Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எழுத்தாளர்கள் எப்போதுமே அடித்துக் கொள்கிறார்கள்

Featured Replies

[size=4]எழுத்தாளர்கள் எப்போதுமே அடித்துக் கொள்கிறார்கள் என்று பொதுவாக ஒரு கருத்து உண்டு. [/size][size=4]பாமரரிலிருந்து பத்திரிகையாளர் வரை இந்தக் கருத்தை நிலைநாட்டியும் வருகிறார்கள். [/size][size=4]எழுத்தாளர்களுக்குள் அவ்வப்போது கருத்து மோதல்கள் உண்டே தவிர வேறு விதமான விருப்பு வெறுப்புகள் இருப்பதில்லை. [/size]

[size=4]சமீபத்தில் ஷோபா சக்தி என் நாவல் ராஸ லீலாவை குப்பை என்று எழுதியிருக்கிறார். உடனே நான் அவரை ஜென்ம வைரியாக நினைக்க வேண்டும். மாட்டேன். அவருக்கு அந்த நாவல் குப்பை என்று தோன்றுகிறது. அதற்கு அவருக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். [/size]

[size=4]சினிமாக்காரர்களைப் போல் பாராட்டு விழாவில் “இப்படி ஒரு படம் வந்ததே இல்லை; இந்தப் படத்தை ஹாலிவுட் காரன் பார்த்து வியக்கப் போகிறான்” என்று நரம்பு புடைக்கப் பேசி விட்டு, இரவில் ரெமி மார்ட்டின் சாப்பிட்டுக் கொண்டே தன் உதவியாளர்களிடம் “அது ஒரு குப்பை படம்” என்று காலை நாலு மணி வரை விவாதிக்கும் போலித்தனம் எழுத்தாளர்களிடம் இல்லை. எழுத்தாளர்களிடம் இந்தப் போலித்தனம் இல்லை என்பதாலேயே அவர்கள் சண்டையிட்டுக் கொள்கிறார்கள் என்ற ஒரு கட்டுக் கதை இங்கே நிலைநிறுத்தப் பட்டிருக்கிறது.[/size]

[size=4]ஜெயமோகன் என் பெயரையே இனி உச்சரிக்கப் போவதில்லை என்று ஒருமுறை எழுதினார். ஒரு போலிச் சாமியாரின் பேச்சை அவர் நம்பியிருக்கலாம். அல்லது, எழுத்தாளன் என்பவன் வேசியிடம் போகக் கூடாது என்பது போன்ற ஒழுக்க வரையறைகள் காரணமாக இருக்கலாம். என்னைப் பற்றி போலிச் சாமியார் செய்த அவதூறுகளை எதிர்த்து நீதிமன்றத்துக்குச் சென்று என்னைக் குற்றமற்றவன் என்று நிரூபிக்கும் அவசியம் எனக்கு இல்லை. நல்லதையும் அல்லதையும் எல்லாவற்றையும் [/size]

[size=4]கடவுளிடம் சமர்ப்பணம் செய்து விட்டு என் பாதையில் சென்று கொண்டிருப்பவன் நான். [/size]

[size=4]அவர் என் பெயரைக் குறிப்பிட்டால் என்ன, குறிப்பிடாவிட்டால் எனக்கு என்ன ஆகப் போகிறது? என்னுடைய பயணத்தின் திசை வேறு. அந்தத் திசையின் பக்கம் கூடத் திரும்ப மாட்டார் ஜெயமோகன்.[/size]

[size=4]எனக்கு ஜெயமோகனின் புனைகதைகள் பிடிப்பதில்லை. அதற்காக அவரை நான் குற்றம் சொல்ல முடியாது. it’s not my cup of tea என்று சொல்லி விட்டுப் போய்க் கொண்டே இருப்பேன். ஆனால் சமூகம், அரசியல் சார்ந்த விஷயங்களில் அவர் எழுதும் கட்டுரைகளை யாரேனும் என் பார்வைக்குக் கொண்டு வந்தால் படிப்பேன். [/size]

