Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அகலப்பந்து

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதாரணமாக கிரிக்கெட்டில் பயன்படுத்தப்படும் வைட் பால் என்ற ஆங்கில பதத்திற்கு சரியான மொழி பெயர்ப்பு இப்போதைக்கு இல்லை என்று கூறும் ஜெகன்மோகன், அதை அகலப்பந்து என்று சில வர்ணணையாளர் கூறுவதைத் தவறு என்று கூறுகிறார்.

இப்படி தமிழைக் கொல்வதற்குப் பதில் வைட் பால் என்றே கூறிவிட்டுப் போகலாம்என்றும் கூறுகிறார் ஜெகன்மோகன்.

தகவல்: http://thatstamil.oneindia.in/news/2006/05...5/25/hindi.html

நன்றி

'புறப் பந்து என்றும் கூறலாமே! இதை வர்ணணையாளர்கள் கவனிப்பார்களா? உங்கள் கருத்தென்ன?

தமிழ்ச்சொல் இல்லையென்று அங்கலாய்க்காமல், இதை மற்ற தமிழ் அறிஞர்களிடம் கலந்தாலோசித்து ஆங்கிலச் சொல்லை தமிழ் பாவனையில் இருந்து அகற்றும் முயற்சியில் ஈடுபடவேண்டும்!

அல்லிகா

  • 10 months later...

விரிந்த பந்து என்று கூறலாமோ?

நம்மட லங்குவேஜில் சொத்திப் பந்து என்று சொல்லுவோம்!

ஆனால், இச்சொல்லை தமிழ் வர்ணணையாளர்கள் பயன்படுத்த தயாரா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூரப்பந்து அல்லது விலகிய பந்து என்று கூறலாம், கமெரா ஜூமில் கூட ரெலி,வைற் இருக்கிறது, காட்சியை அகலப்படுத்துவதை வைற் பண்ணுதல் என்பார்கள், குவிக்கபடுதை, தொலைவில் இருப்பதற்கு குவிக்கப்படுவதை ரெலி என்று கூறுவார்கள், அதற்கு எதிரான பதமே வைற், அதாவது குவிக்கப்பட்ட இடத்தில் இருந்து விலகிச்செல்வது, அல்லதுதூரச்செல்வது விக்கற்றில் இருந்து விலகிசெல்வது என எடுத்துக்கொள்ளலாம். இது சித்தனின் ஆய்வு மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் தமிழைக் காப்பாற்றிய இந்தி!

மே 25, 2006

சென்னை:

1983ம் ஆண்டு இலங்கையில் நடந்த இனக் கலவரத்தின்போது சிங்கள வெறியர்களிடமிருந்து பழம்பெரும் தமிழ் திரைப்படப் பாடல் ஒலிப்பேழைகளை இந்தி ஒலிப்பேழைகளுக்கு இடையில் மறைத்து வைத்து, இலங்கை வானொலி காப்பாற்றியதாக இலங்கையைச் சேர்ந்த பிரபல நிகழ்ச்சித் தொகுப்பாளர் முத்தையா ஜெகன்மோகன் புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் பிரபலமான வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளர் முத்தையா ஜெகன்மோகன். தமிழ் கிரிக்கெட் விமர்சகரும் கூட. சென்னைக்கு வந்திருந்த ஜெகன்மோகன் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

12 வருடங்களாக நிகழ்ச்சித் தொகுப்பாளராக உள்ளார் ஜெகன்மோகன். இலங்கை கிரிக்கெட் அணி பங்கேற்கும் ஆட்டங்களை தமிழில் நேரடி வர்னணை செய்வதில் முத்தையா நிபுணர் ஆவார். அவரது தமிழ் விமர்சனத்திற்கு பெரும் ரசிகர் கூட்டமே இலங்கையில் உள்ளதாம்.

அவருக்கு தமிழகத்திலும் நிறைய ரசிகர்கள் உண்டு. நெல்லையில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் இரண்டு முறை நேரில் அழைக்கப்பட்டு பாராட்டப்பட்டுள்ளார் ஜெகன்மோகன்.

இவையெல்லாம் எனக்குக் கிடைத்த பெருமை அல்ல தமிழுக்குக் கிடைத்த சிறப்பு என்று அடக்கமாக கூறுகிறார் ஜெகன்மோகன்.

தமிழ் மீது தீராக் காதல் கொண்டவரான ஜெகன்மோகனுக்கு சில ஆங்கில வார்த்தைகளை தமிழ்படுத்துகிறோம் என்ற பெயரில் மிகவும் கொச்சையாக மொழிபெயர்ப்பது பெரும் வருத்தம் தருகிறதாம்.

