Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மதுரை இளைய ஆதீனம் பொறுப்பிலிருந்து நித்யானந்தா விலக முடிவு?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மதுரை இளைய ஆதீனம் பொறுப்பிலிருந்து நித்யானந்தா விலக முடிவு?

Updated: வியாழக்கிழமை, அக்டோபர் 18, 2012, 18:54 [iST]

மதுரை: மதுரை ஆதீனத்தின் இளைய சந்நிதானம் பட்டத்தில் இருந்து விலக நித்யானந்தா முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன. ஆனால், அவை உண்மையா என்பது தெரியவில்லை.

ரஞ்சிதா விவகாரத்தில் சிக்கி பேமசான நித்யானந்தாவை இளைய சந்நிதானமாக நியமித்து தனது பெயரைக் கொடுத்து கொண்டார் மதுரை ஆதீனமான அருணகிரிநாதர். அன்று முதல் அவர் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகி வரும் அருணகிரிநாதர், ஒரு நாள் நித்யானந்தாவுக்கு ஆதரவாகப் பேசுவதும், அடுத்த நாள் நித்யானந்தா குரூப்புக்கு எதிராக காய் நகர்த்துவதும், பின்னர் மீண்டும் பம்முவதுமாக உள்ளார்.

இதற்கிடையே தமிழக அரசும் நித்யானந்தாவுக்கு எதிரான நிலையை எடுத்துள்ளது. இதுவரை எதற்கும் பயப்படாமல் இருந்த நித்யானந்தா, தமிழக அரசு நீதிமன்றத்தில் தன்னைப் பற்றி எடுத்து வைத்து வரும் கருத்துக்களைக் கண்டு ஆடிப் போயுள்ளதாகத் தெரிகிறது.

நித்யானந்தா ஒரு நடத்தை கெட்ட பேர்வழி என்று சமீபத்தில் தமிழக அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் மதுரை ஆதீனத்தில் நடைபெறும் நிகழ்வுகளால் கடுப்பாகியுள்ள அரசு, ஆதீன மடத்துக்கு விரைவில் ஒரு செயல் அலுவலரை நியமிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் நித்யானந்தாவை விரட்டி விடா விட்டால் மடம் தனது கட்டுப்பாட்டில் இருந்து போய்விடும் என்ற பீதியில் அருணகிரிநாதர் உள்ளார்.

இந்த அச்சத்தை அவர் நித்யானந்தா தரப்புக்கும் தெரிவித்துவிட்டதோடு, இடத்தைக் காலி செய்யவும் சொல்லி கதறி வருவதாகத் தெரிகிறது.

இதையடுத்து இப்போது திருவண்ணாமலையில் தங்கியுள்ள நித்தியானந்தா தனது ஆதரவாளர்களுடன் கலந்து ஆலோசித்து வருவதாகவும், மதுரை ஆதீனத்தின் இளைய சந்நிதானம் பொறுப்பில் இருந்து விலகிவிட அவர் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இன்று மாலை அவர் தனது முடிவை அறிவிக்கலாம் என்கிறார்கள்.

இளைய ஆதீனமாகத் தொடர்ந்தால் தமிழக அரசின் நடவடிக்கை தன் மீதும் பாயும் என்ற பயமும் நித்யானந்தாவை ஆட்டுவித்து வருவதாகத் தெரிகிறது. ஆனால், மதுரை ஆதீனத்துக்கு தன்னால் எந்த பிரச்சனையும் வந்துவிடக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் (அடடடா), தான் பதவி விலகும் இந்த முடிவை அவர் எடுக்க உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

http://tamil.oneindi...nam-163372.html

பாவம் நல்லமனுஷன் ........ நல்லவங்களுக்கு காலமில்லை ...............இவர் என்ன குற்றம் செய்தார் ???? :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மதுரை இளைய ஆதின பொறுப்பில் இருந்து நித்தியானந்தா நீக்கம்

19 அக்டோபர் 2012

இளைய ஆதின பொறுப்பில் இருந்து நித்தியானந்தா வெள்ளிக்கிழமை நீக்கப்பட்டார். இந்த நடவடிக்கையை அருணகிரி நாதர் மேற்கொண்டார்.

இதன் தொடர்ச்சியாகஇ மதுரை ஆதீனத்தில் தங்கியிருந்த நித்யானந்தாவின் சீடர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

மேலும்இ தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக காவல்துறையிடம் மதுரை ஆதீனம் அருணகிரி நாதர் புகார் ஒன்றையும் அளித்துள்ளார்.

இந்தப் புகாரைத் தொடர்ந்து மதுரை ஆதீனத்துக்கு தீவிரப் பாதுகாப்பு அளிக்க காவல்துறை முடிவு செய்துள்ளது.

முன்னதாகஇ மதுரை ஆதீன பொறுப்பிலிருந்து அருணகிரிநாதரை நீக்கினாலும்இ நித்தியானந்தா பொறுப்புக்கு வர முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில்இ தமிழக அரசு தெரிவி்த்தது.

மதுரை இளைய ஆதீனமாக நித்தியானந்தா நியமனத்தை எதிர்க்கும் வழக்குஇ சென்னை உயர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அருணகிரியை பதவியிலிருந்து நீக்கினால் நித்தி பதவிக்கு வந்து விடுவார் என்று மனுதாரரர் வாதிட்டார்.

இதனையடுத்து தமிழக அரசு சார்பில் ஆஜராகி வாதிட்ட வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன்இ மதுரை ஆதீன பொறுப்பிலிருந்து அருணகிரிநாதரை நீக்கினாலும்இ நித்தியானந்தா பொறுப்பிற்கு வர முடியாது என்றும்இ மதுரை ஆதீன மடத்தை அரசு கையகப்படுத்த கோரிதான் வழக்கு தொடரப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

அருணகிரியின் பதவி பறிபோனால்இ இளைய பட்டம் நித்தியானந்தாவை பொறுப்பேற்க அரசு அனுமதிக்காது என்றும்இ இந்து அறநிலைய சட்ட விதிகள் 59இ60-ஐ பயன்படுத்தி அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.

முன்னதாகஇ அருணகிரியை பதவியிலிருந்து நீக்கினால் நித்தி பதவிக்கு வந்து விடுவார் என்று மனுதாரரர் வாதம் செய்ததையடுத்துஇ அரசு வழக்கறிஞர் மேற்கண்ட வாதத்தை முன் வைத்தார். இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள் பானுமதிஇசுப்பையா ஆகியோர் தீர்ப்பை ஒத்தி வைத்ததது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சூழலில்தான் மதுரை ஆதின பொறுப்பில் இருந்து நித்தியானந்தாவை அருணகிரி நாதர் நீக்கியுள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/84465/language/ta-IN/article.aspx

இவனுகளால மதுரைக்கு வந்த சோதனையைப் பாருங்கப்பா.. :D

  • கருத்துக்கள உறவுகள்

எத்தன பேருக்கு வாழ்வு கொடுத்த மனுஷன் இண்டைக்கு நடுத்தெருவில ம் .....................

நித்தியானந்த வாழ்க்கைல எப்பவும் ரெண்டு முக்கிய தருணங்கள்....

1. விளக்கம் அளிக்கும் நேரம்.

2. விளக்கு அணைக்கும் நேரம்

:lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.