Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேரவைக்கு வருவது சரியாக இருக்காது: ஜெ.

Featured Replies

பேரவைக்கு வருவது சரியாக இருக்காது: ஜெ.

தமிழக சட்டப் பேரவையில் 1989-ல் நடந்த சம்பவத்தை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அதே முதல்வர், அதே அமைச்சர்கள் வந்துள்ளனர். எனவே பேரவைக்கு நான் வருவது சரியாக இருக்காது என்று அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா கூறினார்.

அதிமுக தலைமை அலுவலகத்தில் நிருபர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறியதாவது:

சட்டப் பேரவைக்கு நான் வரவேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்ப்பதாகச் சொன்னார்கள். ஆனால் 1989-ம் ஆண்டு மார்ச் 29-ம் தேதி நான் தாக்கப்பட்டதை யாரும் மறந்திருக்க முடியாது. அப்போது யார் அவமானப்படுத்தினார்களோ தாக்கினார்களோ அவர்களெல்லாம் தற்போது வந்திருக்கிறார்கள். அடிப்படை நாகரிகம், பண்பாடு தெரியாத காட்டுமிராண்டிக் கும்பல்.

அதனால் பேரவைக்கு நான் வருவது சரியாக இருக்காது. அதிமுக எம்எல்ஏக்களுக்கு வழிகாட்ட நான் இருக்கிறேன். முக்கிய விவாதங்களில் பங்கேற்பீர்களா என்று கேட்கிறீர்கள். அவசியம் ஏற்பட்டால் வருவேன். பார்க்கலாம்.

கடந்த 5 ஆண்டு காலமாக 2001 முதல் 2006 வரை மிகவும் கண்ணியமான முறையில் ஆட்சியையும் சட்டப்பேரவையையும் நடத்தினேன்.

1989-ல் நடந்ததைப் போல் கேவலமான வன்முறை சம்பவம் நடந்ததே இல்லை. 2001-06 வரை நாங்கள் ஆளும் கட்சியாக இருந்தபோது எதிர்க்கட்சியாக அமர்ந்திருந்த திமுகவினர் கண்ணியக்குறைவாகவும் அநாகரிகமாகவும் நடந்து கொண்டார்கள். அடிப்படை பண்போடு நடக்கவில்லை. நான் முதல்வராக இருந்தபோதே அப்படி நடந்தார்கள்.

அதே முதல்வர். அதே அமைச்சர்கள். இந்த அநாகரிகம் தெரியாத காட்டு மிராண்டிக் கும்பல் முன் அம்மா வரக் கூடாது என்று அதிமுக எம்எல்ஏக்கள் முடிவு எடுத்திருக்கிறார்கள்,

அவர்களது முடிவுக்கு மதிப்பளிக்கிறேன். சட்டப் பேரவைக்கு நான் வராமல் இருப்பதற்கு காரணம் உள்ளது. கருணாநிதி வராமல் இருந்ததற்கு எந்தக் காரணமும் இல்லை.

நான் இல்லாமல் இருந்தாலும் அவர்கள் நன்றாக செயல்படுவார்கள் என்றார் ஜெயலலிதா

dinamani.com

  • தொடங்கியவர்

தேர்தல் தோல்வியால் பலியான 7 பேர் குடும்பத்துக்கு தலா ரூ. 1 லட்சம்: ஜெயலலிதா அறிவிப்பு

அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப் பட்டு இருப்பதாவது:-

சட்டமன்றத் தேர்தல் முடிவுகளைக் கேட்டு கழக உடன்பிறப்புகள் 7 பேர் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொண்டார்கள் என்ற செய்தி அறிந்து நான் அளவற்ற துன்பம் அடைந்தேன்.

