Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை ஜனாதிபதியின் இந்திய பயணம்

Featured Replies

[size=4]இலங்கை ஜனாதிபதியின் இந்தப் பயணத்தை அனுமதித்த இந்திய அரசின் செயல், தமிழக மக்களின் உணர்வுகளை படுமோசமான முறையில் அவமானப் படுத்தி விட்டதாக அமைகின்றது. மஹிந்த ராஜபக்ஷவைப் பொறுத்தவரையில் ஒரு சாதகமான விளைவையும் இந்திய மத்திய அரசைப் பொறுத்தவரையில் பாதகமான விளைவுகளையுமே ஏற்படுத்தியுள்ளது[/size]

[size=2]

[size=4]இந்தியாவிலுள்ள சாஞ்சியில் நிறுவப்படவுள்ள ஒரு பௌத்த பல்கலைக்கழகத்துக்கு அடிக்கல் நாடும் விழாவில் கலந்துகொள்வதற்காக இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவுக்கான ஒரு பயணத்தை மேற்கொண்டுள்ளார். அதேசமயத்தில் இந்தப் பயணத்தின்போது இவர் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.[/size][/size]

[size=2]

[size=4]ஒரு நாட்டின் தலைவர் இன்னொரு நாட்டுக்குப் பயணம் செய்வது அப்படியொன்றும் புதிய விடயமுமல்ல வழமைக்கு மாறான நடைமுறையும் இல்லை. ஆனால் இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான தெளிவற்ற அரசியல் பொருளாதார உறவுகள் இலங்கைத் தமிழ் மக்களின் இனப் பிரச்சினை தொடர்பாகத் தொடர்ச்சியாக இலங்கை, இந்திய அரசுகள் மேற்கொண்டு வரும் அலட்சியப் போக்கு தொடர்ந்தும் இடம்பெற்று வரும் இலங்கை அரசின் இன ஒடுக்குமுறை நடவடிக்கைகள் என்பன தொடர்பில் ஒரு அதிருப்தியான நிலை தொடரும் வேளையில் இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.[/size][/size]

[size=2]

[size=4]அண்மையில் தமிழகத்துக்குப் பயணம் செய்து நிகழ்ச்சிகளை நடத்தவிருந்த கலாசாரக்குழு, விளையாட்டுக்குழு என்பன தமிழக அரசால் வெளியேற்றப்பட்டன. அது மாநில அரசின் அனுமதி பெறப்படாத காரணத்தால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்ட போதிலும் இலங்கைப் படையினருக்கு இந்தியாவில் பயிற்சி கொடுக்கக் கூடாது எனத் தமிழக முதல்வர் ஜெயலலிதா கொடுத்த அழுத்தம் புறக்கணிக்கப்பட்டதன் எதிர்விளைவு எனவே கருதப்பட்டது. அதுமட்டுமன்றி தமிழகத்துக்கு வந்த இலங்கை யாத்திரிகர்கள் வழிபாடு நடத்த முடியாமல் திருப்பியனுப்பப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.[/size][/size]

[size=2]

[size=4]இலங்கைப் படையினருக்கு இந்தியாவில் பயிற்சி வழங்குவது தொடர்பாகத் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தமது எதிர்ப்பைத் தெரிவித்தபோதும் அது அலட்சியப்படுத்தப்படுகிறது. அது தொடர்பான எதிர்ப்புக்களும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் இன்றுவரை தொடர்கின்றன. இப்படியான ஒரு சாதகமற்ற சூழலில்தான் இலங்கை ஜனாதிபதியின் இந்தப் பயணம் பற்றிய அறிவிப்பு வெளியானது. [/size][/size]

[size=2]

[size=4]இது தமிழக மக்களுக்கு விடுக்கப்பட்ட ஒரு சவாலாகவே கருதப்பட்டது.[/size][/size]

[size=2]

[size=4]இலங்கையில் தொடரும் இன அழிப்பு, இன ஒடுக்குமுறை நடவடிக்கைகள் காரணமாகவும் இந்திய மீனவர்கள் கடலில் வைத்து இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்படுவது, படுகாயப்படுத்தப்படுவது, மீன்பிடி உபகரணங்கள் சேதப்படுத்தப்படுவது தொடர்பாகவும் தமிழக மக்கள் கொதிப்படைந்துள்ள இவ்வேளையில் இலங்கை ஜனாதிபதியும் இந்தப் பயணத்தை அனுமதித்த இந்திய அரசும் தமிழக மக்களின் உணர்வுகளை படுமோசமான முறையில் அவமானப்படுத்திவிட்டதாகவே அவர்கள் கருதினர்.[/size][/size]

[size=2]

