Jump to content

இலங்கையில் இடம்பெற்றது திட்டமிட்ட இனஅழிப்பு! லண்டன் மாநாட்டில் கஜேந்திரகுமார் !!


Recommended Posts

[size=4]தமிழ் மக்கள் மீதான இனப் படுகொலையை ஓர் இனஅழிப்பு எனக் கூறுவதற்கு சர்வதேச சமூகம் பின்னடிக்கலாம் ஆனால் உண்மையில் இடம்பெற்றது இன அழிப்பத்தான். இலங்கைத்தீவில் தமிழ்த் தேசத்தின் இருப்பை இல்லாது அழிப்பதற்காகவே அரசினால் தமிழ் மக்கள் மீதான இனப் படுகொலையானது கடந்த 60 ஆண்டுகளாக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உறுதிபடத் தெரிவித்திருக்கின்றார்.

உலகத் தமிழர் மாநாடு பிரித்தானிய பாராளுமன்றக் கட்டடத்தில் கடந்த வாரம் நடைபெற்றது. பிரித்தானிய தமிழர் பேரவையின் முன்னெடுப்பில் தமிழர்களுக்கான அனைத்துக்கட்சி பாராளுமன்றக் குழு என்ற பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் குழு மேற்படி மாநாட்டிற்கான அழைப்பினை விடுத்திருந்தது.

அவர்களது அழைப்பின் பெயரில் தாயகத்தில் இருந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளது பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சிவஞானம் சிறீதரன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி, சுரேஸ் பிறேமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

7ம் திகதி ஆரம்பமான இம்மாநாட்டில் தீர்மானங்கள் அறிவிக்கப்பட்டதன் பின்னர் அங்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்படி கருத்தினை கூறியுள்ளார். அவரது உரையின் முக்கிய பகுதிகள் வருமாறு.

"இலங்கைத்தீவில் தமிழ்த் தேசத்தின் இருப்பை இல்லாது அழிப்பதற்காகவே சிறீலங்கா அரசினால் தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையானது கடந்த 60 ஆண்டுகளாக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டது.

தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையை ஓர் இனஅழிப்பு எனக் கூறுவதற்கு சர்வதேச சமூகம் பின்னடிக்கலாம் ஆனால் உண்மையில் இடம்பெற்றது இன அழிப்பத்தான் என்று வலியுறுத்துவதற்கு தமிழர்களாகிய நாம் ஒருபோதும் பின்னிற்கக்கூடாது.

அண்மைக்காலமாக சர்வதேச மட்டத்தில் இடம்பெற்றுவரும் கருத்தாடல்களை நோக்கினால் அவை குறிப்பிட்ட ஒரு சில விடயங்களைப் பற்றியதாக மட்டுமே உள்ளன. அதாவது சர்வதேச சமூகமானது போரின் இறுதிக்கட்டங்களில் அதாவது 2009 ஆம் ஆண்டின் தை தொடக்கம் மே வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்களைப் பற்றி மட்டுமே பேசுகின்றது.

போர் தீவிரமடைந்து மக்கள் கொலை செய்யப்பட்டுக் கொண்டிருந்தபோது பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த சர்வதேச சமூகத்தினரை சந்தித்து போரை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்திய வேளையில் அவர்கள் இரண்டு வாக்குறுதிகளை கூறிக்கொண்டிருந்தனர்.

1 வன்னியில் ஓர் இரத்தக்களறி ஏற்பட்டால் இலங்கை அரசானது அதற்காக கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும்

2. சர்வதேச சமூகத்தின் பார்வையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பானது ஓர் பயங்கரவாத அமைப்பாகக் காணப்படுகின்றது. அவ்வமைப்பு அழிக்கப்பட்டுவிட்டால் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் அங்கீகரிக்கப்படுவதுடன், இலங்கைத்தீவில் சமாதானமும் நிலவும் என்று குறிப்பிட்டிருந்தார்கள்.

சர்வதேச சமூகத்தினாரால் கூறப்பட்ட இரண்டு வாக்குறுதிகளுமே நிறைவேற்றப்படவில்லை.

இந்நிலையில் போர்க்குற்றச் சாட்டுக்கள் பற்றி மட்டுமே கவனம் செலுத்துவதானது நாம் விரும்புகின்ற அரசியல் விளைவுகளுக்கு எதிர்மறையான விளைவுகளையே அரசியல் ரீதியாக ஏற்படுத்துகின்றன.

