Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சீக்கியர்களின் சிறுநீரை குடிக்க வேண்டுமா தமிழர்கள்..? அப்படியெல்லாம் கூடாது என்கிறது ஈழதேசம்..!

Featured Replies

சீக்கியர்களின் சிறுநீரை குடிக்க வேண்டுமா தமிழர்கள்..? அப்படியெல்லாம் கூடாது என்கிறது ஈழதேசம்..!

பொற்கோவிலில் தாக்குதல் நடத்திய முன்னாள் ராணுவ தளபதிக்கு லண்டனில் கத்திக் குத்து..? இந்திரா காந்தி காலத்தில் ஆபரேசன் 'புளு ஸ்டார்' என்ற ராணுவ நடவடிக்கையில் பல ஆயிரம் சீக்கியர்கள் கொல்லப்பட்டார்கள். சீக்கியர்களின் தானைத் தலைவர் பிந்தரன் வால கொல்லப்பட்டார். பிந்தரன் வால என்ற சீக்கியர்களின் முன் மாதிரியை இங்குள்ள தறுதலைகள் தீவிரவாதி பயங்கரவாதி என்று இன்னும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறினார் சீக்கிய நண்பர் ஒருவர். ஆமாம்...அப்படியென்ன செய்தார்..? பிந்தரன் வாலே அவர்கள். சீக்கியர்களுக்கு தனி நாடு கேட்டார். அதனால் அவர் தீவிரவாதியாம். பயங்கரவாதியாம். இந்திய பார்ப்பனிய ஆட்சியாளர்களுக்கு தனி நாடு கேட்டால் அவ்வளவு கோபம் வருகிறது. உயிரை விட்டு விடுவார்கள் போல் தெரிகிறது தனி நாடு கேட்டால். காவிரியில் தண்ணீர் கிடையாது, கரண்ட் கிடையாது. இவ்வளவு ஏன் வாழவே வழியில்லை தமிழகத்தில். இருந்தாலும் தமிழன் அவ்வளவையும் பொறுத்துக் கொண்டு தான் இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டு இருக்கிறான். என்பதெல்லாம் பெரும் சோகக் கதை.

1984 - ம் ஆண்டு நடத்தப்பட்ட புளு ஸ்டார் ராணுவ நடவடிக்கைக்கு தலைமை தாங்கியவர் தான் இந்த பிரார் அவர்கள். தற்போது பிரார் அவர்களுக்கு 78 வயது. முழு கறுப்புப் பூனைப் படை பாதுகாப்புடன் எந்த வித குற்ற உணர்வும் இல்லாமல் ஜாலியாக வாழ்ந்து வந்த இந்த பிரார் என்ற அதிகாரி லண்டன் சென்றுள்ளார் குடும்பத்துடன். எப்போவோ நடந்த பொற்கோயில் நடவடிக்கை என்று கருதாமல், ஒரு நான்கு சீக்கிய இளைஞர்கள் கத்தியால் குத்தி இருக்கிறார்கள் திரு. பிரார் அவர்களை. பிரார் அவர்கள் ஆஸ்பத்திரியில் பத்திரமாக சேர்க்கப்பட்டு அபாய நிலையை தாண்டியுள்ளதாகவும், மிகப் பத்திரமாக இந்தியா வந்து சேர்ந்து விடுவார் என்று கூறுகிறார்கள் லண்டன் ஊடகவியலாளர்கள்.

சீக்கியர்களை நினைத்தால் நமக்கு பயம் தான் வருகிறது. கூடவே மிகுந்த மரியாதையும் வருகிறது. ஜாலியன் வால பாக் சம்பவம் ஒரு நல்ல அரசின் நடவடிக்கை. அந்த அரசின் நடவடிக்கையில் சில நூறு பேர் கொல்லப்பட்டார்கள். அந்த படுகொலை நடத்தியவரை லண்டனில் வைத்து கொன்றார்கள் சீக்கியர்கள் அதுவும் ஒரு நாற்பது வருடம் கழித்து. பாராளுமன்றத்தில் வெடி குண்டு வீசிய பகத் சிங் என்ற தீவிரவாதியை பிரிட்டிஷ்காரர்கள் தூக்கில் போட்டார்கள். பாராளுமன்றத்தில் குண்டு வீசிய அப்சல் குருவை தூக்கில் போட வேண்டும் என்று கூறுகிறது காங்கிரஸ் அரசு.

