Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தியாகி திலீபனின் நினைவுநாள் இன்று எழுச்சியுடன் ஆரம்பம்!!

Featured Replies

[size=2]

[size=4]தியாக தீபம் திலீபனின் 25 ஆவது நினைவுதினம் தமிழர் தாயகம் உட்பட உலகெங்கும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் பெரும் எழுச்சியுடன் இன்று ஆரம்பமாகிறது. அதற்கான ஏற்பாடுகள் பெருமெடுப்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனத் தெரியவருகிறது.[/size][/size]

[size=2]

[size=4]பாரதப் படைகளுக்கெதி ராக நீராகாரம்கூட அருந்தாது பன்னிரண்டு நாள்கள் உண்ணாநோன்பிருந்து ஒவ்வொரு நாளும் அணுஅணுவாக உயிரை விட்டவர் தியாகி திலீபன்.[/size][/size]

[size=2]

[size=4]தான் நேசித்த தமிழ் மக்கள் விடுதலை பெற்று நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் வாழவேண்டும் என்பதற்காக தன்னை வருத்தி இன்னுயிரைத் தியாகம் செய்த அந்த அற்புத மனிதன் திலீபனின் நினைவு வாரத்தை தமிழர்கள் மிகவும் உணர்வுபூர்வமாகக் கொண்டாடத் தயாராகியுள்ளனர்.[/size][/size]

[size=2]

[size=4]லண்டன், கனடா, அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ், சுவிஸ், ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, சுவீடன் போன்ற நாடுகளில் திலீபனின் நினைவுவாரம் என்றுமில்லாதவாறு இம்முறை மிகவும் பிரமாண்டமாக அனுஷ்டிக்கப்படுகிறது. புலம்பெயர் அமைப்புகள் இந்த நிகழ்வை முன்னின்று நடத்துகின்றன.[/size][/size]

[size=2]

[size=4]இந்த நிகழ்வில் தமிழ் மக்களை அணிதிரண்டு வந்து பங்கேற்குமாறு தமிழகத்து ஈழ ஆதரவாளர்களும் தமிழ் உணர்வாளர்களும் அழைப்பு விடுத்துள்ளனர். ஒரு சொட்டுத் தண்ணீர்கூட அருந்தாமல் உண்ணாவிரதமிருந்து உயிரை விட்டு உலகத்திற்கே அஹிம்சையைப் போதித்துச் சென்ற தியாகி திலீபனின் வழியில் தமிழர்களாகிய நாம் எமக்குள் உள்ள கருத்து வேறுபாடுகளை களைந்து, பிளவுகள் இன்றி அனைவரும் ஒன்றுசேர்ந்து விடுதலை நோக்கிய பாதையில் செல்லவேண்டும் என்றும் தமிழின உணர்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.[/size][/size]

[size=2]

[size=4]1987 செப்டெம்பர் 15ஆம் திகதி இந்திய அமைதிப் படையினரிடம் ஐந்து அம்[/size][size=4]க் கோரிக்கையை முன்வைத்து திலீபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்.[/size][/size]

[size=2]

[size=4]* மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.[/size][/size]

[size=2]

[size=4]* சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற்கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.[/size][/size]

[size=2]

[size=4]* அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.[/size][/size]

[size=2]

[size=4]* ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.[/size][/size]

[size=2]

[size=4]* தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும். [/size][/size]

[size=2]

[size=4]இந்த 5 கோரிக்கைகளையும் முன்வைத்தே உண்ணாவிரதம் இருந்தார் திலீபன். ஆனால், அஹிம்சையைப் போதித்த பாரததேசம் இறுதிவரை மனமிரங்கவில்லை. [/size][/size]

[size=2]

[size=4]அதனால் செப்டெம்பர் 26ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.48 மணிக்கு திலீபன் தியாக மரணத்தைத் தழுவினார்.[/size][/size]

[size=2]

http://onlineuthayan.com/News_More.php?id=815021424815790202[/size]

  • தொடங்கியவர்

[size=6]‎25th anniversary of Thileepan[/size]

[size=5]25 years ago, this is the first day of Thileepan fast against Indian govt. Tamils were hoping that the so called "Gandhi" land respect Gandhian principles.. Years passed, but his name written in Tamil's history and most of Tamils memory with great respect.[/size]

[size=4]திலீபன் (ராசையா பாத்தீபன்)[/size]

திலீபனுடன் 12 நாட்கள்..

[size=2]

582445_419392178117031_1379593610_n.jpg[/size]

304921_507092669319856_882296668_n.jpg

  • தொடங்கியவர்

[size=4]தியாகி திலீபன் அவர்களின் நினைவாக யேர்மனியில் நடைபெற்ற உள்ளரங்க உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி "[/size]

[size=4]தமிழீழ விடுதலைக்காக சாகும் வரை உண்ணா நோன்பு இருந்து தனது இன்னுயரை ஈகம் செய்த தியாகி திலீபன் அவர்களின் நினைவாக மூன்றாவது தடவையாக யேர்மனி பெர்லின் நகரில் உள்ளரங்க உதைப்பந்தாட்ட போட்டி நடைபெற்றது[/size]

[size=4]தியாகி திலீபன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது .[/size]

[size=4]இவ்வாண்டு உள்ளரங்க உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் உல்லூர் மேற்பிரிவுக்கான 7 கழகங்களும் மற்றும் கீழ்ப்பிரிவுக்கான 5 கழகங்களும் பங்குபெற்றியது.[/size]

[size=4]சிறப்பாக நடைபெற்ற இப் போட்டியில் பல விளையாட்டு வீரர்கள் மிக திறமை கொண்டவர்களாக காணப்பட்டார்கள் . இவர்களை உலகளாவிய ரீதியில் இவ்வாண்டு உருவாக்கப்பட்ட தமிழீழம் தேசிய அணிக்கு பரிந்துரைக்கப் படும் என முடிவெடுக்கப்பட்டது .

தியாகி திலீபன் அவர்களின் நினைவாக நடைபெற்ற உள்ளரங்க உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் வெற்றி பெற்ற கழகங்களுக்கு வெற்றிக் கிண்ணங்கள் வழங்கப்பட்டு சிறப்பாக இப் போட்டி நிறைவு பெற்றது .[/size]

[size=2]550483_282774868493099_1808126221_n.jpg[/size]

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.