[size=4]எனவே இலங்கை ஜனாதிபதியின் பயணத்தை எதிர்த்துத் தமிழகமெங்கும் போராட்டங்கள் வெடித்தன. ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர், தமிழ் வாழ்வுரிமை அமைப்பு என்பன ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து நடத்தின. தி.மு.க. தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி, தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் தமது எதிர்ப்பையும் கண்டனங்களையும் வெளியிட்டனர். அதுமட்டுமன்றி சேலத்தில் தமிழ் உணர்வாளராகிய ஓட்டோ சாரதி ஒருவர் தீக்குளித்து உயிர் துறந்துள்ளார்.[/size][/size]

[size=2]

[size=4]ஒட்டு மொத்தத்தில் முழுத் தமிழகமும் மஹிந்தவின் வருகைக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியது. இந்த எதிர்ப்புக்களையெல்லாம் பொருட்படுத்தாத மன்மோகன் சிங் அரசு மஹிந்த ராஜபக்ஷவைப் பெரும் ஆரவாரமாக வரவேற்றது. இந்திய அரசின் பலத்த பாதுகாப்பு அவருக்கு வழங்கப்பட்டது.[/size][/size]

[size=2]

[size=4]மஹிந்தவின் வரவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக ம.தி.மு.க. தலைவர் வை.கோ தலைமையில் மத்திய பிரதேசம் நோக்கி பஸ்களில் புறப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் மகாரஷ்ரா மாநில எல்லையில் தடுத்து நிறுத்தப்படவே அவர்கள் அங்கேயே தங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து விட்டனர்.[/size][/size]

[size=2]

[size=4]இலங்கைக்கு வந்து விருந்துண்டு களித்துவிட்டு தமிழர் சிங்களப் பகுதிகளிலும் சிங்களவர், தமிழ்ப் பகுதிகளிலும் குடியேறினால் இலங்கையின் இனப்பிரச்சினை தீர்ந்துவிடும் என்ற அரிய கண்டுபிடிப்பைச் சொல்லிச் சென்ற ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி மஹிந்த ராஜபக்ஷ முப்பது வருடங்கள் நிலவிய பயங்கரவாதத்தை ஒழித்த வீரபுருஷர் எனவும் அவருக்கு இந்தியாவின் பாரதரத்னா விருது வழங்கப்பட வேண்டும் எனவும் பரிந்துரை செய்தார். மஹிந்த 30 நாள்களுக்குள் நாற்பதினாயிரம் தமிழ் மக்களைக் கொன்று சாதனையீட்டிய வீரபுருஷர் என்பதை ஏன் சொல்ல மறந்தாரோ தெரியவில்லை.[/size][/size]

[size=2]

[size=4]அரசியலில் கோமாளிகள் நிறையவே உண்டு. ஆனால் நயவஞ்சகக் கோமாளி என்றால் இவரை விட வேறு நபர்களைத் தேடிப்பிடிப்பது வெகுசிரமம்.[/size][/size]

[size=2]

[size=4]ஆனால் தமிழகம் உட்பட இந்தியா முழுவதுமுள்ள 100 கோடி மக்களுக்குத் தலைமை தாங்கக் கூடிய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்ட கருத்துக்களை எவரும் அப்படி அலட்சியப்படுத்திவிட முடியாது. அவர் ஆங்காங்கே சில அசம்பாவிதங்கள் நடந்தாலும் இலங்கை இந்திய உறவு எப்போதும் இறுக்கமாகவே இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.[/size][/size]

[size=2]

[size=4]இந்தியப் பிரதமர் தமிழ் நாட்டு மக்களின் உணர்வுகளை எவ்வளவு தூரம் அலட்சியப்படுத்துகிறார் என்பது மட்டுமா அவமானப்படுத்துகிறார் என்பதற்கும் ஒரு நல்ல உதாரணமாகும். தமிழகம் பரந்த எதிர்ப்புணர்வு சில அசம்பாவிதங்கள் எந்தளவுக்கு நிலை தாழ்த்தப்பட்டுள்ளது என்பதை நாம் கவனத்தில் எடுக்காமல் விட முடியாது.[/size][/size]

[size=2]

[size=4]இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்தப் பயணம் ஒரு அடிக்கல் நடும் விழா தொடர்பானது எனக் கூறப்பட்ட போதிலும் இதன் விளைபலன்களை எவ்விதத்திலும் குறைத்து மதிப்பிட்டு விடமுடியாது.[/size][/size]

[size=2]

