்றோம். இதுபோக வடகிக்கில் இன்று அரச மரங்கள் உள்ள இடமெல்லாம் புத்தரும் வந்து விட்டார். இதன் எதிர்காலம் எப்படியிருக்குமென்றால், அவ்வாறு புத்தர் இருக்கும் இடங்களெல்லாம் புனிதப் பிரதேசங்களாக மாற்றப்படும். அங்கு தமிழர்கள் நடமாடக்கூட முடியாத நிலை ஏற்படும்.

இவை எல்லாம் ஒருபுறமிருக்கட்டும். கடந்த 30 வருடங்களில் இறுதியாக முள்ளிவாய்க்கால் யுத்தம் வரையில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் உடல் சிதறிப் பலியானபோது, கொத்துக்கொத்தாக கொன்று குவிக்கப்பட்டபோது இதே பௌத்த பேரினவாத சக்திகள் அன்பையும் அகிம்சையினையும் போதிக்கின்ற பௌத்தர்கள் ஏன் வாய் மூடியிருந்தார்கள்? தமிழர்களுடைய போராட்டம் நிறைவுக்கு வரவில்லை. தமிழர்கள் இன்றும் தங்கள் சுயத்திற்காகவும், அடையாளங்களுக்காகவும் கட்டாயமாகப் போராட வேண்டிய நிலையிலிருக்கின்றோம் என்பதை நாங்கள் உள்ளார்ந்தமாக விளங்கிக் கொள்ளவேண்டும். அந்தப் புரிதலின் அடிப்படையில் நாங்கள் எங்களுடைய போராட்டம் செம்மையாக அமையவேண்டும் என்பதே யதார்த்தம்.

நன்றி : ஈழமுரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.