Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொன்னியின் செல்வன் - வரலாற்றுத் தவறு

Featured Replies

பொன்னியின் செல்வன் - வரலாற்றுத் தவறு

 

பெரும்பாலான வலைமனை வாசிகள் எப்படியும் ஒருதடவையேனும் பொன்னியின் செல்வனை ரசித்து ருசித்துப்படித்திருப்பீர்கள். வந்தியத்தேவனுடன் கடம்பூர், பழையாறை, அரசிலாற்றங்கரை, ஈழம், தஞ்சை என வலம் வந்திருப்பீர்கள். எத்தனையோ வரலாற்று நாவல்கள் வந்தாலும் பொன்னியின் செல்வன் படிப்பதுபோல் ஒரு உற்சாகம் ஏனைய நாவல்களில் குறைவாகவே இருக்கும்.

ஒரு வலையில் சுந்தரச்சோழரின் இறுதிக்காலத்தில் என்ன நடந்தது பற்றி அலசி ஆராய்ந்திருந்தார்கள்(அதன் சுட்டியை மறந்துபோனேன்) மதுராந்தகருக்கு என்ன நடந்தது? நந்தினி என்ன ஆனாள்? போன்றவற்றைப் பற்றிப் பலர் தங்கள் கருத்துகளைக் கூறியிருந்தார்கள்.

பொன்னியின் செல்வனில் அருள்மொழிவர்மன் ஒரு காரியத்தை மறுக்காமல் ஏற்றுக்கொண்டிருந்தால் சிலவேளை ஈழத்தில் தற்போது நடந்துகொண்டிருக்கும் கொடுமைகள் நடந்திருக்காது. ஈழப்போர்கள் வெடித்திருக்காது. யார் கண்டது ஈழமும் இந்தியாவின் ஒரு மாநிலமாகியிருக்கலாம். அருள்மொழிவர்மன் விட்ட தவறு என்ன? கல்கியின் பொன்னியின் செல்வனில் பாகம் இரண்டாகிய சுழற்காற்றில் இலங்கைச் சிங்காதனம் என்ற அத்தியாயத்திற்க்குள் நுழைவோம்.

அருள்மொழிவர்மனைத் தேடி ஈழத்திற்க்கு வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியானும் பூங்குழலி உதவியுடன் வருகின்றான். அருள்மொழிவர்மனை வந்தியத்தேவனுடன் ஆழ்வார்க்கடியானும் சந்திக்கிறார்கள். அப்போது ஒரு பிஷு இவர்கள் மூவரையும் அழைத்துக்கொண்டு தங்கள் சபா மண்டபத்திற்க்கு கொண்டு செல்கிறார். அங்கே புத்த பிக்குகள் பலர் கூடியிருந்தார்கள் அவர்கள் மட்டுமல்ல நவரத்தினம் பதித்த தங்கச் சிங்காதனம் காணப்பட்டது. அதன் அருகில் பீடத்தில் மணிமகுடமும் உடைவாளும் செங்கோலும் காணப்பட்டன. அத்துடன் மகா தேரோ குருவும் நடுநாயகமாக வீற்றிருந்தார்.

மகா தேரர் ஆதிகாலத்திலிருந்து சோழர்களாலும் பாண்டியர்களாலும் கலிங்கத்தவர்களாலும் புத்த தர்மம் உள்ள ஈழநாட்டில் பல அட்டூழியங்கள் நடந்தனவென்றும் ஆனால் அருள்மொழிவர்மரின் காலத்தில் சிதைந்த விகாரைகளை பழுதுபார்க்க அரசர் கட்டளையிட்டார் என்றும் எந்த மன்னர்களினது காலத்திலும் இத்தகைய செயல் நடைபெறவில்லையென்றும் கூறி, அசோகர் எப்படி புத்தமதத்தை உலகெல்லாம் பரப்பினாரோ அப்படி நீங்கள் இந்த மஹா சாம்ராஜ்யத்துக்கு அதிபதியாகவேண்டும் என மஹா சபையினர் விரும்புவதாக கூறினார்.