[size=4]இது மஹிந்த ராஜபக்ஷவைப் பொறுத்தவரையில் ஒரு சாதகமான விளைவையும் இந்திய மத்திய அரசைப் பொறுத்தவரையில் பாதகமான விளைவுகளையுமே ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் இடம்பெற்ற சீன இராணுவத் தளபதியும் உயர்மட்ட அரச பிரதிநிதியும் அவருடைய கூட்டத்தினரும் இலங்கைக்குப் பயணம் செய்து பல்வேறு இராணுவ முகாம்களுக்கும் சென்று கலந்துரையாடல்களை நடத்தியமை பிரதான அரசியல் பீடமான மக்கள் காங்கிரஸ் தலைவர் பயணம் செய்து இங்குள்ள அரசியல்வாதிகளுடன் கலந்துரையாடியமை போன்ற விடயங்கள் இலங்கையின் போக்கு தொடர்பாக இந்தியாவுக்குச் சில சந்தேகங்களை ஏற்படுத்தியமை தவிர்க்க முடியாதது. [/size][/size]

[size=2]

[size=4]அது மட்டுமன்றி இலங்கையர் ஒருவர் இந்தியாவில் இலங்கை இராணுவத்தினர் பயிற்சி பெறும் வெலிங்டன் படை முகாம் உட்பட பல இராணுவத் தகவல்களுடன் பிடிபட்டமையும் அவர் அந்தப் படங்களை இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதுவராலயத்தில் பணிபுரியும் இருவருக்கு வழங்கவே எடுத்தார் எனவும் இந்திய உளவு நிறுவனமான றோ ஒரு கருத்தை வெளியிட்டிருந்தது. இது இந்தியாவுக்கு இலங்கை மூலமாக ஆபத்து ஏற்படக் கூடும் என்ற ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தியிருந்தது.[/size][/size]

[size=2]

[size=4]இதன் காரணமாக எழக் கூடிய சந்தேகங்களையும் நெருடல்களையும் சமாளிக்கவும் இலங்கை இந்திய உறவுகள் இன்னும் நெருக்கமாய் உள்ளன என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தவும் இந்தப் பயணத்தை மஹிந்த பயன்படுத்திக் கொண்டார்.[/size][/size]

[size=2]

[size=4]அதுமட்டுமன்றி மீளக்குடியேற்றம், அபிவிருத்தி, வடமாகாணத் தேர்தல் எனச் சில விடயங்கள் தொடர்பாகச் சில கருத்துக்களைக் கூறி இந்தியாவைத் திருப்திப்படுத்த முயன்றுள்ளார். அதுமட்டுமன்றி கிழக்கு மாகாணத் தேர்தலை வைத்துக் கொண்டு கிழக்கு மக்கள் தனது பக்கமே எனவும் தெரிவித்துள்ளார்.[/size][/size]

[size=2]

[size=4]அதாவது இலங்கை, இந்திய விவகாரங்கள் தொடர்பாக இந்திய ராஜதந்திர மட்டத்தில் சில கேள்விகளை எழுப்புவதற்கு முன்பாகவே அவர் வெற்றிகரமாக அவற்றைச் சமாளித்துவிட்டார்.[/size][/size]

[size=2]

[size=4]அதேவேளையில் காவிரி நீர்ப்பிரச்சினை, கூடங்குளம் அணுமின் நிலையம் போன்ற விடயங்களில் தமிழகத்தின் எதிர்ப்பையும் நம்பிக்கையீனத்தையும் சம்பாதித்துள்ள இந்திய மத்திய அரசு தமிழகத்தின் ஒட்டுமொத்த வெறுப்புக்கு மஹிந்த பயணம் மூலம் உள்ளாகியுள்ளது.[/size][/size]

[size=2]

[size=4]ஏற்கனவே ஊழல், மோசடி, டீசல் விலை உயர்வு, சில்லறை வர்த்தகத்தை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கல் போன்ற விடயங்களால் மக்களின் பெரும் எதிர்ப்பையும் சந்தித்துவரும் இந்திய மத்திய அரசு, இப்போது தமிழகத்தின் எதிர்ப்பின் மூலம் பெரும் நெருக்கடியைச் சந்தித்துள்ளது.[/size][/size]

[size=2]

[size=4]எப்படியிருப்பினும் இலங்கை ஜனாதிபதியைப் பொறுத்தவரை இந்தப் பயணம் ஒரு தற்காப்புக் கவசமாக அவருக்குச் சாதகமான ஒரு நிலைமையை உருவாக்கியுள்ளது. இந்திய மத்திய அரசுக்கோ இது மேலும் மேலும் நெருக்கடிகளையே பரிசாக வழங்கியுள்ளது. [/size][/size]

[size=2]

http://onlineuthayan.com/News_More.php?view=essay_more&id=2354537223400897[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.