Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆபத்தான ஆஸ்திரேலியா பயணத்தை மேற்கொண்டு நாடு திரும்பிய யாழ்ப்பாணத் தமிழர் ஒருவரின் சோகக்கதை!

Featured Replies

ஆபத்தான ஆஸ்திரேலியா பயணத்தை மேற்கொண்டு நாடு திரும்பிய யாழ்ப்பாணத் தமிழர் ஒருவரின் சோகக்கதை!

ஆஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமான முறையில் படகு மூலம் பயணம் மேற்கொண்டு, நாடு திரும்பி விட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் தனது சோகக் கதையினை பகிர்ந்து கொள்கிறார்.

ஆஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமான முறையில் புகலிடம் கோரி கிறிஸ்மஸ் தீவை வந்தடைபவர்களை தென் பசுபிக் கடற்பரப்பிலுள்ள நாவுறு தீவில் தங்கவைத்து விசாரணைகளை மேற்கொள்ள ஏற்கனவே ஆஸ்திரேலியா அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D.jpg

கடந்த ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதிக்கு பின்னர் புகலிடம் கோரி வருபவர்கள் அந்த தீவிற்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். அங்கு செல்ல விரும்பாதவர்கள் சுய விருப்பத்தின் பேரில் நாடு திரும்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் கடந்த மாதம் 22ஆம் தேதி 18 பேரும், 29ஆம் தேதி 26 பேரும், தமது சுய விருப்பத்தின் பேரில் சர்வதேச புலம் பெயர்ந்தோர் அமைப்பு வழித்துணையுடன் நாடு திரும்பியுள்ளார்கள்.

இறுதியாக நாடு திரும்பியவர்களில் சிங்களவர்கள் 23 தமிழர்கள் 2 முஸ்லிம் 1 என்ற எண்ணிக்கை அடங்கும் இவர்களில் தமிழர்களில் ஒருவரான யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் தனது பயணம் தொடர்பாகவும் மேலும் கிறிஸ்மஸ் தீவிலுள்ள ஏனைய இலங்கையர் பற்றி தெரிவிக்கையில்,

””கடந்த ஆகஸ்ட் மாதம் கொழும்பிற்கு அழைக்கப்பட்டு பயண ஏற்பாட்டாளர்களால் கடல் பிரதேசமொன்றிற்கு 23ஆம் தேதி வாகனமொன்றில் அழைத்துச் செல்லப்பட்டோம்.

கொழும்பிலிருந்து நான்கு மணித்தியாலங்கள் வாகனத்தில் பயணம் இரவு நேரம் என்பதால் இடங்களை அடையாளம் காண முடியவில்லை. அதிகாலை ஒரு மணிக்கு எங்களை ஏற்றிய படகு தனது பயணத்தை ஆரம்பித்தது.

இந்த பயணத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி பிள்ளை உட்பட 66 பேர் பயணம் செய்தோம். 18 முதல் 19 நாட்கள் பயணத்தின் பின்னர் செப்டெம்பர் கொஸ்கோ தீவை சென்றடைந்தோம். கடல் பயணத்தின் போது வாந்தி, மயக்கம், தலைவலி போன்ற பிரச்சினைகளை எதிர் நோக்கினார்கள் இந்த பயணத்தை ஏன் தான் நாடினோம் என எண்ணத் தோன்றியது.

எனது குடும்பத்தைப் பொறுத்தவரை ஏற்கனவே பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டது. எனது தந்தையார் கூலி வேலை செய்து தான் எங்களை வளர்த்தார். அவரது கடின உழைப்பு நோய் காரணமாக தொடர்ந்தும் அவருக்கு தொழிலுக்குச் செல்ல முடியாத நிலை.

இந்நிலையில் எனது குடும்ப பொருளாதார நிலையைக் கருதியே சட்டவிரோத பயணமாக இருந்தாலும் இந்த பயணத்தை நாடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன். எனது காணியில் ஒரு பகுதியை மூன்று இலட்சம் ரூபாவிற்கு விற்று பயண ஏற்பாட்டாளர்களுக்கு முற்பணமாகக் கொடுத்தேன்.

சட்டவிரோத பயணமாக இருந்தாலும் மிகவும் ஆபத்தான பயணமாக இருந்தாலும் அந்த நாட்டில் தொழில் வாய்ப்பு பெற்று ஒரு காலத்தில் நாடு திரும்பும் போது இலங்கை அரசாங்கம் பொது மன்னிப்பு தரும் என்ற நம்பிக்கையும் எனக்கு இருந்தது.

ஆகஸ்ட் மாதம் 23ஆந் திகதி கிறிஸ்மஸ் தீவில் நான் தங்க வைக்கப்பட்ட போது நாட்டுக்குள் புகலிடம் கோரி வருபவர்கள் தொடர்பாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய தீர்மானம் பற்றி எமக்கு விளக்கமளித்தனர்.