போர் முடிவடைந்து மூன்று வருடங்கள் கடந்துள்ள நிலையில் இன்று இலங்கைத்தீவில் யுத்தம் இல்லை. ஆகவே யுத்தக்குற்றங்களும் தற்போது இடம்பெறவில்லை. ஆனாலும் தமிழ் மக்கள் மீதான வன்முறைகளும் அடக்குமுறைகளும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. யுத்தத்தினால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்ட நிலையில் வன்னியில் வாழும் தமிழ் மக்களுடன் நாம் மிகவும் நெருக்கமாக நின்று செயற்பட்டுவருகின்றோம்.

அந்த மக்களுடன் உரையாடும்போது “இன்று நாம் இப்படியான வாழ்கை வாழ்வதனை விடவும் இறுதியுத்தத்தில் செத்திருக்கலாம்” என்று கூறுகின்றனர். அவ்வாறு அந்த மக்கள் விரக்தியடைந்துள்ள அளவுக்கு குற்றங்களும் அடக்குமுறைகளும் தமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரசினால் புரியப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

ஆகவே இன்றைய சூழ்நிலையில் போர்க்குற்றங்களைப் பற்றி மட்டும் பேசிக் கொண்டிருப்பதில் பயனில்லை. யுத்தத்தின்போது இடம்பெற்ற மிகமோசமான போர்க் குற்றங்களைப் பற்றிப் பேசுகின்ற அதே வேளை நாம் அவற்றைத் தாண்டி இன அழிப்பு என்ற கோணத்தில் விசாரணைப் பரப்பை விரிவடையச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் தற்போதும் தாயகத்தில் வாழ்வாதாரம் சிதைக்கப்பட்டு அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற எமது மக்களை மிகவிரைவில் இழந்துவிடுவோம்.

இலங்கையில் இடம்பெறுகின்ற இன அழிப்பு எவ்வாறானது என்பதனையும் நாம் சரியாக விளங்கிக் கொள்ள வேண்டும். இது ஒரு மதக் குழுமம் ஒன்றின் மீதான அழிப்போ அல்லது சிறிய குழு ஒன்றின் மீதான அழிப்போ அல்ல மாறாக இலங்கைத்தீவில் தமிழ் மக்கள் ஒரு தேசமாக வாழ்வதனை திட்டமிட்டு அழிக்கின்ற ஓர் இன அழிப்புச் செயற்பாடாகும்.

சர்வதேச சமூகமானது இலங்கைத்தீவில் இடம்பெற்றது ஓர் இனஅழிப்பு என்று ஏற்றுக் கொள்வதற்கோ, அல்லது தமிழர்கள் ஓர் தேசம் ‘யேவழைn’ என்பதனை அங்கீகரிப்பதற்கோ விரும்பவில்லை என்பதானது, தமிழ் தரப்பினரும் “தமிழர்கள் ஓர் தேசம்” என்பதனை வலியுறுத்தக்கூடாதென்பதோ அல்லது தாயகத்தில் இடம்பெறும் உண்மையான இனஅழிப்புச் சம்பவங்கள் பற்றி தமிழர்களும் பேசக் கூடாதென்றோ அர்த்தமல்ல.

இன்றைய இந்த மாநாடு மிகவும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில் எதிர்காலத்தில் சர்வதேச சமூகத்தினருடன் தமிழர்களது அரசியல் தீர்வு தொடர்பாக நாம் எவ்வாறு அணுக வேண்டும் என்பதில் இம்மாநாட்டில் கலந்து கொண்டிருக்கும் எமக்கிடையில் பொதுவான அரசியல் செயற்திட்டம் ஒன்று இருக்க வேண்டும்.

ஏனென்றால் இறுதி யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் சர்வதேச சமூகம் அளித்த இரண்டு வாக்குறுதிகள் தொடர்பாக. சர்வதேச சமூகத்தினரை பொறுப்புக்கூற வைக்க வேண்டும்.

தமிழர்களாகிய நாம் ஒரு தேசம் என்பதனை நாம் முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்தக் கோணத்தில் இருந்தே சர்வதேச சமூகத்தினை அணுகவேண்டும். யுத்த அழிவுகள் நடைபெற்றபோது சர்வதேச சமூகம் அளித்த உத்தரவாதம் தொடர்பில் அவர்களை பொறுப்புக்கூறச் செய்ய வேண்டும். அந்த உத்தரவாதத்தினை நடைமுறைப்படுத்தினால் மாத்திரமே இன்றும் இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட்டுவரும் தமிழ் தேசத்தினை இல்லாது ஒழிக்கும் செயற்பாட்டினை தடுத்து நிறுத்த முடியும். இதனை நாம் செயற்படுத்தத் தவறின் இன்று நாம் நடத்தும் இந்த மாநாடும் அதன் தீர்மானங்களும் கூட எவ்வித பயனும் அற்றவையாகவே அமையும்"

இவ்வாறு கஜேந்திரகுமார் தனது உரையில் தெரிவித்திருந்தார்.