பிரிட்டிஷ்காரர்கள் அரசு கூட இவ்வளவு மூட்டை மூட்டையாக பணத்தை, அரசின் செல்வத்தை கொள்ளை அடிக்கவில்லை. பகத் சிங் பாராளுமன்றத்தில் ஏன் குண்டு வீசினார்..? அப்சல் குரு ஏன் பாராளுமன்றத்தில் குண்டு வீசினார். அவர் இந்தியா சுதந்திரம் வேண்டும் என்றார். இவர் காஷ்மீர் சுதந்திரம் வேண்டும் என்கிறார். அவ்வளவு தான் வித்தியாசம். பகத் சிங் அவர்களை தீவிரவாதி என்றது அன்றைய கும்பினிய அரசு, காஷ்மீர் சுதந்திரத்திற்கு போராடும் அனைவரையும் தீவிரவாதிகள் என்று கூறி சுட்டுக் கொள்கிறது காங்கிரஸ் என்ற களவாணிகள் அரசு. சரி இவையெல்லாம் உள்நாட்டு விவகாரம் என்று கூட கருதலாம். பக்கத்து நாட்டில் சுதந்திரம் கேட்டால் காங்கிரஸ் பெருச்சாளிகளுக்கு ஏன் அவ்வளவு கோபம் வந்தது..? சுதந்திரம் வேண்டும் என்று விரும்பிய ஒரே காரணத்திற்காக இன்று வரை முள்வேலிகளில் அடைக்கப்பட்டுள்ளார்கள் ஈழத் தமிழ் மக்கள்.

இலங்கைப் போருக்கு காரணமானவர்கள் அனைவரும் மிக மிக சுதந்திரமாக வாழ்கிறார்கள். கருத்து சொல்கிறார்கள். பெருமை கொள்கிறார்கள் எந்த வித குற்ற உணர்வும் இல்லாமல். இலங்கை ராணுவ அதிகாரிகள் அனைவரும் பெருமிதம் கொள்கிறார்கள். தமிழர்களை எவ்வாறெல்லாம் கொன்றோம் என்று. வெளியுறவு அதிகாரி என்று சிறப்பு கவுரவுத்துடன் பவனி வருகிறார்கள். ஏனென்றால் தமிழர்கள் மிக மிக பரந்த மனப்பான்மை கொண்டவர்கள். உலகை ஆண்டவர்கள். மனித சமூகத்திற்கு எப்படி வாழ வேண்டும் என்று வகுப்பு எடுத்தவர்கள். இருக்கட்டும் இந்த இத்துப்போன பெருமைகள்.

சீக்கிய மக்களை, ஈழத் தமிழர்களை போல லட்சக்கணக்கில் கொன்று குவித்து விட்டு, கருத்து சொல்லிக் கொண்டிருக்க முடியுமா..? ஜாலியாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்க முடியுமா..? என்று நாம் சொன்னால், ஒருவேளை தீவிரவாதி பயங்கரவாதி என்று முத்திரை குத்த ஸ்டாம்ப் - ஐ கையில் வைத்துக் கொண்டு காத்திருக்கப் போகிறார்கள்..?

எனவே தான் சீக்கரின் நீரை கூட குடிக்க வேண்டாம். அட்லீஸ்ட் சீக்கியன் வீட்டில் துணி துவைத்து, சமையல் சாமான்கள் கழுவியாவது கற்றுக் கொள்ள வேண்டும் சில பல விசயங்களை என்று கோபத்துடன் கூறினார் புலம் பெயர் வாசி ஒருவர்.

ஆனால் நமது கருத்து என்னவென்றால், தமிழர்களின் பழம் பெருமையை உயர்த்திப் பிடித்துக் கொண்டே இருக்கவேண்டும் என்பது தான் என்று கூறுகிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

சங்கிலிக்கருப்பு

இந்தியாவை சிறிலங்காவோடு ஒப்பிடலாமா ? சங்கிலிக் கருப்பா.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.