Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இங்கேயும் போர்க்குற்றவாளிகள். - புலவர் புலமைப்பித்தன்

Featured Replies

[size=4]இனித் தமிழினம் கடைத்தேறுவதற்கான வழி கண்ணுக்கெட்டிய தூரம்வரை தட்டுப்படவில்லை. முள்ளிவாய்கால் கொடுமை இன்னும் நூறுமுறை நடந்தாலும் அதை அனுபவித்துத்தான் தீரவேண்டும் போலிருக்கிறது. தன் சொந்த இனத்தில் விழுந்த பிணங்களையே விற்றுப் பிழைக்கும் கூட்டம் நாடெங்கும் உலகெங்கும் இருக்கிறது. முள்ளிவாய்க்கால் கொடுமையால் ஏற்பட்ட வேதனையைக் காட்டிலும், இன்று நடக்கும் ஏமாற்று வேலைகள் கபட நாடகங்கள் நமக்கு அதிக வேதனை தருகின்றன.[/size]

[size=4]தமிழ்ச்சாதியின் புல்லுருவிகள் காட்டிக்கொடுக்கும் கயவாளி மக்கள் இன்று ஆங்காங்கே தோன்றியிருக்கிறார்கள். காந்தி தேசம் கள்ள தேசமாகவும் - புத்த தேசம் (சிங்கள தேசம்) யுத்த தேசமாகவும் இருக்கின்றன. இனியும் அப்படித்தான் இருக்கும். யூத இனத்துக்குப் பின்னால் மாபெரும் இனப்படுகொலைக்கு ஆளானது அனாதைச் சாதியாம் நம் தமிழ்ச் சாதி மட்டும்தான். இந்தியாவும் இலங்கையும் எப்போதுமே தமிழ் இனத்தை அழிப்பதில் இரட்டை சூழல் துப்பாக்கிகள்தாம்.[/size]

[size=4]நாற்பதாயிரம் கோயில் செல்லுவேன் என்று பாரதி சொன்னதைப்போல நானும் சொல்லுகிறேன். தமிழினம் சிந்திய இரத்தம் விழலுக்கு இறைத்த நீராகிப் போனது. இலங்கை தொடர்ந்து தமிழ்ச்சாதியை வேட்டையாடி அழிப்பதற்கு இந்தியாதன் தோள் கொடுத்து துணைநின்றது. உலகறிய இனப்படுகொலை செய்த இலங்கை ஹிட்லர் ராஜபக்சேவை பாதுகாப்பதில்தான் சோனியாவின் பினாமி பிரதமர் மன்மோகன்சிங் அக்கறைக் காட்டுவார்.[/size]

[size=4]Stalin%20Meet%20Navaneetha%20Pillai.jpg[/size]

[size=4]அண்மையில் ஆஸ்திரேலியாவில் சீக்கியர்கள் இந்தியாவிற்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்தார்கள். இந்திரா காந்தி கொலைசெய்யப்பட்ட போது சீக்கிய இனத்தைச் சார்ந்த ஏறத்தாழ இரண்டாயிரம் பேரை காங்கிரஸ் அஹிம்சாவாதிகள் வேட்டையாடித் தீர்த்துக் கட்டியதை இனப்படுகொலை என்று அறிவித்தார்கள். ஒரு சீக்கியர் இங்கே பிரதமராக இருந்தாலும் ஓர் இரண்டாயிரம் பேர் கொல்லப்பட்டதை இனப்படுகொலை என்று கூறி இந்தியாவுக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்திருக்கிறார்கள்.[/size]

[size=4]இங்கே .... தமிழீழ தேசத்தில் ஒன்றரை லடசம் பேரை நான்காவது ஈழப்போரில் தலைமை தாங்கி தமிழினத்தை படுகொலை செய்ததைத் தட்டிக்கேட்க எந்த நாதியும் இல்லை. தமிழ் இனப் படுகொலை செய்வதையே இந்தியாவின் தர்மம் என்று கருதும் இந்தியாவின் மத்திய அரசைத் தாங்கிப் பிடித்த தமிழினத் துரோகிகள் இன்று கூட தமிழ் என்றும் தமிழினம் என்றும் பேசுகிற வெட்கம்கெட்ட செயல் நடந்துகொண்டுதான் இருக்கிறது. விலைமகளுக்குக் கூட விதிவிலக்காய் ஒரு சில நேரங்கள் வெட்கம் வரும். இங்கிருக்கும் ஒருசிலருக்கு அந்த விலைமகளுக்கு வரும் வெட்கம் கூட வருவதில்லை.[/size]