மேற்படி மாநாட்டில் வெளியிடுவதற்காக பிரித்தானிய தமிழர் பேரவையினால் முன்கூட்டியே தயாரிக்கப்பட்டிருந்த தீர்மானத்தில் தமிழர்கள் ஓர் தேசம் என்பனையும், அந்தத் தேசத்தை இல்லது ஒழிப்பதற்காகவே திட்டமிட்ட இன அழிப்பு சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்டது என்பதனையும், சர்வதேச விசாரணையானது மேற்படி இனஅழிப்புத் தொடர்பில் மேற்பொள்ளப்பட வேண்டுமென்பதனையும் வலியுறுத்துவதாக அந்தத் தீர்மானம் அமைந்திருக்கவில்லை.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மாநாட்டிற்கு முன்னதாக மேற்கொண்ட கடுமையான முயற்சியின் விளைவாக இலங்கையில் தமிழ்கள் ஓரு தேசம் என்பதும், தமிழ் தேசத்தினை இல்லாது அழிப்பதற்காகவே சிறீலங்கா அரசினால் திட்டமிட்ட இன அழிப்பு மேற்கொள்ளப்பட்டதென்றும், சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணையானது நடைபெற்ற முழுமையான இனஅழிப்புத் தொடர்பில் மேற்கொள்ளப்படல் வேண்டும் என்றும் வலியுறுத்தும் காத்திரமான தீர்மானம் ஒன்றை அம்மாநாட்டில் கொண்டுவரச் செய்ய முடிந்துள்ளது.

அதனால் உலகத் தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாக ஓரணியில் நின்று எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு சாதகமான அரசியல் விளைவுகளை பெற்றுத் தரக்கூடிய பெறுமதிமிக்க தீர்மானம் ஒன்றினை நிறைவேற்ற முடிந்துள்ளது.

தீர்மானங்கள்

இனம் என்ற அரசியல் காரணங்களுக்காகவே தமிழர்கள் சிறீலங்கா அரசினால் அழிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள் என ஐ.நா நிபுணர் குழு தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளமையை வரவேற்கின்றோம்.

டப்ளின் நிரந்தர தீர்ப்பாயத்தின் தீர்மானங்களையும் சிபாரிசுகளையும் வரவேற்கின்றோம்.

2009 ம் ஆண்டு மே மாதம் போர் முடிவுற்ற பின்னரும் இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசத்தில் அமைந்துள்ள தமிழ்த் தேசத்தின் இருப்பை இல்லாது ஒழிக்கும் தொடர்ச்சியான செயற்பாட்டை உடனடியாக நிறுத்த வேண்டுமென்பதனை சுட்டிக்காட்டுகின்றோம்.

சுர்வதேச சமூகத்தினது, சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தின் றோம் சட்ட விதிகளின் கீழானதும், பாதுகாப்பதற்கான கடமை என்ற கோட்பாட்டின் கீழானதுமான கடமைகளை நினைவுபடுத்துகின்றோம.

இலங்கை அரசினால் தமிழ் தேசத்தின் இருப்பை இல்லாது அழிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறிப்பாக மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள், மற்றும் இன அழிப்பு என்பன தொடர்பில் ஓர் சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணை ஒன்றினை விரைவாக மேற்கொள்ளுமாறு ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளைக் கோருகின்றோம்.

சர்வதேச சமூகத்தின் தலைவர்களையும், சர்வதேச சிவில் சமூக அமைப்புக்களையும் பின்வரும் நடவடிக்கைகளை எடுக்கக் கோருகின்றோம்.

1. இலங்கைத்தீவில் வடக்கு கிழக்கு பகுதிகளில் நிலவும் உண்மைநிலைமைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் முகமாக எவ்வித தடைகளுமின்றி அங்கிருந்து தகவலிகளை பெற்றுக் கொள்வதற்கான வெளியை உருவாக்குதல்.

2. தமிழ் தேசத்தின் இருப்பை இலங்கை அரசு அழிப்பதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தல்.