உதாரணமாக, கிரிக்கெட்டில் பயன்டுத்தப்படும் வைட் பால் என்ற ஆங்கில பதத்திற்கு சரியான மொழிபெயர்ப்பு இப்போதைக்கு இல்லை என்று கூறும் ஜெகன்மோகன், அதை அகலப்பந்து என்று சில வர்னணையாளர்கள் கூறுவதை தவறு என்று சாடுகிறார்.

இப்படி தமிழைக் கொல்வதற்குப் பதில் வைட் பால் என்றே கூறி விட்டுப் போகலாம் என்றும் கூறுகிறார் ஜெகன்மோகன்.

http://thatstamil.oneindia.in/news/2006/05/25/hindi.html

இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளீதரனின் திருமணம் சென்னையில் நடந்தபோது இந்த முத்தையாவும் திருமணத்திற்கு வந்திருந்தார்.

வந்தவர் விருந்து சாப்பிட்டுவிட்டு, வெத்தலை போட்டுவிட்டுப் போகாமல், தொலைபேசி மூலம் முத்தையாவின் திருமணத்தை நேரடியாக இலங்கை வானொலியில் வர்னணை செய்து முரளீதரனின் திருமணத்தை நேரில் காணும் உணர்வை அங்குள்ள தமிழர்களிடம் ஏற்படுத்தினார்.

தமிழக வானொலி நிலையங்களிடம் கூட இல்லாத பல அரிய தமிழ்ப் பாடல்கள் உள்ளிட்ட படைப்புகள் இலங்கை வானொலி நிலையத்தில் உள்ளதாம். இவற்றையெல்லாம் அவர்கள் பொக்கிஷம் போல பாதுகாத்து வருகிறார்களாம்.

கடந்த 1983ம் ஆண்டு இலங்கையில் பெரும் இனக் கலவரம் வெடித்தபோது இலங்கை வானொலி நிலையத்தையும் சிங்கள வெறியர்கள் தாக்கினார்கள்.

அப்போது தமிழ்ப் பாடல் சேகரிப்புகளைத் தேடிப் பிடித்து அவர்கள் அழிக்கத் திட்டமிட்டனர். இதை அறிந்த வானொலி நிலையம் புத்திசாலித்தனமாக ஒரு காரியத்தை செய்தது.

அங்கு இருந்து அரிய தமிழ்ப் பாடல் ஒலிப்பேழைகளை இந்திப் பாடல்களின் ஒலிப்பேழைகளுக்குள் வைத்து சிங்கள வெறியர்களை ஏமாற்றி தமிழ்ப் பாடல்களைக் காப்பாற்றினார்களாம்.

அங்கு உள்ள தொகுப்புகளைப் பார்த்து டி.எம்.செளந்தரராஜன் பிரமித்துப் போய் பாராட்டினாராம். எனது பாடல்கள் பலவற்றை என்னாலேயே இப்போது தமிழகத்தில் கேட்க முடியாது. காரணம் அந்த ரெக்கார்டுகள் அங்கு இல்லை. ஆனால் இங்கே அத்தனை தொகுப்பையும் பத்திரமாக வைத்துள்ளீர்களே என்று சந்தோஷமாகி விட்டாராம்.

இப்படி பெருமையுடன் கூறும் ஜெகன்மோகனுக்கு ஒரு வருத்த¬ம் உண்டு. இலங்கையில் ஏராளமான எப்.எம். ரேடியோக்கள் வந்து விட்டனவாம். இந்த நிலையங்களில் எல்லாம் தமிழைக் கொல்வதுதான் முக்கிய வேலையாக இருக்கிறது என்கிறார்.

தமிழை தமிழாக பேசாமல் ஆங்கிலம் கலந்து பேசும் இவர்களின் தமிழைக் கேட்டால் எனக்கு ரத்தக் கண்ணீரே வருகிறது என்று வேதனையாக கூறுகிறார். (நம்ம ஊரு எம்.எம்மை இவர் கேட்டதில்லை போலிருக்கிறது)

இலங்கையில் (வானொலியைப் பொறுத்தவரை) இப்போதுதான் தமிழ்க் கொலை ஆரம்பித்திருக்கிறது, ஆனால் தமிழகத்தில் தமிழ் செத்து பல வருஷமாச்சு என்பதை ஜெகன்மோகன் அறியவில்லை போலும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.