Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழீழ ஆதரவாளர் விஜயராஜ் அவர்களுக்கு யாழ் குடாநாட்டு மக்களின் வீரவணக்கம்.

Featured Replies

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்து வீரமரணத்தை தழுவிக்கொண்டுள்ள தமிழீழ ஆதரவாளர் விஜயராஜ் அவர்களுக்கு யாழ் குடாநாட்டு மக்கள் தமது வீர வணக்கத்தை தெரிவித்துள்ளதுடன் நெஞ்சுருகும் கண்ணீர் அஞ்சலிகளையும் காணிக்கையாக்கியுள்ளனர். அவரின் பிரிவால் துயருற்றுள்ள குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் குடாநாட்டு மக்கள் தமது ஆறுதலையும் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, தமிழகத்து உறவுகள் இனிமேல் இவ்வாறான உயிரை மாய்க்கும் தியாகச் செயல்களில் ஈடுபடவேண்டாமென்றும் ஈழத் தமிழர்களுக்காக தொடர்ந்தும் ஜனநாயக வழியில் போராடுமாறும் குடாநாட்டுத் தமிழ் மக்கள் தமிழக உறவுகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக குடாநாட்டு மக்கள் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

தமிழ் மக்களை ஈவிரக்கமின்றி கொன்றொழித்த இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் கொலைகாரப் பாவியாகிய மகிந்தவை இந்தியாவிற்கு வர அனுமதிக்கக் கூடாது என்று கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன. தமிழகக் கட்சிகளாலும் தமிழின உணர்வாளர்களாலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இந்தப் போராட்டங்கள் ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் மிகுந்த நம்பிக்கை ஒளிக்கீற்றை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் ஈழத் தமிழர்களாகிய நாம் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்த நிலையில் தியாகச் செம்மல் விஜயராஜ் எம்மை ஆறாத் துயரில் ஆழ்த்தியுள்ளார். சேலம் போஸ் மைதானத்தில் நேற்று திங்கட்கிழமை அதிகாலை 4.30 மணி அளவில் விஜயராஜ் அவர்கள் தீக்குளித்துவிட்டார் என்ற செய்தி கேட்டு நாம் எல்லோரும் மிகுந்த அதிர்ச்சியடைந்தோம். ஆவர் விரைவில் குணமாக வேண்டுமென்று இறைவனைப் பிரார்த்தித்தோம். ஆனால், தீக்குளித்த விஜயராஜ் இன்று உயிரிழந்துள்ளார் என்ற செய்தியானது எம்மையெல்லாம் கடும் துயரில் ஆழ்த்தியுள்ளது.

தியாக வேள்வியில் தன்னை ஆகுதியாக்கி தீயில் சங்கமித்து ஈழத் தமிழருக்காய் நியாயம் கேட்ட விஜயராஜ் இன்று எம்முடன் இல்லை என்பதை நினைக்க எம்மால் தாங்க முடியவில்லை. ஏற்கனவே தியாகத் தீயில் ஆகுதியாகிய முத்துக்குமார், செங்கொடி போன்றவர்களுடன் இன்று விஜயராஜீம் இணைந்துள்ளார்.

ஈழத்தில் விடுதலைக்காக மக்களும் போராளிகளும் செய்த தியாகங்களுடன் ஒப்பிடுகையில் தமிழக உறவுகளின் தியாகம் அளப்பரியது. இந்தப் போராட்டங்களில் தம்மை ஆகுதியாக்கிய தமிழக உறவு விஜயராஜ் அவர்களின் வீரத்தை நாம் மெச்சுகிறோம். ஆவரின் தமிழின உணர்வைப் போற்றுகிறோம். அவருக்கு எமது வீர வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.

அன்புக்குரிய தமிழக உறவுகளே நீங்கள் எங்களுக்காக குரல் கொடுங்கள்.

உங்கள் குரல் மேலும் மேலும் ஒங்கி ஒலிக்கட்டும்.

ஆனால் யாரும் தீக்குளிக்காதீர்கள்.

உங்கள் உடல்களை யாரும் மாய்த்துக்கொள்ளாதீர்கள்.

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்.

எனவே உங்கள் உடல் இருந்தால்தான் நீங்கள் எமக்காக குரல் கொடுக்க முடியும்.

எனவே நீங்கள் இனிமேல் தீக்குளிக்காதீர்கள் என்றும் யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்களின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாயகத்திலிருந்து வீரமணி

- சங்கதி24.கொம்.

http://thaaitamil.com/?p=32651

யாழ்மக்கள் வன்னியில் இறந்தவர்களையே மறந்து விட்டார்கள். தமிழ்நாட்டில் போன உயிரையா கணக்கு எடுக்க போகிறார்கள்.