[size=4]இந்த வெட்கம் கெட்ட மனிதர்கள் கேவலமான அரசியல் பிழைப்புக்காக நடத்தும் நாடகங்கள். ச்சீ.. ச்சீ... இவர்களும் மனிதர்களா? என்று மானமும் அறிவும் உள்ள எவனும் கேட்காமல் இருக்க மாட்டான். எப்போதோ புதைத்த இடத்தில் புல் முளைத்துப் போன டெசோ என்ற அமைப்பாம்... அது கருணாநிதியின் ஏமாற்று நாடகத்துக்குப் போட்ட இன்னொரு மேடை. இன்னொரு அரங்கம். நல்ல மனிதனுக்கு ஒரே முகம்! ஏமாற்றுக் காரனுக்கு ஆயிரம் முகங்கள்! அந்த டெசோ அமைப்பின் சார்பில்தான் ஏதோ தீர்மானம் போட்டார்களாம்.[/size]

[size=4]அவர்கள் நடத்தியதற்கும் பெயர் ஈழத்தமிழர் வாழ்வுரிமை மகாநாடாம்! ஈழத்தமிழினத்தையே கொன்று குழிதோண்டி புதைத்து

விட்டு பிறகென்ன வாழ்வுரிமை மகாநாடு? அந்த மகாநாட்டின் தீர்மானங்களை எடுத்துக்கொண்டு களம்பல கண்ட தளபதி தலைமையில் நான்கைந்து பேர் ஐ.நா மன்றத்திற்கு போயிருக்கிறார்கள். அவர்களுடன் டி.ஆர்.பாலு போயிருக்கிறாராம்! கொழும்புக்குச் சென்று தமிழர்களை கொன்றொழித்த கொலைகாரன் ராஜபக்சேவுக்கு முன்னால் பல்லிளித்து நின்ற அவரும் ஐ.நா மன்றத்துக்குப் போயிருக்கிறார்.[/size]

[size=4]ஐ.நா துணை பொதுச் செயலாளரைப் பார்த்து அவர்கள் கொண்டுபோன குப்பைக் காகிதத்தைக் கொடுத்துவிட்டு லண்டன் போயிருக்கிறார்கள். எதற்கு தெரியுமா? இராஜபக்சே செய்த போர்க்குற்றத்தை விசாரிக்க வேண்டும் என்று தீர்மானம் போடுகிறார்களாம். அதற்காக ஒரு மாநாடு பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் ஏழாம் தேதி நடக்கிறது. எனக்கு இப்போது இந்தியா அன்னிய நாடாகத் தெரிகிறது. இங்கிலாந்து உறவு நாடாகத் தெரிகிறது. தனால் இங்கிலாந்தையும் நன்றியோடு பாராட்டுகிறேன். இங்கிலாந்து நாடாளுமன்றத்தையும் அந்த நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களையும் நன்றியோடு பாராட்டுகிறேன்.[/size]

[size=4]ஆனால்... அந்த மாநாட்டை யார் நடத்துகிறார்கள்? அதற்குப் பின்னால் யார் இருக்கிறார்கள்?.. என்பதெல்லாம் எனக்கு விளங்கவில்லை. அந்த மாநாட்டின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் தம்பி கவிராஜ் ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே என்னைத் தொடர்பு கொண்டு.. ஒவ்வொரு நாளும் ஓயாது பேசிக்கொண்டிருறந்தார்... அண்ணா நீங்கள் தவறாது இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்றார்.

நான் அப்போதே தமிழகத்திலிருந்து யார் யாரை அழைத்தீர்கள்?... என்று கேட்டேன்.[/size]

[size=4]எல்லா அமைப்புகளையும் என்றார். தி.மு.கவையும்தானா?.. என்று வெளிப்படையாக அவரிடம் கேட்டேன். அவர் ஆம் என்று சொன்னார். அப்படியானால்.. மகிந்த இராஜபக்சேவையும், கோத்தபாய இராஜபக்சேவையும் ஏன் சரத் பொன் சேகாவையும் கூட அழைத்திருக்கலாம். என்றேன். அவர் சமாளித்தார். ஏதோ சமாதானம் சொன்னார். அவர் சொன்ன எதையும் நான் ஏற்றுக் கொள்ளவில்லை. அவரைப் போலவே தோழர் ஆனந்தனும் இலண்டனில் இருந்து நேற்று வரை பேசினார்.[/size]

[size=4]நான் அவரிடத்திலும் என் கடுமையான அதிருப்தியைத் தெரிவித்தேன். அவர் தன் சுற்றத்தை முல்லைத்தீவில் முற்றிலும் இழந்தவர்.