கல்கியின் வரிகளில் இந்தக் காட்சி:

"இளவரசே, இதோ உங்கள் முன்னால் உள்ள சிங்காதனத்தைப் பாருங்கள். மணிமகுடத்தைப் பாருங்கள்.செங்கோலையும் பாருங்கள். இலங்கை இராஜ வம்சத்தைச் சேர்ந்த மன்னர்கள் அனைவரும் இந்தச் சிங்காதனத்தில் அம்ர்ந்து, இந்த மணிமகுடத்தைத் அணிந்து, இந்தச் செங்கோலைக் கையில் தரித்த பிறகே, புத்த சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசர்களானார்கள். துஷ்டகெமுனு சக்ரவர்த்தியும், தேவனம்பிய திஸ்சரும் மகாசேனரும் அமர்ந்து முடிசூடிய சிங்காதனம் இது. அவர்கள் சிரசில் தரித்த கிரீடம் இது. அவர்கள் கரத்தில் ஏந்திய செங்கோல் இது. இப்படிப்பட்ட புராதன சிங்காதனம் ஆயிரம் ஆண்டுகளாக அரசர்களைச் சிருஷ்டித்த சிங்காதனம் இதோ தங்களுக்காக காந்திருக்கின்றது. இதில் அமரவும் இந்த மணிமகுடமும் செங்கோலும் தரிக்கவும் தங்களுக்குச் சம்மதமா? எனக் கேட்கின்றார்.

ஆனால் இதனை மறுத்துவிடுகிறார் அருள்மொழிவர்மர். அன்றைக்கு மறுத்து ஒரு மிகப்பெரிய வரலாற்றுத் தவறை பொன்னியின் செல்வன் என்றழைக்கப்படும் அருள்மொழிவர்மன் விடுகிறார்.

அன்றைக்கு அவர் ஈழத்து அரியணையில் ஏறியிருந்தால் சிலவேளைகளில் ஈழத்தில் எந்தப் பிரச்சனையும் ஏற்பட்டிருக்காது. ஈழ இராட்சியம் முழுவதும் சோழர்களின் புலிக்கொடி பறந்திருக்கும். அருள்மொழிவர்மருக்கு தான் அரியணையில் அமராமல் தன் சார்பில் வேறு சில நடவடிக்கைகள் எடுத்திருக்கலாம் அவை:

1. ஆழ்வார்க்கடியான் வந்தியத்தேவன் மூலம் சோழப்பேரரசில் அந்த காலத்தில் நிலவிய மதுராந்தகர், ஆதித்தகரிகாலருக்கிடையிலான இராட்சியப்போட்டியை மதுராந்தகரையோ அல்லது ஆதித்த கரிகாலரையோ ஈழத்து அரியணையில் ஏற்றி ஈழ இராட்சியத்தையும் சோழ இராட்சியமாக்கியிருக்கலாம். இதனால் தஞ்சையில் ஏற்பட்ட உள்நாட்டுச் சிக்கல் நீக்கியிருக்கும். (இதனை தற்போதைய சாணக்கியர் கலைஞர் மிக அழகாக கையாண்டுள்ளார்)

2.இரண்டாவது வந்தியத்தேவனுக்கு பட்டம் கட்டினால் இளையபிராட்டியார் குந்தவை ஒரு நாட்டின் அரசனை திருமணம் செய்யும் சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கும், ஆனால் அருள்மொழிவர்மர் அதனையும் செய்யவில்லை. இதற்கான காரணம் எனக்குத் தெரியும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றேன்.

ஆக அருள்மொழிவர்மர் செய்த தவற்றிற்கான தண்டனைகளை நாங்கள் பல காலமாக அனுபவிக்கவேண்டியுள்ளது. சிலர் இதனைக் கல்கியின் கற்பனை என்றும் சொல்லலாம் ஆனால் கற்பனை என்றாலும் 12பி படம் போல் யோசனை செய்ததில் தவறில்லை என்றே நினைக்கின்றேன். உங்கள் எண்ணக் குதிரையையும் பின்னூட்டங்கள் மூலம் தட்டுங்கள்

 

http://enularalkal.blogspot.com.au/2009/07/blog-post_30.html

 

கற்பனை செய்வதில் தவறில்லை. ஆனால் பல பேர் அதை உண்மை என்றே எண்ணுகின்றனர். இன்னும் இணையத்தில் சில பேர் நந்தினி என்பது கல்கியின் கற்பனைப் படைப்பு என்பதை ஏற்க தயாரில்லை.
 