[size=4]ஈழப் பிரச்சினை, புலிகள் விஷயத்தில் நான் எழுதிய கட்டுரையை அவர் சிலாகித்து எழுதியிருந்தது இப்போது என் ஞாபகத்துக்கு வருகிறது. ஏனென்றால், அவரும் கூட நான் எழுதியிருந்த கோணத்திலேயே எழுதியிருந்தார். இலக்கியக் கோட்பாடுகளில் எதிரும் புதிருமாக இருக்கும் இருவர் நூற்றுக்கு நூறு எல்லா விஷயங்களிலும் எதிரெதிர் கருத்துக்களையே கொண்டிருக்க வேண்டும் என்ற கட்டாயமா என்ன? மேலும் – இந்த மேலும் ரொம்ப முக்கியம் – கடந்த மூன்று ஆண்டுகளில் என் சிந்தனைப் போக்கில் ஒரு தீவிரமான மாற்றம் நிகழ்ந்தது. துக்ளக்கில் வந்த கட்டுரைகளிலும் எக்ஸைல் நாவலிலும் நீங்கள் அதை அறியலாம். துக்ளக் கட்டுரைகளை விட எக்ஸைலில் இன்னும் ஆழமாக உண்டு. இதுவரை அது பற்றி ஒரு வாசகர் கூட குறிப்பிட்டுப் பேசியதில்லை என்பதை வருத்தத்துடன் கவனித்து வருகிறேன். ஆனால் என்னை எதிரியாக நினைப்பவர்களுக்கு அது புரிகிறது.[/size]

[size=4]சமீபத்தில் ஜெ. எழுதியுள்ள இந்தக் கட்டுரை வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை நான் இதுகாறும் கூறி வந்துள்ள கருத்துக்களை வழிமொழிவதாக உள்ளது. இணைய தளம் பற்றியும் அதில் எழுதுபவர்கள் பற்றியும் அவர் எழுதியுள்ள இந்தக் கட்டுரையை நான் நூற்றுக்கு நூறு ஆதரிக்கிறேன்.[/size]

[size=4]http://www.jeyamohan.in/?p=31402[/size]

[size=4]இந்த என் கட்டுரைக்கு உள்நோக்கம் கற்பித்துப் பேச ஆரம்பிப்பவர்களுக்கு மூன்று நாட்களுக்கு நல்ல தீனி.[/size]

[size=4]http://charuonline.com/blog/?p=3531[/size]

  • கருத்துக்கள உறவுகள்

எழுத்தாளர்கள் எப்போதும் பல முகாம்களை அமைத்து இருப்பார்கள். தமிழ்நாட்டிலும், ஈழத்திலும், ஏன் புலம்பெயர் தேசங்களிலும் இது காலங்காலமாகத் தொடர்கின்றது.

சாரு நிவேதிதாவின் பின்நவீனத்துவப் புத்தகங்களான ஜீ(சீ)ரோ டிகிரி, ராஸலீலா எல்லாம் படித்திருக்கின்றேன். பச்சையைப் பச்சையாகப் படிக்காமல் "இலக்கிய"மாகப் படிப்பதிலும் ஒரு "கிக்" இருக்கின்றதுதான். :icon_mrgreen:

  • தொடங்கியவர்

[size=4]சினிமாக்காரர்களைப் போல் பாராட்டு விழாவில் “இப்படி ஒரு படம் வந்ததே இல்லை; இந்தப் படத்தை ஹாலிவுட் காரன் பார்த்து வியக்கப் போகிறான்” என்று நரம்பு புடைக்கப் பேசி விட்டு, இரவில் ரெமி மார்ட்டின் சாப்பிட்டுக் கொண்டே தன் உதவியாளர்களிடம் “அது ஒரு குப்பை படம்” என்று காலை நாலு மணி வரை விவாதிக்கும் போலித்தனம் எழுத்தாளர்களிடம் இல்லை. [/size]

[size=4]எழுத்தாளர்களிடம் இந்தப் போலித்தனம் இல்லை என்பதாலேயே அவர்கள் சண்டையிட்டுக் கொள்கிறார்கள் என்ற ஒரு கட்டுக் கதை இங்கே நிலைநிறுத்தப் பட்டிருக்கிறது.

[/size]

[size=4]மக்களில் ஒரு பகுதியினரே எழுத்தாளர்கள். எனவே மக்களுக்குள் இருக்கும் குறைபாடுகளில் ஒரு சிறுபகுதி என்றாலும் கூட அவர்களில் இருந்துதான் ஆகவேண்டும் :rolleyes: [/size]

  • கருத்துக்கள உறவுகள்

நான் சாருநிவேதாவின் நாவல் ஒன்று கூட வாசித்ததில்லை <_<

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.