Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'திவிநெகும' சட்டம் கிழக்கு மாகாண சபையில் நிறைவேறியது! மு.கா. குத்துக்கரணம்!!

Featured Replies

[size=4]மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை இல்லாதொழிக்கும் சர்ச்சைக்குரிய 'திவிநெகும' சட்டமூலம் கிழக்குமாகாண சபையில் இன்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சியுடன் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் இணைந்து வாக்களித்தமையால் இச்சட்டமூலம் 21-15 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

இன்று காலை 9.30 மணிக்கு கிழக்கு மாகாண சபை தவிசாளர் தலைமையில் மாகாண சபை அமர்வுகள் ஆரம்பமாயின. இதனைத் தொடர்ந்து, மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீட் சட்டமூலத்தை சபையில் சமர்ப்பித்தார்.

குறித்த சட்டமூலம் தொடர்பாக இன்று பகல் முழுவதும் விவாதம் இடம்பெற்று மாலை 4.30 மணியளவில் வாக்களிப்பு இடம்பெற்று, ஆளும் கட்சியுடன் முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து வாக்களித்ததால் சட்டமூலத்துக்கு ஆதரவாக 21 வாக்குகள் கிடைத்தன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் (11) ஐக்கிய தேசியக் கட்சியும் (4) இதற்கு எதிராக வாக்களித்தன.

"இச்சட்டமூலம் தொடர்பில் எமது கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் இன்று செவ்வாய்க்கிழமை கலந்துரையாடிய பின்னர் சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களிக்க தீர்மானித்துளோம்" என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை குழு தலைவர் ஏ.எம்.ஜெமீல் அறிவித்தார்.

இதனையடுத்தே இச்சட்டமூலம் கிழக்கு மாகாண சபையில் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. இதன்போது ஆறு மேலதிக வாக்குகளினால் திவிநெகும உத்தேச சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. இதன் பின்னர் கிழக்கு மாகாண சபை அமர்வு ஒத்திவைக்கப்பட்டது.[/size]

[size=4]இச்சட்டமூலத்தை முஸ்லிம் காங்கிரஸ் ஆதரிக்குமா என அக்கட்சியின் செயலாளர் ஹசன் அலியிடம் முன்னர் கேட்டபோது, அது தொடர்பில் உடனடியாகத் தீர்மானம் எடுக்க முடியாது எனவும், இதற்காக தாம் கால அவகாசத்தைக் கேட்டிருப்பதாகவும் தெரிவித்தார். இது தொடர்பாக நாம் விரிவாக ஆராய வேண்டியிருப்பதுடன், வெளிநாடு சென்றிருக்கும் கட்சித் தலைவர் ராவூப் ஹக்கீம் நாடு திரும்ப வேண்டியிருக்கின்றது. இதற்காகவே நாம் கால அவகாசத்தைக் கேட்டுள்ளோம் எனவும் அவர் நேற்றிரவு தெரிவித்திருந்தார்.

மாகாண சபைகளின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையிலான இந்த சட்டமூலத்தை ஏற்கக்கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றது. இருந்தபோதிலும் இதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஆளும் கட்சி முஸ்லிம் காங்கிரஸிற்கு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வருவதால் எவ்வாறான நிலைப்பாட்டை எடுப்பது என்பதில் மு.கா. தலைமை குழப்பமடைந்திருந்தது. இவ்விவகாரம் மு.கா. தலைமைக்கப் பெரும் சோதனையாக அமையும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அரசாங்கத்தின் அழுத்தங்களையடுத்தே இச்சட்டமூலத்தை ஆதரிப்பது என்ற முடிவை மு.கா. தலைமை இன்று காலை எடுத்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளையில்இந்தச் சட்டமூலத்திற்கு ஆதரவு தெரிவித்து மாகாண சபைக்கு முன்பாக இன்று முற்பகல் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

http://tamilleader.c...2-11-33-54.html[/size]

Edited by ஊர்பூராயம்

அது நன்மைக்கு தான். கூட்டமைப்பு , இந்தியாவின் 13ம் திருத்தம் பலன் இல்லாதது என்பதை இனிமேலைய பேச்சுவார்த்தைகளில் இலகுவாக வெளிநாட்டவருக்கு விளங்க வைக்க முடியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.