வடசென்னை மாவட்டம், பெரம்பூர் பகுதி, 35-வது வட்டம், வியாசர்பாடி, இந்திராகாந்தி நகரைச் சேர்ந்த ஜி.வசந்தி தீக் குளித்து மரணமடைந்தார். வேலூர் மேற்கு மாவட்டம், கந்திலி ஒன்றியம், தெலுங்கு மட்றபள்ளியைச் சேர்ந்த ஜெமினி கணேசன்பபவிஷம் அருந்தி உயிரை மாய்த்துக் கொண்டார். திருவண்ணா மலை மாவட்டம், தோக்கவா டியைச் சேர்ந்த எம்.ஆலன் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

தருமபுரி மாவட்டம், வெங் கடசமுத்திரம் கிளைக் கழகத் தைச் சேர்ந்த கண்ணம்மாள் கோவை மேற்கு தொகுதி, 37-வது வட்டக் கழக மேலமைப்புப் பிரதிநிதியும், வட்ட பேரவைச் செயலாளரு மான முனுசாமி, கோவை பெரியநாயக் கன்பாளையம் ஒன்றியம், மடத்தூர் கிளைக் கழக அவைத் தலைவர் ஏ.காளிமுத்து, கோவில்பட்டி நகரத்தைச் சேர்ந்த சி.பால முருகன் ஆகியோர் அதிர்ச்சி யில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தனர் என்ற செய்தி அறிந்து நான் அளவற்ற மனவேதனை அடைந்தேன்.

தேர்தலில் வெற்றி தோல்வி என்பது இயல்பு. ஆனால், இந்தத் தேர்தல் முடிவு பொறுத் தவரையில், நாம் தோல்வி அடையவில்லை என்பதே உண்மை. நாம் தனித்து இல்லை, இன்றும் மக்கள் நம்முடனேயே உள்ளார்கள். தேர்தலில் நமது வாக்குகளின் சதவீதம் கூடியிருப்பதே இதற்குச் சாட்சி. எனவே, யாரும் வருத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை. யாரும் கவலை கொள்ள வேண்டிய தேவையும் இல்லை. எதிர்காலம்

நமக்கே.நான் உயிரோடு இருப்பதே உங்களுக்காகத்தான்! நீங்கள் அனைவரும் நலமோடு வாழ்வதற்காகவே நான் பாடு பட்டு வருகிறேன். நீங்கள் இருக்கிறீர்கள் என்ற தைரி யத்தில் தான் நான் தைரிய மாக இருக்கிறேன். எனவே, உங்கள் இன்னுயிரை இழந்து என்னை தைரியம் இழக்கச் செய்யாதீர்கள்!

1996-ஆம் ஆண்டு கழகம் மிகுந்த பின்னடைவைச் சந்தித் தது. அப்போது மீண்டும் கழகத்தை ஆட்சியில் அமரச் செய்வேன் என்று நான் சொன் னேன். சொன்னபடி கழகத்தை ஆட்சியில் அமர்த்தினேன். அன்று இருந்ததைவிட, இன்று நாம் மிக்க நல்ல நிலையில் உள்ளோம் நிச்சயமாக நாம் மீண்டும் ஆட்சியைப் பிடிப் போம். மற்ற கட்சிகளை விட, கழகத்திற்கே வளமான எதிர் காலம் உண்டு.

எனவே, மீண்டும் நான் வலியுறுத்திச் சொல்கிறேன். யாரும் தேர்தல் முடிவு குறித்துக் கவலைப்படவோ, விலை மதிப்பில்லாத தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொள்ளவோ கூடாது உங்கள் அன்பும் உங்கள் பாசமும் எனக்குப் புரிகிறது. தன்னம் பிக்கையோடு இருந்து சவால் களைச் சமாளிப்பது தான் இப்போதைய தேவை. உயிரைப் போக்கிக் கொள்வது அல்ல!

எனவே, தயவு செய்து தங்களை மாய்த்துக் கொள்ளுகின்ற செயல்களில் ஈடுபடவே கூடாது என்பதோடு, அத்தகைய எண்ணமே கழக உடன்பிறப்புகள் நெஞ்சத்தில் தோன்றத் கூடாது என்று மீண்டும் மிகுந்த அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

தேர்தல் முடிவு கேட்டு, தங்கள் இன்னுயிரை இழந்த 7 கழக உடன்பிறப்புகளின் குடும்பங்களுக்கு, எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரி வித்துக் கொள்வதுடன், அவர்களது குடும்பத்திற்கு, கழகத்தின் சார்பில் குடும்ப நல நிதியுதவியாக தலா 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

maalaimalar.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.