Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜனாதிபதியின் ஆட்சிக்கு ஆப்பு வைக்கவுள்ள ஐந்து பெண்கள்: ஜோதிடத்தை நம்பி குழப்பத்தில் ஜனாதிபதி ..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதியின் ஆட்சிக்கு ஆப்பு வைக்கவுள்ள ஐந்து பெண்கள்: ஜோதிடத்தை நம்பி குழப்பத்தில் ஜனாதிபதி ..!

[Thursday, 2012-11-22 20:29:42]

ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் ஜோதிடப்படி ஒரு பெண்ணால் அவரின் ஆட்சிக்கு கடுமையான நெருக்கடி ஏற்படும் என தெரியவந்ததால் யாரால் என் ஆட்சிக்கு அழிவு வரும் என யோசனையில் உள்ள மஹிந்த ராஜபக்‌ஷ ஐந்து பெண்களை நினைத்து யோசனையில் மூழ்கிப் போவார் என ஜனாதிபதிக்கு நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கின்றது.

சூசன் ரைஸ்

ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவுக்கான தூதர் சூசன் ரைஸ். இவரது பணிக்காலத்தில்தான் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டும் இருக்கிறது. இப்பொழுது இவரை அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சராக ஒபாமா நியமிக்கப்பட இருக்கிறார் என்று செய்திகள் வெளியாகி இருக்கிறது. அப்படி சூசன் ரைஸ் மட்டும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சராகிவிட்டால் மகிந்த ராஜபக்‌ஷவுக்கு சுத்தமாக தூக்கமே வராது. இலங்கை மீதான அமெரிக்காவின் நிலைப்பாடு இன்னும் கடுமையானதாக இருக்கலாம் என்றே சொல்லப்படுகிறது.

நவநீதம்பிள்ளை

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையளரான தென்னாப்பிரிக்க தமிழரான நவநீதம்பிள்ளை. மனித உரிமை மீறல்கள் விவகாரத்தில் இலங்கையை சர்வதேச முச்சந்தியில் நிற்க வைத்து சவுக்கால் அடிப்பது போல் ஆட்டுவித்துக் கொண்டிருக்கும் சக்திவாய்ந்த பெண்மணி. இலங்கையைப் பொறுத்தவரையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் என்றாலே கிலி பிடித்து ஆட நவநீதம்பிள்ளையின் கடுமையான நிலைப்பாடுதான் காரணம். மகிந்த ராஜபக்‌ஷ ஆட்சிக்கு கடுமையான நெருக்கடியை தரக் கூடியவர்களின் முதன்மையான பெண் நவநீதம்பிள்ளை எனவும் ராஜபக்‌ஷ செயலகம் எண்ணுகிறதாம்.

சமந்தா பவர்

சூசன் ரைஸ், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சராகிவிட்டால் ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் தூதராக நியமிக்கப்படக் கூடியவர் சமந்தா பவர். சூசன் ரைஸால் அமெரிக்க அரசாங்கத்தின் இலங்கை மீதான கொள்கையை கடுமையாக்க முடியுமேயானால் சமபந்தா பவர், அப்படியே நடந்தாக வேண்டும். அப்படியானால் இனிவரும் காலங்களில் ஐக்கிய நாடுகள் சபை என்பது இலங்கைக்கு எரிச்சலூட்டக் கூடிய ஒரு அமைப்பாகவே இருக்கும். இன்னும் எத்தனை கண்டனக் கணைகள் ஐ.நா.விலிருந்து வருமோ? என்று கலங்கிக் கிடக்கிறாராம் மகிந்த ராஜபக்‌ஷ.