அதாவது ஆகஸ்ட் 13ஆந் திகதிக்கு பின்னர் நாட்டுக்குள் நுழைபவர்கள் நவுறு தீவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு பின்னர் தான் புகலிடம் பற்றி தீர்மானிக்கப்படும். இப்படி அங்கு செல்லாதவர்கள் சுயவிருப்பத்தின் பேரில் நாடு திரும்ப விரும்பினால் சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பின் வழித்துணையுடன் அதற்கான ஏற்பாடு செய்யப்படும். அந்த அமைப்பின் ஊடாக நாட்டில் தொழில் செய்வதற்கான வசதிகளும் செய்து தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Srilankan-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D.jpg

நவுறு தீவில் தங்க வைக்கப்படும் கால எல்லை பற்றி அவர்கள் எதுவும் குறிப்பிடவில்லை என்றாலும் அது நீண்டகாலம் எடுக்கும் போல் தெரிந்தது. குடும்பத்தின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு உழைக்க வேண்டும் என சென்று என்னைப் பொறுத்தவரை இவ்வாறு நீண்டகாலம் தங்கியிருப்து என்னைப் பொறுத்தவரை முடியாத காரியம்.

இந்நிலையில் எனது குடும்பத்துடன் தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கினேன். அவர்களும் நாடு திரும்ப சம்மதம் தெரிவித்தார்கள். 20 நாட்கள் கிறிஸ்மஸ் தீவில் தங்கியிருந்த நான் நாடு திரும்பினேன்.

அவுஸ்ரேலியா அதிகாரிகள் மற்றும் சர்வதேச புலம்பெயர்தோர் அமைப்பு வழித்துணையுடன் நாடு திரும்பினேன். விமான நிலயத்தில் குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் மற்றும் புலனாய்வுப் பிரிவினர், குடும்ப விபரம் மற்றும் பயணத்தின் நோக்கம் பற்றி கேட்டு பதிவு செய்தனர்.

குடும்பத்தின் பொருளாதாரம் கருதியே இந்த சட்டவிரோத பயணத்தை மேற்கொள்ள வேண்டி ஏற்பட்டது என தெரிவித்த போது, இனி இவ்வாறான பயணத்தை நாட வேண்டாம் எனக் கூறி விமான நிலையத்துக்கு வெளியே செல்ல அனுமதித்தனர். விசாராணைகளைப் பொறுத்தவரை எவ்வித கெடுபிடிகளுமின்றி சாதாரணமாகவே நடைபெற்றது.

Srilankan-in-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D.jpg

விமான நிலையத்தை விட்டு வெளியேறும் போது 29 ஆயிரம் 767 ரூபா பணத்தை யாழ்ப்பாணம் செல்வதற்கான போக்குவரத்து மற்றும் ஏனைய செலவுகளுக்காக ஒரு அமைப்பொன்ற வழங்கியது. அந்த அமைப்பின் யாழ் பிரதேச அமைப்பாளர்களால் தொழில் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்து தருவர்கள் என கூறப்பட்டது.

கிறிஸ்மஸ் தீவைப் பொறுத்தவரை குடும்பங்கள் கொஸ்கோ தீவில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். அங்கு இலங்கையர்கள் மட்டுமல்ல பாகிஸ்தான், பங்களாதேஸ், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களும் தங்கியுள்ளார்கள்.

அங்கு தங்கியிருந்த காலத்தில் பராமரிப்பு நன்றாக இருந்தது விசேட ஆங்கில வகுப்புகள் நடைபெறுகிறது. உறவினர்களுடன் தொடர்பு கொள்ள தொலைபேசி வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட தொகைப் பணமும் கைச் செலவிற்கு வழங்கப்படுகிறது.

நவுறு தீவைப் பொறுத்தவரை அங்கு இப்படியான வசதிகள் அங்கு எதிர்பாக்க முடியாதென அங்கு தங்கியுள்ளவர்கள் பேசிக் கொண்டார்கள். காட்டுப் பிரதேசம் கூடாரங்களில் தான் தங்க வைக்கப்படுவார்கள் எவ்வளவு காலத்துக்குத்தான் அங்கு தங்கியிருப்பது என்று தெரியவில்லை என்ற காரணத்தினால் கிறிஸ்மஸ் தீவிலுள்ள பலரும் அங்கு செல்ல விரும்புவதாக இல்லை.

இலங்கையரைப் பொறுத்தவரை நவுறு தீவுக்குச் செல்வதா? நாடு திரும்புவதா? என்ற நிலையிலுள்ளனர். அவர்களின் மனநிலையைப் பொறுத்தவரை பல்வேறு கஸ்டங்களுக்கு மத்தியில் இலட்சக் கணக்கில் பணம் செலவளித்துவிட்டோம். நடப்பது நடக்கட்டும் நவுறு தீவுக்குச் செல்வோம் என ஒரு சாரார் நிலைப்பாடு உள்ளது. மற்றவர்களைப் பொறுத்தவரை தொழில் வாய்ப்பு விரைவாக கிடைக்கும் என்ற நம்பிக்கை இழந்த நிலையில் நாடு திரும்புகிறார்கள்.

என்றாலும் எதிர்வரும் கிறிஸ்மஸ் காலத்தில் ஏதாவது வழி கிடைத்து அவுஸ்ரேலியாவிற்குள் செல்ல அனுமதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது ஆனாலும் இது எந்தளவு சாத்தியப்படும் என்று தெரியாது””. என தெரிவித்துள்ளார்.

http://www.aanthaireporter.com/?p=12338

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.