Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ரூபா 35 ஆயிரம் கோடியை தாண்டியது அரச படுகடன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரூபா 35 ஆயிரம் கோடியை தாண்டியது அரச படுகடன்

வெளிநாட்டுப் படுகடனில் நாட்டை அரசு மூழ்கடித்துள்ளதால், மக்கள் இன்று பேரவலங்களைச் சந்தித்துவருகின்றனர் என்று குற்றஞ்சாட்டுகிறது ஐக்கிய தேசியக் கட்சி "இவ்வாறானதொரு நிலையில், நன்கொடைகள் வழங்கும் அளவுக்கு நாம் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்றுள்ளோம் என்று மார்தட்டிக்கொள்வதற்காக அரசு அந்நிய நாடுகளுக்கு நன்கொடைகளை வழங்குகின்றது'' எனத் தெரிவித்தார் கட்சியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்த நாயக்க.

கடந்து சென்ற ஆறு மாதத்துக்குள் நாட்டின் வெளிநாட்டுப் படுகடன் 35 ஆயிரம் கோடியையும் தாண்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். செல்வந்த வர்த்தகர்களுக்குவரி விலக்கு செய்யும்போது ஏன் சாதாரண சிறு வியாபாரிகளுக்கு அரசு வரி விலக்கு செய்யாதுள்ளது? இலங்கையைத் தவிர, வேறு எந்த நாட்டிலும் செல்வந்தர்களுக்கு வரி விலக்கு செய்யப்படுவதில்லை. இது பெரும் குற்றம்.

எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

அரசால் முன்வைக்கப்பட்டுள்ள 2013ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் நாட்டின் சட்டத்துக்கும், அரசமைப்புக்கும் உட்பட்டதா எனக் கேள்வி எழுகின்றது. இது தொடர்பில் உயர் நீதிமன்றமும் கருத்துத் தெரிவித்திருந்தது.

முதலாவது, வெளிநாட்டுக் கடன் பெறும் போது அதற்காக முன்வைக்கப்படுகின்ற நிபந்தனைகள் நாடாளுமன்றத்திற்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும். அத்துடன், இந்த நிபந்தனைக்கு நாடாளுமன்றத்தின் இணக்கத்தையும், அனுமதியையும் பெறவேண்டும்.

இரண்டாவது, ஒரு துறைக்காக ஒதுக்கப்பட்ட நிதியை வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்துவது. நாட்டின் நிதி விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்திற்குப் பெரும் பொறுப்புள்ளது. எனவே, ஒரு துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வேறு தேவைக்குப் பயன்படுத்த வேண்டுமெனில், நாடாளுமன்ற அனுமதியைப் பெறவேண்டும்.

இதனடிப்படையில் பார்க்கும்போது அடுத்தாண்டிற்கான வரவுசெலவுத் திட்டமானது நாட்டின் சட்டத்திற்கு எதிரானதே. நாடு பெரும் வெளிநாட்டுப் படுகடனில் மூழ்கி வருகின்றது. கடந்த இறுதி ஆறு மாத காலத்துக்குள் நாட்டின் வெளிநாட்டுப் படுகடன் 35 ஆயிரம் கோடி ரூபாவையும் தாண்டியுள்ளது. இதனால் மக்கள் பெரும் சுமையைச் சுமந்துகொண்டிருக்கின்றனர்.

இவ்வாறானதொரு நிலையில் நாம் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்றுள்ளோம் எனக் கூறி மார்தட்டிக்கொள்வதற்காக அரசு அந்நிய நாடுகளுக்கு நன்கொடைகளை வழங்கி வருகின்றது.

இதனடிப்படையில் மாலைதீவில் பாதை அபிவிருத்திக்காக 500 மில்லியன் ரூபாவையும், உகண்டாவில் தொழில் பயிற்சிகளை மேம்படுத்துவதற்காக அந்நாட்டு ஜனாதிபதிக்கு 130 மில்லியன் ரூபாவையும் அரசு நன்கொடையாக வழங்கியுள்ளது.

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுவரும் நிலையில், வெளிநாடுகளிலிருந்து அதிக வட்டிக்குக் கடனெடுத்து வேறு நாடுகளுக்கு நன்கொடைகளை வழங்குவது எந்தளவுக்குச் சாத்தியமாகும்.

21 நவெம்பர் 2012, புதன் 9:15 மு.ப

http://www.onlineuthayan.com/News_More.php?id=391921629421509768

இதனடிப்படையில் மாலைதீவில் பாதை அபிவிருத்திக்காக 500 மில்லியன் ரூபாவையும், உகண்டாவில் தொழில் பயிற்சிகளை மேம்படுத்துவதற்காக அந்நாட்டு ஜனாதிபதிக்கு 130 மில்லியன் ரூபாவையும் அரசு நன்கொடையாக வழங்கியுள்ளது.

இந்த நிலையில் யுத்தத்தால் பாதிக்கபட்டவர்களுக்கு புலம் பெயர் மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பது யாழில் வரும் ஆலோசனைகள்.

[size=4]

இதனடிப்படையில் மாலைதீவில் பாதை அபிவிருத்திக்காக 500 மில்லியன் ரூபாவையும், உகண்டாவில் தொழில் பயிற்சிகளை மேம்படுத்துவதற்காக அந்நாட்டு ஜனாதிபதிக்கு 130 மில்லியன் ரூபாவையும் அரசு நன்கொடையாக வழங்கியுள்ளது.
[/size]

[size=4]வேண்டுகின்ற பிச்சையில் தானம் - காரணம் ஐ.நா.மனித உரிமை வாக்கு. [/size]

[size=1]

[size=4]மகிந்த செலவுக்கு 750 கோடி .[/size][/size][size=1]

[size=4]மகனின் ஆசைக்கு செயற்கொள் .[/size][/size][size=1]

[size=4]தம்பியின் ஆசைக்கு பாதுகாப்பு அமைச்சு செலவுகள். [/size][/size][size=1]

[size=4]மற்ற தம்பியின் ஆசைக்கு பிரதம நீதியரசரை வீட்டிற்கு அனுப்பல். [/size][/size]

[size=1]

[size=4]இதெல்லாம் ஒரு ஜனநாயகம் இதில் பல்லின மக்கள் ஆட்சி வேறு. [/size][/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.