1. ஆழ்வார்க்கடியான் என்ற கதாபாத்திரம் வரலாற்றில் கிடையாது.
2. குந்தவைக்கும் வந்திய தேவனுக்கும் நடந்த திருமணம் காதல் திருமணம் அல்ல. அது முழுக்க முழுக்க ராஜிய திருமணம். நானறிந்த வரலாற்றுச் செய்திகளின்படி வந்தியத் தேவன் வேளிர் நாட்டு சிற்றரசன். ஆதித்த கரிகாலன் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட வந்தியத் தேவன் பன்னிரண்டு வருடங்கள் சிறையிலே இருந்த்திருக்கிறான். வந்தியத் தேவனும் மர்மமான முறையிலேயே கொல்லப்பட்டான்.
 
அருள்மொழிவர்மர் காலத்தில் இலங்கையில் போரிட்டு முழு வெற்றிக் கிட்டவில்லை. ராஜேந்திர சோழன் காலத்திலேயே  இலங்கையின் முழு கட்டுப்பாடும் சோழர் கைகளில் வருகிறது.

இனிமேல் உங்களின் கற்பனைக் குதிரைகளில் பயணம் செய்யுங்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி வந்தியதேவன்.

பொன்னியின் செல்வன் படிக்கவில்லை. 

பல கதைகள் பாதி உண்மையும் பாதி கற்பனையும் கலந்தே உருவகப்படுத்தியே எழுதப்பட்டிருக்கும் என்பது என் எண்ணம்.

பகிர்வுக்கு நன்றி வந்தியதேவன்.

பொன்னியின் செல்வன் படிக்கவில்லை. 

பல கதைகள் பாதி உண்மையும் பாதி கற்பனையும் கலந்தே உருவகப்படுத்தியே எழுதப்பட்டிருக்கும் என்பது என் எண்ணம்.

கறுப்பி நேரம் கிடைக்கும்போது ஒருமுறை பொன்னியின் செல்வனை வாசித்து பாருங்கள். படிக்கும்போது வந்தியத் தேவனுடன் நீங்களும் பயணித்து விடுவீர்கள். பொன்னியின் செல்வன் நாவல் படித்த பின்பு வரலாற்று புதினம் என்று எது தெரிந்தாலும் ஒருமுறை வாசித்தால்தான் மனது அடங்கும். அந்த அளவுக்கு அந்த நாவலின் வீரியம் ..... தொன்னோறு சதவீதம் கற்பனை என்றாலும் அதன் சுவை... வாவ்!!!

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி நேரம் கிடைக்கும்போது ஒருமுறை பொன்னியின் செல்வனை வாசித்து பாருங்கள். படிக்கும்போது வந்தியத் தேவனுடன் நீங்களும் பயணித்து விடுவீர்கள். பொன்னியின் செல்வன் நாவல் படித்த பின்பு வரலாற்று புதினம் என்று எது தெரிந்தாலும் ஒருமுறை வாசித்தால்தான் மனது அடங்கும். அந்த அளவுக்கு அந்த நாவலின் வீரியம் ..... தொன்னோறு சதவீதம் கற்பனை என்றாலும் அதன் சுவை... வாவ்!!!

 

எழுதியதைப்பார்த்தால் வாசிக்கனும் போல் என்ற ஆவலைத் தருகிறது.

இணையத்தில் அதனை வாசிக்கக்கூடிய வசதி இருக்கிறதா!

  • தொடங்கியவர்

எழுதியதைப்பார்த்தால் வாசிக்கனும் போல் என்ற ஆவலைத் தருகிறது.

இணையத்தில் அதனை வாசிக்கக்கூடிய வசதி இருக்கிறதா!

 

இதை பாருங்கள் 

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=112522#entry833193

  • கருத்துக்கள உறவுகள்

இதை பாருங்கள் 

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=112522#entry833193

 

இணைப்புக்கு நன்றி. கதை என்ன இவ்வளவு நீளமா இருக்கு. வாசிக்க பல நாட்கள் செல்லுமே!

பார்ப்போம் .நத்தார் விடுமுறையோடு தொடங்குவோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.