ஷிராணி பண்டாரநாயக்கே

இலங்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயகே. இவர் மீது இம்பீச்மெண்ட் எனப்படும் நம்பிக்கையில்லா தீர்மானம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் விவகாரம் சர்வதேச விஷயமாகிப் போனது. ஐக்கிய நாடுகள் சபையும் ஷிராணி மீதான நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று கண்டித்தது. உலக நாடுகள் பலவும் இலங்கையின் நீதித்துறை சுதந்திரமற்றுக் கிடப்பதையே ஷிராணி பண்டாரநாயக்கே விவகாரம் வெளிப்படுத்துகிறது என்று கையில் சாட்டையை எடுத்து சுழற்ற ஆரம்பித்தன. அனேகமான ஷிராணி விவகாரம்தான் மகிந்த ஆட்சிக்கு எதிராக உலக நாடுகளை ஒருங்கிணைக்க வைத்த முக்கிய விவகாரமும் கூட என ஜனாதிபதியும் அவரைச் சூழ்ந்துள்ளோரும் யோசனையில் உள்ளனராம்.

சோனியா காந்தி

இவரால் நேரிடையாக மகிந்த ராஜபக்சேவுக்கு ஆபத்து இல்லை என்று தோன்றலாம். ஆனால் இந்திய அரசியல் சூழல், அமெரிக்காவின் நிலைப்பாடு, தமிழக அழுத்தம் இவற்றினால் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட விவகாரங்களில் இந்தியா கடுமையான நிலைப்பாடு எடுக்க சோனியாவே காரணமாக இருக்கலாம். குறிப்பாக இந்தியா வலியுறுத்தி வரும் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கக் கூடிய 13-வது அரசியல் சாசன திருத்தத்தை மகிந்த ராஜபக்‌ஷ கைவிட்டால் இந்தியா கடும்போக்கை மேற்கொள்ள வலியுறுத்தக் கூடியவராக சோனியா காந்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மேற்படி ஐந்து பெண்களால் யோசனையில் மூழ்கியுள்ளார் மகிந்த ராஜபக்‌ஷ என்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள்.

http://seithy.com/breifNews.php?newsID=70654&category=TamilNews&language=tamil

[size=1]

[size=4]இந்த ஐந்து பேரில் சிராந்தி மட்டுமே நேரடியாக மோதியவண்ணம் நாட்டில் உள்ளவர். எனவே இவரே அருகில் உள்ளவர். [/size][/size]

[size=1]

[size=4]அடுத்து நவநீதம் பிள்ளை அவர்கள். இலங்கைக்கு இவர் வரும் மாதங்களில் வரக்கூடும். வராவிட்டாலும் அழுத்தங்களை முன்னெடுக்க அண்மையில் வந்த ஐ.நா.உள்ளக அறிக்கை உதவும்.[/size][/size]

[size=1]

[size=4]அடுத்த அமெரிக்க இராஜாங்க திணைக்கள செயலாளர் யார் என்பதை வைத்து சூசன் ரைஸ் இல்லை சமந்தா பொக்ஸ் பல மாற்றங்களை ஆசியாவில் முன்னெடுப்பார்கள்.இதில் சமந்தா பொக்ஸ் வெளியில் பெயர் அவ்வளவு அடிபடாத ஆனால் முக்கிய கொள்கை வகுப்பாளராக இருந்து வருகிறார்.[/size][/size]

[size=1]

[size=4]சோனியா - இந்திய மாற்றங்களை, அங்கு வரும் தேர்தல்களை வைத்து தமிழக கட்சிகள் ஒற்றுமையாக அழுத்தம் தர வேண்டும். இந்தியா எமக்கு தடையாக இல்லாமல் செய்வது மிக முக்கியமாக உள்ளது. [/size][/size]

சோனியா இதற்குள் வருவது பொருத்தமில்லாதது மாதிரி இருக்கிறது. சுஸ்மா பதவிக்கு வந்து அதன் பின் மகிந்தாதாவுட முரணுவாரா தெரியாது. அதை சோதிடத்தோடு இன்னொரு சோதிடமாகத்தான் கூறலாம்.

பெண்கள் மட்டும் இலங்கைக்கு எதிராக இருப்பது, வழமையில் பெண்கள் ஊழல்களுக்குள் எளிதில் சிக்கதக்க சந்தர்பம் இல்லை.

mahinda_5images.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.