3. தமிழ் மக்களின் மரபு வழித்தாயகத்தினை சிங்களமயப்படுத்துவதனை தடுத்தல்.

4. தங்களது ஐனநாயக உரிமைகளை எவ்வித அச்சமும் இன்றி பிரயோகிப்பதற்கு ஏதுவாக தமிழ் மக்களது மரபுவழித் தாயகத்தில் இருந்து இராணுவத்தினரை வெளியேற்றுதல்.[/size]

[size=4]http://www.tamilleader.com/mukiaya/7448-2012-11-12-10-33-51.html[/size]

Link to comment
Share on other sites

[size=5]

[/size]

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மறைமுகமாக அமெரிக்காவின் Rule based world order  ஐ ஜெய்சங்கர் சுட்டிக்காட்டுகிறார்.😁
    • சொகுசு வாகன பெர்மிட் எடுத்து 4-5 கோடிக்கு விற்றோர் -3 சொகுசு வாகன பெர்மிட் எடுத்து 4-5 கோடிக்கு விற்றோர் -1 சொகுசு வாகன பெர்மிட் எடுத்து 4-5 கோடிக்கு விற்றோர் -2
    • பாரிய கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட எதிர்பார்க்கிறோம்; சமன் ரத்னப்பிரிய! 27 SEP, 2024 | 05:07 PM (எம்.ஆர்.எம்.வசீம்) வரலாற்றிலேயே  மிகப்பெரிய கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட எதிர்பார்க்கிறோம். ஐக்கிய மக்கள் சக்தியுடனான கலந்துரையாடலும் சாதகமான நிலைக்கு வந்துள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசிய கட்சி எடுத்துவரும் நடவடிக்கை தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.   இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,  பாராளுமன்ற தேர்தலுக்கு தற்போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் எதிர்க்கட்சியில் இருக்கும் அனைத்து கட்சிகளையும் இணைத்துக்கொண்டு தேர்தலுக்கு முகம்கொடுப்பதற்கே எதிர்பார்க்கிறோம்.   நாட்டு மக்களின் எதிர்பார்ப்பும் அவ்வாறு இருப்பதாகவே எமக்கு தோன்றுகிறது. அவ்வாறான பரந்துபட்ட கூட்டணியை அமைக்குமாறே அனைவரும் வற்புறுத்தி வருகின்றனர்.   அதனால் இந்த கூட்டணியை அமைப்பதற்காக தற்போது ஐக்கிய மக்கள் சக்தியுடனான கலந்துரையாடலை ஆரம்பித்திருக்கிறோம்.    அதேபோன்று மொட்டு கட்சியின் பெரும்பான்மை பிரிவினர், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுடனும் கலந்துரையாடல் இடம்பெற்று வருகிறது.    ஓரிரு தினங்களில் இந்த கலந்துரையாடல்களை முடிவுக்கு கொண்டுவர முடியுமாகும். அதனால் வரலாற்றில் பெரிய கூட்டணி அமைத்து இந்த பாராளுமன்ற தேர்தலில் பாேட்டியிட முடியுமாகும் என எதிர்பார்க்கிறோம். பல்வேறு தரப்பினர்கள் கட்சிகளுடன் கலந்துரையாடிய விடயங்களை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடனும் நாங்கள் கலந்துரையாடினோம்.    ரணில் விக்ரமசிங்கவின் ஆலாேசனையின் பிரகாரம் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இரண்டு தினங்களுக்கு முன்னர் கலந்துரையாடினோம். நேற்றும் கலந்துரையாடினோம்.    அந்த கலந்துரையாடல் சாதகமாக அமைந்துள்ளது. ஆரம்பத்தில் ஐக்கிய மக்கள் சக்தி இந்த பேச்சுவார்த்தைக்கு பின்வாங்கியபோதும் தற்போது அவர்கள் கலந்துரையாடல்களுக்கு இணக்கம் தெரிவித்து, ஆராேக்கியமான பல கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்கள்.    அதனால் தொடர்ந்தும் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி எப்படியாவது பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியாக போட்டியிடவே நாங்கள் எதிர்பார்க்கிறோம்.   கூட்டணி அமைத்து போட்டியிடுவதன் மூலமே எமக்கு தேர்தலில் எதிர்பார்ப்பொன்றை ஏற்படுத்திக்கொள்ள முடியும். எமது ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பும் அதுவாகும் என்றார். https://www.virakesari.lk/article/194920
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.