Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

2013 ஜெனிவாவில் புதிய போர்க்குற்ற ஆதாரங்கள்

Featured Replies

[size=2]

[size=4]2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாடு தொடர்பில் இலங்கை அரசு தொடர்ந்தும் கடும் அச்சத்தில் உறைந்துள்ளது என்றும் மாநாடு தொடர்பில் அரசின் பிரதிநிதிகள் சிலர் விரைவில் ஐக்கிய நாடுகள் சபையின் உயர் மட்டத்தினரை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர் என்றும் தெரியவருகிறது.[/size][/size]

[size=2]

[size=4]இந்த மாநாட்டின்போது இறுதிப்போரில் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டமைக்கான உத்தியோகபூர்வ ஆதாரங்களை ஐக்கிய நாடுகள் சபை முன்பாக சமர்ப்பிக்கப்படவுள்ளது. அத்துடன் அரச படையினரின் வன்முறைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து புதிய காணொலி ஆதாரங்கள் இந்த மாநாட்டில் முன்வைக்கப்படவுள்ளன.[/size][/size]

[size=2]

[size=4]இந்தநிலையில் அரசு இது தொடர்பில் முழுமையான அச்சத்தில் உள்ளது. இதன் அடிப்படையில் சர்வதேச நாடுகள் இலங்கை மீது சுமத்தி இருந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில்களை தயார் செய்யும் பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது என அறியவந்துள்ளது.[/size][/size]

[size=2]

[size=4]அதன் ஒரு கட்டமாகவே திருகோணமலையில் இடம்பெற்ற மாணவர்களின் கொலை மற்றும் மூதூரில் இடம்பெற்ற தொண்டு பணியாளர்களின் படுகொலை போன்றவை தொடர்பிலான விசாரணைகளை மீண்டும் அரசு ஆரம்பித்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.[/size][/size]

[size=2]

[size=4]இதற்கிடையில் அரசின் பிரதிநிதிகள் சிலர் விரைவில் ஐக்கிய நாடுகள் சபையின் உயர் மட்டத்தினரை சந்தித்து, இது தொடர்பில் பேச்சு நடத்துவர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. [/size][/size]

http://onlineuthayan.com/News_More.php?id=581871563404369932#

  • தொடங்கியவர்

[size=5]சாள்ஸ் பெற்றியின் அறிக்கையை எதிர்பார்த்துள்ளோம்: தருஸ்மன்[/size]

[size=4]இலங்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள சாள்ஸ் பெற்றியின் அறிக்கையை எதிர்பார்த்துள்ளோம் என்று இந்தோனேசியாவின் முன்னாள் சட்டமா அதிபர் மர்சுகி தருஸ்மன் தெரிவித்துள்ளார்.[/size]

[size=4]இலங்கை தொடர்பாக ஆராய்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் தலைவரான இந்தோனேசியாவின் முன்னாள் சட்டமா அதிபர் மர்சுகி தருஸ்மன் ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெறும் இலங்கை பற்றிய அனைத்துலக ஆவர்தன பரிசீலனையை தொடர்ந்து சர்வதேச ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளை அரசாங்கம் எவ்வளவு தூரம் நிறைவேற்றியுள்ளது நாம் அவதானித்து வருகின்றோம். அதனை ஆராய வேண்டிய கடப்பாடு எனக்கு இருக்கின்றது.

அதேபோல மனித உரிமைகளை மேம்படுத்துவதிலும் பாதுகாப்பதிலும் இலங்கை என்ன சாதித்துள்ளது என்பதையும் ஆராய்ந்து வருகின்றோம். அதுமட்டுமன்றி இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்;தில் கொல்லப்பட்ட 40 ஆயிரம் பேருக்கும் என்ன நடந்தது என்று விளக்கமளிக்கப்பட வேண்டும். இறுதி யுத்தத்தில் 40 ஆயிரம் மரணங்கள் எப்படி நிகழ்ந்தன என்று விளக்கமளிக்கப் படுவதே பொறுப்புக் கூறுதல் என்பதன் அர்த்தமாகும்.

அதுமட்டுமின்றி இறுதிக்கட்ட யுத்தத்தின் போது ஐ.நாவின் செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள சாள்ஸ் பெற்றியின் அறிக்கையை எதிர்பார்த்துள்ளோம். நானும் நிபுணர் குழுவின் இரு உறுப்பினர்களும் இந்த அறிக்கையை எதிர்பார்த்திருக்கின்றோம் என்றார்.[/size]

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/51899-2012-11-04-05-44-22.html

  • தொடங்கியவர்

223617_297165400387379_1918955628_n.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.