அவர் எப்படி தி.மு.கவை தமிழர் அமைப்பு என்று நம்புகிறார்? இராஜபக்சே போர்க்குற்றவாளி என்றால்... மன்மோகன் சிங்கும் சோனியா காந்தியும் போர்க்குற்றவாளிகள்தான். அதிலும் உண்மையில் கருணாநிதிதான் முதல் குற்றவாளி. அவர் ஒன்றரை இலட்சம் பிணங்கள் மீது ஒரு நாற்காலியைப் போட்டு உட்கார்ந்து கொண்டவர். அவரைக் காட்டிலும் யார் போர்க்குற்றவாளி? அப்படிப்பட்ட ஒரு மனிதன் தலைமையில் இருக்கும் தி.மு.கவின் இன்றைய செயல் தலைவர் தளபதியும் அந்த மாநாட்டில் கலந்துகொள்ளப் போயிருக்கிறார். இதைக் காட்டிலும் அந்த மாநாட்டுக்கு அவமானம் வேறென்ன இருக்கிறது? இங்கே காலம் காலமாக தமிழ் ஈழம், தமிழ் ஈழம் என்று தொண்டையில் இரத்தம் வழியக் கத்தி வரும் தோழர் நெடுமாறன் போகவில்லை.. என் அருமை இளவல் வைகோவும் போகவில்லை.[/size]

[size=4]ஆனால்.. ஐந்தாம் படைத் தளபதியும் அவரது அடுத்தகட்டத் தளபதிகளும் போயிருக்கிறார்கள். போர்க் குற்றத்தில் பெரும் பங்கு வகித்தவர்களை அழைத்து வைத்தே போர்க்குற்ற விசாரணை இராஜபக்சே மீது நடத்தவேண்டும் என்று நிறைவேற்றுவதில் என்ன நியாயம் இருக்கிறது?

..........[/size]

[size=4]நான் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் மாநாடு நடைபெறுவது தவறு என்று சொல்லமாட்டேன். இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களைக் காட்டிலும் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனிதாபிமானம் மிக்கவர்கள். ஆனால்.. மாநாட்டை நடத்துபவர்களிடம் தெளிவு இல்லை அதனால் அந்த மாநாட்டில் யார் கலந்து கொண்டாலும் கலந்து கொள்ளட்டும். எப்படி வேண்டுமானாலும் தீர்மானம் நிறைவேறட்டும். என்னைப் பொறுத்தவரை அந்த மாநாடு நல்ல நோக்கத்துக்காக நடத்தப்படும் நம்பிக்கைக்குரியதாக என் கண்ணுக்குப் புலப்படவில்லை. கொலை செய்யப்பட்ட ஒருவன் வீட்டில் திருமண விழா நடக்கிறது.[/size]

[size=4]அந்தத் திருமணத்தை நடத்திவைக்க கொலைகாரன் குடும்பத்தில் இருந்து ஒருவன் போகிறான். இதை வேடிக்கை என்பதா, வேதனை என்பதா? நான் அந்த மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் தம்பி கவிராஜ் அவர்களுக்கு தெரிவிக்கிறேன்.. தி.மு.கவைச் சேர்ந்தவர்களை அழைத்ததன் மூலம் அந்த மாநாட்டை நல்ல நோக்கம் கொண்ட நியாயமான காரணத்திற்கான மாநாடு என்று ஏற்றுக் கொள்ள முடியாமல் செய்து விட்டீர்கள்! தி.மு.கவை அழைத்தவர்கள் காங்கிரசிலிருந்து கூட சிலரை அழைத்திருக்கலாம். ராஜீவ் காந்தியின் குடும்பத்திலிருந்து கூட ஒருவர், இருவரை அழைத்திருக்கலாம்.[/size]

[size=4]அவர்களை ஏன் விட்டு விட்டீர்கள்?

இன்று புகழின் உச்சத்தில் இருக்கும் வதேராவைக் கூட நீங்கள் அழைத்திருக்கலாம். என் தமிழ்நாட்டின் தமிழர்களே.. மனச்சாட்சி செத்துவிடாமல் மானத்தை விற்றுவிடாமல் இன்னும் தமிழர்களாய் இருக்கும் என் அறிவார்ந்த உறவுகளே.. நீங்கள் 2008 ஆம் ஆண்டு முதல் 2009 மே 18 ம் தேதி முடிய நடந்த நிகழ்வுகளை எல்லாம் நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள்! கோபாலபுரம் கோயபல்ஸ் நடத்திய மோசடி நாடகங்களை மனதில் ஆழப் பதிந்து கொள்ளுங்கள். போர்க்குற்ற விசாரணையை வற்புறுத்தும் மாநாட்டுக்கு இதோ இங்கிருந்தும் போர்க்குற்ற வாளிகள் போயிருக்கிறார்கள்!

நன்றி : தமிழக அசியல்[/size]

[size=4]தமிழ்க் கதிர் [/size]

[size=4]மூலம்: [/size]http://www.tamilkathir.com/news/9229/58//d,full_art.aspx

Edited by நியானி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.