ஏன் இப்படி தவறான ஊக்கத்தை கொடுக்கிறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பாண மக்களுக்கு அறிக்கை விட எல்லாம் தைரியம் இருக்கா? இல்லை நேரம் தான் இருக்கா? :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்மக்கள் வன்னியில் இறந்தவர்களையே மறந்து விட்டார்கள். தமிழ்நாட்டில் போன உயிரையா கணக்கு எடுக்க போகிறார்கள்.

ஏன் இப்படி தவறான ஊக்கத்தை கொடுக்கிறார்கள்?

எங்கும் மக்கள் ஈழத்தில் தம் விருப்பத்தை கதைக்க, பேசமுடியும் போன்ற அத்துணை உயர்வான ஜனனாயகத்தை மகிந்தா ஆட்சி படைத்திருக்கின்றது என்பதை மறைபொருளில் சொல்ல விளைகின்றீர்களா?

எங்கும் மக்கள் ஈழத்தில் தம் விருப்பத்தை கதைக்க, பேசமுடியும் போன்ற அத்துணை உயர்வான ஜனனாயகத்தை மகிந்தா ஆட்சி படைத்திருக்கின்றது என்பதை மறைபொருளில் சொல்ல விளைகின்றீர்களா?

இலங்கையில் ஜனனாயகத்தை போராடியவர்களும் மதிக்கவில்லை போராட்டத்தை அட்டக்கியவர்களும் மதிக்கவில்லை........

அப்படிப்பட்ட சூழலில் வளர்ந்த மக்களுக்கு ஜனனாயகம் என்பது நின்மதியான தூக்கம் போதுமான உணவு இருக்க ஒரு இடம்.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையில் ஜனனாயகத்தை போராடியவர்களும் மதிக்கவில்லை போராட்டத்தை அட்டக்கியவர்களும் மதிக்கவில்லை........

அப்படிப்பட்ட சூழலில் வளர்ந்த மக்களுக்கு ஜனனாயகம் என்பது நின்மதியான தூக்கம் போதுமான உணவு இருக்க ஒரு இடம்.....

புலிகளின்பால் வெளிப்பட்ட ஜனனாயக விரோதப் போக்கு ஒன்றுதான் புலிகளை எதிரியாய் வரிப்பதற்கு அடிப்படையாய் சிங்கள, இந்தியவாதத்திற்கு இருந்திருக்கும் என்றால் உங்கள் முறையீட்டில் இருக்கும் வாத்தை மதித்திருப்பேன். ஆனால் மக்கள் விரோதிகளுக்கு அபயமும் துணையும் ஆகும் இவர்களை புலிகள் எதிர்த்ததனாலான அந்த இரத்தக் கறைகளை நான் மன்னிக்கின்றேன்! ஏன் என்றால் பதவியும், வசதியும் உள்ள அரசே பொய்யை ஐநா வரை பேசும் போது, வழி வகைகள் இல்லாதவரிடம் பிழைகள்தானே வழிகாட்டியாக முடியும்!

PLOT இன் தலையில் ஏறி இந்தியப் பயங்கரவாதம் மாலதீவைச் சென்றடைந்தமைக்கு மலாதீவு என்ன ஜனனாயகப் பாவம் செய்தது என்று சொல்ல முடியுமா?

ஈழத்தில் இறக்கூமதியான இந்திய, சிங்களப் பயங்கரவாதங்களுக்கு மட்டும் புலிகளின் ஜனனாயகப் பாவம் ஒன்றுதான் காரணமாகுமா?

புலிகளின்பால் வெளிப்பட்ட ஜனனாயக விரோதப் போக்கு ஒன்றுதான் புலிகளை எதிரியாய் வரிப்பதற்கு அடிப்படையாய் சிங்கள, இந்தியவாதத்திற்கு இருந்திருக்கும் என்றால் உங்கள் முறையீட்டில் இருக்கும் வாத்தை மதித்திருப்பேன். ஆனால் மக்கள் விரோதிகளுக்கு அபயமும் துணையும் ஆகும் இவர்களை புலிகள் எதிர்த்ததனாலான அந்த இரத்தக் கறைகளை நான் மன்னிக்கின்றேன்! ஏன் என்றால் பதவியும், வசதியும் உள்ள அரசே பொய்யை ஐநா வரை பேசும் போது, வழி வகைகள் இல்லாதவரிடம் பிழைகள்தானே வழிகாட்டியாக முடியும்!

PLOT இன் தலையில் ஏறி இந்தியப் பயங்கரவாதம் மாலதீவைச் சென்றடைந்தமைக்கு மலாதீவு என்ன ஜனனாயகப் பாவம் செய்தது என்று சொல்ல முடியுமா?

