Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை சென்ற சின்னாளபட்டி வியாபாரிகள் கதி என்ன?

Featured Replies

ஜவுளி வியாபாரத்திற்காக

இலங்கை சென்ற சின்னாளபட்டி வியாபாரிகள் 300 பேர் கதி என்ன?

போர் அபாயத்தினால் குடும்பத்தினர் பீதி

சின்னாளபட்டி,மே.30-

ஜவுளி வியாபாரத்திற்காக இலங்கைக்கு சென்ற திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியை சேர்ந்த வியாபாரிகள் 300 பேர் கதி என்னவென்று தெரியவில்லை.

சின்னாளப்பட்டி சேலை

தென்னிந்தியாவில் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி சேலை என்றாலே அதற்கு தனி மவுசு தான். இங்கு தயாரிக்கப்படும் சுங்குடி சேலை உள்ளிட்ட பல்வேறு ரக சேலைகள் வெளிநாட்டிற்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கடந்த 10 ஆண்டுகளாக இங்கிருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலை தேடி அழையாமல், சின்னாளபட்டி தயாரிப்பு சேலைகளை வாங்கி நேரடியாக தென்ஆப்பிரிக்கா, மலேசியா, பர்மா, சிங்கப்பூர், மொரிசியஸ், மற்றும் இலங்கைக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகிறார்கள். இதற்காக 3 மாத காலம் வரை தங்கி துணிகளை விற்பனை செய்ய விசா எடுத்து சென்று வருகிறார்கள். இதில் அவர்களுக்கு அதிக லாபம் கிடைக்கிறது.

சுனாமி தாக்குதல்

இதில் இலங்கை செல்லும் இளைஞர்கள், அவ்வப்போது விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை ராணுவத்திற்கும் இடையே நடைபெறும் போர் காரணமாக வியாபாரத்திற்கு போகாமல் இருந்தார்கள். இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக நார்வே அமைதி பேச்சு வார்த்தை தொடர்ந்ததால் இலங்கையில் அமைதியான சூழல் நிலவியது. இதைத்தொடர்ந்து இலங்கைக்கு சின்னாளப்பட்டியில் இருந்து இளைஞர்கள் ஜவுளி வியாபாரத்திற்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 2004-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட சுனாமி தாக்குதலில் சின்னாளபட்டி வியாபாரிகள் தங்களது சரக்குகளை இழந்து, பணத்தை இழந்து, உயிர் பிழைத்தால் போதும் என இலவச கப்பலில் ஏறி சின்னாளபட்டிக்கு வந்தனர்.

கதி என்ன?

தற்போது, இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை ராணுவத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், கடந்த 2 மாதத்திற்கு முன்பு சென்ற சின்னாளபட்டி வியாபாரிகள் தவித்து வருகின்றனர். படந்த 10 நாட்களாக இலங்கையில் இருந்து ஒரு சில இளைஞர்கள் சின்னாளபட்டிக்கு வந்தனர். ஆனால் பெரும்பாலானவர்கள் வந்து சேரவில்லை. அவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை.

இங்கிருந்து அவர்கள் தங்கியிருக்கும் ஓட்டல்களிலும், லாட்ஜ×களிலும் போன் மூலம் தொடர்பு கொண்டாலும் சரியான பதில்கள் கிடைக்கவில்லை. வியாபாரத்திற்கு சென்ற 300 - க்கும் மேற்பட்டவர்கள் அவர்கள் தங்கி இருக்கும் லாட்ஜ×க்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. அவர்கள் கதி என்னவென்று தெரியவில்லை என்று சின்னாளபட்டியில் உள்ள அவர்களது பெற்றோர் கவலையுடன் தெரிவித்தனர்.

பெற்றோர் பீதி

இதற்கிடையில் இலங்கைக்கு சென்ற சின்னாளபட்டி அஞ்சுகம் காலனியை சேர்ந்த வியாபாரி ஒருவர் இறந்துவிட்டதாக, சின்னாளபட்டியில் செய்தி பரவி உள்ளதால் பெரும் பீதி உருவாகி உள்ளது. இலங்கை சென்ற இளைஞர்களின், பெற்றோர் மற்றும் உறவினர்கள் மிகவும் கவலையாக உள்ளனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.