ஈழத்தில் இறக்கூமதியான இந்திய, சிங்களப் பயங்கரவாதங்களுக்கு மட்டும் புலிகளின் ஜனனாயகப் பாவம் ஒன்றுதான் காரணமாகுமா?

போராடியவர்கள் எனும் போது ஒரு காலத்தில் புலிகளும் புளொட்டும் ஒரு பாதையில் பௌஅனித்தவர்கள்.

காலங்கள் மாறும் போது பக்கங்கள் மாறியது ஆனால் செயற்படுகள் ஒன்றாக்வே இருந்தன அது புலிகளாகட்டும் அல்லது புளொட்டாகட்டும் ஏன் இந்தியனை வெளியேற்ற சிங்களவனும் எம்மோடு போராடினான் என்பது சொல்லப்படாத காட்டு ஒப்பந்தம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போராடியவர்கள் எனும் போது ஒரு காலத்தில் புலிகளும் புளொட்டும் ஒரு பாதையில் பௌஅனித்தவர்கள்.

காலங்கள் மாறும் போது பக்கங்கள் மாறியது ஆனால் செயற்படுகள் ஒன்றாக்வே இருந்தன அது புலிகளாகட்டும் அல்லது புளொட்டாகட்டும் ஏன் இந்தியனை வெளியேற்ற சிங்களவனும் எம்மோடு போராடினான் என்பது சொல்லப்படாத காட்டு ஒப்பந்தம்.

தொல்லையானுக்கு யோக்கிய மாமணிப் பட்டம் வளங்கும் போதே அடியேனுக்கு புத்தி தெளிந்திருக்க வேண்டும் இது தேறுமா? தேறாதான் என்று?

பார்வை அற்றவனிடம் பால் குடிந்து குழந்தை இறந்து விட்டது என்று ஒருவன் சொன்னான்.

பால் என்றால் என்ற என்று பார்வை அற்றவன் துவக்கிய கேள்வி; பால் என்றால் வெள்ளை என்று துவங்கி மடித்து முழங்கையைக் காட்டி இப்படிக் கொக்கைப் போல் இருக்கும் என்று முடித்துவைத்தான் பதி சொல்லியவன். கையை தடவி உணர்ந்த விழிப்புலன் அற்றவன் இதை விழுங்கினால் குழந்தை சாகாமல் இருக்குமா என்று வினா எழுப்பினான்.

பாலுக்கும் முழங்கைக்கும் உள்ள இடைவெளியை விட புலிக்கும் புளொற் இற்க்கும் இருக்கும் இடைவெளி பெரிதாய் இருக்கும் போது அது புரியாமல் போக ஐம் பொறிகள் இருந்தும் புண்ணியம் இல்லையே என்று எண்ணும் போது வருத்தமாய் இருக்கின்றது!

தொல்லையானுக்கு யோக்கிய மாமணிப் பட்டம் வளங்கும் போதே அடியேனுக்கு புத்தி தெளிந்திருக்க வேண்டும் இது தேறுமா? தேறாதான் என்று?

பார்வை அற்றவனிடம் பால் குடிந்து குழந்தை இறந்து விட்டது என்று ஒருவன் சொன்னான்.

பால் என்றால் என்ற என்று பார்வை அற்றவன் துவக்கிய கேள்வி; பால் என்றால் வெள்ளை என்று துவங்கி மடித்து முழங்கையைக் காட்டி இப்படிக் கொக்கைப் போல் இருக்கும் என்று முடித்துவைத்தான் பதி சொல்லியவன். கையை தடவி உணர்ந்த விழிப்புலன் அற்றவன் இதை விழுங்கினால் குழந்தை சாகாமல் இருக்குமா என்று வினா எழுப்பினான்.

பாலுக்கும் முழங்கைக்கும் உள்ள இடைவெளியை விட புலிக்கும் புளொற் இற்க்கும் இருக்கும் இடைவெளி பெரிதாய் இருக்கும் போது அது புரியாமல் போக ஐம் பொறிகள் இருந்தும் புண்ணியம் இல்லையே என்று எண்ணும் போது வருத்தமாய் இருக்கின்றது!

கிணத்து தவளைக்கு கிணறு வற்றி ஒரு சொட்டு தண்ணீர் இருந்தாலும் போதும் அது தான் உலகம் என்று வாழ அதே கடல் ஆமைக்கு நிரம்பிவழியும் கிண்று போதாது இது தான் உலகம் என்று வாழ.

வென்றவனுக்கு வரலாறு சுயசரிதை எழுத இடம் கொடுக்கிறது தோற்றவனுக்கு உண்மையை புதைப்பதுக்கு ஆறடி புதைகுழி இடம் கொடுக்கிறது. இது தான் தமிழர்களின் போராட்ட வரலாறு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.